first review completed

சரஸ்வதி (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
Line 1: Line 1:
[[File:சரஸ்வதி (இதழ்).jpg|border|thumb|471x471px]]
[[File:சரஸ்வதி (இதழ்).jpg|border|thumb|471x471px]]
[[File:சரஸ்வதி களஞ்சியம்.jpg|thumb|சரஸ்வதி களஞ்சியம்]]
[[File:Saraswathi-kaalam-10006106-550x550h.jpg|thumb|சரஸ்வதி காலம்]]
சரஸ்வதி ( ) தமிழ் சிற்றிதழ். முற்போக்கு இலக்கியத்தை முன்வைத்த தொடக்ககால வெளியீடுகளில் ஒன்று. பின்னாளில் தமிழின் முக்கிய எழுத்தாளுமைகளாக உருவான சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்ற பலருக்கு தொடக்க கால வாய்ப்புகளை அளித்த இதழ். கம்யூனிச சார்பாளரான  வ.விஜயபாஸ்கரனால் நடத்தப்பட்டதாகும்.
சரஸ்வதி ( ) தமிழ் சிற்றிதழ். முற்போக்கு இலக்கியத்தை முன்வைத்த தொடக்ககால வெளியீடுகளில் ஒன்று. பின்னாளில் தமிழின் முக்கிய எழுத்தாளுமைகளாக உருவான சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்ற பலருக்கு தொடக்க கால வாய்ப்புகளை அளித்த இதழ். கம்யூனிச சார்பாளரான  வ.விஜயபாஸ்கரனால் நடத்தப்பட்டதாகும்.
== தோற்றம், வரலாறு ==
== தோற்றம், வரலாறு ==
Line 20: Line 22:
* "சென்னைக்கு வந்தேன்" என்ற தலைப்பில் பல எழுத்தாளர்களது அனுபவங்களையும், "நானும் என் எழுத்தும்" என்று பலரது எண்ணங்களையும் வெளியிட்டது.
* "சென்னைக்கு வந்தேன்" என்ற தலைப்பில் பல எழுத்தாளர்களது அனுபவங்களையும், "நானும் என் எழுத்தும்" என்று பலரது எண்ணங்களையும் வெளியிட்டது.
* சிறந்த ஆண்டு மலர் களை வெளியிட்டது.
* சிறந்த ஆண்டு மலர் களை வெளியிட்டது.
* "நமது எழுத்தாளர் வரிசை" என்று எழுத்தாளர்களின் படத்தை அட்டையில் வெளியிட்டு, அவர்களைப் பற்றிய கட்டுரையை உள்ளே பிரசுரித்தது.சரஸ்வதி மாதம் இருமுறையின் முதல் இதழில் (20.9-58) இலங்கை எழுத்தாளர் எச். எம். பி. முஹிதீன் படம் அட் டைப் படமாக விளங்கியது. 25-10-58 இதழ் அட்டையில் ஜெயகாந்தன் படம். நவம்பர் 10 இதழில் டொமினிக் ஜீவா 25-ம் தேதி இதழில் கே. இராமநாதன், டிசம்பர் 10-ல் கே. டானியல் 25-ல் நா. வானமாமலை ஆகியோரின் படங்கள் பிரசுரமாயின.
* "நமது எழுத்தாளர் வரிசை" என்று எழுத்தாளர்களின் படத்தை அட்டையில் வெளியிட்டு, அவர்களைப் பற்றிய கட்டுரையை உள்ளே பிரசுரித்தது.சரஸ்வதி மாதம் இருமுறையின் முதல் இதழில் (20.9-58) இலங்கை எழுத்தாளர் எச். எம். பி. முஹிதீன் படம் அட் டைப் படமாக விளங்கியது. 25-10-58 இதழ் அட்டையில் ஜெயகாந்தன் படம். நவம்பர் 10 இதழில் டொமினிக் ஜீவா 25-ம் தேதி இதழில் கே. இராமநாதன், டிசம்பர் 10-ல் கே. டானியல் 25-ல் நா. வானமாமலை ஆகியோரின் படங்கள் பிரசுரமாயின.
== நிறுத்தம் ==
== நிறுத்தம் ==
"சரஸ்வதி" இதழ் தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றியது என்றாலும், பொருளாதார ரீதியில் தோல்வி  கண்டது. மேலும், 1962-ல் சீனா, இந்தியா மீது படையெடுத்தபோது, தமிழ் நாட்டில் இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது, [[பி. ராமமூர்த்தி]] உள்ளிட்ட தலைவர்களுடன்  வ.. விஜயபாஸ்கரனும் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதனால், 1962-ஆம் ஆண்டு நான்காவது இதழுடன் (ஜூன் மாதம்) சரஸ்வதி நின்று விட்டது.
"சரஸ்வதி" இதழ் தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றியது என்றாலும், பொருளாதார ரீதியில் தோல்வி  கண்டது. மேலும், 1962-ல் சீனா, இந்தியா மீது படையெடுத்தபோது, தமிழ் நாட்டில் இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது, [[பி. ராமமூர்த்தி]] உள்ளிட்ட தலைவர்களுடன்  வ.. விஜயபாஸ்கரனும் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதனால், 1962-ஆம் ஆண்டு நான்காவது இதழுடன் (ஜூன் மாதம்) சரஸ்வதி நின்று விட்டது.  


சரஸ்வதி ஒரு தனிநபர் முயற்சியாக வெளிவந்தது. இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் [[ப.ஜீவானந்தம்]] முன்னெடுப்பில் முழுக்க முழுக்க கட்சிப்பத்திரிகையாக தாமரை வெளிவரத் தொடங்கியதும் சரஸ்வதி நின்று போவதற்கான காரணம். கட்சி இதழான ஜனசக்தியின் விற்பனையாளர்களே சரஸ்வதியையும் வினியோகித்தனர். ப.ஜீவானந்தம் சரஸ்வதிக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை, கட்சித் தோழர்கள் சரஸ்வதியை ஆதரிக்கவேண்டாம் என்று பிரச்சாரம் செய்து சரஸ்வதியை நிறுத்த காரணமாக அமைந்தார் என்று வல்லிக்கண்ணன் ‘சரஸ்வதிக் காலம்’ நூலில் குறிப்பிடுகிறார். ப.ஜீவானந்தம் சரஸ்வதியை நிறுத்தும் நோக்குடன் [[தாமரை (இதழ்)|தாமரை]] இதழை தொடங்கியதாகவும், அது [[குமுதம்]] போல வெற்றிபெறவேண்டும் என்பதனால் தாமரை என பெயரிட்டதாகவும், சரஸ்வதி அச்சிடப்பட்ட ஜனசக்தி அச்சகத்திலேயே தாமரையும் அச்சிடப்பட்டதனால் சரஸ்வதி வேலைகள் பாதிக்கப்பட்டன என்றும், தாமரையை சரஸ்வதிக்கு பதிலாக வாங்கவேண்டும் என கட்சித்தோழர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் வல்லிக்கண்ணனின் நூல் கூறுகிறது.  
சரஸ்வதி ஒரு தனிநபர் முயற்சியாக வெளிவந்தது. இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் [[ப.ஜீவானந்தம்]] முன்னெடுப்பில் முழுக்க முழுக்க கட்சிப்பத்திரிகையாக தாமரை வெளிவரத் தொடங்கியதும் சரஸ்வதி நின்று போவதற்கான காரணம். கட்சி இதழான ஜனசக்தியின் விற்பனையாளர்களே சரஸ்வதியையும் வினியோகித்தனர். ப.ஜீவானந்தம் சரஸ்வதிக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை, கட்சித் தோழர்கள் சரஸ்வதியை ஆதரிக்கவேண்டாம் என்று பிரச்சாரம் செய்து சரஸ்வதியை நிறுத்த காரணமாக அமைந்தார் என்று வல்லிக்கண்ணன் ‘சரஸ்வதிக் காலம்’ நூலில் குறிப்பிடுகிறார். ப.ஜீவானந்தம் சரஸ்வதியை நிறுத்தும் நோக்குடன் [[தாமரை (இதழ்)|தாமரை]] இதழை தொடங்கியதாகவும், அது [[குமுதம்]] போல வெற்றிபெறவேண்டும் என்பதனால் தாமரை என பெயரிட்டதாகவும், சரஸ்வதி அச்சிடப்பட்ட ஜனசக்தி அச்சகத்திலேயே தாமரையும் அச்சிடப்பட்டதனால் சரஸ்வதி வேலைகள் பாதிக்கப்பட்டன என்றும், தாமரையை சரஸ்வதிக்கு பதிலாக வாங்கவேண்டும் என கட்சித்தோழர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் வல்லிக்கண்ணனின் நூல் கூறுகிறது.  
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
சரஸ்வதி அது உருவாக்கிய எழுத்தாளர்களின் நிரை, முன் வைத்த படைப்புகள் வழியாக காலம் தாண்டி நினைவுகூறப்படுகிறது. அவ்வகையில் அது தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் முன்னோடியின் இடம் கொண்டது. 1950-களில் சரஸ்வதி ஏழாயிரம் பிரதிகள் அச்சாகியது. இதில் சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜி. நாகராஜன்  போன்றவர்கள் ஒரே வீச்சுடன் அறிமுகமானார்கள். முக்கியமான பிறமொழி எழுத்தாளர்களிடம் கட்டுரைகள்  பெற்று தமிழில்  மொழிபெயர்த்து வெளியிட்டது இவ்விதழின் சிறப்புகளில் ஒன்று. நவீன இலக்கியத்தில் பிற்பாடு விவாதிக்கப்பட்ட பெரும்பாலான தலைப்புகள் சரஸ்வதியில் பேசப்பட்டிருக்கின்றன. முற்போக்கு இலக்கியத்திற்கும் மற்ற இலக்கியத்திற்குமான உரையாடல் நிகழும் களமாகவும் சரஸ்வதி விளங்கியது. அந்த இதழுக்குப்பின் அத்தகைய உரையாடல் நிகழவில்லை.
சரஸ்வதி அது உருவாக்கிய எழுத்தாளர்களின் நிரை, முன் வைத்த படைப்புகள் வழியாக காலம் தாண்டி நினைவுகூறப்படுகிறது. அவ்வகையில் அது தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் முன்னோடியின் இடம் கொண்டது. 1950-களில் சரஸ்வதி ஏழாயிரம் பிரதிகள் அச்சாகியது. இதில் சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜி. நாகராஜன்  போன்றவர்கள் ஒரே வீச்சுடன் அறிமுகமானார்கள். முக்கியமான பிறமொழி எழுத்தாளர்களிடம் கட்டுரைகள்  பெற்று தமிழில்  மொழிபெயர்த்து வெளியிட்டது இவ்விதழின் சிறப்புகளில் ஒன்று. நவீன இலக்கியத்தில் பிற்பாடு விவாதிக்கப்பட்ட பெரும்பாலான தலைப்புகள் சரஸ்வதியில் பேசப்பட்டிருக்கின்றன. முற்போக்கு இலக்கியத்திற்கும் மற்ற இலக்கியத்திற்குமான உரையாடல் நிகழும் களமாகவும் சரஸ்வதி விளங்கியது. அந்த இதழுக்குப்பின் அத்தகைய உரையாடல் நிகழவில்லை.  
== தொடர்பான நூல்கள் ==
== தொடர்பான நூல்கள் ==
* 'சரஸ்வதி' யின் விரிவான வரலாற்றை விவரிக்கும் விதமாக [[வல்லிக்கண்ணன்]] "[https://www.tamilvu.org/library/nationalized/pdf/81-vallikannan/96-sarasvathikaalam.pdf சரஸ்வதி காலம்]" என்ற நூலை எழுதியுள்ளார்.(இணைய நூலகம்)
* 'சரஸ்வதி' யின் விரிவான வரலாற்றை விவரிக்கும் விதமாக [[வல்லிக்கண்ணன்]] "[https://www.tamilvu.org/library/nationalized/pdf/81-vallikannan/96-sarasvathikaalam.pdf சரஸ்வதி காலம்]" என்ற நூலை எழுதியுள்ளார்.(இணைய நூலகம்)
* "[[சரஸ்வதி களஞ்சியம்]]" என்ற தொகுப்பு நூல் (2001) ப. விஜயபாஸ்கரனால் வெளியிடப்பட்டது.
* "சரஸ்வதி களஞ்சியம்" என்ற தொகுப்பு நூல் (2001) ப. விஜயபாஸ்கரனால் வெளியிடப்பட்டது.
*
*
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
Line 37: Line 38:
*[https://www.dinamani.com/tamilnadu/2011/feb/11/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-310221.html https://www.dinamani.com/tamilnadu/2011சரஸ்வதி விஜயபாஸ்கரன்]
*[https://www.dinamani.com/tamilnadu/2011/feb/11/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-310221.html https://www.dinamani.com/tamilnadu/2011சரஸ்வதி விஜயபாஸ்கரன்]
*[https://www.tamilvu.org/library/nationalized/pdf/81-vallikannan/96-sarasvathikaalam.pdf சரஸ்வதிக் காலம் இணையநூலகம்]
*[https://www.tamilvu.org/library/nationalized/pdf/81-vallikannan/96-sarasvathikaalam.pdf சரஸ்வதிக் காலம் இணையநூலகம்]
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.pdf/138 சரஸ்வதிக் காலம் இணையநூலகம்2]
*
*
*
*
{{First review completed}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 12:55, 28 April 2022

சரஸ்வதி (இதழ்).jpg
சரஸ்வதி களஞ்சியம்
சரஸ்வதி காலம்

சரஸ்வதி ( ) தமிழ் சிற்றிதழ். முற்போக்கு இலக்கியத்தை முன்வைத்த தொடக்ககால வெளியீடுகளில் ஒன்று. பின்னாளில் தமிழின் முக்கிய எழுத்தாளுமைகளாக உருவான சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்ற பலருக்கு தொடக்க கால வாய்ப்புகளை அளித்த இதழ். கம்யூனிச சார்பாளரான  வ.விஜயபாஸ்கரனால் நடத்தப்பட்டதாகும்.

தோற்றம், வரலாறு

சரஸ்வதி இதழ்  1955-ஆம் ஆண்டு மே மாதம் வ.விஜயபாஸ்கரனால் துவக்கப்பட்டது. முதலில் மாத இதழாக தொடங்கப்பட்டு, ஜனவரி 20, 1958 முதல் மாதமிருமுறை இதழாக வெளிவந்தது.

கம்யூனிச சார்பாளரான  வ.விஜயபாஸ்கரன் நடத்தும் பத்திரிக்கை என்பதால் சரஸ்வதிக்கு கம்யூனிச பத்திரிகை என்ற முத்திரை விழக்கூடாது, அரசியல் நிறம் தெரியாத கலை இலக்கியப் பத்திரிகையாகத் தெரியும்படியான 'கலைமகள்' போன்ற ஒரு பெயராக இருக்க வேண்டும் என்று அவர் கருதினார். எனவே, முன்னோடி  இந்திய  முற்போக்கு எழுத்தாளர்  பிரேம்சந்த் நடத்திய இதழ்  'சரஸ்வதி' யின் பெயரையே வ.விஜயபாஸ்கரன் தனது பத்திரிகைக்கும் தேர்ந்தெடுத்தார்.  இப்பெயர்  வ.விஜயபாஸ்கரனின் மனைவியின் பெயராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலை நாட்டில் வளர்ந்து வரும் புத்தம் புதிய கருத்துக்களைத் திரட்டித் தமிழர்களுக்குத் தருவது, மறைந்து வரும் பாரம்பரிய கலைச் செல்வங்களைத் தேடி எடுத்து வெளியிடுவது, தமிழில் சிறந்த சிறுகதைகள், கவிதைகள் வெளிவருவதற்கு ஆவன செய்வது- இவை 'சரஸ்வதி' இதழ் ஆசிரியரின் நோக்கங்களாக இருந்தன. இவற்றை சரஸ்வதி இதழ் மூலம் நிறைவேற்றவும் செய்தார்.

மாத இதழாக தொடங்கியபோது  வ. விஜயபாஸ்கரன் ஆசிரியாக இருந்தார். ஜனவரி 20,1958 முதல் மாதமிருமுறை இதழாக வெளிவந்த போது எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்) , தொ.மு.சி. ரகுநாதன், சுந்தர ராமசாமி மற்றும் ஆர்.கே. கண்ணன் ஆகியோர் வ. விஜயபாஸ்கரனோடு ஆசிரியர் குழுவாக இணைந்து செயல்பட்டார்கள்.

படைப்பாளிகள் மற்றும் படைப்புகள்

  • அயல்நாட்டுச் சிறுகதைகளின் தமிழாக்கம், சிறந்த உலக நாவல்கள் பலவற்றின் சுருக்கம், சுயமாக எழுதப்பெற்ற சிறுகதைகள், கருத்துச் செறிவுள்ள கட்டுரைகள், மெய்யியல், பண்பாடு, அறிவியல், பொருளாதாரம் சம்பந்தமான பல்வேறு கட்டுரைகள், நல்ல கவிதைகள் போன்றவை "சரஸ்வதி" இதழில் வெளியாகின.
  • ஒலிப்பதிவாளர் நிமாய் கோஷ் திரைப்படத் தொழில் பற்றிக் கட்டுரைகள் எழுதினார். சதுரங்கம் குறித்தும், ஒளிப்படக் கலை பற்றியும் விளக்கக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
  • ஜெயகாந்தனின் முதல் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளில் இடம் பெற்ற கதைகளில் பெரும்பாலானவை சரஸ்வதி இதழில் வெளிவந்தவை.
  • சுந்தர ராமசாமி,  வல்லிக்கண்ணன், கிருஷ்ணன் நம்பி மற்றும் இலங்கை எழுத்தாளர்களான டொமினிக் ஜீவா, கே. டானியல், காவலூர் ராசதுரை ஆகியோரின் கதைகள் பலவற்றை 'சரஸ்வதி' பிரசுரித்தது.
  • சுந்தர ராமசாமி,   தகழி சிவசங்கரப் பிள்ளையின் 'தோட்டியுட மகன்' நாவலை தமிழாக்கமாக "தோட்டி மகன்" என்ற பெயரிலும், தன் முதல் நாவலான ஒரு புளியமரத்தின் கதையின் முதல் பாதியையும் சரஸ்வதி இதழில் எழுதினார்.
  • வல்லிக்கண்ணன் எழுதிய ‘அடிவானம்' நாவலின் ஒரு பகுதி இவ்விதழில் வெளியிடபட்டது.
  • க.நா.சுப்ரமணியம், சி. சு. செல்லப்பா, வல்லிக்கண்ணன், ந. பிச்சமூர்த்தி, நகுலன், மௌனிதொ.மு.சி. ரகுநாதன், எஸ். ராமகிருஷ்ணன், ஆர். கே. கண்ணன், சாமி சிதம்பரனார், கி. ராஜநாராயணன், ஆர்.சூடாமணி ஆகியோரின் படைப்புகள் "சரஸ்வதி" இதழில் வெளிவந்தன.
  • ஆர்வமூட்டிய விவாதங்களை சரஸ்வதி அவ்வப்போது வளர்த்தது. புதுமைப்பித்தன் இலக்கியம் பற்றி ஒரு விவாதம்,  சாகித்திய அகாடமி பரிசு அளிக்கிற போக்கு பற்றிய  கருத்துக்கள், மொழி வெறியர்கள் மற்றும் குறுகிய நோக்குடைய பண்டிதர்களின் போக்கை எதிர்த்து கட்டுரைகள், ' இலக்கியத்தில் ஆபாசம் என்பது குறித்துக் கண்டனங்களும் மறுமொழிகளும்  இவ்வாறு பல்வேறு பொருண்மைகள் சரஸ்வதி இதழில் விவாதிக்கப்பட்டன.
  • "சென்னைக்கு வந்தேன்" என்ற தலைப்பில் பல எழுத்தாளர்களது அனுபவங்களையும், "நானும் என் எழுத்தும்" என்று பலரது எண்ணங்களையும் வெளியிட்டது.
  • சிறந்த ஆண்டு மலர் களை வெளியிட்டது.
  • "நமது எழுத்தாளர் வரிசை" என்று எழுத்தாளர்களின் படத்தை அட்டையில் வெளியிட்டு, அவர்களைப் பற்றிய கட்டுரையை உள்ளே பிரசுரித்தது.சரஸ்வதி மாதம் இருமுறையின் முதல் இதழில் (20.9-58) இலங்கை எழுத்தாளர் எச். எம். பி. முஹிதீன் படம் அட் டைப் படமாக விளங்கியது. 25-10-58 இதழ் அட்டையில் ஜெயகாந்தன் படம். நவம்பர் 10 இதழில் டொமினிக் ஜீவா 25-ம் தேதி இதழில் கே. இராமநாதன், டிசம்பர் 10-ல் கே. டானியல் 25-ல் நா. வானமாமலை ஆகியோரின் படங்கள் பிரசுரமாயின.

நிறுத்தம்

"சரஸ்வதி" இதழ் தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றியது என்றாலும், பொருளாதார ரீதியில் தோல்வி  கண்டது. மேலும், 1962-ல் சீனா, இந்தியா மீது படையெடுத்தபோது, தமிழ் நாட்டில் இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது, பி. ராமமூர்த்தி உள்ளிட்ட தலைவர்களுடன்  வ.. விஜயபாஸ்கரனும் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதனால், 1962-ஆம் ஆண்டு நான்காவது இதழுடன் (ஜூன் மாதம்) சரஸ்வதி நின்று விட்டது.

சரஸ்வதி ஒரு தனிநபர் முயற்சியாக வெளிவந்தது. இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் ப.ஜீவானந்தம் முன்னெடுப்பில் முழுக்க முழுக்க கட்சிப்பத்திரிகையாக தாமரை வெளிவரத் தொடங்கியதும் சரஸ்வதி நின்று போவதற்கான காரணம். கட்சி இதழான ஜனசக்தியின் விற்பனையாளர்களே சரஸ்வதியையும் வினியோகித்தனர். ப.ஜீவானந்தம் சரஸ்வதிக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை, கட்சித் தோழர்கள் சரஸ்வதியை ஆதரிக்கவேண்டாம் என்று பிரச்சாரம் செய்து சரஸ்வதியை நிறுத்த காரணமாக அமைந்தார் என்று வல்லிக்கண்ணன் ‘சரஸ்வதிக் காலம்’ நூலில் குறிப்பிடுகிறார். ப.ஜீவானந்தம் சரஸ்வதியை நிறுத்தும் நோக்குடன் தாமரை இதழை தொடங்கியதாகவும், அது குமுதம் போல வெற்றிபெறவேண்டும் என்பதனால் தாமரை என பெயரிட்டதாகவும், சரஸ்வதி அச்சிடப்பட்ட ஜனசக்தி அச்சகத்திலேயே தாமரையும் அச்சிடப்பட்டதனால் சரஸ்வதி வேலைகள் பாதிக்கப்பட்டன என்றும், தாமரையை சரஸ்வதிக்கு பதிலாக வாங்கவேண்டும் என கட்சித்தோழர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் வல்லிக்கண்ணனின் நூல் கூறுகிறது.

இலக்கிய இடம்

சரஸ்வதி அது உருவாக்கிய எழுத்தாளர்களின் நிரை, முன் வைத்த படைப்புகள் வழியாக காலம் தாண்டி நினைவுகூறப்படுகிறது. அவ்வகையில் அது தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் முன்னோடியின் இடம் கொண்டது. 1950-களில் சரஸ்வதி ஏழாயிரம் பிரதிகள் அச்சாகியது. இதில் சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜி. நாகராஜன்  போன்றவர்கள் ஒரே வீச்சுடன் அறிமுகமானார்கள். முக்கியமான பிறமொழி எழுத்தாளர்களிடம் கட்டுரைகள்  பெற்று தமிழில்  மொழிபெயர்த்து வெளியிட்டது இவ்விதழின் சிறப்புகளில் ஒன்று. நவீன இலக்கியத்தில் பிற்பாடு விவாதிக்கப்பட்ட பெரும்பாலான தலைப்புகள் சரஸ்வதியில் பேசப்பட்டிருக்கின்றன. முற்போக்கு இலக்கியத்திற்கும் மற்ற இலக்கியத்திற்குமான உரையாடல் நிகழும் களமாகவும் சரஸ்வதி விளங்கியது. அந்த இதழுக்குப்பின் அத்தகைய உரையாடல் நிகழவில்லை.

தொடர்பான நூல்கள்

  • 'சரஸ்வதி' யின் விரிவான வரலாற்றை விவரிக்கும் விதமாக வல்லிக்கண்ணன் "சரஸ்வதி காலம்" என்ற நூலை எழுதியுள்ளார்.(இணைய நூலகம்)
  • "சரஸ்வதி களஞ்சியம்" என்ற தொகுப்பு நூல் (2001) ப. விஜயபாஸ்கரனால் வெளியிடப்பட்டது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.