கதைக்கோவை – தொகுதி 1
கதைக்கோவை – தொகுதி 1 (1940), அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இத்தொகுப்பு, பிற நான்கு தொகுதிகளுடன் இணைந்த புதிய பதிப்பாக, ஐந்து தொகுதிகள் கொண்ட ஆறு நூல்களாக 2019-ல், அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது
பிரசுரம், வெளியீடு
’கதைக்கோவை’யின் முதல் தொகுதி, 40 எழுத்தாளர்களின் 40 சிறுகதைகளுடன் 1940-ல், முதல் பதிப்பாக வெளிவந்தது. இரண்டாம் பதிப்பு 1989-ல் வெளிவந்தது. கதைக்கோவையின் பிற தொகுதிகள் 1946 வரை வெளிவந்தன. 70 ஆண்டுகளுக்குப் பின், 2019-ல், கதைக்கோவையின் ஐந்து தொகுதிகளையும், புதிய மீள் பதிப்பாக, ஆறு நூல்களாக அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டது.
கதைக்கோவை – முதல் தொகுதி
’கதைக்கோவை’யின் முதல் தொகுதி, 40 எழுத்தாளர்களின் 40 சிறுகதைகளுடன் வெளியானது.
உள்ளடக்கம்
எண் | எழுத்தாளர் | சிறுகதை |
---|---|---|
1 | மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் | தருமம் தலை காக்கும் |
2 | சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் | தேவானை |
3 | எஸ்.வி.வி. | விவேகம் |
4 | க.சந்தானம், எம்.ஏ, பி.எல். | சோதனை |
5 | கி. சாவித்திரி அம்மாள் | பழைய ஞாபகங்கள் |
6 | சங்கரராம் | கடைசி வேட்டை |
7 | ந. பிச்சமூர்த்தி, பி.ஏ. | விஜயதசமி |
8 | ரா. ஸ்ரீ. தேசிகன், எம்.ஏ. | மழை இருட்டு |
9 | தி.ஜ. ர. | ஒரு ஜோடிக் காளை |
10 | கு.ப. ராஜகோபாலன், பி.ஏ. | விடியுமா? |
11 | தி.நா. சுப்பிரமணியன் | தீராத ஏக்கம் |
12 | சங்கு சுப்பிரமணியம் | செம்படவச் சிறுமி |
13 | பி..எஸ். ராமையா | நட்சத்திரக் குழந்தைகள் |
14 | தி.ப. பத்மநாபன் | இழந்த மணி |
15 | கி.வா. ஜகந்நாதன், எம்.ஏ. | கலைஞன் தியாகம் |
16 | த.நா. குமாரசாமி, பி.ஏ. | குகைச்சித்திரம் |
17 | சேது அம்மாள் | குலவதி |
18 | சு. குருசாமி, பி.ஏ, எல்.டி. | குழந்தை உள்ளம் |
19 | சி. வைத்தியலிங்கம் (கொழும்பு) | மூன்றாம் பிறை |
20 | ந. சிதம்பர சுப்பிரமணியன் | கொல்லைப்புறக் கோழி |
21 | பி.எம். கண்ணன் | மறுஜன்மம் |
22 | கொத்தமங்கலம் சுப்பிரமணியம் | மஞ்சள் விரட்டு |
23 | கி.ரா. | சொத்துக்கு உடையவன் |
24 | க.நா. சுப்ரமண்யம் | சாவித்திரி |
25 | சி.சு. செல்லப்பா | நொண்டிக் குழந்தை |
26 | ஜே. தங்கவேல், பி.ஏ. | என் மனைவி |
27 | புரசு பாலகிருஷ்ணன், எம்.பி.பி.எஸ். | பெற்றோர்கள் |
28 | ஏ. முகம்மது ரஷீத், பி.எஸ்ஸி. (ஆனர்ஸ்) | ஏழையின் குழந்தை |
29 | த.நா. சேனாபதி | சண்டையும் சமாதானமும் |
30 | சம்பந்தன் (யாழ்ப்பாணம்) | விதி |
31 | அ.கி. ஜெயராம் | வாழ்க்கையின் கனவு |
32 | ஆர். நாராயண ஐயங்கார், பி.ஏ, பி.எல். | வாயாடி ராமு |
33 | மௌனி | அழியாச்சுடர் |
34 | ஆர் சண்முகசுந்தரம் | கல்லினுள் தேரை |
35 | பி.வி. சுப்பிரமணியம், பி.ஏ. | ஏழைக் குடும்பம் |
36 | குகப்ரியை | தேவகி |
37 | இலங்கையர்கோன் (யாழ்ப்பாணம்) | தந்தை மனம் |
38 | றாலி | கெட்டிக்காரி கல்யாணி |
39 | சு. சேதுராமன் | டாக்டரின் மனைவி |
40 | ஆர். திருஞானசம்பந்தன் | ஜனகாவின் குதூகலம் |
மதிப்பீடு
கதைக்கோவை – முதல் தொகுதி, உ.வே. சாமிநாதையர் தொடங்கி, இதழாளரும், எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான ஆர். திருஞானசம்பந்தன் வரையிலான எழுத்தாளர்களின் அரிய சிறுகதைகளைக் கொண்டுள்ளது. அந்தக் கால பண்பாடு, மக்கள் நாகரிகம், வாழ்க்கை பற்றியதொரு ஆவணமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது.
உசாத்துணை
✅Finalised Page