under review

வரலாற்று நாவல்

From Tamil Wiki

வரலாற்று நாவல்: (சரித்திர நாவல்) வரலாற்றுச் செய்திகளை பயன்படுத்தி கற்பனையாகப் புனைந்து எழுதப்படும் நீள்கதை. உரைநடையில் புனைவிலக்கியம் உருவான பிறகு தோன்றிய எழுத்து முறை.

தோற்றம்

ஆங்கிலத்தில் வால்டர் ஸ்காட், பிரெஞ்சில் அலெக்ஸாண்டர் டூமா போன்றவர்கள் எழுதிய வரலாற்று நாவல்களை அடியொற்றி இந்திய மொழிகளில் உரைநடை இலக்கியம் தோன்றியபோதே இவ்வகைமை உருவாகி வந்தது. தமிழில் சித்திலெப்பை மரைக்காயர் எழுதிய அசன்பே சரித்திரம் மற்றும் தி. த. சரவணமுத்துப் பிள்ளை எழுதிய மோகனாங்கி ஆகியவை தொடக்க கால சரித்திர நாவல்கள். தொடர்ந்து கல்கி அதை தமிழின் முதன்மையான பொதுவாசிப்பு இலக்கியவகைமையாக வளர்த்தெடுத்தார். சரித்திர நாவல்களில் சாண்டில்யன் மிகப் புகழ்பெற்றவராகக் கருதப்படுகிறார்.

வகைமை

இலக்கியத்தரமான வரலாற்று நாவல் என்பது அந்தப் புனைவினூடாக வரலாற்றின் உள்ளுறையாக உள்ள சமூக உண்மைகளையோ, வாழ்க்கைத் தரிசனங்களையோ, தத்துவத்தையோ உணர்த்துவது. தமிழில் பிரபஞ்சன் எழுதிய மானுடம் வெல்லும் அத்தகைய நாவல். வரலாற்றுத் தரவுகளைப் பயன்படுத்திக்கொண்டு கற்பனையான ஒரு களத்தை உருவாக்கி அங்கே சாகசம், காதல் போன்ற உணர்வுநிலைகளை உருவாக்கும் படைப்புகள் பொதுவாசிப்புக்குரியவை. கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் நாவல்கள் அத்தகையவை.

வரலாற்று நாவல்கள் பட்டியல்

தமிழில் எழுதப்பட்ட வரலாற்று நாவல்களின் வளரும் பட்டியல். (தொகுப்பு. கே.என்.சிவராமன்)

உசாத்துணை



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Apr-2025, 20:37:05 IST