நற்றிணை
நற்றிணை தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கியத் தொகுப்பின் முதல் நூல். 175 புலவர்களால் பாடப்பட்ட 400 பாடல்கள் கொண்ட அகத்திணை நூல்.
பதிப்பு, வெளியீடு
நற்றிணையை முதன்முதலில் உரையெழுதிப் பதிப்பித்தவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.
தொகுப்பு
நற்றிணை தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது.நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234-ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385-ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று.56 பாடல்களை எழுதியவர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 192.
பாடியோர்
நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை.
|
|
பாடலில் இடம்பெற்ற தொடரால் பெயர் அமைந்த புலவர்கள்
- வண்ணப்புறக் கந்தத்தனார்
- மலையனார்
- தனிமகனார்,
- விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
- தும்பிசேர்க்கீரனார்
- தேய்புரிப் பழங்கயிற்றினார்
- மடல் பாடிய மாதங்கீரனார்
நூல் அமைப்பு
நற்றிணைய கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 7 முதல் 13 அடிகள் கொண்ட 401 ஆசிரியப்பாக்களால் ஆனது. குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடையதால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். நானூறு பாடல்களில் 234-ஆம் பாடல் முழுமையாகவும், 385-ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கவில்லை.
பாடல்அடிகள் | பாடல்கள் | திணை | பாடல்கள் | |
---|---|---|---|---|
7 | 1 | குறிஞ்சித் திணை | 132 | |
8 | 1 | முல்லைத் திணை | 30 | |
9 | 106 | மருதத் திணை | 32 | |
10 | 96 | நெய்தல் திணை | 102 | |
11 | 110 | பாலைத் திணை | 104 | |
12 | 77 | |||
13 | 8 |
நற்றிணைச் செய்யுட்களுக்குக் குறிஞ்சி, முல்லை, முதலிய ஐந்திணைப் பாகுபாடு ஏட்டுப் பிரதிகளில் காணப் பெறவில்லை. இவை பதிப்பாசிரியர்களால் ஊகித்துக் கொடுக்கப் பெற்றனவே.பாடல்களின் அடியில் கொடுக்கப் பெற்றுள்ள கருத்துகள் பழமையானவை. அவை இந் நூலைத் தொகுத்தவராலேனும் பிற்காலத்தவராலேனும் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.
அரசர்களின் பெயர்கள்
அரசர்கள் | ||
---|---|---|
|
|
|
கொல்லிப்பாவை ( 185, 192, 201
- நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அக்கால மக்களின் வாழ்வியல் குறித்த செய்திகளை அறியலாம்.
- நாட்களை எண்ண சுவரில் கோடிட்டுக் கணக்கிடும் பழக்கம்
- யாமக் காவலர் இரவில் ஊரைச் சுற்றிவந்து மக்களைக் கதவுகளை அடைத்துக்கொள்ளுமாறு குரல் எழுப்பினர்
- பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்த்தல்
- மகளிர் கால்பந்து விளையாடும் வழக்கமும் இருந்தது
- பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும்
- மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.
- நில நடுக்கம் பற்றிய குறிப்பு (201)
- ஆறு மீன்களுடன் தோன்றும் கார்த்திகை மாதத்தில் செல்லும் ஒளிமண்டலக் கொடி(202)
- கழைக்கூத்தாடிகள் வளைத்துத் திரித்த வலிமையான கயிற்றின்மீது நடந்து வித்தை காட்டுதல்(95)
- பருத்தி உடைகளுக்குக்கஞ்சி போடும் வழக்கம்(90)
- நீதி, நட்பு, இழிசெயல் கண்டு வெட்கப்படுதல், பிறருக்கு உதவுதல், நல்ல குணங்கள், பிறருக்கு இணக்கமாக நடத்தல் (அவர்கள் விரும்பும் வகையில் நடத்தல்) ஆகியன ஆண்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் (160)
- காகத்துக்கு குயவன் பலிச்சோறு இடுதல்(293)
சிறப்புகள்
நற்றிணைப் பாட்டுக்களைப் பாடிய புலவர்கள், காதலரின் உடல்வனப்பை எடுத்துக் கூறுவதற் கரகதி் தம் புலமையைப் பயன்படுத்தவில்லை காதலரின் பண்பட்ட உள்ளத்து உணர்ச்சியைப் புலப்படுத்துதலே 24 புலவர்களின் கோக்கம். அந்த உள்ளத்தின் இயல்பு புலப்படுவதற்கு, காத லரின் தோற்றம் எக்த அளவிற்கு இன் ஜியமை யாததோ ௮சக்த அளவிற்கே அவர்களின் உடல் . பந்றிய குறிப்புக்கள் உள்ளன. பாட்டுக்களைக் கற்பவர்க்கூக் காதலரின் மூகம் விளங்கத் தோன்றுவதைவிட, முகக் குறிப்பே மிகத் தெளி வாகத் தோன்றும். மற்றக் கலைகளுக்கு இல்லாத பெருஞ்சிறப்பு இது.
பாடல் 132 அந்தக் காலத்தில் யாமக் காவலர் என்னும் போலீஸ் படை (Policing) தமிழ் நாட்டில் இருந்து பற்றிக் கூறும்:
காப்புடை வாயில் போற்று ஓ என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண்மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்
நில நடுக்கம் பற்றிய குறிப்பு 201-ஆம் பாடலில் இடம்பெறுகிறது. ஆறு மீன்களுடன் தோன்றும் கார்த்திகை மாதத்தில் செல்லும் ஒளிமண்டலக் கொடி(202) கழைக்கூத்தாடிகள் வளைத்துத் திரித்த வலிமையான கயிற்றின்மீது நடப்பாள்(95) அஞ்சி அஞ்சியார் உடைகளுக்குக் கஞ்சி போடும் வழக்கம்(90)
நீதி, நட்பு, இழிசெயல் கண்டு வெட்கப்படுதல், பிறருக்கு உதவுதல், நல்ல குணங்கள், பிறருக்கு இணக்கமாக நடத்தல் (அவர்கள் விரும்பும் வகையில் நடத்தல்) ஆகியன ஆண்களுக்கு வேண்டிய குணங்கள் என்பார் (160)
. காகத்துக்கு குயவன் இடும் பலி பற்றிய குறிப்பும் வருகிறது(293)
பாடல் நடை
உசாத்துணை
- நற்றிணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
- நற்றிணை மூலமும் உரையும், வ.த. இராமசுப்பிரமணியம், திருமகள் நிலையம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.