சுபமங்களா சிறுகதைகள்
சுபமங்களா மாத இதழ், ஶ்ரீராம் நிறுவனத்தால் 1988-ல் தொடங்கப்பட்டது. அனுராதா ரமணனின் ஆசிரியத்துவத்தில் வெகு ஜன இதழாக ஜனவரி 1991 வரை வெளிவந்தது. பிப்ரவரி 1991-ல் கோமல் சுவாமிநாதன் ஆசிரியர் பொறுப்பேற்றார். அது முதல் டிசம்பர் 1995 வரை அது ஓர் இலக்கிய இதழாக வெளிவந்தது.
சுபமங்களா சிறுகதைகள்
சுபமங்களா இதழ் சிறுகதைகள், நீள் கதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எனப் பலவற்றை இதழ் தோறும் வெளியிட்டது. 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் இவ்விதழில் வெளியாகியுள்ளன. ஆசிரியர் கோமல் சுவாமிநாதன் மூத்த எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமல்லாது, இளையோர்களின் சிறுகதைகளையும் தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவித்தார். சுபமங்களாவில் வெளியான சிறுகதைகள் இலக்கிய அமைப்பால் கவனிக்கப்பட்டன. கதா, இலக்கியச் சிந்தனை முதலிய அமைப்புகள் சுபமங்களாவில் வெளியான சிறுகதைகளுக்குப் பரிசளித்துச் சிறப்பித்தன. நீண்ட காலமாக எழுதி வரும் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல், புத்திலக்கியம் படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுத்துலகில் இயங்கிய எழுத்தாளர்களுக்கும் சுபமங்களா இடமளித்தது. ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் இருவரது குறிப்பிடத்தகுந்த, நவீன இலக்கியச் சிறுகதைகள் சுபமங்களாவில் வெளிவந்தன. ஜெயமோகனின் ஜகன் மித்யை, ரதம், மூன்று சரித்திரச் சிறுகதைகள் சுபமங்களாவில் வெளியானவையே. எஸ். ராமகிருஷ்ணனின் தாவரங்களின் உரையாடல், காலாட்படை பற்றிய குற்றப் பத்திரம் போன்ற சிறுகதைகள் சுபமங்களாவில் வெளியாகின சோ. தர்மன் என்னும் படைப்பாளி பரவலாக வாசக கவனம் பெற்றது சுபமங்களா மூலமே.
சுபமங்களாவில் தன் படைப்புகள் குறித்து ஜெயமோகன் மற்றும் சோ.தர்மன்
சுபமங்களாவில் தான் சிறுகதை எழுதியது குறித்து ஜெயமோகன், “ரப்பர் அப்போது வெளியாகி மிகப்பரவலாக வாசிக்கப்பட்டிருந்தது. ரப்பரை வெளியிட்ட அகிலன் கண்ணன் [தமிழ் புத்தகாலயம்] எனக்கு ஃபோன் செய்து சுபமங்களாவுக்கு நான் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கோமல் சுவாமிநாதனுக்கு ஒரு கதையை அனுப்பும்படி விலாசம் அனுப்பினார். எனக்கு கோமலை அப்போது அறிமுகமில்லை. அவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தார். தண்ணீர் தண்ணீர் சினிமாவுக்குப் பின் புகழுடன் திகழ்ந்தார். ஆனால் சுபமங்களா என்னும் பெயர் குழப்பம் அளித்தது. இடதுசாரிகளின் இதழ் என்றால் அப்படிப்பட்ட பெயர் இருக்க வாய்ப்பில்லை
கோமலை கவரும் கதை என்றால் அது ஒரு வறுமைச்சித்தரிப்பாகவே இருக்கமுடியும் என தோன்றியது. அதை மிக எளிதாக என்னால் எழுத முடியும். அகிலன் கண்ணன் என்னிடம் அது ஒரு நடுவாந்தர இதழ் என்றும், அதற்கேற்ப எழுதலாமே என்றும் சொன்னார். ஆகவே ஒரு வீம்பு வந்தது. ஜகன்மித்யை கதையை எழுதி அனுப்பினேன். அது அன்றைய சிறுகதை வகைமை எதற்குள்ளும் அடங்குவதல்ல.
சிலநாட்களுக்குப்பின் கோமல் என்னை ஃபோனில் அழைத்து அறிமுகம் செய்துகொண்டார். கதையைப் பாராட்டி அதைப்போல எழுதி அனுப்பும்படிச் சொன்னார். சுபமங்களாவை நான் ஆர்வத்துடன் பற்றிக்கொண்டேன். அதில் பல பெயர்களில் தொடர்ந்து எழுதினேன். கதைகள் மட்டும் என்பெயரில். மூன்று சரித்திரக் கதைகள், ரதம், மண், வெள்ளம என பலகதைகள் அதில் வெளிவந்தன. எனக்கு முன் எழுதிய சிற்றிதழ் எழுத்தாளர்கள் எவருக்கும் இல்லாத தனி அடையாளத்தை எனக்கு சுபமங்களா உருவாக்கியளித்தது. [1]” என்கிறார்.
சுபமங்களா இதழில் தான் எழுதிய சிறுகதை பற்றி சோ. தர்மன், “இன்று நான் ஒரு அறியப்பட்ட எழுத்தாளனாக, நாவலாசிரியனாக இருக்கிறேன். என்னிடம் கதைகள் கேட்டு நிறையப் பத்திரிகைகள் கடிதங்கள் எழுதுகின்றன. என்னை மொழி தாண்டி நாடெங்கும் பிரபலப்படுத்தியும், பலராலும் நிராகரிக்கப்பட்ட என் கதையின் வலிமையை அதன் உயிர்ப்பை, அதன் ஜீவநாடியைச் சரியாகப் புரிந்து கொண்டு வெளியிட்ட சுபமங்களாவுக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டவன்.” என்கிறார். அவரது 'நசுக்கம்' என்னும் அந்தச் சிறுகதை ‘இலக்கியச் சிந்தனை’யால் அவ்வாண்டின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்குப் பின்னர் ‘கதா’ விருதும் கிடைத்தது.
சுபமங்களா சிறுகதைகள் பட்டியல்
சுபமங்களா சிறுகதைகள் பட்டியல் | |||
1991 | |||
1 | அறிவுமதி | பிப்ரவரி | களை |
2 | சு. சமுத்திரம் | பிப்ரவரி | மௌனமாய் ஒரு தீர்ப்பு |
3 | வண்ணநிலவன் | பிப்ரவரி | அவன் அவள் அவன் |
4 | கோமல் சுவாமிநாதன் | பிப்ரவரி | கோஷமற்றவர்கள் |
5 | வண்ணதாசன் | மார்ச் | கனிவு |
6 | பாவண்ணன் | மார்ச் | தர்மம் |
7 | ம. ராஜேந்திரன் | மார்ச் | அப்பாவுக்கு |
8 | அகிலன் கண்ணன் | மார்ச் | யந்திரங்கள் |
9 | பத்மா | மார்ச் | தவிப்பு |
10 | அசோகமித்திரன் | ஏப்ரல் | சாயம் |
11 | வல்லிக்கண்ணன் | ஏப்ரல் | சந்தோஷங்கள் |
12 | ஜெயமோகன் | ஏப்ரல் | ஜகன்மித்யை |
13 | சுப்ரபாரதிமணியன் | மே | எல்லோருக்குமான துயரம் |
14 | எஸ். வைதீஸ்வரன் | மே | கால்முளைத்த மனம் |
15 | வேல. ராமமூர்த்தி | மே | கூண்டைவிட்டு வெளியே |
16 | தோப்பில் முகமது மீரான் | மே | குரு |
17 | ஆ. மாதவன் | ஜூன் | இலக்கியம் பேசி |
18 | காளமேகம் | ஜூன் | எமன் |
19 | எஸ். சங்கரநாராயணன் | ஜூலை | மகன் |
20 | எஸ். ராமகிருஷ்ணன் | ஜூலை | நகர் நீங்கிய காலம் |
21 | மா. அரங்கநாதன் | ஜூலை | ஞானக்கூத்து |
22 | ராஜம் கிருஷ்ணன் | ஜூலை | தலைமுறைச் சங்கிலி |
23 | மேலாண்மை பொன்னுச்சாமி | ஆகஸ்ட் | பலிபீடம் |
24 | லா.ச. ராமாமிர்தம் | ஆகஸ்ட் | கிறுக்கல் |
25 | கனிவண்ணன் | செப்டம்பர் | தந்தையும் மகளும் |
26 | கந்தர்வன் | செப்டம்பர் | திருவேறு |
27 | தேவிபாரதி | செப்டம்பர் | மீறல் |
28 | பாரதிபாலன் | அக்டோபர் | பச்சை மனது |
29 | சுபஸ்ரீ | அக்டோபர் | பிணம் தின்னும் சட்டங்கள் |
30 | நீல பத்மநாபன் | நவம்பர் | விரல்கள் |
31 | ந. பிச்சமூர்த்தி | நவம்பர் | ஞானப்பால் |
32 | ம. ராஜேந்திரன் | நவம்பர் | யாசகம் |
33 | வண்ணதாசன் | நவம்பர் | மழைவெயில் |
34 | வித்யாஷங்கர் | டிசம்பர் | ராசகிளிகள் |
35 | வேல. ராமமூர்த்தி | டிசம்பர் | கறி |
36 | இரா. நடராசன் | டிசம்பர் | முருகேசு |
37 | திலகவதி | டிசம்பர் | நிழல் |
1992 | |||
1 | சூராஜ் | ஜனவரி | எலி |
2 | க்ருஷாங்கினி | ஜனவரி | பூச்சி |
3 | மேனகா புஷ்பன் | ஜனவரி | இரண்டாம் திருவிழா |
4 | வத்ஸலா | பிப்ரவரி | வெறுப்பைத் தந்த வினாடி |
5 | இன்குலாப் | பிப்ரவரி | தனிமையில் ஒரு தோழமை |
6 | ச. முருகானந்தம் | பிப்ரவரி | ஈரம் |
7 | எம்.வி.வெங்கட்ராம் | பிப்ரவரி | மூக்குத்தி |
8 | களந்தை பீர் முகம்மது | மார்ச் | நித்திய உறவு |
9 | கீதாநாதன் | மார்ச் | வினாப்படுக்கை |
10 | இரா. முருகன் | மார்ச் | ஆழ்வார் |
11 | தஞ்சை பிரகாஷ் | ஏப்ரல் | வடிகால் வாரியம் |
12 | நாஞ்சில் நாடன் | ஏப்ரல் | பாலம் |
13 | சிவகாமி | ஏப்ரல் | அம்முக்குட்டி என்றொரு பெண் |
14 | திலீப்குமார் | ஏப்ரல் | மனம் எனும் தோணி பற்றி |
15 | கமலாலயன் | மே | ஏலாமை |
16 | காவேரி | மே | ஏனென்றால் |
17 | கா.சு. வேலாயுதன் | ஜூன் | நெய்ப்பந்தம் |
18 | சோ. தர்மன் | ஜூன் | நசுக்கம் |
19 | சி.எம். முத்து | ஜூலை | காட்டேரி மதவு |
20 | ஜீநா | ஜூலை | உயிர்த்தெழல் |
21 | விக்ரமாதித்யன் | ஆகஸ்ட் | வெறுஞ்சோற்றுக்குத்தான் |
22 | சுரேஷ்குமார் இந்திரஜித் | ஆகஸ்ட் | எலும்புக்கூடுகள் |
23 | எஸ். ராமகிருஷ்ணன் | செப்டம்பர் | காலாட்படை பற்றிய குற்றப்பத்திரிக்கை |
24 | பாவண்ணன் | செப்டம்பர் | ஜெயம்மா |
25 | அறிவுமதி | அக்டோபர் | வெள்ளைத் தீ |
26 | திலகவதி | நவம்பர் | அவசரம் |
27 | ம. ராஜேந்திரன் | நவம்பர் | நிஜங்கள் |
28 | காஸ்யபன் | நவம்பர் | ராவணர்கள் |
29 | சா. கந்தசாமி | நவம்பர் | சரபோஜபுரம் |
30 | நரசய்யா | நவம்பர் | வெல்லிங்டன் விஜயம் |
31 | மேலாண்மை பொன்னுச்சாமி | டிசம்பர் | யார் நான்? |
32 | பாப்ரியா | டிசம்பர் | சர்வதேச பாலம் |
1993 | |||
1 | பாரதிபாலன் | ஜனவரி | உள்வாங்கும் உலகம் |
2 | இரா. நடராசன் | ஜனவரி | சங்கிலி |
3 | தஞ்சை பிரகாஷ் | ஜனவரி | பற்றி எரிந்த தென்னை மரம் |
4 | கே.எம். ராஜன் | பிப்ரவரி | உள்தளம் |
5 | வேல. ராமமூர்த்தி | பிப்ரவரி | எருதுகட்டு |
6 | சி.ஆர். ரவீந்திரன் | மார்ச் | நகரத்தில் நான்குபேர் |
7 | சி.எம். முத்து | மார்ச் | மானங்காப்பான் மகன் |
8 | வாஸந்தி | ஏப்ரல் | கண்கட்டு |
9 | நாஞ்சில் நாடன் | ஏப்ரல் | ஒருவழிப்பயணம் |
10 | அகிலன் கண்ணன் | ஏப்ரல் | தூவானம் |
11 | காசி ஆனந்தன் | ஏப்ரல் | ஹைக்கூ கதைகள் |
12 | எஸ். ராமகிருஷ்ணன் | ஏப்ரல் | எதிர்பார்த்த முகம் |
13 | டி. குலசேகர் | மே | மனுஷி |
14 | மீ. விஸ்வநாதன் | மே | தேர் |
15 | இரா. முருகன் | ஜூன் | பொம்மை |
16 | செ. கணேசலிங்கன் | ஜூன் | ஆண்மை இல்லாதவன் |
17 | நாஞ்சிலமுதன் | ஜூலை | துட்டி |
18 | டி. செல்வராஜ் | ஜூலை | எருமைக்கன்றுக்கு வந்த எமன் |
19 | வத்ஸலா | ஜுலை | அதுவும் கடந்து |
20 | சோலை சுந்தரபெருமாள் | ஆகஸ்ட் | ஓராண்காணி |
21 | செங்கை ஆழியான் | ஆகஸ்ட் | ஷெல்லும் ஏழு இஞ்சுச் சன்னங்களும் |
22 | பாரதிபாலன் | செப்டம்பர் | ஒத்தையடிப் பாதையிலே |
23 | சுப்ரா | அக்டோபர் | குடை |
24 | பிரபஞ்சன் | நவம்பர் | எங்கள் தெருவில் ஒரு யானை |
25 | இரா. முருகன் | நவம்பர் | சிதைவு |
26 | ஜெயமோகன் | நவம்பர் | மூன்று சரித்திரக் கதைகள் |
27 | சா. கந்தசாமி | நவம்பர் | ஆறுமுகசாமியின் ஆடுகள் |
28 | வண்ண நிலவன் | நவம்பர் | விடுதலை |
29 | கனிவண்ணன் | நவம்பர் | பேயாண்டித்தேவரும் ஒரு கோப்பைத் தேநீரும் |
30 | வத்ஸலா | டிசம்பர் | நஷ்டம் |
1994 | |||
1 | சுரேஷ்குமார் இந்திரஜித் | ஜனவரி | உயிருள்ள பிணம் |
2 | ஜெயபாரதி | ஜனவரி | முன்னோடி |
3 | சுப்ரபாரதிமணியன் | பிப்ரவரி | முற்றுகை |
4 | வெ. தமிழழகன் | பிப்ரவரி | உயிர்வதம் |
5 | ம.ந. ராமசாமி | மார்ச் | மென்மை |
6 | காவேரி | மார்ச் | நைந்த ஆடையும் நாற் சந்தியும் |
7 | நந்தினி சேவியர் | மே | தொலைந்துபோனவர்கள் |
8 | என். சண்முகலிங்கன் | மே | வீடுபேறு |
9 | மு. சிவலிங்கம் | மே | என்னப் பெத்த ஆத்தா... |
10 | இரா. முருகன் | ஜூன் | உத்தராயணம் |
11 | செ. கணேசலிங்கன் | ஜூன் | அக்காவிற்கு அன்பளிப்பு |
12 | சிவகாமி | ஜூலை | பறவைகள் பறந்தன |
13 | நா. கண்ணன் | ஜூலை | பாலைத் தெய்வம் |
14 | நீல. பத்மநாபன் | ஆகஸ்ட் | மயான காண்டம் |
15 | பிரபஞ்சன் | ஆகஸ்ட் | மறந்து போனது |
16 | வே. சபாநாயகம் | ஆகஸ்ட் | சிறுமை |
17 | தனுஷ்கோடி ராமசாமி | செப்டம்பர் | வாழ்க்கை நெருப்பு |
18 | சு. சமுத்திரம் | செப்டம்பர் | உப்பைத் தின்னாதவன் |
19 | சுப்ரமணியன் ரவிச்சந்திரன் | செப்டம்பர் | அடக்கம் |
20 | தஞ்சை ப்ரகாஷ் | அக்டோபர் | அங்குசம் |
21 | என். ஐயப்பன் | அக்டோபர் | பெண்குட்டி |
22 | நா. விச்வநாதன் | நவம்பர் | யாதுமாகி |
23 | ஆ. நந்தன் | நவம்பர் | பிம்பம் |
24 | வத்ஸலா | நவம்பர் | கோபங்கள் |
25 | எஸ். சங்கர நாராயணன் | நவம்பர் | இறந்தவனின் புல்லாங்குழல் |
26 | இரா. முருகன் | நவம்பர் | தாளம் |
27 | வேல. ராமமூர்த்தி | நவம்பர் | அன்னமயில் |
28 | பாவண்ணன் | நவம்பர் | கிணறு |
29 | சி.எம். முத்து | டிசம்பர் | நாடகவாத்தியார் தங்கசாமி |
30 | ஜெயமோகன் | டிசம்பர் | நிழலாட்டம் |
1995 | |||
1 | அரவிந்தபாரதி | ஜனவரி | துணை |
2 | ரெ. பாண்டியன் | ஜனவரி | அந்நியம் |
3 | ஜே. ஷர்ஜஹான் | ஜனவரி | கருவேலமரங்கள் |
4 | ஐராவதம் | ஜனவரி | எல்லாம் யோசிக்கும் வேளையில் |
5 | ஐசக் அருமைராசன் | பிப்ரவரி | பிம்பங்கள் |
6 | உதயசங்கர் | பிப்ரவரி | பழி |
7 | சுந்தரலட்சுமி | பிப்ரவரி | காற்றும் கண்ணீர்விடும் |
8 | சுப்ரமணிய பாரதி | பிப்ரவரி | ஸத்யாநந்தர் |
9 | சுரேஷ்குமார் இந்திரஜித் | மார்ச் | சுழலும் மின்விசிறி |
10 | சு. இளங்கோ | மார்ச் | ரேஷன் கார்டு |
11 | உமா வரதராஜன் | மார்ச் | எலியம் |
12 | வண்ணதாசன் | ஏப்ரல் | நடுகை |
13 | பாப்லோ அறிவுக்குயில் | ஏப்ரல் | வெயில் பறவை |
14 | ப. தனபால் | மே | உயிர்ப்பு |
15 | ம.ந. ராமசாமி | மே | எரிகிற வீடு |
16 | போப்பு | ஜூன் | இடைவெளி |
17 | இந்திரா பார்த்தசாரதி | ஜூலை | காதல், போர், வியாபாரம் |
18 | வெ. தமிழழகன் | ஜூலை | உயிர்பிஞ்சு |
19 | எஸ். ராமகிருஷ்ணன் | ஜூலை | தாவரங்களின் உரையாடல் |
20 | யூமா வாஸுகி | ஆகஸ்ட் | மழைக்குறிப்பு |
21 | ஜெயமோகன் | ஆகஸ்ட் | ரதம் |
22 | ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் | ஆகஸ்ட் | பக்கத்து அறைகள் |
23 | தனுஷ்கோடி ராமசாமி | செப்டம்பர் | சட்டம் தாண்டிய நியாயம் |
24 | தஞ்சை ப்ரகாஷ் | அக்டோபர் | திண்டி |
25 | பெருமாள் முருகன் | நவம்பர் | வேட்கை |
26 | வண்ணதாசன் | நவம்பர் | நிலத்து இயல்பால் |
27 | சா. கந்தசாமி | நவம்பர் | கீர்த்தி |
28 | பூமணி | நவம்பர் | அடி |
29 | வண்ணநிலவன் | நவம்பர் | அவனுடைய நாட்கள் |
30 | ஜெயமோகன் | டிசம்பர் | வெள்ளம் |
31 | லா.ச. ராமாமிருதம் | டிசம்பர் | மந்த்ரஸ்தாயி |
32 | நாஞ்சிலமுதன் | டிசம்பர் | முதல் பயணம் |
உசாத்துணை
- சுபமங்களா இதழ்கள்
- இலக்கிய இதழ்: சுபமங்களா: இந்து தமிழ் திசை கட்டுரை
- சுபமங்களாவின் இலக்கிய பங்களிப்பு, ஜெ. தேவி
- சுபமங்களா இதழ் தொகுப்பு, இளையபாரதி, கலைஞன் பதிப்பகம்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page