தமிழ் வளர்த்த பெருமக்கள் 100
தமிழ் வளர்த்த பெருமக்கள் 100 (2010), தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி வெளியிட்ட நூல். தமிழ் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் உழைத்த தமிழறிஞர்கள் நூறு பேரின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியது. இதன் ஆசிரியர் என். ஸ்ரீநிவாஸன்.
பதிப்பு, வெளியீடு
தமிழ் வளர்த்த பெருமக்கள் 100, தமிழுக்காக உழைத்த தமிறிஞர்கள் 100 பேரின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கொண்ட நூல். இதனை எழுதியவர் என். ஸ்ரீநிவாஸன். அல்லயன்ஸ் பதிப்பகத்தின் கிளை நிறுவனமான தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி இந்த நூலை, 2010-ல் வெளியிட்டது.
ஆசிரியர் குறிப்பு
தமிழ் வளர்த்த பெருமக்கள் 100 நூலின் ஆசிரியரான என். ஸ்ரீநிவாஸன், 1938-ல், தூத்துக்குடி மாவட்டம் தெந்திருப்பேரையில் பிறந்தார். பி.ஸ்ரீ. ஆச்சார்யாவின் பேரனான இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். விடுதலைப் போரில் வியப்பூட்டும் நிகழ்ச்சிகள், உடலியல் கலைக்களஞ்சியம், உலக மகா கொடுங்கோலர்கள் 100, உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவுகள் 100, உலகப் புகழ்ப் பெற்ற கட்டடங்கள் 100, அரண்மனை ரகசியங்கள் 100, விந்தை உயிரினங்கள் 100, வியப்பூட்டும் உண்மைகள் 100, நம்ப முடியாத உண்மைகள் 100 போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.
நூல் அமைப்பு
தமிழ் வளர்த்த பெருமக்கள் 100 நூலில், கீழ்க்காணும் நூறு தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றது.
- ’ரோமாபுரிப் பிராம்மணன்' ராபர்ட்-டி-நொபிலி
- பைந்தமிழ்ச் செல்வர் பெஸ்கி வீரமாமுனிவர்
- ’ஞான தீப கவிராயர்' - வேதநாயக சாஸ்திரியார்
- தமிழை உலகறியச் செய்த டாக்டர் கால்டுவெல் ஐயர்
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- தமிழ் பக்தர் டாக்டர் ஜி.யூ. போப்
- வசன நடை வல்லாளர் ஆறுமுக நாவலர்
- தமிழ் நாவலின் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- 'கிருஸ்துவக் கம்பன்' ஹெச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
- பதிப்புத்துறை முன்னோடி சி.வை. தாமோதரம் பிள்ளை
- பாட்டுடைத் தலைவர் பொன்னுசாமித் தேவர்
- தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர்
- அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியார்
- தமிழ்ப் பெருந்தகை வி. கனகசபை பிள்ளை
- நாடகக் காப்பியம் தந்த பெ. சுந்தரம் பிள்ளை
- வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார்
- மொழி நூல் மூலவர் மாகறல் கார்த்திகேய முதலியார்
- இசைத் தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதர்
- 'தீனதயாளு' பண்டித எஸ்.எம். நடேச சாஸ்திரி
- உரைநடைச் செம்மல் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை
- கலைமணி பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்
- இலக்கணக் கடல் சோழவந்தான் அரசஞ் சண்முகனார்
- செந்தமிழ்ச் செல்வர் செல்வகேசவராய முதலியார்
- முத்தமிழ் வித்தகர் தி. இலக்குமணப் பிள்ளை
- அருந்தமிழ்த் தொண்டர் எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை
- பைந்தமிழ்க் காவலர் பாண்டித்துரைத் தேவர்
- நாடகச் செம்மல் சங்கரதாஸ் சுவாமிகள்
- 'திராவிட சாஸ்திரி' பரிதிமாற் கலைஞன்
- மகாவித்துவான் ரா. ராகவையங்கார்
- 'பெருஞ்சொற் கொண்டல்' நா. கதிரைவேற் பிள்ளை
- பல்கலைச் செல்வர் பா.வே. மாணிக்க நாயக்கர்
- உரையாசிரியர் வை.மு. சடகோப ராமானுஜாச்சாரியார்
- தமிழ் நாவல் இலக்கிய மூலவர் பி.ஆர். ராஜம் ஐயர்
- ஞானத்தமிழர் ஞானியார் அடிகள்
- தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார்
- 'அவதான அரசர்' செய்குத்தம்பி பாவலர்
- பாட நூலாசிரியர் கா. நமச்சிவாய முதலியார்
- தமிழ் மலை - மறைமலை அடிகள்
- தமிழ்க் காவலர் பேரறிஞர் ச. பவானந்தம் பிள்ளை
- கதை உலகில் புதுமை புரிந்த அ. மாதவையா
- அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர்
- தமிழ்ப் பேரறிஞர் மு. ராகவையங்கார்
- தமிழ் மாமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார்
- கால ஆராய்ச்சி அறிஞர் க.நா. சிவராஜப் பிள்ளை
- 'தமிழ்க் கப்பல்' நாவலர் சோமசுந்தர பாரதியார்
- 'பண்டித மணி' மு. கதிரேசன் செட்டியார்
- 'குற்றால முனிவர்' டி.கே. சிதம்பரனாத முதலியார்
- வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார்
- 'செந்தமிழ்ப் புரவலர்' த.வே. உமாமகேஸ்வரன் பிள்ளை
- தமிழ்த் தென்றல் திரு.வி.க.
- தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை
- நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்
- சித்திர ராமாயணம் தந்த பி.ஸ்ரீ.
- மோசூர் கந்தசாமி முதலியார்
- பெருஞ்சொல் விளக்கனார் அ.மு. சரவண முதலியார்
- சாதனைச் செல்வர் ச. சச்சிதானந்தம் பிள்ளை
- கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை
- கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார்
- பல்துறை வித்தகர் கா.சு. பிள்ளை
- லோகோபகாரி பரலி சு. நெல்லையப்பர்
- அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா.
- செந்தமிழ்வாணர் ஆ. கார்மேகக் கோனார்
- கவியோகி சுத்தானந்த பாரதியார்
- 'கலா நிலையம்' டி.என். சேஷாசல ஐயர்
- ஆராய்ச்சிப் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை
- தியாக சீலர் பொ. திருகூடசுந்தரம் பிள்ளை
- அறிவியல் தமிழ் வளர்த்த பெ.நா. அப்புஸ்வாமி
- `தமிழ் நெறிக் காவலர்' மயிலை சிவமுத்து
- 'யாழ் நூல்' தந்த விபுலாநந்த அடிகள்
- ஆராய்ச்சி அறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
- தமிழிசை வளர்த்த டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டியார்
- அறிஞர் சொ. முருகப்பா
- ஆராய்ச்சி அறிஞர் வெ. வேங்கடராஜுலு ரெட்டியார்
- ஈழத் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை
- பண்டிதர் அருணகிரிநாதர்
- வெ. சாமிநாத சர்மா
- 'வித்தியானந்தர்' மங்கலங்கிழார்
- செந்தமிழ்ச் செல்வர் சேதுப்பிள்ளை
- ஒளி நூலாசிரியர் இ.மு. சுப்பிரமணிய பிள்ளை
- சிந்தாமணிச் செல்வர் மே.வீ. வேணுகோபால் பிள்ளை
- 'தமிழ்த் தொண்டர்' கலா நிலையம் ராஜகோபால சாஸ்திரி
- ’பேரவைச் செம்மல்' வ சுப்பையா பிள்ளை
- ’தமிழ்க் கடல்’ ராய. சொக்கலிங்கனார்
- ’ஞானமணி’ சுவாமி சித்பவானந்தர்
- பேனா மன்னர் கல்கி
- ஆட்சிச் சொற் காவலர் கீ. ராமலிங்கனார்
- தமிழ்ப் பொற் பணியாளர் ச.கு. கணபதி ஐயர்
- செந்தமிழ்ச் செல்வர் சாமி சிதம்பரனார்
- ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி
- தேசியப் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
- ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
- கல்வெட்டியலார் தி.நா. சுப்பிரமணியன்
- கலைமணி தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்
- சிந்தனைச் செல்வர் அ. சீனிவாசராகவன்
- வாகீச கலாநிதி கி.வா.ஜ.
- பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்
- தமிழ்ப் பேரவைச் செம்மல் பெரியசாமி தூரன்
- பேரறிஞர், டாக்டர் மு. வரதராசனார்
- தமிழ் ஞானி அ.ச. ஞானசம்பந்தன்
உள்ளடக்கம்
தமிழுக்காக உழைத்த தமிறிஞர்கள் 100 பேரின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ் வளர்த்த பெருமக்கள் 100 நூலில் இடம் பெற்றன. பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை, வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்றோர் பற்றிய குறிப்புகள் இதே ஆசிரியர் எழுதிய வேறொரு நூலில் இடம்பெற்றதால் இந்நூலில் அவர்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறவில்லை.
தமிழ் வளர்த்த சான்றோர்களின் பிறப்பு, கல்வி, பிற வாழ்க்கைக் குறிப்புகள், சாதனைகள், அவர்களது தமிழுக்கான முயற்சிகள் போன்றவை இந்நூலில் சுருக்கமாக ஆவணப்படுத்தப்பட்டன.
மதிப்பீடு
தமிழ் வளர்த்த பெருமக்கள் 100, தமிழ் வளர்த்த சான்றோர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்று நூலாக மதிப்பிடப்படுகிறது.
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.