கதைக்கோவை – தொகுதி 3
கதைக்கோவை – தொகுதி – 3, 1940-களில் அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இத்தொகுப்பு, பிற நான்கு தொகுதிகளுடன் இணைந்த புதிய பதிப்பாக, ஐந்து தொகுதிகள் கொண்ட ஆறு நூல்களாக, 2019-ல் அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
பிரசுரம், வெளியீடு
கதைக்கோவையின் மூன்றாவது தொகுதி, 60 எழுத்தாளர்களின் 60 சிறுகதைகளுடன் 1940-களில், முதல் பதிப்பாக வெளிவந்தது. கதைக்கோவையின் பிற தொகுதிகள் 1946 வரை வெளிவந்தன. 70 ஆண்டுகளுக்குப் பின், 2019-ல், கதைக்கோவையின் ஐந்து தொகுதிகளும், புதிய மீள் பதிப்பாக, ஆறு நூல்களாக அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன.
கதைக்கோவை – மூன்றாவது தொகுதி
கதைக்கோவையின் மூன்றாவது தொகுதி, 60 எழுத்தாளர்களின் 60 சிறுகதைகளுடன் வெளியானது.
உள்ளடக்கம்
கதைக்கோவையின் மூன்றாவது தொகுதியில் கீழ்காணும் 60 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றன.
எண் | எழுத்தாளர் | சிறுகதை |
---|---|---|
1 | அகிலன் | காசு மரம் |
2 | அ.செ.மு.(யாழ்ப்பாணம்) | மனித மாடு |
3 | பெ.நா. அப்புஸ்வாமி, பி.ஏ.பி.எல். | தீபாவளி பட்சணம் |
4 | அம்மணி | வேகவாகினி |
5 | மஞ்சேரி எஸ். ஈசுவரன் | தொட்டில் |
6 | ச.கு கணபதி ஐயர், பி.ஓ.எல். | நரசிம்மாவதாரம் |
7 | மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேச செட்டியார் | போலிப் பக்தர் |
8 | எஸ். கந்தசாமி | தகர்ந்த கோட்டை |
9 | எம்.எஸ். கமலா | கார்த்திகைச் சீர் |
10 | எஸ். கமலாம்பாள் | ஊமைச்சியின் கல்யாணம் |
11 | கா.ஸ்ரீ.ஸ்ரீ. | அமிர்தம் |
12 | ஏ.டி. கிருஷ்ணமாசாரி, பி.ஏ. பி.எல். | சர்க்கரைப் பொங்கல் |
13 | வ.வே.ஸு. கிருஷ்ணமூர்த்தி | கடந்த போன நாட்கள் |
14 | எஸ். கிருஷ்ணன் | பிள்ளையார் கோயில் மணி |
15 | கொனஷ்டை | இல்வாழ்க்கை |
16 | கோமதி சுப்பிரமணியம் | மனக் கண்ணாடி |
17 | சசி | அதிருஷ்டசுந்தரி |
18 | கோ. த. சண்முகசுந்தரம் | பிரார்த்தனை |
19 | ஜி. சதாசிவம் | காதலுக்குப் பலி |
20 | எம்.எல். சபரிராஜன் | ஏழைக்கு நியாயம் |
21 | சீதா தேவி | அடிகள்ளி |
22 | அ. சீநிவாஸராகவன், எம்.ஏ. | பிரிவு |
23 | சுத்தானந்த பாரதியார் | உமாகௌரி |
24 | கே. சுந்தரம்மாள் | பாமினியின் தியாகம் |
25 | பூவாளூர் சுந்தரராமன் | குறை நோன்பு |
26 | ஆர். சுந்தரி | மாற்றாந்தாய் |
27 | ராவ் சாஹிப் வெ.ப. சுப்பிரமணிய முதலியார் | பருவயிரமணிமாலை |
28 | ஆ. சுப்பையா | செங்கமலம் |
29 | வி.எஸ். சுப்பையா | எட்டாத மலர் |
30 | பி.ஆர். சூடாமணி | அத்தை |
31 | மோ.ஸ்ரீ. செல்லம், பி.ஓ.எல். | எல்.டி. கிரேட் |
32 | தங்கம்மாள் பாரதி | கவிதை |
33 | தஞ்சம் | மன்னிப்பு |
34 | பெ. தூரன் | ஓவியர்மணி |
35 | நாடோடி | கடற்கரை மோகினி |
36 | ப. நீலகண்டன் | ஸ்வீகாரம் |
37 | ஆர்.கே. பார்த்தசாரதி, எம்.ஏ. எல்.டி | இசைக்காதல் |
38 | கு.மா. பாலசுப்பிரமணியம் | வாழாவெட்டி |
39 | புதுமைப்பித்தன் | செவ்வாய் தோஷம் |
40 | ஸி. ஆர். மயிலேறு, எம்.ஏ. | மாட்டுத் திருடன் |
41 | மாயாவி | இறுதிக்கடிதம் |
42 | மாரார் | வதந்தி |
43 | மாஜினி | குல தெய்வம் |
44 | டாக்டர் வே. ராகவன், எம்.ஏ. | ஜாடி |
45 | மே.சு. ராமசுவாமி, பி.ஏ.பி.எல். | கடைக்கண் பணி |
46 | ப. ராமஸ்வாமி | கொலைஞன் |
47 | லா.ச. ராமாமிருதம் | கந்தர்வன் |
48 | வல்லிக்கண்ணன் | முத்து |
49 | வாசிமலை | குலம் கோத்திரம் |
50 | கே. விஜயராகவன் | எதிரொலி |
51 | தே. வீரராகவன், பி.ஓ.எல். | தரித்திர நாராயணன் |
52 | ரா. வேங்கடராமன் | பட்டுவின் பிரயாணம் |
53 | வேங்கடலக்ஷ்மி | அந்தகன் குழலோசை |
54 | ராவ்சாகிப் எஸ். வையாபுரிப் பிள்ளை, பி.ஏ.பி.எல். | ராமுவின்சுய சரிதம் |
55 | ஜானம்மாள் | நாடகம் பலித்ததா? |
56 | வி.எஸ். ஸ்ரீநிவாஸ சாஸ்திரிகள் (மகாகனம்) | பங்காளிக் காய்ச்சல் |
57 | ஆர். ஸரஸ்வதி | மதுமதியின் ஸ்தூபி |
58 | ஸரோஜினி ராமஸ்வாமி | ராஜநந்தினி |
59 | ஸையத் முகம்மத் | வள்ளி |
60 | ஸோமாஸ் | அதிருஷ்டசாலி |
மதிப்பீடு
கதைக்கோவை மூன்றாவது தொகுதியில் தங்கம்மாள் பாரதி, வேங்கடலக்ஷ்மி, எம்.எஸ். கமலா தொடங்கி பி. ராஜ சூடாமணி, ஆர். ஸரஸ்வதி வரை 10-க்கும் மேற்பட்ட பெண் படைப்பாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்றன. கதைக்கோவை தொகுதிகள், அக்கால இலக்கிய உலகில் புதிய கருப்பொருள்களைக் கொண்ட சிறுகதைகள் வெளிவர உதவின. எழுத்தாளர்களும், அவர்களுடைய படைப்புகளும் பரவலாக வாசக கவனமும் புகழும் பெறக் காரணமாயின.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Jan-2024, 10:28:26 IST