வரலாற்று நாவல்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 2: Line 2:


== தோற்றம் ==
== தோற்றம் ==
ஆங்கிலத்தில் வால்டர் ஸ்காட், பிரெஞ்சில் அலெக்ஸாண்டர் டூமா போன்றவர்கள் எழுதிய வரலாற்று நாவல்களை அடியொற்றி இந்திய மொழிகளில் உரைநடை இலக்கியம் தோன்றியபோதே இவ்வகைமை உருவாகி வந்தது. தமிழில் [[சித்திலெப்பை மரைக்காயர்]] எழுதிய [[அசன்பே சரித்திரம்]] ஆகியவை தொடக்க கால சரித்திர நாவல்கள். தொடர்ந்து கல்கி அதை தமிழின் முதன்மையான பொதுவாசிப்பு இலக்கியவகைமையாக வளர்த்தெடுத்தார். சரித்திர நாவல்களில் சாண்டில்யன் மிகப்புகழ்பெற்றவராகக் கருதப்படுகிறார்.
ஆங்கிலத்தில் வால்டர் ஸ்காட், பிரெஞ்சில் அலெக்ஸாண்டர் டூமா போன்றவர்கள் எழுதிய வரலாற்று நாவல்களை அடியொற்றி இந்திய மொழிகளில் உரைநடை இலக்கியம் தோன்றியபோதே இவ்வகைமை உருவாகி வந்தது. தமிழில் [[சித்திலெப்பை மரைக்காயர்]] எழுதிய [[அசன்பே சரித்திரம்]] மற்றும் [[தி. த. சரவணமுத்துப் பிள்ளை]] எழுதிய [[மோகனாங்கி]] ஆகியவை தொடக்க கால சரித்திர நாவல்கள். தொடர்ந்து கல்கி அதை தமிழின் முதன்மையான பொதுவாசிப்பு இலக்கியவகைமையாக வளர்த்தெடுத்தார். சரித்திர நாவல்களில் சாண்டில்யன் மிகப்புகழ்பெற்றவராகக் கருதப்படுகிறார்.


== வகைமை ==
== வகைமை ==

Revision as of 08:04, 19 April 2025

வரலாற்று நாவல்: (சரித்திர நாவல்) வரலாற்றுச் செய்திகளை பயன்படுத்தி கற்பனையாகப் புனைந்து எழுதப்படும் நீள்கதை. உரைநடையில் புனைவிலக்கியம் உருவான பிறகு தோன்றிய எழுத்து முறை.

தோற்றம்

ஆங்கிலத்தில் வால்டர் ஸ்காட், பிரெஞ்சில் அலெக்ஸாண்டர் டூமா போன்றவர்கள் எழுதிய வரலாற்று நாவல்களை அடியொற்றி இந்திய மொழிகளில் உரைநடை இலக்கியம் தோன்றியபோதே இவ்வகைமை உருவாகி வந்தது. தமிழில் சித்திலெப்பை மரைக்காயர் எழுதிய அசன்பே சரித்திரம் மற்றும் தி. த. சரவணமுத்துப் பிள்ளை எழுதிய மோகனாங்கி ஆகியவை தொடக்க கால சரித்திர நாவல்கள். தொடர்ந்து கல்கி அதை தமிழின் முதன்மையான பொதுவாசிப்பு இலக்கியவகைமையாக வளர்த்தெடுத்தார். சரித்திர நாவல்களில் சாண்டில்யன் மிகப்புகழ்பெற்றவராகக் கருதப்படுகிறார்.

வகைமை

இலக்கியத்தரமான வரலாற்று நாவல் என்பது அந்தப் புனைவினூடாக வரலாற்றின் உள்ளுறையாக உள்ள சமூக உண்மைகளையோ, வாழ்க்கைத்தரிசனங்களையோ, தத்துவத்தையோ உணர்த்துவது. தமிழில் பிரபஞ்சன் எழுதிய மானுடம் வெல்லும் அத்தகைய நாவல். வரலாற்றுத் தரவுகளைப் பயன்படுத்திக்கொண்டு கற்பனையான ஒரு களத்தை உருவாக்கி அங்கே சாகசம், காதல் போன்ற உணர்வுநிலைகளை உருவாக்கும் படைப்புகள் பொதுவாசிப்புக்குரியவை. கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் நாவல்கள் அத்தகையவை.

வரலாற்று நாவல்கள் பட்டியல்

தமிழில் எழுதப்பட்ட வரலாற்று நாவல்களின் வளரும் பட்டியல். (தொகுப்பு. கே.என்.சிவராமன்)

  • அண்ணாமலை - 2
  • அனுஷா வெங்கடேஷ் - 3
  • அரசு - 1
  • அரசுமணி - 1
  • தி.நா.அறிவுஒளி - 1
  • அருள்நம்பி - 2
  • அருண் - 1
  • அருணன் - 1
  • வி.அசோக்குமார் - 1
  • அழகி - 1
  • ஆர்த்தி கணேசன் - 1
  • கே.எஸ்.ஆனந்தன் - 1
  • சுப்பு ஆறுமுகம் - 1
  • வீ.ஆறுமுகம் - 1
  • ஆதிரையன் ஆலவாய் - 1
  • ஆழியான் - 7
  • பாலகிருஷ்ணன் - 2
  • பாலகுமாரன் - 11
  • ஆர்.பாலசுப்பிரமணியன் - 1
  • எஸ்.பாலசுப்பிரமணியன் - 3
  • பாஸ்கர்தாசன் - 3
  • எம்.பெர்னாட்ஷா - 6
  • பரதவன் - 4
  • ப.சந்திரகாந்தம் - 1
  • சின்ன சாண்டில்யன் - 1
  • தயாநந்தம் - 7
  • தீபா ராமமூர்த்தி - 1
  • திலீபன் - 1
  • திவாகர் - 5
  • துரோணன் - 2
  • என்.எத்திராஜ் - 1
  • எழிலன் - 1
  • பி.சி.கணேசன் - 9
  • ஆர்.எம்.கிருபாகரன் - 1
  • கோகுல் சேஷாத்ரி - 6
  • புரவலன் - 1
  • ஆர்வி - 2
  • எஸ்.எல்.எஸ் - 1
  • சையத் - 1
  • சக்தி ஸ்ரீ - 1
  • சம்பந்தம் - 1
  • சாண்டில்யன் - 46
  • ஆர்.சங்கரநாராயணன் - 3
  • எம்.எஸ்.சாந்தா - 2
  • சாந்தி மீனாட்சி - 2
  • வசந்த நாயகன் - 5
  • வாசவன் - 2
  • இராச வேதாந்தம் - 5
  • வேலவன் - 2
  • சு.வெங்கடேசன் - 2
  • ஸ்ரீவேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) - 12
  • வெற்றிவேல் - 2
  • பா.விஜய் - 1
  • விக்கிரமன் - 37
  • விமலாரமணி - 2
  • விஷ்வக்சேனன் - 6
  • ந.விவேகானந்தன் - 7
  • ஏ.எம்.யூசப் - 1

உசாத்துணை