under review

கதைக்கோவை – தொகுதி 3

From Tamil Wiki
Revision as of 11:11, 17 January 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (category and template text moved to bottom of text)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கதைகோவை: தொகுதி-3

கதைக்கோவை – தொகுதி – 3, 1940-களில் அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இத்தொகுப்பு, பிற நான்கு தொகுதிகளுடன் இணைந்த புதிய பதிப்பாக, ஐந்து தொகுதிகள் கொண்ட ஆறு நூல்களாக, 2019-ல் அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

பிரசுரம், வெளியீடு

கதைக்கோவையின் மூன்றாவது தொகுதி, 60 எழுத்தாளர்களின் 60 சிறுகதைகளுடன் 1940-களில், முதல் பதிப்பாக வெளிவந்தது. கதைக்கோவையின் பிற தொகுதிகள் 1946 வரை வெளிவந்தன. 70 ஆண்டுகளுக்குப் பின், 2019-ல், கதைக்கோவையின் ஐந்து தொகுதிகளும், புதிய மீள் பதிப்பாக, ஆறு நூல்களாக அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன.

கதைக்கோவை – மூன்றாவது தொகுதி

கதைக்கோவையின் மூன்றாவது தொகுதி, 60 எழுத்தாளர்களின் 60 சிறுகதைகளுடன் வெளியானது.


உள்ளடக்கம்

கதைக்கோவையின் மூன்றாவது தொகுதியில் கீழ்காணும் 60 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றன.

எண் எழுத்தாளர் சிறுகதை
1 அகிலன் காசு மரம்
2 அ.செ.மு.(யாழ்ப்பாணம்) மனித மாடு
3 பெ.நா. அப்புஸ்வாமி, பி.ஏ.பி.எல். தீபாவளி பட்சணம்
4 அம்மணி வேகவாகினி
5 மஞ்சேரி எஸ். ஈசுவரன் தொட்டில்
6 ச.கு கணபதி ஐயர், பி.ஓ.எல். நரசிம்மாவதாரம்
7 மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேச செட்டியார் போலிப் பக்தர்
8 எஸ். கந்தசாமி தகர்ந்த கோட்டை
9 எம்.எஸ். கமலா கார்த்திகைச் சீர்
10 எஸ். கமலாம்பாள் ஊமைச்சியின் கல்யாணம்
11 கா.ஸ்ரீ.ஸ்ரீ. அமிர்தம்
12 ஏ.டி. கிருஷ்ணமாசாரி, பி.ஏ. பி.எல். சர்க்கரைப் பொங்கல்
13 வ.வே.ஸு. கிருஷ்ணமூர்த்தி கடந்த போன நாட்கள்
14 எஸ். கிருஷ்ணன் பிள்ளையார் கோயில் மணி
15 கொனஷ்டை இல்வாழ்க்கை
16 கோமதி சுப்பிரமணியம் மனக் கண்ணாடி
17 சசி அதிருஷ்டசுந்தரி
18 கோ. த. சண்முகசுந்தரம் பிரார்த்தனை
19 ஜி. சதாசிவம் காதலுக்குப் பலி
20 எம்.எல். சபரிராஜன் ஏழைக்கு நியாயம்
21 சீதா தேவி அடிகள்ளி
22 அ. சீநிவாஸராகவன், எம்.ஏ. பிரிவு
23 சுத்தானந்த பாரதியார் உமாகௌரி
24 கே. சுந்தரம்மாள் பாமினியின் தியாகம்
25 பூவாளூர் சுந்தரராமன் குறை நோன்பு
26 ஆர். சுந்தரி மாற்றாந்தாய்
27 ராவ் சாஹிப் வெ.ப. சுப்பிரமணிய முதலியார் பருவயிரமணிமாலை
28 ஆ. சுப்பையா செங்கமலம்
29 வி.எஸ். சுப்பையா எட்டாத மலர்
30 பி.ஆர். சூடாமணி அத்தை
31 மோ.ஸ்ரீ. செல்லம், பி.ஓ.எல். எல்.டி. கிரேட்
32 தங்கம்மாள் பாரதி கவிதை
33 தஞ்சம் மன்னிப்பு
34 பெ. தூரன் ஓவியர்மணி
35 நாடோடி கடற்கரை மோகினி
36 ப. நீலகண்டன் ஸ்வீகாரம்
37 ஆர்.கே. பார்த்தசாரதி, எம்.ஏ. எல்.டி இசைக்காதல்
38 கு.மா. பாலசுப்பிரமணியம் வாழாவெட்டி
39 புதுமைப்பித்தன் செவ்வாய் தோஷம்
40 ஸி. ஆர். மயிலேறு, எம்.ஏ. மாட்டுத் திருடன்
41 மாயாவி இறுதிக்கடிதம்
42 மாரார் வதந்தி
43 மாஜினி குல தெய்வம்
44 டாக்டர் வே. ராகவன், எம்.ஏ. ஜாடி
45 மே.சு. ராமசுவாமி, பி.ஏ.பி.எல். கடைக்கண் பணி
46 ப. ராமஸ்வாமி கொலைஞன்
47 லா.ச. ராமாமிருதம் கந்தர்வன்
48 வல்லிக்கண்ணன் முத்து
49 வாசிமலை குலம் கோத்திரம்
50 கே. விஜயராகவன் எதிரொலி
51 தே. வீரராகவன், பி.ஓ.எல். தரித்திர நாராயணன்
52 ரா. வேங்கடராமன் பட்டுவின் பிரயாணம்
53 வேங்கடலக்ஷ்மி அந்தகன் குழலோசை
54 ராவ்சாகிப் எஸ். வையாபுரிப் பிள்ளை, பி.ஏ.பி.எல். ராமுவின்சுய சரிதம்
55 ஜானம்மாள் நாடகம் பலித்ததா?
56 வி.எஸ். ஸ்ரீநிவாஸ சாஸ்திரிகள் (மகாகனம்) பங்காளிக் காய்ச்சல்
57 ஆர். ஸரஸ்வதி மதுமதியின் ஸ்தூபி
58 ஸரோஜினி ராமஸ்வாமி ராஜநந்தினி
59 ஸையத் முகம்மத் வள்ளி
60 ஸோமாஸ் அதிருஷ்டசாலி

மதிப்பீடு

கதைக்கோவை மூன்றாவது தொகுதியில் தங்கம்மாள் பாரதி, வேங்கடலக்ஷ்மி, எம்.எஸ். கமலா தொடங்கி பி. ராஜ சூடாமணி, ஆர். ஸரஸ்வதி வரை 10-க்கும் மேற்பட்ட பெண் படைப்பாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்றன. கதைக்கோவை தொகுதிகள், அக்கால இலக்கிய உலகில் புதிய கருப்பொருள்களைக் கொண்ட சிறுகதைகள் வெளிவர உதவின. எழுத்தாளர்களும், அவர்களுடைய படைப்புகளும் பரவலாக வாசக கவனமும் புகழும் பெறக் காரணமாயின.

உசாத்துணை


✅Finalised Page