under review

உ.வே.சாமிநாதையர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(55 intermediate revisions by 8 users not shown)
Line 1: Line 1:
உ.வே.சாமிநாதையர் (19 பெப்ருவரி,1855 –28 ஏப்ரல் 1942,) உ.வே.சாமிநாத ஐயர் . உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாத ஐயர். சுருக்கமாக உ.வே.சா. தமிழ் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் ஆய்வாளர், உரையாசிரியர். வாழ்க்கை வரலாற்றெழுத்திலும் முன்னோடியாகக் கருதப்படுபவர்.  
{{Read English|Name of target article=U.V. Swaminatha Iyer|Title of target article=U.V. Swaminatha Iyer}}
[[File:U. V. Swaminatha Iyer.jpg|thumb|உ.வே.சாமிநாதையர்]]
உ.வே.சாமிநாதையர் (பிப்ரவரி 19, 1855 ஏப்ரல் 28, 1942) உ.வே.சாமிநாத ஐயர். உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாத ஐயர். சுருக்கமாக உ.வே.சா. தமிழ் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் ஆய்வாளர், உரையாசிரியர். வாழ்க்கை வரலாற்றெழுத்திலும் முன்னோடியாகக் கருதப்படுபவர்.  


ஏடுகளில் இருந்து பழந்தமிழ் நூல்களை கண்டெடுத்து ஒப்பிட்டு ஆராய்ந்து உரையெழுதி அச்சில் பதிப்பிக்கும் பதிப்பியக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கியது. பேரறிஞர்களின் முயற்சியால் தமிழிலக்கியத்தின் பெரும்பகுதி அச்சேறினாலும் ஒருபகுதி எப்போதைக்குமாக அழிந்தும் போயிற்று. அந்தப் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளாக உ.வே.சாமிநாதையர், [[சி.வை. தாமோதரம் பிள்ளை]] [[சௌரிப்பெருமாள் அரங்கன்]] போன்றவர்கள் கருதப்படுகிறார்கள். உ.வே.சாமிநாதையர் தன் வாழ்நாளின் இறுதியில் தன் வாழ்க்கையையும் தன் ஆசிரியர் வாழ்க்கையையும் ஏடுதேடி அலைந்த கதைகளையும் எளிய நவீன உரைநடையில் எழுதினார். அதன்வழியாக தமிழ் நவீன உரைநடை இலக்கியத்திலும் முன்னோடியின் இடத்தை அடைந்தார்.  
ஏடுகளில் இருந்து பழந்தமிழ் நூல்களை கண்டெடுத்து ஒப்பிட்டு ஆராய்ந்து உரையெழுதி அச்சில் பதிப்பிக்கும் பதிப்பியக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கியது. பேரறிஞர்களின் முயற்சியால் தமிழிலக்கியத்தின் பெரும்பகுதி அச்சேறினாலும் ஒருபகுதி எப்போதைக்குமாக அழிந்தும் போயிற்று. அந்தப் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளாக உ.வே.சாமிநாதையர், [[சி.வை. தாமோதரம் பிள்ளை]] [[சௌரிப்பெருமாள் அரங்கன்]] போன்றவர்கள் கருதப்படுகிறார்கள். உ.வே.சாமிநாதையர் தன் வாழ்நாளின் இறுதியில் தன் வாழ்க்கையையும் தன் ஆசிரியர் வாழ்க்கையையும் ஏடுதேடி அலைந்த கதைகளையும் எளிய நவீன உரைநடையில் எழுதினார். அதன்வழியாக தமிழ் நவீன உரைநடை இலக்கியத்திலும் முன்னோடியின் இடத்தை அடைந்தார்.  
== பிறப்பு,கல்வி ==
சாமிநாதையர் பிப்ரவரி 19, 1855-அன்று தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் - சரசுவதி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் வெங்கடராமன். வேங்கடசுப்பையர் இசையுடன் கதைசொல்லும் ஹரிகதா கலாட்சேபம் என்னும் கலையை நிகழ்த்துபவர். உ.வே.சாமிநாதையர் தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் தந்தையிடமும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடமும் கற்றார். மேற்கொண்டு கற்க ஆவலிருந்தும் உத்தமதானபுரத்தில் அதற்கான வாய்ப்பின்றி இருந்தார். தமிழறிஞர் என எவர் வந்தாலும் ஏதேனும் கற்பிக்கும்படி கோரினார். அவ்வண்ணம் திருமணத்திற்கு வந்த ஒரு பண்டிதரிடம் கோர அவர் மறுத்துவிட்டார். துயருற்று நின்ற சாமிநாதையரிடம் ஒருவர் திருவாவடுதுறை ஆதீனவித்வான் [[மீனாட்சிசுந்தரம் பிள்ளை]]யிடம் சென்று கற்கும்படி ஆலோசனை சொன்னார்.
[[File:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf.jpg|thumb|உ.வே.சாமிநாதையர் வாழ்க்கை]]
கல்விகற்பதற்காக வெளியே தங்குவதற்குரிய பொருளியல் புலம் இல்லாத காரணத்தால் கும்பகோணத்திலேயே கல்வி கற்க உ.வே.சாமிநாதையரின் தந்தை ஏற்பாடு செய்தார். அரியலூர் சடகோப ஐயங்கார், திருவிளையாடற் புராண அறிஞர் குன்னம் சிதம்பரம் பிள்ளை, கம்ப ராமாயாணத்தில் தேர்ந்த கஸ்தூரி ஐயங்கார் போன்ற அறிஞர்களிடம் உ.வே.சாமிநாதையர் தமிழ் பயின்றார். சின்னப்பண்ணை விருத்தாசலம் ரெட்டியார் என்ற தமிழறிஞரிடம் இலக்கணங்களை கற்றார். இக்காலகட்டத்தில் நந்தனார் கீர்த்தனை எழுதிய [[கோபாலகிருஷ்ண பாரதி]]யார் அவர்களிடம் உ.வே.சாமிநாதையர் சிலகாலம் இசையும் பயின்றார்.


பிறப்பு,கல்வி
விருத்தாசலம் ரெட்டியார் சிபாரிசின் பேரில் தன் 17-ம் வயதில் 1870-ல் தந்தையுடன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாவடுதுறை சைவஆதீனத்திற்குச் சென்றார். அங்கே மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தன்னை அறிமுகம் செய்யும்போது அவர் சைவராகையால் தன் வைணவப்பெயரைக்கொண்டு தன்னை நிராகரித்துவிடக்கூடாது என எண்ணி சாமிநாதன் என்னும்பெயரை தன் பெயராகச் சொன்னார். அதன்பின் சாமிநாதையர் என்ற பெயரையே தன் பெயராகக் கொண்டிருந்தார்.


சாமிநாதையர் 19 பெப்ருவரி 1855-ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் ''வேங்கட சுப்பையர்'' - ''சரசுவதி அம்மாள்'' இணையருக்குப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் வெங்கடராமன். வேங்கடசுப்பையர் இசையுடன் கதைசொல்லும் ஹரிகதா கலாட்சேபம் என்னும் கலையை நிகழ்த்துபவர். உ.வே.சாமிநாதையர். தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் தந்தையிடமும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடமும் கற்றார். மேற்கொண்டு கற்க ஆவலிருந்தும் உத்தமதானபுரத்தில் அதற்கான வாய்ப்பின்றி இருந்தார்.  தமிழறிஞர் என எவர் வந்தாலும் ஏதேனும் கற்பிக்கும்படி கோரினார். அவ்வண்ணம் திருமணத்திற்கு வந்த ஒரு பண்டிதரிடம் கோர அவர் மறுத்துவிட்டார். துயருற்று நின்ற சாமிநாதையரிடம் ஒருவர் திருவாவடுதுறை ஆதீனவித்வான் [[மீனாட்சிசுந்தரம் பிள்ளை]]யிடம் சென்று கற்கும்படி ஆலோசனை சொன்னார்.
திருவாவடுதுறை ஆதீனத்தின் பொருளுதவியைக் கொண்டு ஐந்து ஆண்டுகள் ஆசிரியருடனேயே குருகுல முறைப்படி தங்கி தமிழ்கற்றார். திருநாகைக்காரோண புராணம், நைடதம், திருக்குடந்தைத் திரிபந்தாதி, பழமலை திரிபந்தாதி, மறைசையந்தாதி, மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் வினாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், அஷ்டப்பபிரந்தங்கள், சீர்காழிக்கோவை, கண்ணப்பநாயனார் புராணம் போன்ற நூல்களை அவரிடம் கற்றார். அக்கால முறைப்படி [[நன்னூல்]], [[பாட்டியல்]] இலக்கணம், [[சிற்றிலக்கியங்கள்]] ஆகியவற்றையே அவர் கற்றார்.  


கல்விகற்பதற்காக வெளியே தங்குவதர்குரிய பொருளியல் புலம் இல்லாத காரணத்தால் ஓராண்டு கழித்து தன் 17-ஆம் வயதில் தந்தையுடன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாவடுதுறை சைவஆதீனத்திற்குச் சென்றார். அங்கே ஆசிரியரிடம் தன்னை அறிமுகம் செய்யும்போது அவர் சைவராகையால் தன் வைணவப்பெயரைக்கொண்டு தன்னை நிராகரித்துவிடக்கூடாது என எண்ணி சற்றுமுன் காதில் விழுந்த சாமிநாதன் என்னும்பெயரை தன் பெயராகச் சொன்னார். அதன்பின் சாமிநாதையர் என்ற பெயரையே தன் பெயராகக் கொண்டிருந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தின் பொருளுதவியைக் கொண்டு ஐந்து  ஆண்டுகள் ஆசிரியருடனேயே குருகுல முறைப்படி தங்கி தமிழ்கற்றார். திருநாகைக்காரோண புராணம், நைடதம், திருக்குடந்தைத் திரிபந்தாதி, பழமலை திரிபந்தாதி, மறைசையந்தாதி, மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் வினாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், அஷ்டப்பபிரந்தங்கள், சீர்காழிக்கோவை, கண்ணப்பநாயனார் புராணம் போன்ற நூல்களை அவரிடம் கற்றார். அக்கால முறைப்படி [[நன்னூல்]], [[பாட்டியல்]] இலக்கணம், [[சிற்றிலக்கியங்கள்]] ஆகியவற்றையே அவர் கற்றார்
ஆதீனச்சூழலில் அங்கு வந்த பல அறிஞர்களுடன் விவாதித்துக் கற்கும் வாய்ப்பு உ.வே.சாமிநாதையருக்கு அமைந்தது. [[மாயூரம் வேதநாயகம் பிள்ளை]], சந்திரசேகர கவிராஜபண்டிதா், திரிசிரபுரம் கோவிந்தபிள்ளை, ராவ்பகதூர் திரு.பட்டாபிராம் பிள்ளை போன்றவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள் என அவர் தன் வாழ்க்கைவரலாற்றில் குறிப்பிடுகிறார்..
[[File:Siragu-U. V. Swaminatha Iyer statue-3-sivaranjani-768x1024.jpg|thumb|உ.வே.சாமிநாதையர் சிலை அடித்தளம்]]
== தனிவாழ்க்கை ==
உ.வே.சாமிநாதையர் தன் பதிமூன்றாவது வயதில் 1868-ல் மதுராம்பாளை மணந்தார். மகன் கல்யாணசுந்தர ஐயர்.


தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன், பின்னர்ச் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.
மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிப்ரவரி 1, 1876-ல் மறைந்தார். உ.வே.சாமிநாதையர் குடும்பம் அப்போது பொருளியல் இடரில் இருந்தது. அவர் தந்தை வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று கதைசொல்லியும், செல்வந்தர்களிடம் கொடைபெற்றும் வாழ்ந்தார். உ.வே.சாமிநாதையரும் அவருடன் கதைசொல்லச் சென்றார். பணம்கேட்டு நிலப்பிரபுக்களுக்கு சீட்டுகவிகளும் எழுதினார். திருவாவடுதுறை ஆதீனம் கோரியதற்கு ஏற்ப உ.வே.சாமிநாதையர் தன் மனைவியுடன் ஆதீனத்திற்கே வந்து தங்கியிருந்தார். ஆதீனகர்த்தராகிய சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்டும் அங்கிருந்த மாணவர்களுக்கு பாடம் சொல்லியும் வாழ்ந்தார்.  


==== மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்வி, திருவாடுதுறை ஆதீனம் தொடர்பு ====
மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு நெருக்கமானவரும் கும்பகோணம் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியருமான தியாகராஜ செட்டியார் அடிக்கடி ஆதீனத்திற்கு வருகையில் அவருடன் சாமிநாதையருக்கு பழக்கம் ஏற்பட்டிருந்தது. மீனாட்சிசுந்தரம் பிள்ளை இருந்தகாலத்தில் சாமிநாதையர் ஆசிரியர் வேலைக்குச் செல்லலாம் என தியாகராஜ செட்டியார் பரிந்துரை செய்ய, சாமிநாதையரை பிரியமனமில்லாத மீனாட்சிசுந்தரம் பிள்ளை அதை மறுத்துவிட்டார். பிப்ரவரி 12, 1880-ல் தியாகராஜச் செட்டியார் கும்பகோணம் கல்லூரியில் தமது வேலையைத் விட்டுவிட முடிவுசெய்து அந்த வேலைக்கு உ.வே.சாமிநாதையரைப் பரிந்துரைத்த செய்தியை சுப்பிரமணிய தேசிகரிடம் கூறினார். தேசிகருக்கு சாமிநாதையரை அனுப்பும் எண்ணம் இருக்கவில்லை, உ.வே.சாமிநாதையரும் ஆதீனத்தை விட்டுச்செல்ல நினைக்கவில்லை. தியாகராஜ செட்டியார் வலியுறுத்தி தேசிகரிடம் அனுமதி பெற்றார். .வே.சாமிநாதையர் பிப்ரவரி 16, 1880 முதல் கும்பகோணம் கல்லூரி தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். 1880 முதல் 1903 வரை 23 ஆண்டுகள் உ.வே.சாமிநாதையர் கும்பகோணம் கல்லூரி தமிழாசிரியராகப் பணியாற்றினார்.  
தாம் வாழ்ந்து வந்த ஊரான ஆரியமூலையில் தமிழ் மேலும் கற்க வழியில்லாததால் சோர்வடைந்ததாகவும் அரும்பாவூர் நாட்டார் என்னும் பெருஞ்செல்வர் தமது இல்லத்தில் தங்கியிருந்தபொழுது, உ.வே.சா.வின் தமிழார்வத்தை உணர்ந்து, இவரை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் அனுப்பும்படி பரிந்துரைத்தது தம்மனத்தில் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க வேண்டும் என்னும் வேட்கையை ஏற்படுத்தியது என்று குறிப்பிடுகிறார். இடையில் சிலகாலம் விருத்தாச்சலம் ரெட்டியாரிடம் உ.வே.சா. தமிழ் கற்றார். பாடல் எழுதுவதன் நுணுக்கங்களை அங்குக் கற்றார். மேலும் புத்தகங்களைப் படிப்பது மட்டும் போதாது; படித்தவர்களிடம் பாடம் கேட்கவேண்டும் என்பதையும் அப்பொழுது நன்கு உணர்ந்து கொண்டார். பின்னர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் சேர்ந்து பாடம் கற்கத் தொடங்கினார். அப்பொழுது, திருவாடுதுறை ஆதினத்தின் தொடர்பும் கிடைத்தது. அத்தொடர்பு இவர் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இறுதிவரையிலும் இத்தொடர்பு உ.வே.சாவிற்கு மிகுந்த பலத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. பிற்காலத்தில் மடத்தலைவருடன் மிகவும் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் அதனால் அரிய தமிழ்த் தொண்டு ஆற்றவும் இது வழிவகுத்தது. உ.வே.சா. தமது ஆசிரியர் திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் அளவிட முடியாத பற்றும், பாசமும் பக்தியும் கொண்டிருந்தார். தமது இறுதிக் காலம் வரை இவற்றில் இம்மியும் குறையவில்லை.
[[File:U. V. Swaminatha Iyer statue.jpg|thumb|உ.வே.சாமிநாதையர் சிலை]]
சென்னை மாகாணக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த [[பூண்டி அரங்கநாத முதலியார்]] அழைப்பின் பேரில் 1903 முதல் 1919 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணியாற்றினார். சென்னையில் மாநிலக் கல்லூரிக்கு அருகே திருவல்லிக்கேணி திருவேட்டீசுவரன் பேட்டையில் மாதம் 20 ரூபாய்க்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். 1909-ம் ஆண்டு வாடகைக்குக் குடியிருந்த அந்த வீட்டையே விலைக்கு வாங்கினார். வீட்டின் அப்போதைய விலை ரூ. 4,400/-.தமக்குக் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியர் பணி கிடைக்கக் காரணமாகயிருந்த தியாகராச செட்டியாரின் நினைவாக அந்த வீட்டிற்குத் 'தியாகராச விலாசம்’ என்று பெயரிட்டார்.  


ஆசிரியரும் மிகவும் வறுமையில் இருந்தார் என்று உ.வே.சா. கூறுகிறார். “புலமையும் வறுமையும் சேர்ந்தே இருப்பது இந்நாட்டின் சாபம்” இஃது உ.வே.சாவின் கூற்று. திருவாடுதுறை ஆதினம் திரு.சுப்பிரமணிய தேசிகரை ஆசிரியருடன் சென்று சந்தித்து, அங்கு ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்லும் வாய்ப்புக் கிடைத்தைப் பெருமையுடன் கூறுகிறார். இசையுடன் பாடல்களைப் பாடி விளக்கம் அளித்த உ.வே.சா., தேசிகரிடம் நல்ல எண்ணத்தை உருவாக்கினார். ஆதினத்தில் பல புலவர்களுடன் கலந்துரையாடவும், ஆசிரியர்கள் நடத்திய பாடமும் கேட்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. சுப்பிரமணிய தேசிகர் ஐயரவர்களுக்குப் புத்தகங்கள் பரிசு கொடுத்து அன்பு பாராட்டினார். இது தமது ஆசிரியருக்கு மெத்த மகிழ்ச்சியைக் கொடுத்தது என்று உ.வே.சா. கூறுகிறார். ஆசிரியரிடம் பாடம் கேட்டதால் தமக்கு எவ்வளவு பெருமை என்றும் மற்றும் ஆசிரியர், தேசிகர் ஆகியோர் அன்பு இவரை நெகிழவைத்தது எனவும் கூறுகிறார்.. “என்ன கஷ்டம் வந்தாலும் இவர்களை விட்டுப் பிரிவதில்லை” என்று முடிவு செய்துள்ளார்.
சென்னையில் [[தொழுவூர் வேலாயுத முதலியார்]] புரசபாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியார், சோடசாவதானம் சுப்பராய செட்டியார், கதிர்வேற் கவிராயர், காஞ்சீபுரம் இராமசுவாமி நாயுடு, கோமளீசுவரன் பேட்டை இராசகோபாலபிள்ளை, சூளை அப்பன் செட்டியார், [[சூளை சோமசுந்தர நாயகர்]], திருமயிலை சண்முகம் பிள்ளை போன்றவர்கள் உ.வே.சாமிநாதையரின் தோழமையில் இருந்தனர்.  


ஆசிரியர் அவர்களுடன் கும்பகோணம் தியாகராச செட்டியாரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. செட்டியார் கும்பகோணம் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியர். செட்டியார் அவர்களே பிற்காலத்தில் உ.வே.சா.வைக் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகச் சேர்த்துவிட்டவர். திருவாடுதுறை ஆதினத்தின் குருபூஜையில் பங்கேற்ற போதும், மறுபடியும் ஆசிரியருடன் அங்கு வந்து தங்கியிருந்த போதும் தமிழ் கற்க ஏராளமான வாய்ப்பு கிடைத்தது, கிடைத்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டு மனநிறைவுடன் தமிழ் பயின்றார்.
ராஜா அண்ணாமலை செட்டியார் சிதம்பரத்தில் தாம் தொடங்கிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் (இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) முதல்வராகப் பொறுப்பேற்க உ. வே. சாமிநாதையரை அணுகினார். சென்னை மாநிலக் கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்றிருந்த  உ. வே. சாமிநாதையர் மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வராக 1924-ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார். சென்னை, அண்ணாமலைநகர், மைசூர், ஆந்திரா, காசி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலுள்ள பல்கலைத் தமிழ்க் குழுக்களில் உறுப்பினராயிருந்த உ.வே.சாமிநாதையர் சென்னைப் பல்கலைக்கழகப் புலவர் தேர்வுக்குழுத் தலைவர் பதவியிலும் பலஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.  
== பதிப்புப்பணி ==
பாண்டி நாட்டில் செவந்திபுரத்தில் வேணுவனளிங்கத்தம்பிரான் கட்டிய மடாலயத்திற்குச் சுப்பிரமணிய தேசிக விலாசம் என்னும் மடாலயத்தைச் சிறப்பித்துப் புலவர்கள் பாடிய 86 பாடல்கள் இருந்தன. உ.வே.சா. எட்டு பாடல்கள் இயற்றி வேறு சில பாடல்களும் சேர்த்து திருநெல்வேலி முத்தமிழாகரமென்னும் அச்சுக்கூடத்தில் அப்பாடல் திரட்டை பதிப்பித்தார். அது முதன்முதலாக உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த நூல்.
====== சீவகசிந்தாமணி ======
[[File:U. V. Swaminatha Iyer studying palm-leaf manuscripts.jpg|thumb|உ.வே.சாமிநாதையர்]]
கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றுகையில் உ.வே.சாமிநாதையருக்கு அரியலூரிலிருந்து கும்பகோணத்திற்கு முன்சிபாக மாற்றம் பெற்று வந்த சேலம் இராமசாமி முதலியாரிடம் அறிமுகம் ஏற்பட்டது. அவர் உ.வே.சாமிநாதையருக்கு ஐம்பெருங்காப்பியங்களைப் பற்றிச் சொல்லி சீவகசிந்தாமணியின் ஓர் இலம்பகத்தையும் அளித்தார். அதை ஆராயத்தொடங்கிய உ.வே.சாமிநாதையர் அதுவரை அவர் வாழ்ந்து வந்த சிற்றிலக்கியங்கள் மற்றும் பக்தி இலக்கியங்களின் உலகில் இருந்து காப்பியங்களின் உலகுக்கும் சங்கத்தமிழ் படைப்புகளின் உலகுக்கும் சென்றார். சீவகசிந்தாமணியின் ஒருபகுதியை பிழைநோக்கி பதிப்பிக்க முயன்றார். சமண நண்பர்களின் உதவியுடன் சமணமதத்தின் கருத்துக்களையும், திருத்தக்கதேவரின் வாழ்க்கையையும் பற்றி அறிந்துகொண்டார். சமணக் காப்பியத்தை பதிப்பிப்பதை சைவர்கள் எதிர்த்தபோது தமிழ்ப்பணியே முதன்மையானது, மதநம்பிக்கை அல்ல என்று தன் முடிவை முன்வைத்தார்


தியாகராச செட்டியாரிடம் இருந்த அறிமுகம் அடிக்கடி சந்தித்த பின் நெருங்கிய பழக்கமாயிற்று. பிள்ளையவர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குப் பிறரை எதிர்பார்த்திருக்க வேண்டிய வேளையில், செட்டியாருக்குக் கல்லூரியிலிருந்து நிரந்தர வருமானம் கிடைத்ததை எண்ணிப்பார்த்து, தமக்கும் இதுபோன்று வேலை கிடைத்தால் பயனுள்ளதாக இருக்குமே என்று கருதி, அவரிடம் ' எங்காவது பள்ளியில் ஆசிரியர் பணி பெற்றுத்தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். ஆசிரியரிடம் மாலையில் பாடமும் கேட்டுக் கொள்ளலாம்.' என்றும் தெரிவித்தார். செட்டியாரும் ஒரு வேலை பார்த்து வந்த பொழுது பிள்ளையவர்கள் ‘சாமிநாதன் மேலும் படிக்கட்டும், பின் அவரை வேலை தேடிவரும்’ என்று கூறி அவருடைய வேண்டுகோளை மறுத்துவிட்டார்.
சிந்தாமணி பதிப்பே சாமிநாதையரின் முதல் பதிப்பு முயற்சி. ஏற்கனவே பவர் என்னும் ஆங்கிலேயர் பதிப்பித்த சிந்தாமணி நாமகளிலம்பகம் அச்சுநூல் இருந்தது. தியாகராசசெட்டியார் தம்மிடமிருந்த பிரதியை அனுப்பி வைத்தார். சுப்பிரமணிய தேசிகர் திருநெல்வேலியிலிருந்து சில ஏட்டுப்பிரதிகளை வருவித்துக் கொடுத்தார். பல பிரதிகளையும் ஒப்பிட்டு, பாடபேதங்களைக் குறித்து நூலை செம்மைசெய்தார். சிந்தாமணியை முழுமையாக அச்சிடும்பொருட்டு சுவடிகளை மேலும் தேடி விருஷபதாச முதலியாரிடம் சுவடிகளைப் பெற்றார். அவ்வாறாக சிந்தாமணியின் 23 நகல்களை உ.வே.சா. சேர்த்தார்
[[File:U. V. Swaminatha Iyer in Saiva garb.jpg|thumb|உ.வே.சாமிநாதையர்]]
அன்றைய பதிப்புமுறை என்பது பதிப்பிக்கவிருக்கும் நூலை வாங்குவதாக செல்வந்தர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு நூலை அச்சிடுவது. உ.வே.சாமிநாதையர் தமிழார்வம் கொண்ட செல்வந்தர்களைச் சந்தித்து ஆதரவு பெற்று நூலை அச்சிட்டார். சோடசவதானம் சுப்பராய செட்டியாரும், ராஜ பாலாச்சாரியாரும் வேலுச்சாமிப் பிள்ளையும் அதில் உதவினர். அச்சிடுவதற்காகச் சென்னை சென்று ராமசாமி முதலியார் இல்லத்தில் தங்கியிருந்தார். சென்னைக்கும் கும்பகோணத்திற்குமாக பயணம் செய்து அச்சுப்பணியை நிகழ்த்தினார்.  


==== இயற்றிய நூல்கள் ====
உ.வே.சாமிநாதையர் சீவகசிந்தாமணியை விரிவான முன்னுரை, நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, கதைச்சுருக்கம் ஆகியவற்றுடன் அக்டோபர் 1887-ல் பதிப்பித்தார். தமிழ்ப்பதிப்பியக்கத்தில் முன்னோடியான முயற்சியாக அது அமைந்தது.  
உ.வே.சா. பல செய்யுள்களையும் நூல்களையும் இயற்றியுள்ளாா். தந்தையாரின் வறுமையைக் கண்டு, ஒரு பெரியமனிதரிடம் சென்று நெல் வேண்டுமென்று இயற்றிய செய்யுள்தான் அவரின் முதல் செய்யுள். கலைமகள் துதி, திருலோகமாலை, ஆனந்தவல்லியம்மை, பஞ்சரத்தினம் முதலியன மற்ற நூல்களாகும்.


குடும்பத்தின் வறுமையும் கடன் தொல்லையும் உ.வே.சாவை மிகவும் வாட்டியது. சிறிது காலம் தம்தந்தையுடன் புராண விரிவுரை நடத்திக் கடனை அடைக்கலாம் என்ற தந்தையின் கருத்துக்கிணங்க இருவரும் விரிவுரை நடத்திப் பொருள் ஈட்டத் தொடங்கினர். இவர்களின் விரிவுரைக்குப் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இது நடந்தது 1874-ஆம் வருடம். உ.வே.சா. 19-ஆம் வயது ஆனவர். இக்காலத்தில் தம் ஆசிரியரிடம் தமிழ் கேட்க முடியவில்லையே என்ற ஏக்கம் இவரிடம் நீங்காமலிருந்தது.
(பார்க்க [[சீவகசிந்தாமணி, உ.வே.சா.பதிப்பு]])
====== பத்துப்பாட்டு ======
சீவகசிந்தாமணியை பதிப்பிக்கும்போதே [[பத்துப்பாட்டு]] சுவடிகளையும் உ.வே.சாமிநாதையர் சேர்த்திருந்தார். 1889-ம் வருடம் உ.வே.சா.வின் 34-வது வயதில் பத்துப்பாட்டும் பதிப்பிக்கப்பட்டது. இதில் முகவுரையும், நூலின்மூலம் நச்சினார்க்கினியர் உரை, உரைச்சிறப்பு, பாயிரம், அரும்பதவிளக்கம் அருந்தொடர்விளக்கம், பிழைதிருத்தம் என்பனவற்றை உ.வே.சா. சேர்த்திருந்தார். சீவக சிந்தாமணி பதிப்பிலும் பத்துப்பாட்டுப் பதிப்பிலும் திருமானூர் கிருஷ்ணையர் சென்னையில் தங்கி மேற்பார்வையிட்டு உ.வே.சாமிநாதையருக்கு உதவினார்
[[File:U ve saa 1 (1).jpg|thumb|உ.வே.சாமிநாதையர்]]
திரு‌கச்சியப்ப முனிவர் இயற்றிய ஆநந்தருத்திரேசர் வண்டு விடுதூது, மாயூரம் ராமையர் இயற்றிய மயிலையந்தாதி முதலிய நூல்களையும் உ.வே.சா. பதிப்பித்து வெளியிட்டார்கள்.
====== சிலப்பதிகாரம் ======
[[சேலம் இராமசாமி முதலியார்]] சிலப்பதிகாரம் மூலமும் உரையும் அடங்கிய நூல் ஒன்றை உ.வே.சாமிநாதையரிடம் கொடுத்தார். ஏற்கனவே தியாகராச செட்டியார் கொடுத்த நூலும் உ.வே.சாமிநாதையரிடம் இருந்தது. சௌரிப்பெருமாள் அரங்கன் சிலப்பதிகாரத்தை பதிப்பித்திருந்தார். அடியார்க்கு நல்லார் உரையுடன் முழுமையாக சிலப்பதிகாரத்தை அச்சிட உ.வே.சாமிநாதையர் முயன்றார். சேலம், திருநெல்வேலி திருவைகுண்டம், பெருங்குளம், ஆறுமுகமங்கலம், நாங்குநேரி, களக்காடு, குன்றக்குடி, மிதிலைப்பட்டி போன்ற ஊர்களுக்குச் சென்று ஏட்டுச்சுவடிகளைத் தேடினார். அரசர்கள், நாடுகள், ஊர்கள், மலைகள், ஆறுகள், பொய்கைகள், தெய்வங்கள், புலவர்கள், ஆகிய பெயர்களுக்குத் தனித்தனியாக அகராதியும் அடியார்க்கு நல்லார் உரையில் கண்ட நூல்களுக்கு அகராதியும், தொகையகராதியும், விளங்கா மேற்கோளகராதியும், அபிதான விளக்கமும் எழுதினார். ஜூன் 1891-ல் கோடை விடுமுறையில் சென்னை சென்று சிலப்பதிகாரத்தை அச்சிட்டார்
====== புறநானூறு ======
[[புறநானூறு]] பதிப்பிக்கும் முயற்சியை உ‌.வே.சாமிநாதையர் தொடங்கியபோது கும்பகோணம் கல்லூரியில் சாித்திர ஆசிரியர் வைத்திருந்த பைபிளைக் கண்டு அதில் ஒரே மாதிரியான கருத்துள்ள பகுதிகளை ஆங்காங்கே சுட்டிக்காட்டிப் பதிப்பித்திருப்பதை கவனித்து புறநானூறையும் அதைப்போல பதிப்பிக்க முடிவுசெய்தார். செப்டம்பர் 1894-ல் புறநானூறு நூல் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. உ.வே.சாமிநாதையர் திப்பித்த எட்டுத்தொகை நூல்களுள் இதுவே முதலானது. இதன் முகவுரையில் எட்டுத்தொகை வரலாற்றையும், அகம் புறம் என்னும் இருவகைப் பொருளின் இயல்பையும் விளக்கி எழுதினார்
====== மணிமேகலை ======
[[File:Uve1.jpg|thumb|உ.வே.சாமிநாதையர் ஓவியம்]]
[[மணிமேகலை]]யை முன்னரே 1894ல் [[திருமயிலை சண்முகம் பிள்ளை]] மூலம் மட்டுமாக பதிப்பித்திருந்தார். உரையுடன் அதைப் பதிப்பிக்கும்பொருட்டு உ.வே.சா புத்தரைப் பற்றி படித்தார். ஜூன் 5, 1896-ல் மணிமேகலையை அச்சுக்குக் கொடுத்தார். ஜூலை 1898-ல் மணிமேகலை மூலமும், அரும்பதவுரையும் வெளியாகியது. முகவுரை, புத்தசரித்திரம், பெளத்ததருமம், பெளத்தசங்கம் மணிமேகலைக் கதைச்சுருக்கம் ஆகியவை இணைக்கப்பட்டிருந்தன. அந்நூலில் 59 தமிழ் நூல்களிலிருந்தும் 29 வடமொழிநூல்களிலிருந்தும் குறிப்புரையில் மேற்கோள்கள் காட்டியிருந்தார். .
====== பிறநூல்கள் ======
உ.வே.சாமிநாதையர் சீவகசிந்தாமணிக்குப்பின் பதிப்பித்த நூல் திருக்குடந்தை புராணம். சிந்தாமணி ஆராய்ச்சியோடு திருக்குடந்தை புராணப் பதிப்பும் நடைபெற்றுவந்தது. புறநாநூறுக்கு முன் புறப்பொருள் வெண்பா மாலையை பதிப்பித்தார். 1903-ம் ஆண்டில் ஐங்குறுநூறு நூலையும், 1904-ல் பதிற்றுப்பத்து நூலையும், 1918-ம் ஆண்டில் பரிபாடலையும் சாமிநாதையர் பதிப்பித்து வெளியிட்டார்.  


இதற்கிடையே ஆசிரியர் பிள்ளையவர்கள் இயற்கை எய்தினார். அது சமயம் உ.வே.சா. அவர்களும் உடனிருந்துள்ளார். ஆசிரியரை இழந்த உ.வே.சா. மீளாத துயரத்தில் ஆழ்ந்தார். உ.வே.சா. திருவாடுதுறையில் தங்கிப் பாடம் கேட்டுவந்தார். உ.வே.சா. மீது நல்லெண்ணம் கொண்ட ஆதினம் தேசிகா் அங்கேயே வீடுகட்டிக் கொடுப்பதாகவும் பெற்றோர்களையும் மடத்திற்கே வந்து விடும்படியும் கேட்டுக் கொண்டதற்கிணங்க குடும்பத்துடன் மடத்திற்கே வந்து விட்டார்கள். மடத்தில் இருக்கும் பொழுது பல பெருந்தமிழ்ப் புலவர்களைக் கண்டு கலந்துரையாடும் வாய்ப்புக் கிட்டியது. வேதநாயகம்பிள்ளை, சந்திரசேகர கவிராஜபண்டிதா், திரிசிரபுரம் கோவிந்தபிள்ளை, ராவ்பகதூர் திரு.பட்டாபிராம் பிள்ளை ஆகியோரும் அடங்குவர். தேசிகருடன் மற்ற மாவட்டங்களுக்குச் சென்று அங்கும் பலரை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டது.
கொட்டையூர் [[சிவக்கொழுந்து தேசிகர்]] எழுதிய சிற்றிலக்கியங்களை திருப்பனந்தாள் காசிமடம் சுவாமிநாத தேசிகர் கோரிக்கையின்படி பதிப்பித்தார்.  
== இலக்கியப்பணி ==
உ.வே.சாமிநாதையரின் முதல் படைப்பு. உ.வே.சாமிநாதையர் பழைய செய்யுள் மரபைச் சேர்ந்த பிரபந்தங்களையும் தனிப்பாடல்களையும் இயற்றியிருக்கிறார். பதிப்பியக்கத்தின் தொடக்கத்தில் மிகக்கடுமையான சொற்றொடர்கள் கொண்ட மொழிநடை அவரிடமிருந்தது. மணிமேகலை உரை முதல் நடை எளிதாகத் தொடங்கியது. இறுதிக்காலத்தில் எழுதிய தன்வரலாறு, ஏடுதேடிய அனுபவங்கள் போன்றவை நவீன உரைநடையில் அமைந்திருந்தன. அன்றைய முதன்மையான புனைவெழுத்தாளர்களின் நடைக்கு நிகரான சொற்சிக்கனமும், புதிய சொற்றொடரமைப்பும் கொண்டிருந்தன. அதற்கு உ.வெ.சாமிநாதையர் தொடர்ந்து ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டிருந்தது முதன்மைக் காரணம் என குறிப்பிடப்படுகிறது.
[[File:என்-சரித்திரம்.jpg|thumb|என் சரித்திரம்]]
உ.வே.சாமிநாதையரின் உரைநடைநூல்கள் இரண்டுவகையில் முதன்மையான இலக்கியப்படைப்புகளாக கருதப்படுகின்றன. உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை [[என் சரித்திரம்]] எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950-ம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது. இந்நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டு தஞ்சாவூர் பகுதி கிராமத்து வாழ்க்கையை, குடும்ப அமைப்பை, அக்காலத்து கல்விமுறையை மிகநுட்பமாக விவரிக்கிறது. பலபகுதிகள் பெரும்புனைவுக்கு நிகரான நுட்பம் கொண்டவை. தன் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்றி உ.வே.சாமிநாதையர் எழுதிய வாழ்க்கைவரலாறு ஓர் ஆளுமையை சித்தரிப்பதில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படைப்பு. இலக்கிய விமர்சகரான [[க.நா.சுப்ரமணியம்]] தமிழில் நிகழ்ந்த இலக்கியச் சாதனை என அவ்விரு நூல்களையும் குறிப்பிடுகிறார். உ.வே.சாமிநாதையர் அவர் ஏடுதேடி அலைந்த அனுபவங்களை எழுதிய நினைவுமஞ்சரி என்னும் நூல் தமிழின் தலைசிறந்த சிறுகதைகளுக்கு நிகரான நிகழ்வுக்குறிப்புகள் அடங்கியது. தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நடைச்சித்திரங்கள் அவை என விமர்சகர் [[வெங்கட் சாமிநாதன்]] கருதுகிறார்.  


==== உ.வே.சா. பதிப்பித்த முதல் புத்தகம் ====
நவீன இலக்கியத்திலும் ஆழமான ரசனை கொண்டிருந்த உ.வே.சாமிநாதையர் பல நவீன நூல்களுக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார். [[சித்தி ஜுனைதா பேகம்]] எழுதிய நாவலுக்கு அவர் அளித்த முன்னுரை அவர் புதிய எழுத்துக்களையும் கவனித்தார் என்பதற்கான சான்று.
பாண்டி நாட்டில் செவந்திபுரத்தில் வேணுவனளிங்கத்தம்பிரான் கட்டிய மடாலயத்திற்குச் சுப்பிரமணிய தேசிக விலாசம் என்று பெயர். இவ்வழகிய மடாலயத்தைச் சிறப்பித்துப் பல தமிழ்ப்புலவா்கள் பாடலியற்றிருந்தனர். இப்படி 86 பாடல்கள் இருந்தன. உ.வே.சா. 8 பாடல்கள் இயற்றினார். வேறு சில பாடல்களும் சேர்த்து திருநெல்வேலி முத்தமிழாகரமென்னும் அச்சுக்கூடத்தில் இப்பாடல் திரட்டை முதன்முதலாக ஐயரவர்கள் பதுப்பித்தார்.
====== பேச்சுத்திறன் ======
உ.வே.சாமிநாதையர் நகைச்சுவையுடனும் செறிவாகவும் மேடையில் பேசுபவர் என அறியப்பட்டிருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா. ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது.
[[File:உவேசா.jpg|thumb|உ.வே.சாமிநாதையர்]]
== விருதுகள் ==
* 1906-ல் ஆங்கில அரசு வழங்கிய ஆண்டில் மகாமகோபத்யாயர் பட்டம் .
* 1917-ல் காசியிலுள்ள 'பாரத தர்ம மகா மண்டலம்’ வழங்கிய 'திராவிட வித்யாபூஷணம்’
* 1925-ல் மதுரைத் தமிழ்ச் சங்க விழாவில் காஞ்சி காமகோடிபீடத் தலைவர் 'தாஷிணாத்யகலாநிதி’ பட்டம்..
* 1932-ல் சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் (டி.லிட்) பட்டம் (ஆகஸ்ட் 3, 1932)
== மறைவு ==
*உ.வே.சாமிநாதையர் ஏப்ரல் 28, 1942-ல் மறைந்தார்.
[[File:Thirudanai.jpg|thumb|உ.வே.சாமிநாதையர்]]
== நினைவுகள், வாழ்க்கை வரலாறுகள் ==
====== நினைவுச்சின்னங்கள் ======
*இந்திய அரசு, பிப்ரவரி 18, 2006 அன்று நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
*உத்தமதானபுரத்தில் உ.வே.சா. வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.
* 1942-ல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) ''டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம்'' அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
*உ.வே.சாமிநாதையர் பணியாற்றிய மாநிலக் கல்லூரி வாயிலில் மார்ச் 7, 1948-ல் உ.வே.சா. வின் உருவச்சிலை நிறுவப்பட்டது
*சென்னையில் [[உ.வே.சா நூலகம்]] 1943-ல் நிறுவப்பட்டது
*தமிழக அரசின் [[உ.வே.சா விருது]] 2012 முதல் வழங்கப்படுகிறது
====== நூல்கள் ======
*தமிழ்த் தாத்தா (டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள் வாழ்வும் இலக்கியப் பணியும்), கி. வா. ஜகந்நாதன், 1983, சாகித்திய அக்காதெமி, 
*"என் ஆசிரியப்பிரான்", கி. வா. ஜகந்நாதன், 1983
*தமிழ்த்தாத்தா, பேராசிரியர். வே. இரா.மாதவன்
== இரு கவிஞர்களின் வாழ்த்துக்கள் ==
[[File:Uvesa.jpg|thumb|உ.வே.சாமிநாதையர் அஞ்சல்தலை]]
உ.வே.சாமிநாதையர் இந்தியாவின் இரண்டு பெரும் கவிஞர்களின் வாழ்த்துக்களைப் பெற்றவர்
====== சி.சுப்ரமணிய பாரதியார் ======
மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்ற உ.வே.சாமிநாதையருக்கு அவர் பணியாற்றிய சென்னை மாநிலக் கல்லூரியில் 1906-ல் நடந்த பாராட்டுக் கூட்டத்திற்கு சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியர் பொறுப்பில் இருந்த [[சி.சுப்ரமணிய பாரதியார்]] வந்து மூன்று செய்யுள்களை வாழ்த்துப் பாடலாக அளித்தார்.  


==== கும்பகோணம் கல்லூரியில் சேர்வது ====
மகாமகோபாத்யாயர் வாழ்த்து
உ.வே.சா. திருவாடுதுறையில் தங்கியிருந்த பொழுது தாமும் விரும்பிய நூல்களைக் கற்றுக்கொண்டு மாணவர்களுக்கும் நூல்களைக் கற்பித்து வந்தார். செய்யுள் இயற்றுவதிலும் பயிற்சி செய்து தமது திறமையை வளர்த்துக் கொண்டார்.திருவாடுதுறை ஆதினத்தின் ஆதரவில் தாம் நல்ல முறையில் வாழ முடியும் என்ற நம்பிக்கை உ.வே.சாவிற்கு இருந்தது. அப்பொழுது 1880-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி உ.வே.சா. வாழ்வில் மிகப்பெரிய திருப்பம் நிகழ்ந்தது. தியாகராச செட்டியார் அவர்கள் கும்பகோணம் கல்லூரியில் தமது வேலையைத் தாம் விட்டுவிட முடிவுசெய்து விட்டதாகவும். அந்த வேலைக்கு உ.வே.சாவைப் பரிந்துரைத்து உள்ளதாகவும் ஆதினம் சுப்பிரமணிய தேசிகரிடம் கூறினார். திகைப்படைந்த தேசிகர், உ.வே.சாவை அனுப்பும் எண்ணமில்லை என்று மறுத்து விட்டார். ஆனாலும், செட்டியாரவா்கள் ஒரு நாள் மடத்திலேயே தங்கி ஐயரவர்களின் எதிர்காலம் கருதி அவரை அனுப்பவேண்டும் என்று உருக்கமாக வேண்டினார். உ.வே.சாவிடம் கல்லூரி வேலையின் மேன்மையையும் இங்கு வருடம் முழுவதும் உழைத்தாலும் கிடைக்காத ஊதியம் அங்கு மாதந்தோறும் நிலையாக வரும்மென்றும் எடுத்துக் கூறினார். ஆனால், உ.வே.சா. பணத்தையும் பதவியையும் பொருட்படுத்தாமல் மடத்தில் எல்லா வசதிகளையும் சந்நிதானம் பார்த்துக் கொள்கிறது. ”திருவாடுதுறை மடத்தின் அன்னம் என் உடம்பில் எவ்வளவு ஊறியுள்ளது என்பதைச் செட்டியார் நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை”. என்று பதிவு செய்கிறார். பணம், பதவிக்கு ஆசைப்படாமல் திருவாடுதுறை மடம் காட்டிய ஆதரவிற்கு நன்றி பாராட்ட வேண்டும் என்ற உணர்வு உ.வே.சாவிடம் இயற்கையாகவே இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கல்லூரிப்பணி உ.வே.சாவின் உள்ளத்தைக் கவர்ந்திருந்தாலும் மடத்தில் மற்றவர்கள் செலுத்திய அன்பும் தேசிகரின் ஆதரவும் உ.வே.சாவின் உயிரோடு இணைந்து நின்றது. செட்டியார் கூறியதைக் கேட்ட உ.வே.சா. சந்நிதானம் இசைவு தெரிவித்தால் செல்வது என்று முடிவு செய்தார். செட்டியாரின் விடாமுயற்சி பலித்தது. உ.வே.சாவால் மடத்திற்கு அநேக நன்மை இருந்தாலும் அவாின் எதிா்காலத்தை மனதில் கொண்டு சுப்பிரமணியதேசிகர் அவரை மடத்திலிருந்து அனுப்ப இசைவு தெரிவித்தார்கள்


என்றோ ஒருநாள் மதுரை குடமுழுக்கு விழாவில், தேசிகருக்கு முன்பு வேதநாயகம் பிள்ளையின் பாடல் ஒன்றைக் கூறி விளக்கும்படி தேசிகர் ஐயரவர்களைக் கேட்டுக்கொண்டார். உ.வே.சா. நல்லமுறையில் பாடலை விளக்கிவிட்டு, இறுதி அடியான “இறுமாப்புடைய நடையும் குடையும் என்னிடம் இல்லை” என்ற இவ்வடியை உணர்ச்சிகரமாகக் கூறி முடித்தார். உ.வே.சா. தம்மிடம் வசதியில்லை; ஏழ்மை உண்டு என்ற எண்ணத்தில் இவ்வாறு கூறியதைப் பலகாலம் கழித்து நினைவு கூர்ந்த தேசிகர், பல பரிசுகளுடன் காலணியும் குடையும் அளித்து பிரியாவிடை கொடுத்து அனுப்பினார். உ.வே.சா. மீது தேசிகர் மாறாத அன்பு கொண்டிருந்தார் என்பதும் அவரது வளர்ச்சியையும் உணர்ச்சிகளையும் கவனித்தும் வந்து கொண்டிருந்தார் என்பதற்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு.திருவாவடுதுறை ஆதினமடத்தில் உள்ள ஒவ்வொரு பொருள் மீதும் ஈடுபாடு கொண்டிருந்த உ.வே.சா. மடத்தை விட்டுச்செல்லும் பொழுது. “அவை ஜடப்பொருள்களல்லவா அவற்றின் மீது அவ்வளவு பற்றிருப்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா என்று பிறருக்குத் தோன்றும். எனக்கு உலகமெல்லாம் திருவாடுதுறை மடத்தில் இருந்தது அங்குள்ள பொருள்களைப்பிரியும் போது உலகத்தையே பிரிவது போன்ற உண்ர்ச்சிதான் ஏற்பட்டது”. என்று பதிவு செய்கிறார் உ.வே.சா.
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)


கும்பகோணம் கல்லூரியில் முதலில் ஆசிரியர்களுக்கு முன்பு தமது புலமையை விளக்க வேண்டியிருந்தது. பின்பு முதல்வர் முன்பும் வகுப்பும் நடத்திக் காண்பிக்க வேண்டியிருந்தது. பாடம் நடத்துவதில் நல்ல அனுபவம் இருந்ததால் உ.வே.சாவின் திறமையில் அனைவரும் மனநிறைவடைந்தனர். கல்லூரி முதல்வரும் உ.வே.சாவைக் கல்லூரியில் பணிக்கு அமர்த்தினார்.
செம்பரிதி ஒளிபெற்றான் பைந்நறவு சுவைபெற்றுத் திகழ்ந்தது ஆங்கண்


அக்காலத்தில் இவர் கடை பிடித்த மற்றொரு முக்கியமான பழக்கம் கடிதம் எழுதும் பொழுது நன்றி தெரிவிப்பது உற்சாகப்படுத்துவது போன்று அனைத்தும் செய்யுள் வடிவில்தான் இருக்கும் என்பது. மடத்தில் தாம் வாழ்ந்த வாழ்க்கையையும், கல்லூரி வாழ்க்கையையும் ஒப்பிடும் இவர் இரண்டு இடங்களிலும் கட்டுப்பாட்டிற்கு அடங்கி நடக்கும் நிலை இருந்தாலும் மடத்தில் சம்பிரதாயம், மடத்து நிருவாகம் போன்று பல இனங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடன் இருந்ததாகவும் இதனிடையே தமிழ்க் கல்வியுமிருந்ததாகவும், ஆனால் கல்லூரியில் கல்வியைத் தவிர வேறு இனங்களுக்கு இடமில்லை என்றும் குறிப்பிடுகிறார். “கல்வி ஒன்றையே எண்ணி வாழ்ந்த எனக்கு எல்லாம் கல்வி மயமாக உள்ள காலேஜில், வரையறையான காலம், வரையறையான வேலை, வரையறையான பாடம், இவற்றின் துணையுடன் பாடம் சொல்வது விளையாட்டாகவே இருந்தது” என்று குறிப்பிடுகிறார்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று எவரேகொல் உவத்தல் செய்வார்?


உ.வே.சா. குடும்பத்தை அவர் தந்தையாரே நிருவகித்து வந்துள்ளார். எங்கும் உ.வே.சா. குடும்பப் பாரத்தையும் குடும்பத்தையும் நிருவகித்ததுமாகக் கூறவில்லை குடும்பாரமில்லாமல், தாம் முழு உழைப்பையும் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே செலவு செய்தார்.
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநாதப்புலவன் குறைவில் சீர்த்தி


==== வாழ்நாளில் திருப்பம்: சிந்தாமணி பதிப்பு ====
பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல் பேருவகை படைக்கின்றீரே?
உ.வே.சா. ”அரியலூரிலிருந்து சேலம் இராமசாமி முதலியாரென்பவர் கும்பகோணத்திற்கு முன்சிபாக மாற்றம் பெற்று வந்தார். அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டு போய்விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்வில் ஒரு புதுத்துறை தோன்றியது. தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது” என்று இச்சந்திப்பைத் தமது வாழ்நாளில் ஒரு பெரிய திருப்புமுனை என்று அறிகின்றார். திருவாவடுதுறை ஆதினம் தெண்டபாணித் தேசிகன் விரும்பியபடி உ.வே.சா., இராமசாமி முதலியாரைச் சென்று பார்த்தார். தமது அறிமுகத்தின் போது முதலியாரவா்கள் தாம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்றதைக் கூறியபின்பும், தம்மை அவர் பெரிதும் மதித்தாகத் தெரியவில்லை என்றும் தாம் படித்த நூல்கள் யாவை என்று அவர் வினவ, தாம் ஒரு பெரியபட்டியலிட்டதாகவும் பலவகை அந்தாதிகள், பிள்ளைத்தமிழ் நூல்கள் மற்றும் கோவை யடக்கமாகப் பல நூல் பெயர்கள் கூறியும் ”இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று முதலியாா் வினவினார் என்றும் அதனால் உ.வே.சா. பெரிய அதிர்ச்சியடைந்ததாகவும் கூறுகிறார். தாம் அனேக தமிழ் நூல்களை ஆழமாகக் கற்றிருந்தும் தம்மைச் சிறிதும் மதிக்காமல் இதனால் என்ன பயன் என்று கேட்டதை உ.வே.சாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் நைடதம், பிரபுலிங்கலீலை, சிவஞானபோதம், போன்ற பெயர்களைக் கூறியும் அவர் திருப்தியடையாமல் சரி அவ்வளவு தானே என்று கூறிவிட்டார். “இவைகளெல்லாம் பிற்கால நூல்கள், இவைகளுக்கு மூலமான நூல்களைக் கற்றுள்ளீர்களா? எடுத்துக்காட்டாகச், சீவக சிந்தாமணி என்று கூறியுளார். நூல் கிடைக்கவில்லை; கிடைத்தால் கண்டிப்பாகப் படிப்பேன் என்று கூறிய பின், முதலியாரவர்கள் சீவக சிந்தாமணி நூல் நகல் ஒன்றை உ.வே.சா.விடம் கொடுத்துக் கற்றுவரச் சொன்னதாகவும் அப்பொழுதுதான் சிந்தாமணி நூலின் அருமை உ.வே.சாவிற்குத் தெரிந்தது என்றும் பதிவு செய்கிறார்
[[File:உ.வே,சா கல்லூரியில்.jpg|thumb|உ.வே.சா கல்லூரியில்]]
அன்னியர்கள் தமிழ்ச்செவ்வி யறியாதார் இன்றெம்மை ஆள்வோ ரேனும்


முதலியார் அவர்களின் ”இதனால் என்ன பிரயோசனம்” என்னும் கேள்வி உ.வே.சா.வின் மனதில் பெரியதாக்கத்தை ஏற்படுத்தியது. சீவக சிந்தாமணி நூலைப்படிக்கத் தொடங்கிய போது “ அது சீவகனைப் பற்றிய காவியம் என்பது மட்டும் எனக்குத் தெரிந்ததேயன்றி இன்ன வகையில் அது சிறப்புடையது என்பவற்றை அறியேன். தமிழ் நூற்பரப்பை ஒருவாறு அறிந்து விட்டதாக ஒரு நினைப்பு, அதற்கு முன் எனக்கு இருந்தது. நான் கண்ட நூற்பரப்பிற்குப் புறம் போயிருந்த சிந்தாமணி எனக்கு முதலில் பணிவை அறிவுறுத்தியது”. என்று பதிவு செய்கிறார். உ.வே.சா. சிந்தாமணியைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்தார். நச்சினார்க்கினியர் உரையுடன் மூலத்தையும் நன்கு படித்து அறிய முற்பட்டார்.
பன்னியர்சீர் மகாமகோ பாத்தியாயப்பதவி பரிவின் ஈந்து


பல இடங்களில் பொருள் விளங்கவில்லை. முதலியாருடன் அடிக்கடி விவாதித்ததுண்டு. இருவரும் கலந்துரையாடிப் பொருளை அறிந்து கொள்ள முயற்சி செய்துவந்தனர். சிந்தாமணி சமண நூலாதலால் பல சமண கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆதலால் அங்கு வசித்து வந்த ஞானம் படைத்த சமணர்களை அணுகி தமது ஐயங்களைத் தெளிவாக்கிக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். உ.வே.சா. சமணர்களுடன் கலந்துரையாடிய போதும்; கர்ண பரம்பரைக் கதைகளைக் கேட்டுத்தெரிந்த போதும் நூலாராய்ச்சியில் புலப்படாத, பல செய்திகள் புரிந்ததாகவும் குறிப்பிடுகிறார். “ஒரு சொல் தெரியாவிட்டாலும் விடமாட்டேன்” என்கிறார் உ.வே.சா. சிந்தாமணியின் நூலாசிரியராகிய திருத்தக்கதேவர் வரலாறும் அவ்வாறு தான் அவருக்குத் தெரிந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநாதன் தனக்குப் புகழ்செய் வாரேல்,


உ.வே.சா. சிந்தாமணி நூலைப் பதிப்பிக்கும் போது இவர் சேகரித்த அனைத்துத் தகவல்களையும் தமது நூலில் வெளியிட்டுள்ளார்கள். இவர் பதிப்பித்த நூலின் தனிச்சிறப்பு இவைகள்தான். இது போன்று தீராத விடாமுயற்சியால் நூலை நன்கு விளக்குவதற்கு இவர் எடுத்த முயற்சியின் பயனாக அனேக பயனுள்ள தகவல்களும் கிடைத்தன. நூலைப் பதிப்பிக்கும் போது அத்துணை தகவல்களையும், சேர்த்தே தந்திருப்பது இவருடைய நூல்களைத் தனித்து நிற்க உதவியது. சமகாலத்தில் இதற்கு ஒப்பான முயற்சி இருந்ததாகத் தகவல் இல்லை. நூலைப் படித்தோரும் இந்தத் தகவல்களின் பயனை அறிந்து ஐயரவர்களின் சேவையையும் முயற்சியையும் நன்கு உணர்ந்து பாராட்டினர்.
முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின் இவன்பெருமை மொழிய லாமோ?


பழந்தமிழ் நூல்களின் உரையாசிரியர்களில் நச்சினார்க்கினியர் மிகச்சிறந்த உரையாசிரியர் என்பதில் ஐயமில்லை. ஆனால் இன்று நாம் காணும் உரை உ.வே.சா.வால் பதிப்பிக்கப்பெற்றது. அதற்குமுன் ஐயரவர்கள் இவ்வுரையினை நன்கு புரிந்து கொண்டு விளக்குவதற்கு மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டுள்ளார். “நச்சினார்க்கினியர் உரையினால் புதிய புதிய விசயங்களை உணர்ந்தேன், இரண்டு விசயங்களில் அவரிடம் சிறிது வருத்தம் உண்டாயிற்று. பல இடங்களில் மாறிக் கூட்டிப்பொருள் விளக்குகிறார். ஓரிடத்திலுள்ள பாட்டிலிருக்கும் சொல்லைப் பல பாட்டுக்கு முன்னே மற்றோரிடத்திலுள்ளதோடு இணைந்து மாட்டெறிகின்றார். அத்தகைய இடங்களில் அவர் உரையில் சிறிது வெறுப்புத் தட்டியது. ஒரு விசயத்திற்கோ சொற்பிரயோகத்திற்கோ ஒருநூற் செய்யுட் பகுதியை மேற்கோள் காட்டுமிடத்தில் அந்த நூற்பெயரைச் சொல்வதில்லை ‘என்றார் பிறரும்’ என்று எழுதிவிட்டுவிடுகிறார்” என்று உ.வே.சா. பதிவு செய்கிறார்.
நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடிஇன்பவகை நித்தம் துய்க்கும்


சிந்தாமணி சமண காவியம் என்று சைவர்கள் குறை கூறிய போதும் “பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணியானால் நமக்கு என்ன? நாம் வேண்டுவன சொற்சுவையும் பொருட்சுவையும் தமிழ் நயமுமே சுவை நிரம்பிக்கிடக்கும் காவியமாக இருக்கும் பொழுது அதைப்படித்து இன்புறுவதில் என்னதடை” என்று தெளிவாக்குகின்றார். தம் தமிழ்த் தொண்டில் அவர், மதம் குறுக்கிடுவதை அனுமதிக்கவில்லை.
கதியறியோம் என்றுமனம் வருந்தற்க; குடந்தைநகர்க் கலைஞர் கோவே!


அக்காலத்தில் பிரதிகளை அச்சில் பதிப்பதற்கு முன்பு ஊர்ஊராகத் தேடிக் கிடைக்கும் நகல்களையெல்லாம் பெற்று அவைகள் அனைத்தையும் நன்று படித்து ஒப்பு நோக்கி, இவைகளுக்குள் வேறுபாடு இருக்குமானால் எது சரியானது என்று தீர்மானித்துப் பதிப்பிக்க வேண்டும். சிதைந்த பகுதிகளின் முழு வடிவத்தையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு சொல்லின் பொருள் முழுவதும் விளங்காமல் உ.வே.சா. எதையும் பதிப்பிப்பதில்லை. இவர் பிரதிகளைத் தேடித்தேடித் தமிழகம் முழுவது அலைந்த விவரம் ஏராளமாக இவர் சரித்திரத்தில் காணலாம். அக்காலத்தில் எவ்வித மோட்டார் வாகனப் போக்குவரத்து வசதியில்லாத போதும் கூட நூற்றுக்கணக்கான மைல்களை உ.வே.சா. பயணம் செய்துள்ளார். தங்குவதற்கு உணவு, உண்பதற்கு வசதியில்லாத போதும், ஊர் ஊராகக் கிராமம் கிராமமாகச் சென்று தெரிந்தவர்கள் வீட்டில் தங்கிக் கிடைத்ததை உண்டு தம் கருமமே கண்ணாகப் பண்டைய தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்கள். “ பழந்தமிழ் இலக்கண இலக்கியச் சுவடிகளைத் தேடி ‘ நள்ளிருளோ, கொள்ளு பகலோ, குறிக்கும் கடுமழையோ, அள்ளு பிணியோ, அவதியோ- உள்ளம் தடுக்கும் பகைகள் எது வரினும் தள்ளி அடுக்கும் தமிழ்ச் சுவடி தேடிக்கொடுக்கும் தமிழ்த்தாத்தா என்று தரணி புகழ்” என்று ஒரு தமிழ் புலவர் இவரை வருணிக்கிறார்.
பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில்


இப்பணியில் ஏராளமான பொருட்செலவு, மன உளைச்சல், உடல் அசதி அன்றிக் கடின உழைப்பை நல்கினாலும் இப்பணியை மெத்த உற்சாகத்துடன் செய்து வந்தார். கும்பகோணத்திலிருந்து சென்னைக்குச் செல்வதற்கு முன் சேலம் இராமசாமி முதலியாரவர்கள் உ.வே.சா.வைச் சந்தித்துச் “சிந்தாமணியின் பெருமையை நீங்கள் இப்பொழுது நன்றாக உணர்ந்து இருக்கின்றீர்கள். இந்த அருமையான காவியம் படிப்பாரற்று வீணாகப் போகாமல் நீங்கள் பாதுகாக்க வேண்டும். இன்னும் சிலபிரதிகள் சம்பாதித்து நீங்களே அச்சிட்டு வெளிப்படுத்த வேண்டும் அதைப் போன்ற உபகாரம் வேறு ஒன்றுமில்லை என்று கூறினார்”.
துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்கு வாயே.
====== ரவீந்த்திரநாத தாகூர் ======
ஏப்ரல் 1, 1919-அன்று சென்னைக்கு வந்த தாகூர் உ.வே.சாமிநாதையர் இல்லத்திற்கே வந்து அவர் பதிப்பித்த நூல்களைப் பார்வையிட்டுப் பாராட்டி ஒரு கவிதை எழுதினார்.


பவர்துரை பதுப்பித்த சிந்தாமணி நாமகளிலம்பகம் அச்சு நகல் ஒன்று ஐயரவர்களுக்குக் கிடைத்தது, தியாகராசசெட்டியார் தம்மிடமிருந்த நகலை அனுப்பி வைத்தார். திரு சுப்பிரமணிய தேசிகர் திருநெல்வேலி யிலிருந்து சில ஏட்டுப்பிரதிகளை வருவித்துக் கொடுத்தார். பலநகல்களையும் ஒப்பிட்டுப் பேதங்களைக் குறித்து வைத்து பின் ஆய்வுசெய்து சரியான சொற்களைத் தொிவு செய்வார். உ.வே.சா.விடம் பாடம் கேட்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர் என்று பலர் இவருக்கு உதவி செய்தனர்.
தேசிகோத்தம தேமாகரிப்ரணாம்


சிந்தாமணி ஆராய்ச்சியோடு திருக்குடந்தை புராணப் பதிப்பும் நடைபெற்றுவந்தது, திருக்குடந்தைப் புராணம் உ.வே.சா. வெளியிட்ட இரண்டாவது நூல். சிந்தாமணியைப் போன்று பல பழையநூல்கள் பதிப்பிக்கப்படாமல் உள்ளதை ஐயரவர்கள் அறிந்தார். சிலப்பதிகாரம், மணிமேகலை, எட்டுத்தொகை போன்றவை அவை. எட்டுத்தொகை மூலநூல் திருவாடுதுறை ஆதினத்திலேயே இருந்தது. பொருநராற்றுப்படை, பதினெண் கீழ்க்கணக்கு முதலியனவும் சுவடி வடிவில் கிடைத்தன. மற்ற சங்க நூல்களையும் நன்கு படித்தால்தான் சிந்தாமணியின் பொருள் விளங்கும் என்று அறிந்து அந்நூல்களை ஆழமாக உ.வே.சா. படித்துப் பொருள் விளங்க முயன்று வந்தார்.
(வங்காளி மூலம்)


சிந்தாமணிப் பிரதியை மேலும் தேடியபொழுது தஞ்சாவூரில் விருசபதாச முதலியாரிடம் உள்ளதாக அறிந்து அவாிடம் கேட்ட பொழுது அவர் “சமணர்களுக்கு மட்டும் கொடுப்பேனேயன்றி மற்றவர்களுக்குத் தர இயலாது” என்று மறுத்து விட்டார். பல நண்பர்களின் உதவியுடன் இந்நூல் நகல் அவரிடமிருந்து கிடைத்தது. இது போன்று மதத்தின் அடிப்படையிலும் பல இடையூறுகள் வந்தன. இன்னும் பல இடங்களில் அறிய பொக்கிஷங்களான இச்சுவடிகளைத் தீயில் இட்டும் ஆற்று வெள்ளத்தில் இட்டும் அழித்து விட்டதைக் கேட்டு உ.வே.சா. மிகவும் வேதனைப்பட்டுள்ளார். இவ்வாறு தேடிச் சிந்தாமணியின் 23 நகல்களை உ.வே.சா. சேர்த்துவிட்டார்.
ஆதிஜூகேர் ஆந்தாரே தாலபத்ரே ச்சிலோ


இதற்கிடையில் மடத்தின் அலுவல் காரணமாகச் சென்னை சென்று வர வாய்ப்புக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு சென்னையில் இராமசாமி முதலியாரிடம் தங்கிக் கொண்டு பல புகழ் பெற்றவா்களிடம் அறிமுகமாகிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். சென்னையில் சந்தித்த சி.வை. தாமோதரம்பிள்ளை, சிந்தாமணியைத் தாம் பதிப்பிக்க விருப்பியதாகவும் உ.வே.சா.விடமுள்ள குறிப்புகளனைத்தையும் அவரிடம் தரும்படி வற்புறுத்தியுள்ளார். அரைமனதுடன் இருந்த உ.வே.சா. தாம் ஏற்கனவே வாக்குக் கொடுத்திருப்பதாகவும், முடிவு செய்துவிட்டதாகவும் எத்துணை இடர்பாடுகள் வந்தாலும் இம் முயற்சியிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்றும் தீர்மானமாகக் கூறிவிட்டார்.
த்ராவிட தேசேர் புராதன கீர்த்தி,


சிந்தாமணியைப் பிழையில்லாமல் பதிப்பிக்க வேண்டும் என்னும் ஆவலில் உ.வே.சா. முயற்சி தொடர்ந்தது. இதனால் காலதாமதம் ஆயிற்று ஒவ்வொரு விசயத்தையும் சந்தேகமறத் தெளிந்து பின்பு வெளியிடுவது எளிதன்று என்றும் இப்படி ஆராய்ந்து கொண்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் செலவாகிவிடும் என்று நண்பர்கள் அறிவுறுத்த உ.வே.சா.வும் நூலைப் பதிப்பிக்கலாம் எனவும் திருத்தங்கள் தேவைப்படின் அடுத்த பதிப்பில் மேற்கொள்ளலாம் என முடிவு செய்தார்.
ஸேஇ மஹத்நிதி, ஹே தேசிகோத்தம


நூலைப் பதிப்பிக்கத் தேவையான நிதி வசதியின்மையால் இவர் பல பெரியவர்களை அணுகி முன்பணம் பெற்றுக்கொண்டு பணியைத் தொடங்கினார். சீவக சிந்தாமணி பதிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது புரசவாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியாரவர்கள் போன்றவர்கள் நீங்கள் வயதில் இளையவர், சீவக சிந்தாமணிப் பதிப்பு மிகவும் கடினமான செயல் உங்களால் முடியாது என்றும், சேலம் ராமசாமி முதலியார் கூட ஒரு சமயம் உங்களுக்கு இது கடினம், உங்கள் குறிப்புகளைத் தாமோதரம்பிள்ளை யவர்களிடம் கொடுத்து விடுங்கள் உங்களுக்கு நிதி திரட்டுவது சிரமம் என்று தளர்வூட்டினர். ஆனால் உ.வே.சா. “நான் ஏன்பதிப்பிக்கக் கூடாது அந்த நூலையும், உரையையும் பலமுறை படித்து ஆராய்ந்துள்ளேன். அதற்கு வேண்டிய கருவி நூல்களையும் படித்திருக்கிறேன்; நிறைவேற்றி விடலாம் என்ற துணிவு எனக்கு இருக்கிறது”. என்று தெளிவாக இருந்தார், “யார் வந்து தடுத்தாலும் என்முயற்சியை நிறுத்திக்கொள்ளாத உறுதி என்னிடம் இருந்தது”.
தோமார் த்வாரா நா கி பாஹிர்ஹயில்?


சீவக சிந்தாமணி நூலைப் பதிப்பிக்க எவ்வளவு தமிழ் புலமை வேண்டும் அஃது உ.வே.சா.விடமிருந்ததுதான் சிறப்பு. மேலும் சிறுவயதிலிருந்து உ.வே.சா. தீராத தமிழ் ஆர்வத்தால் மிகுந்த முயற்சி எடுத்துத் தமிழைக் கற்றுத் தேர்ந்த புலமை தான் சீவக சிந்தாமணி போன்ற பழைய நூல்களைச் சிறப்பாகப் பதிப்பிக்க உதவி செய்தது என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. நாமகளிலம்பகம் 58-ஆம் செய்யுளுக்கு உரை எழுதும் பொழுது நச்சினார்க்கினியர் “ஏக்கழுத்தம் என்ற ஒரு சொல்லைக் குறிப்பிட்டுள்ளார். இச்சொல்லிற்குப் பொருள் விளங்காத உ.வே.சா. சிறுபஞ்சமூலத்திலும், நீதிநெறி விளக்கத்திலும் இதே சொல் வருவதை நினைவுகூர்ந்து அவைகளை மீண்டும் படித்து இச்சொல்லின் முழுமையான, சரியான பொருளைத் தமது பதிப்பில் பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொரு சொல்லும் வேறு எந்த இலக்கியத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்று தொடர்புகொண்டு பார்க்கக்கூடிய அளவு புலமை பெற்றிருந்தால்தான் இஃது இயலும். இதனை உ.வே.சா. செய்து காட்டியுள்ளார். இதுபோன்று ‘ஏக்கழுத்தம்’ என்ற சொல்லிற்கு நாம் கண்டுபிடித்த பொருளைப் பற்றித் தமது பதிப்பிற்கு மிகுந்த துணையாக இருந்த சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியாரிடம் பகிர்ந்து கொண்ட பொழுது “புதிய தேசத்தைக் கண்டு பிடித்தாற் கூட இவ்வளவு சந்தோசமிராது” என்று கூறுகிறார்.
ஸே  காலேர் அகஸ்த்யேர் மதஏஸே தோமார்மாகே


நூலை அச்சிடும்பொழுது ஓய்வு ஒழிவில்லாமல் உ.வே.சா. உழைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொருநாளும் அச்சுப்பிரதிகளைத் திருத்திக் கொடுப்பது, கையெழுத்துப்பிரதியைப் படிப்பது, போன்று பல வேலைகள் இருந்தன. இப்பணியில் சோடசவதனம் சுப்பராய செட்டியாரும், ராஜ கோபாலாச்சாரியாரும் வேலுச்சாமி பிள்ளையும் கையெழுத்துப் பிரதிகளைப் படித்து உதவி செய்ததாகவும் குறிப்பிடுகிறார். அச்சடித்த நகல்களைத் தாமே தனியாக இரவில் அமர்ந்து நெடுநேரம் சரிபார்த்ததாகவும் குறிப்பிடுகிறார். தமக்கு இரவில் “தூரத்துப் பங்களாவில் ஒரு நாய் கட்டப்பட்டிருக்கும் இரண்டு கூர்க்கா சிப்பாய்கள் தூங்காமல் காவல் புரிவார்கள்” இவர்கள் மட்டுமே துணை இவர்களால் எனக்கு என்ன உதவி செய்யமுடியும் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.
ஸிம்ஹாஸனே ரேகே திலே நாகிதுமிஸ ஸம்மானே?


சென்னையில் தங்கியிருந்து அச்சுவேலையை மேற்பார்வையிட இயலவில்லை, கும்பகோணம் திரும்ப வேண்டி வந்தது எனவும் சென்னையில் சுப்பராய செட்டியாரிடம் ராஜ கோபாலாச்சாரியாரிடம் மேற்பார்வைப் பணியைச் செய்ய வேண்டிக்கொண்டு, அச்சு நகல்களைப் பெற்றுச் சரிபார்க்க கும்பகோணம் அனுப்பும்படி வேண்டிக்கொண்டு கும்பகோணம் திரும்பிவிடுகின்றார்.
ஆர் பாஞ்ச மஹா காவ்யேர் மாஜ்ஜே


திருவாவடுதுறை சென்று தேசிகரிடம் அச்சு நகல்களைக் காண்பித்த பொழுது அவர் மிக்க மகிழ்ச்சியடைந்து “சாமிநாதையர் மடத்திலேயே இருந்தால் இந்த மாதிரியான சிறந்த காரியங்களைச் செய்ய இடமுண்டா? நல்ல வித்துகள் தக்க இடத்தில் இருந்தால் நன்றாகப் பிரகாசிக்கும்”. என்று குறிப்பிட்டு மகிழ்ந்துள்ளார். சீவக சிந்தாமணி அச்சு நகல்களைத் தாமும் சரிபார்த்துத் தருவதாகச் சிலபுலவர்கள் கேட்ட போதும் தேசிகர் அவர்கள் “கண்டோரிடம் இதைக் கொடுக்ககூடாது நீங்கள் சிரமப்பட்டுச் செய்த திருத்தங்களையெல்லாம் தாமே செய்தனவாகச் சொல்லிக்கொள்ள இடமேற்படும்” என்று கூறிவிட்டார். உ.வே.சா.வின் நலனில் தேசிகர் போன்ற பெரியவர்கள் ஆழமான அக்கறையும் வைத்திருந்தனர் என்பதற்கு இது போன்று பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இப்பணியில் கல்லூரி மாணவர்களும், மடத்தில் பயின்று வந்த மாணவர்களும் உதவி செய்ததை உ.வே.சா. நன்றியுடன் நினைவு கூறுகிறார். பல அன்பர்கள் நூல் பிரதிகள் வாங்கிக் கொள்வதாகக் கூறி முன்பணம் அளித்தது, அச்சிடவாகும் செலவினத்தை மேற்கொள்ள உதவியாக இருந்தது.
சிந்தாமணி, நூபுரகாதா, மணிமேகலா இத்யாதி


நூலை அச்சிடுவதற்குத் தனிப்பட்ட முறையில் வந்த இடையூறுகள் அல்லாமல், அச்சு நகல்களை அச்சகத்திலிருந்து திருடவும் முயற்சிகள் நடந்துள்ளன. விடுமுறைகளில் சென்னை வந்து பதிப்பு அலுவல்களைக் கவனித்து வந்தார்.
ஸம்சோதன கரே தாஹார் பத  ஜூகலே


சீவக சிந்தாமணி பதிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே தம்மிடமிருந்த எட்டுத்தொகை நூலை ஆராய்ந்து வந்தார். பதிப்பு நிகழ்ந்து வந்தாலும் சீவக சிந்தாமணி ஏடு தேடும் முயற்சி தொடர்ந்தது. இதற்காகத் திருநெல்வேலி சென்று பல ஊர்களில் சீவக சிந்தாமணி நூலை உ.வே.சா. தேடினார்.
ஸமர்ப்பணகரிலே நா கிதுமி?


சீவக சிந்தாமணி பதிப்பு பற்றிப் பல பத்திரிகைகளிலும் செய்திகள் வந்த வண்ணமிருந்தன. சிந்தாமணி பதிப்பிற்கு வாங்கியிருந்த முன்பணம் போதவில்லை. அச்சிடுவதற்குக் காகிதம் தேவையாக இருந்தது. கடன் வாங்கி இதுபோன்ற இடர்பாடுகளை உ.வே.சா. சரி செய்து வந்தார். அக்காலத்தில் தமிழ்ப் புத்தகங்களில் முகவுரை இருந்ததில்லை. ஆனால் உ.வே.சா. சிந்தாமணி நூலிற்கு விரிவான முகவுரை எழுதிச் சேர்த்தார். இதனைத் தொடர்ந்து முதன்முறையாக நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு முதலியவற்றையும் சேர்த்து நூலுக்கு மிகுந்த மதிப்பைக் கூட்டினார். அதே போலக் காப்பியத்தின் கதையை எழுதிச்சேர்த்தார். நூலைப் படிப்பவர்கள் நூலைப்பற்றி நன்கு புரிந்து கொள்வதுடன் நூல் பற்றிய மற்ற தகவல்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். உரையாசிரியரைப் பற்றிக் கூறும் பொழுது அவர் உரை எழுதிய பிற நூல்கள் எவையென்றும் குறிப்பிட்டார். நூல்வெளியிட உதவியவர் பெயர்களும் முன்னுரையில் இடம் பெற்றது. இவ்வாறு நூல் பதிப்பில் வாசகர் நலன் கருதிப் பல தகவல்களைக் கொடுத்துப் பெரிய புரட்சியை முதன்முதலாக உ.வே.சா. ஏற்படுத்தினார். முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு, இம்முயற்சிக்கு வித்திட்ட சேலம் இராமசாமி முதலியாரிடம் காண்பித்தார். அவர் அடைந்த ஆனந்தம் அளவிடமுடியாது. “பெரிய காரியத்தை மேற்கொண்டு நிறைவேற்றி விட்டீர்கள்” என்று மனமாரப் பாராட்டினார். நூலைக் கண்ட சுப்ரமணியதேசிகர் முதலியோர் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.
ஸங்கே ஸங்கே ஸங்ககால ஸாஹித்யகே


==== பத்துப்பாட்டு ====
ஜ்யோத்ஸ்னாய் ஃபுடித நித்ய மல்லிகார்மத
அடுத்துப் பத்துப்பாட்டை பதிப்பிக்கும் முயற்சியை ஐயரவர்கள் கையிலெடுத்தார்கள். சீவக சிந்தாமணி போலவே ஏட்டுச் சுவடிகளைத் தேடி ஊர்ஊராகக் சென்றாா். ஒரு பிரதி அவர் கைவசம் ஏற்கனவே இருந்தது. “பத்துப்பாட்டில் விசயம் தெரியாமல், பொருள் தெரியாமல், முடிவு தெரியாமல் மயங்கிய போதெல்லாம் இந்த வேலையை நிறுத்தி விடலாம் என்று சலிப்புத் தோன்றும். ஆனால் அடுத்த கணமே ஓர் அருமையான விசயம் புதிதாகக் கண்ணில்படும் போது, அத்தகைய விசயங்கள் சிரமமாக இருந்தாலும் அவற்றிற்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கலாம் என்ற எண்ணம் உண்டாகும்” என்று தமது விடாமுயற்சியை உ.வே.சா. பதிவு செய்கிறார். சில கெட்ட எண்ணம் கொண்ட மதியிலோர் உ.வே.சா.வின் முயற்சியில் குற்றம் கண்டு தமது சுய விளம்பரத்திற்காகத் துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். இதற்கு மறுப்பு எழுதவேண்டும் என்று உ.வே.சா. விரும்பினார். சாது சேசையர் அவர்கள் இவ்வாறு நீங்கள் மறுப்பு எழுதினால் உங்கள் காலம் இதிலேயே வீணாகும் எனவும், மறுப்புக்கு மறுப்பு என்று இது வளரும் எனவும், இதைப் பொருட்படுத்த தேவையில்லை எனவும், அறிவுறுத்தியதுடன் தாம் எழுதி எடுத்துச் சென்ற மறுப்பைக் கிழித்துப் போட்டதாக உ.வே.சா. தெரிவிக்கின்றார்.


பத்துப்பாட்டு பதிப்பு வேலையும் சென்னையில் தொடங்கியது. சீவக சிந்தாமணி பதிப்பிலும் பத்துப்பாட்டுப் பதிப்பிலும் திருமானூர் கிருஷ்ணையரைச் சென்னையில் தங்கி மேற்பார்வையிட்டு உ.வே.சா.விற்கு உதவி உள்ளார். 1889-ஆம் வருடம் உ.வே.சா.வின் 34-ஆவது வயதில் பத்துப்பாட்டும் பதிப்பிக்கப்பட்டது. இதில் முகவுரையும், நூலின்மூலம் நச்சினார்க்கினியர் உரை, உரைச்சிறப்பு, பாயிரம், அரும்பதவிளக்கம் அருந்தொடர்விளக்கம், பிழைதிருத்தம் என்பனவற்றை உ.வே.சா. சேர்த்திருந்தார். இதன் தொடர்ச்சியாகத் திரு‌கச்சியப்ப முனிவர் இயற்றிய ஆநந்தருத்திரேசர் வண்டு விடுதூது, மாயூரம் ராமையர் இயற்றிய மயிலையந்தாதி முதலிய நூல்களையும் உ.வே.சா. பதிப்பித்து வெளியிட்டார்கள்.
சோபித கரிலே நாகிதுமி? தேமாகரிப்ரணாம்


இதற்கிடையில் சேலம் இராமசாமி முதலியார் சிலப்பதிகாரம் மூலமும் உரையும் அடங்கிய பிரதி ஒன்றைக் கொடுத்தார். ஏற்கனவே தியாகராச செட்டியார் கொடுத்த பிரதியும் உ.வே.சா.விடத்தில் இருந்தது. அடியார்க்கு நல்லார் உரை ஒரு பெரிய சமுத்திரமாக இருந்தது. மீண்டும் சுவடிகள் தேடும் யாத்திரையை உ.வே.சா. மேற்கொண்டார். ஏற்கனவே தேடாத சேலம் போன்ற இடங்களுக்குச் சென்று சுவடிகளைத் தேடத் தொடங்கினார். மேலும் திருநெல்வேலி திருவைகுண்டம், பெருங்குளம், ஆறுமுகமங்கலம், நாங்குநேரி, களக்காடு, குன்றக்குடி, மிதிலைப்பட்டி போன்ற ஊர்களுக்குச் சென்று ஏட்டுச்சுவடிகளைத் தேடினார். கிடைத்த சுவடிகளை வைத்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டார். அடியார்க்கு நல்லார் உரையில் பல நூல்களின் பெயர்கள் இருப்பதாகக் கண்ட உ.வே.சா. இந்நூல்களைப் பற்றிய குறிப்பை அவசியம் தம் நூலில் குறிப்பிட வேண்டும் என்று விரும்பினார்கள். நூலிலும், உரையிலும் அறியப்படும் அரசர் பெயர்களையும் வரிசைப்படுத்தி வெளியிட விரும்பினார். இவ்வாறு அரசர்கள், நாடுகள், ஊர்கள், மலைகள், ஆறுகள், பொய்கைகள், தெய்வங்கள், புலவர்கள், ஆகிய பெயர்களுக்குத் தனித்தனியாக அகராதியும் அடியார்க்கு நல்லார் உரையில் கண்ட நூல்களுக்கு அகராதியும், தொகையகராதியும், விளங்கா மேற்கோளகராதியும், அபிதான விளக்கமும் எழுதி உ.வே.சா. சிலப்பதிகார நூலைப் பதிப்பித்தார். சிலப்பதிகார கதைச்சுருக்கம், இளங்கோவடிகள் வரலாறும், அடியார்க்கு நல்லார் வரலாறும், மேற்கோள் நூல்களைப் பற்றிய குறிப்புகளும் எழுதப் பெற்றன. 1891-ஆம் வருடம் சூன் மாதம் கோடை விடுமுறையில் சென்னை சென்று உ.வே.சா. சிலப்பதிகாரத்தைப் பதிப்பிக்கத் தொடங்கினார். சென்னையில் தங்கியிருந்த காலத்திலும் பல புலவர்கள் வீடுகளுக்குச் சென்று சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்தார். பதிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது பணமுடை ஏற்பட்டு அச்சுக்கூலிக்குப் போதுமான நிதி கைவசமில்லை, இது குறித்து உவேசா “புத்தகத்திற்கு வேண்டிய விசயங்களை விளக்கமாக அமைக்கும் முயற்சியில் மாத்திரம் என் திறமை வளர்ந்ததே யன்றிப், பிரசுரம் செய்வதற்குரிய பொருள்வசதியை அமைத்துக்கொள்ளும் விசயத்தில் என் கருத்து அதிகமாகச் செல்லவில்லை” என்று தம் முயற்சியனைத்தும் நூல் ஆராய்ச்சியிலும் நூல்பதிப்பித்தலிலும் செலவிடப்பட்டதாகவும், பொருள் ஈட்டவேண்டும் என்ற எண்ணம் சிறிதுமில்லாம் இதிலிருந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார். கடைசி நேரத்தில் அரும்பதவுரைக்கு முகவுரை வேண்டும் என்ற தமது எண்ணத்தை, இறுதி நாளன்று இரவில் மிகுந்த சிரமத்துடன் எழுதி அச்சுக்கூடத்திற்குச் சேர்த்து, மறுநாள் முழுநூலும் அச்சிடப்பட்டதைக் கண்டு ஆனந்தப்பட்டதாக மிகவும் உணர்ச்சி பூர்வமாக உ.வே.சா. நினைவு கூறுகிறார். ஒவ்வொரு நூலை அச்சிட்டு வெளியிடும் பொழுதும் அவர் அடைந்த இன்னல்களுக்கும், நூல்வெளிவரும் பொழுது அடைந்த மகிழ்ச்சிக்கும் அளவே இருந்ததில்லை.
(தமிழாக்கம் )


உ.வே.சா. அவர்கள், இந்நூல்களின் வெளியீடு குறித்துச் “சீவக சிந்தாமணியும் பத்துப்பாட்டும் தமிழ்நாட்டில் உலாவரத் தொடங்கிய பிறகு பழந்தமிழ் நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புறும் வழக்கம் தமிழர்களிடையே உண்டாயிற்று. அவற்றின் பின்பு சிலப்பதிகாரம் வெளிவரவே பண்டைத் தமிழ் நாட்டின் இயல்பும் தமிழில் இருந்த கலைப்பரப்பின் சிறப்பும் யாவருக்கும் புலப்படலாயின. “கண்டறியாதன கண்டோம்” என்று புலவர்களும் ஆராய்ச்சியாளர்களும் உவகைக் கடலில் மூழ்கினர்" என்று தமிழ்நாட்டிலிருந்த வரவேற்பைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
ஆதியுகத்து இருளில் பனையோலைச் சுவடிகளில்


==== புறநானூறு ====
இருந்தது திராவிட நாட்டின் புராதன கீர்த்தி -
அடுத்ததாகப் புறநானூறு பதிப்பிக்கும் முயற்சியை உ‌.வே.சா. கையிலெடுத்தார்கள். அப்பொழுது கும்பகோணம் கல்லூரியில் சாித்திர ஆசிரியர் வைத்திருந்த பைபிளைக் காணும் வாய்ப்புக்கிடைத்தது. பைபிளை ஆராய்ந்து ஒரே மாதிரியான கருத்துள்ள பகுதிகளை ஆங்காங்கே காட்டிப் பதிப்பித்திருக்கின்றார்கள். புறநானூறையும் இது போல் பதிப்பிக்க வேண்டுமென்ற ஆவல் பிறந்தது. “புறநானூறை ஆராய்ச்சி செய்வதற்குச் சங்கநூல் முழுவதையும் ஆராய்ச்சி செய்வது அவசியமாயிற்று. இதனால் எனக்கும் பன்மடங்கு இன்பமுண்டானாலும் சிரமமும் பன்மடங்காயிற்று” என்று உ.வே.சா. குறிப்பிடுகிறார். புறநானூறு நூல் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் பொழுது கும்பகோணம் கல்லூரியில் முதல்வர் ஜே ஹெச் ஸ்டோன் என்பவர் சேக்ஸ்பியர் நாடகமான ‘நடுவேனிற் கனவு’ (Mid summer nights dream) தமிழில் நடித்துக்காட்ட ஏற்பாடு செய்தார். உ.வே.சா. மொழி பெயர்ப்பைச் சரிபார்த்து இடையே தமிழ்ப் பாடல்களையும் இயற்றிச் சோ்த்தார். இம்முயற்சியின் தொடர்ச்சியாக ஆங்கிலம் தெரிந்த ஒருவர் உதவியுடன் சேக்ஸ்பியரின் நாடகங்களையும் மகாகவி காளிதாசரின் நாடகங்களையும் தமிழில் வெளியிட வேண்டுமெனவும் விரும்பினார்கள். பல கல்லூரி ஆசிரியர்கள் உ.வே.சா.வைப் புதிதாக வசனநூல்களை எழுதும்படியும், அவைகளைக் கல்லூரியில் பாடமாக வைக்கலாம் அதனால் நல்ல பொருள் ஈட்டலாம் என்றும் யோசனை கூறினாலும் இவர் மனம் இதில் நாட்டம் கொள்ளாமல் பழந்தமிழ் நூலாராய்ச்சியிலேயே மனம் ஒன்றிப் போனதாகக் குறிப்பிடுகின்றார்.


1894-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் புறநானூறு நூல் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. உ.வே.சா. பதிப்பித்த எட்டுத்தொகை நூல்களுள் இதுவே முதலானதாகும். முகவுரையில் எட்டுத்தொகையும் அதுபற்றிய வரலாற்றையும், அகம் புறம் என்னும் இருவகைப் பொருளின் இயல்பையும் விளக்கி எழுதிச் சேர்த்துள்ளார்கள்.அடுத்துப் புறப்பொருள் வெண்பாமாலை நூலை ஆராய்ச்சி செய்து பதிப்பித்தார்கள். அடுத்து மணிமேகலை நூலை ஆராய்ச்சி செய்தார்கள். மணிமேகலை நூலை நன்கு புரிந்து கொள்ள பெளத்த மத ஆராய்ச்சியும் தேவைப்பட்டது. புத்தரைப் பற்றியும் அவர்தம் வரலாறு பற்றியும் படித்தார். ஐயம் வந்த பொழுதெல்லாம் பௌத்தம் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். இவ்வாறு பலத்த முயற்சிக்குப்பின் 5. சூன் 1896-ஆம் ஆண்டு மணிமேகலையையும் உ.வே.சா. அச்சுக்குக் கொடுத்தார். அந்நூலிற்கு அங்கமாக மணிமேகலையின் கதையையும் எழுதிச் சோ்த்தார். பௌத்தம் குறித்த செய்திகள் தமிழ்நாட்டிற்குப் புதிதாகையால் அவைகளை நூலில் ஆங்காங்கே எழுதிச் சோ்த்தார்.1898-ஆம் ஆண்டு சூலை மாதம் மணிமேகலை மூலமும், அரும்பதவுரை முதலியனவும், முகவுரை, புத்தசரித்திரம், பெளத்ததருமம், பெளத்தசங்கம் மணிமேகலைக் கதைச்சுருக்கம் முதலியவற்றுடன் வெளியிடப்பட்டது. 59 தமிழ் நூல்களிலிருந்தும் 29 வடமொழிநூல்களிலிருந்தும் குறிப்புரையில் மேற்கோள்கள் காட்டியிருந்தார். முதன்முதலாக உ.வே.சா. உரை எழுதிய நூல் மணிமேகலை. உரை எளிய நடையில் அமைந்ததைப் பற்றிப் பலரும் அவரைப் பாராட்டினர் என்று உ.வே.சா. குறிப்பிடுகிறார்.
அந்தப் பெருநிதி, பேராசானேஉன்னால் அன்றோ வெளிப்பட்டது?


மேலும் பல சாதனைகளைத் தொடர்ந்து உ.வே.சா. செய்து வந்துள்ளார்கள். “என் சரித்திரம்” என்னும் அவருடைய சுய சரிதையை அவர் இத்துடன் முடித்துக் கொண்டுள்ளார்.
அந்தக் காலத்து அகஸ்தியனைப் போல நீயன்றோ வந்து


எவ்வளவு தமிழ் ஆர்வம், எவ்வளவு விடாமுயற்சி, தமிழில் புலமை பெறவேண்டும், பழைய நூல்களைப் பதிப்பித்துத் தமிழ்த் தொண்டாற்றவேண்டும் என்னும் குறிக்கோளைத் தவிர வேறெதனையும் தம் வாழ்நாளில் உ.வே.சா. சிந்தித்ததே இல்லை. இவையே இவருக்கு மூச்சு. இளம்வயதில் அவர் கற்ற தமிழ், பெற்ற புலமையின்றி அவரால் இவ்வாறு தமிழ்நூல்களைத் திறம்பட பதிப்பித்திருக்க முடியாது. அவர் நூல்களைப் பதிப்பிக்க வேண்டும் என்ற இறைவன் திருவுளத்திற்காகவே தம் இளம் வயதில் தேடித்தேடித் தமிழ் கற்றார் போலும். தமிழ்ப் புலமையுடன் நின்றிருந்தால் தமிழுலகம் அறிய பொக்கிசங்களை இழந்திருக்கும் .
உன் அன்னையினைச் சிம்மாசனத்தில் பெரு மதிப்புடன் வீற்றிருக்க வைத்தாய்?


,
அம்மட்டோ ஐம்பெருங் காப்பியங்களுள்


== ஏட்டுச்சுவடி மீட்பு ==
சிந்தாமணி, சிலப்பதிகாரம் மணிமேகலை முதலானவற்றை
உ.வே.சா‌. கும்பகோணத்தில் பணியில் இருந்த காலத்திலே சேலம் இராமசாமி முதலியார் என்பவரைச் சந்தித்து நட்பு கொண்டார். ஒருநாள் வழக்கம் போல் இவர்கள் உரையாடிக் கொண்டிருக்கையில் ' சீவக சிந்தாமணியைப் பற்றித் தெரியுமா? ' என முதலியார் வினவினார். தன் ஆசிரியரிடம் சிற்றிலக்கியங்கள் பெரும்பாலானவற்றை மட்டுமே கற்றிருந்த உ.வே.சா. சிற்றிலக்கியங்களைத் தவிர வேறு பல தமிழ் இலக்கியங்களும் இருப்பதை அன்று அறிந்தார். இராமசாமி முதலியார் உ.வே.சா. வுக்கு அளித்த சமண சமய நூலான சீவக சிந்தாமணியின் ஓலைச்சுவடிப் பகுதி அக்காலகட்டத்தில் சமயக்காழ்ப்பினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களைப் பற்றி அறியும் ஆவலையும், அதனை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் உ.வே.சா.வினுள் தூண்டியது. சமண இலக்கியங்களோடு பல ஓலைச்சுவடிகளையும் உ.வே.சா. தேடித் தேடிச் சேகரித்தார். சேகரித்தது மட்டுமின்றி அவற்றைச் சேமித்தும் பகுத்தும் பாடவேறுபாடு கண்டும் தொகுத்தும் பிழைதிருத்தி அச்சிலேற்றும் பணியையும் தொடங்கினார். பின்னாளில் அவற்றுக்கு உரையெழுதும் அரும்பணியையும் ஆற்றினார். இப்பணியானது அவர் தனது 84-ஆம் அகவையில் இயற்கையெய்தும் வரை இடையறாது தொடர்ந்தது.


சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90-இக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார்.
அந்த அன்னையின் இணையடியில்


''சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும்'', ''புதியதும் பழையதும்'', ''நல்லுரைக் கோவை'' போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
சமர்ப்பித்தவன் நீ அன்றோ?


== பேச்சுத்திறன் ==
அவற்றுடன் சங்க இலக்கியத்தையும்
உ.வே.சா. கருத்தாழத்தோடு நகைச்சுவை இழையோடப் பேசும் திறமை உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா. ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது.


== பட்டங்கள் ==
நிலவில் மலர்ந்த முல்லை என
உ.வே.சா. தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி, மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது. இது தவிர ''மகாமகோபாத்தியாய'' மற்றும் ''தக்க்ஷிண கலாநிதி'' எனும் பட்டமும் பெற்றுள்ளார். இந்திய அரசு, பெப்ரவரி 18,2006-ஆம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.


== நினைவு இல்லம் ==
ஒளிர வைத்தவனும் நீஅன்றோ? உன்னை வணங்கு கிறேன்."


* உத்தமதானபுரத்தில் உ.வே.சா. வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.
(தமிழாக்கம் செய்தவர், த.நா.சேனாபதி)
* 1942-இல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) ''டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம்'' அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
== உ.வே.சாமிநாதையர் வாழ்க்கை ஆண்டு வரிசை ==
பார்க்க [[உ.வே.சாமிநாதையர் வாழ்க்கை ஆண்டுவரிசையில்|உ.வே.சாமிநாதையர் வாழ்க்கை ஆண்டுவரிசை]]
== இலக்கிய இடம் ==
உ.வே.சாமிநாதையர் தமிழ் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். [[ஆறுமுக நாவலர்]], [[சி.வை. தாமோதரம் பிள்ளை]], மழவை மகாலிங்கையர், சௌரிப்பெருமாள் அரங்கன், வித்வான் தாண்டவராய முதலியார், களத்தூர் வேதகிரி முதலியார், [[விசாகப்பெருமாள் ஐயர்|திருத்தணிகை விசாகப் பெருமாளையர்]], திருவேங்கட முதலியார், ராஜகோபாலப் பிள்ளை என அவருக்கு சமகாலத்திலும் முன்பும் பல பதிப்பாளர்கள் இருந்தாலும் தமிழ் பதிப்பியக்கத்தின் தலைமகனாக உ.வே.சாமிநாதையர் கருதப்படுகிறார். அவர் முதன்முதலாக பதிப்பித்த பல நூல்கள் தமிழிலக்கியத்திற்கும் தமிழ்பண்பாட்டுக்குமே அடிப்படையானவை என்பது முதன்மைக் காரணம்.  


== டாக்டர் உ.வே.சா. நூலகம் ==
அத்துடன் உ.வே.சாமிநாதையர் முற்றிலும் அறிவியல் முறைமைப்படி பிழைநோக்கி, பாடவேறுபாட்டுப் பட்டியல்களுடன், விரிவான உரைகள் மற்றும் ஆய்வுக் குறிப்புகளுடன் தன்நூல்களை பதிப்பித்தார். தமிழின் முதன்மைநூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி ஆகியவற்றை அச்சேற்றியவர் என்பதனால் தமிழிலக்கியத்தின் மறுபிறப்புக்கு காரணமானவர்.
முதன்மைக் கட்டுரை: உ.வே.சாமிநாதையர் நூலகம்


சென்னை, பெசண்ட் நகரில் உள்ள் டாக்டர் உ.வே.சா. நூல் நிலையத்தில் பல்வேறு திருக்கோயில்களின் தல புராணங்கள் மட்டுமன்றிப் பக்தி இலக்கியங்களும் ஓலைச் சுவடிகளில் உள்ளன. செல்வ வளம் மிகுந்த திருக்கோயில்கள் தமிழகத்தில் பல உள்ளன. எனினும் அவற்றைப் பற்றிய தல புராணங்களில், இலக்கியங்களில் கூட இன்னமும் அச்சுக்கு வராதவை உள்ளன. இச்செய்தி அவ்வத் திருக்கோவில் பொறுப்பாளர்களுக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவை இன்னும் அச்சேரவில்லை.
நவீனத் தமிழ் உரைநடை உருவாகி வந்த காலத்தில் எழுதிய உ.வே.சாமிநாதையரின் பங்களிப்பு வாழ்க்கை வரலாற்றெழுத்து மற்றும் நடைச்சித்திர எழுத்து ஆகியவற்றில் முன்னோடியானது. தமிழின் உரைநடையில் அவருடைய தமிழ்நடையின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. நவீனத்தமிழ் விமர்சகர்களான [[க.நா.சுப்ரமணியம்]], [[வெங்கட் சாமிநாதன்]], [[சுந்தர ராமசாமி]] ஆகியோர் அதை குறிப்பிட்டிருக்கிறார்கள்.  
 
== நூல்கள் ==
டாக்டர் உ.வே.சா. நூல் நிலையத்தில் ஓலைச் சுவடியில் இருந்து இதுவரை அச்சுக்கு வராத நூல்களை அச்சுக்குக் கொண்டு வரும் திருப்பணியின் மூலம் 2002-ஆம் ஆண்டு ’அர்த்த நாரீசர் குறவஞ்சி’ என்னும் திருச்செங்கோட்டுக் குறவஞ்சி நூல் வெளிவந்தது. 2003-ஆம் ஆண்டு தேசீய ஆவணக் காப்பகத்தின் (National Archives of India) 80% பொருளுதவியுடன் கற்பகவல்லி நாயகி மாலை என்னும் நூல் வெளிவந்துள்ளது.
 
உ.வே.சா. எழுதிய திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் என்ற நூலை டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் 1986-ஆம் ஆண்டில் மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது.
 
== தன் வரலாறு ==
உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை '''''என் சரித்திரம்''''' எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950-ஆம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது.
 
இது தவிர இவரது வாழ்க்கை வரலாறு ''தமிழ்த்தாத்தா'' எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தாரால் (தூர்தர்சன்) ஒளிபரப்பப்பட்டது.
 
== அச்சு பதித்த நூல்களின் பட்டியல் ==
சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டைமணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4
சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டைமணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4
உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த நூல்கள்
{| class="wikitable sortable"
{| class="wikitable sortable"
!புத்தகத்தின் பெயர்
!நூல்
!பதிப்பித்த ஆண்டு
!வெளியான ஆண்டு
|-
|-
|நீலி இரட்டை மணிமாலை
|நீலி இரட்டை மணிமாலை
Line 444: Line 491:
|1942
|1942
|}
|}
== இவற்றையும் பார்க்க ==
* உ. வே. சாமிநாதையர் நூலகம்
* உ. வே. சா. விருது
* மீனாட்சிசுந்தரம் பிள்ளை
* சி. வை. தாமோதரம்பிள்ளை
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ''பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்'' - மயிலை சீனி.வேங்கடசாமி.
* ''பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்'' - மயிலை சீனி.வேங்கடசாமி.
* ''கற்பகவல்லி நாயகி மாலை'', மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், முதற்பதிப்பு 2003
* ''கற்பகவல்லி நாயகி மாலை'', மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், முதற்பதிப்பு 2003
*[https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec20/41562-17 உ.வே. சாமிநாதையரின் கும்பகோண வாழ்க்கை (1880 - 1903)]
*[https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0548_02.html உ.வே.சாமிநாதையர் என் சரித்திரம் இணையநூலகம் மதுரைத்திட்டம்]
*[https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0544_01.html உ.வே.சாமிநாதையர் என் சரித்திர இணைய நூலகம் மதுரைத்திட்டம் 1]
*[https://tamizharulagam.in/2021/07/07/uvswaminathaiyer/ உ. வே. சாமிநாதையர் | U. V. Swaminatha Iyer - தமிழர் உலகம்]
*[https://www.tamilvu.org/tdb/titles_cont/olaiccuvadi/html/swaminadha%20iyer.htm ஆதிச்சநல்லூர்]
*[http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5/ உ.வே.சாமிநாதையர் விருதுகள்]
*[https://www.hindutamil.in/news/opinion/columns/156123-.html ஆசிரியர் உ.வே.சா. | ஆசிரியர் உ.வே.சா. - hindutamil.in]
*[https://www.panippookkal.com/ithazh/archives/301    தமிழ்த்தாத்தா உ.வே.சா  : பனிப்பூக்கள்]
*[https://drive.google.com/file/d/1o5zzIOWDO_VSUFRloy922A7NeeC0ZB1B/view En_Sariththiram.pdf - Google Drive]
*[https://perumalmurugan.in/%E0%AE%89-%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/ உ.வே.சாமிநாதையர் சுவடிகள் சேகரிப்பு பெருமாள்முருகன்]
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp0l0M6&tag=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D,%20%E0%AE%89.%20%E0%AE%B5%E0%AF%87.%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF#book1/ தமிழ்ப்பா மஞ்சரி இணையநூலகம்]
*[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0005991 உ.வே.சா நூல்கள் உணர்த்தும் புலப்பாட்டு நெறி இணையநூலகம்]
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp0l0M6&tag=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D,%20%E0%AE%89.%20%E0%AE%B5%E0%AF%87.%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF#book1/ தமிழ்ப்பா மஞ்சரி உ.வே.சாமிநாதையர் இணையநூலகம்]
*உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் -ஆ.இரா.வேங்கடாசலபதி
*[https://kovaimani-tamilmanuscriptology.blogspot.com/2018/07/blog-post_37.html Tamilmanuscriptology-தமிழ்ச்சுவடியியல்: உ.வே.சா.வின் பதிப்புலக அறிமுகம்]
*[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0006176_%E0%AE%89%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf உ.வே.சா.நூல்களில் சொல்லும் சுவையும் ஆறு அழகப்பன்]
*[https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-june19/37428-2019-06-12-05-40-22 உ.வே.சாமிநாதையரும் வ.உ.சிதம்பரம் பிள்ளையும்]
*[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0005863_%E0%AE%89%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf உ.வே.சாமிநாதையர் பதிப்புப் பணியும் பன்முக மாட்சியும்]
*"உ.வே.சா.: பன்முக ஆளுமையின் பேருருவம்", பெருமாள் முருகன், 2008,
*[https://contrarianworld.blogspot.com/2020/10/blog-post.html உ.வே.சா போற்றுதலுக்குரியவரா அரவிந்தன் கண்ணையன்]
*
[[Category:உரையாசிரியர்கள்]]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 07:25, 24 February 2024

To read the article in English: U.V. Swaminatha Iyer. ‎

உ.வே.சாமிநாதையர்

உ.வே.சாமிநாதையர் (பிப்ரவரி 19, 1855 – ஏப்ரல் 28, 1942) உ.வே.சாமிநாத ஐயர். உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாத ஐயர். சுருக்கமாக உ.வே.சா. தமிழ் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் ஆய்வாளர், உரையாசிரியர். வாழ்க்கை வரலாற்றெழுத்திலும் முன்னோடியாகக் கருதப்படுபவர்.

ஏடுகளில் இருந்து பழந்தமிழ் நூல்களை கண்டெடுத்து ஒப்பிட்டு ஆராய்ந்து உரையெழுதி அச்சில் பதிப்பிக்கும் பதிப்பியக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கியது. பேரறிஞர்களின் முயற்சியால் தமிழிலக்கியத்தின் பெரும்பகுதி அச்சேறினாலும் ஒருபகுதி எப்போதைக்குமாக அழிந்தும் போயிற்று. அந்தப் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளாக உ.வே.சாமிநாதையர், சி.வை. தாமோதரம் பிள்ளை சௌரிப்பெருமாள் அரங்கன் போன்றவர்கள் கருதப்படுகிறார்கள். உ.வே.சாமிநாதையர் தன் வாழ்நாளின் இறுதியில் தன் வாழ்க்கையையும் தன் ஆசிரியர் வாழ்க்கையையும் ஏடுதேடி அலைந்த கதைகளையும் எளிய நவீன உரைநடையில் எழுதினார். அதன்வழியாக தமிழ் நவீன உரைநடை இலக்கியத்திலும் முன்னோடியின் இடத்தை அடைந்தார்.

பிறப்பு,கல்வி

சாமிநாதையர் பிப்ரவரி 19, 1855-அன்று தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் - சரசுவதி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் வெங்கடராமன். வேங்கடசுப்பையர் இசையுடன் கதைசொல்லும் ஹரிகதா கலாட்சேபம் என்னும் கலையை நிகழ்த்துபவர். உ.வே.சாமிநாதையர் தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் தந்தையிடமும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடமும் கற்றார். மேற்கொண்டு கற்க ஆவலிருந்தும் உத்தமதானபுரத்தில் அதற்கான வாய்ப்பின்றி இருந்தார். தமிழறிஞர் என எவர் வந்தாலும் ஏதேனும் கற்பிக்கும்படி கோரினார். அவ்வண்ணம் திருமணத்திற்கு வந்த ஒரு பண்டிதரிடம் கோர அவர் மறுத்துவிட்டார். துயருற்று நின்ற சாமிநாதையரிடம் ஒருவர் திருவாவடுதுறை ஆதீனவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் சென்று கற்கும்படி ஆலோசனை சொன்னார்.

உ.வே.சாமிநாதையர் வாழ்க்கை

கல்விகற்பதற்காக வெளியே தங்குவதற்குரிய பொருளியல் புலம் இல்லாத காரணத்தால் கும்பகோணத்திலேயே கல்வி கற்க உ.வே.சாமிநாதையரின் தந்தை ஏற்பாடு செய்தார். அரியலூர் சடகோப ஐயங்கார், திருவிளையாடற் புராண அறிஞர் குன்னம் சிதம்பரம் பிள்ளை, கம்ப ராமாயாணத்தில் தேர்ந்த கஸ்தூரி ஐயங்கார் போன்ற அறிஞர்களிடம் உ.வே.சாமிநாதையர் தமிழ் பயின்றார். சின்னப்பண்ணை விருத்தாசலம் ரெட்டியார் என்ற தமிழறிஞரிடம் இலக்கணங்களை கற்றார். இக்காலகட்டத்தில் நந்தனார் கீர்த்தனை எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார் அவர்களிடம் உ.வே.சாமிநாதையர் சிலகாலம் இசையும் பயின்றார்.

விருத்தாசலம் ரெட்டியார் சிபாரிசின் பேரில் தன் 17-ம் வயதில் 1870-ல் தந்தையுடன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாவடுதுறை சைவஆதீனத்திற்குச் சென்றார். அங்கே மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தன்னை அறிமுகம் செய்யும்போது அவர் சைவராகையால் தன் வைணவப்பெயரைக்கொண்டு தன்னை நிராகரித்துவிடக்கூடாது என எண்ணி சாமிநாதன் என்னும்பெயரை தன் பெயராகச் சொன்னார். அதன்பின் சாமிநாதையர் என்ற பெயரையே தன் பெயராகக் கொண்டிருந்தார்.

திருவாவடுதுறை ஆதீனத்தின் பொருளுதவியைக் கொண்டு ஐந்து ஆண்டுகள் ஆசிரியருடனேயே குருகுல முறைப்படி தங்கி தமிழ்கற்றார். திருநாகைக்காரோண புராணம், நைடதம், திருக்குடந்தைத் திரிபந்தாதி, பழமலை திரிபந்தாதி, மறைசையந்தாதி, மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் வினாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், அஷ்டப்பபிரந்தங்கள், சீர்காழிக்கோவை, கண்ணப்பநாயனார் புராணம் போன்ற நூல்களை அவரிடம் கற்றார். அக்கால முறைப்படி நன்னூல், பாட்டியல் இலக்கணம், சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றையே அவர் கற்றார்.

ஆதீனச்சூழலில் அங்கு வந்த பல அறிஞர்களுடன் விவாதித்துக் கற்கும் வாய்ப்பு உ.வே.சாமிநாதையருக்கு அமைந்தது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை, சந்திரசேகர கவிராஜபண்டிதா், திரிசிரபுரம் கோவிந்தபிள்ளை, ராவ்பகதூர் திரு.பட்டாபிராம் பிள்ளை போன்றவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள் என அவர் தன் வாழ்க்கைவரலாற்றில் குறிப்பிடுகிறார்..

உ.வே.சாமிநாதையர் சிலை அடித்தளம்

தனிவாழ்க்கை

உ.வே.சாமிநாதையர் தன் பதிமூன்றாவது வயதில் 1868-ல் மதுராம்பாளை மணந்தார். மகன் கல்யாணசுந்தர ஐயர்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிப்ரவரி 1, 1876-ல் மறைந்தார். உ.வே.சாமிநாதையர் குடும்பம் அப்போது பொருளியல் இடரில் இருந்தது. அவர் தந்தை வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று கதைசொல்லியும், செல்வந்தர்களிடம் கொடைபெற்றும் வாழ்ந்தார். உ.வே.சாமிநாதையரும் அவருடன் கதைசொல்லச் சென்றார். பணம்கேட்டு நிலப்பிரபுக்களுக்கு சீட்டுகவிகளும் எழுதினார். திருவாவடுதுறை ஆதீனம் கோரியதற்கு ஏற்ப உ.வே.சாமிநாதையர் தன் மனைவியுடன் ஆதீனத்திற்கே வந்து தங்கியிருந்தார். ஆதீனகர்த்தராகிய சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்டும் அங்கிருந்த மாணவர்களுக்கு பாடம் சொல்லியும் வாழ்ந்தார்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு நெருக்கமானவரும் கும்பகோணம் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியருமான தியாகராஜ செட்டியார் அடிக்கடி ஆதீனத்திற்கு வருகையில் அவருடன் சாமிநாதையருக்கு பழக்கம் ஏற்பட்டிருந்தது. மீனாட்சிசுந்தரம் பிள்ளை இருந்தகாலத்தில் சாமிநாதையர் ஆசிரியர் வேலைக்குச் செல்லலாம் என தியாகராஜ செட்டியார் பரிந்துரை செய்ய, சாமிநாதையரை பிரியமனமில்லாத மீனாட்சிசுந்தரம் பிள்ளை அதை மறுத்துவிட்டார். பிப்ரவரி 12, 1880-ல் தியாகராஜச் செட்டியார் கும்பகோணம் கல்லூரியில் தமது வேலையைத் விட்டுவிட முடிவுசெய்து அந்த வேலைக்கு உ.வே.சாமிநாதையரைப் பரிந்துரைத்த செய்தியை சுப்பிரமணிய தேசிகரிடம் கூறினார். தேசிகருக்கு சாமிநாதையரை அனுப்பும் எண்ணம் இருக்கவில்லை, உ.வே.சாமிநாதையரும் ஆதீனத்தை விட்டுச்செல்ல நினைக்கவில்லை. தியாகராஜ செட்டியார் வலியுறுத்தி தேசிகரிடம் அனுமதி பெற்றார். உ.வே.சாமிநாதையர் பிப்ரவரி 16, 1880 முதல் கும்பகோணம் கல்லூரி தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். 1880 முதல் 1903 வரை 23 ஆண்டுகள் உ.வே.சாமிநாதையர் கும்பகோணம் கல்லூரி தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

உ.வே.சாமிநாதையர் சிலை

சென்னை மாகாணக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த பூண்டி அரங்கநாத முதலியார் அழைப்பின் பேரில் 1903 முதல் 1919 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணியாற்றினார். சென்னையில் மாநிலக் கல்லூரிக்கு அருகே திருவல்லிக்கேணி திருவேட்டீசுவரன் பேட்டையில் மாதம் 20 ரூபாய்க்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். 1909-ம் ஆண்டு வாடகைக்குக் குடியிருந்த அந்த வீட்டையே விலைக்கு வாங்கினார். வீட்டின் அப்போதைய விலை ரூ. 4,400/-.தமக்குக் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியர் பணி கிடைக்கக் காரணமாகயிருந்த தியாகராச செட்டியாரின் நினைவாக அந்த வீட்டிற்குத் 'தியாகராச விலாசம்’ என்று பெயரிட்டார்.

சென்னையில் தொழுவூர் வேலாயுத முதலியார் புரசபாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியார், சோடசாவதானம் சுப்பராய செட்டியார், கதிர்வேற் கவிராயர், காஞ்சீபுரம் இராமசுவாமி நாயுடு, கோமளீசுவரன் பேட்டை இராசகோபாலபிள்ளை, சூளை அப்பன் செட்டியார், சூளை சோமசுந்தர நாயகர், திருமயிலை சண்முகம் பிள்ளை போன்றவர்கள் உ.வே.சாமிநாதையரின் தோழமையில் இருந்தனர்.

ராஜா அண்ணாமலை செட்டியார் சிதம்பரத்தில் தாம் தொடங்கிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் (இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) முதல்வராகப் பொறுப்பேற்க உ. வே. சாமிநாதையரை அணுகினார். சென்னை மாநிலக் கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்றிருந்த உ. வே. சாமிநாதையர் மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வராக 1924-ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார். சென்னை, அண்ணாமலைநகர், மைசூர், ஆந்திரா, காசி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலுள்ள பல்கலைத் தமிழ்க் குழுக்களில் உறுப்பினராயிருந்த உ.வே.சாமிநாதையர் சென்னைப் பல்கலைக்கழகப் புலவர் தேர்வுக்குழுத் தலைவர் பதவியிலும் பலஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

பதிப்புப்பணி

பாண்டி நாட்டில் செவந்திபுரத்தில் வேணுவனளிங்கத்தம்பிரான் கட்டிய மடாலயத்திற்குச் சுப்பிரமணிய தேசிக விலாசம் என்னும் மடாலயத்தைச் சிறப்பித்துப் புலவர்கள் பாடிய 86 பாடல்கள் இருந்தன. உ.வே.சா. எட்டு பாடல்கள் இயற்றி வேறு சில பாடல்களும் சேர்த்து திருநெல்வேலி முத்தமிழாகரமென்னும் அச்சுக்கூடத்தில் அப்பாடல் திரட்டை பதிப்பித்தார். அது முதன்முதலாக உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த நூல்.

சீவகசிந்தாமணி
உ.வே.சாமிநாதையர்

கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றுகையில் உ.வே.சாமிநாதையருக்கு அரியலூரிலிருந்து கும்பகோணத்திற்கு முன்சிபாக மாற்றம் பெற்று வந்த சேலம் இராமசாமி முதலியாரிடம் அறிமுகம் ஏற்பட்டது. அவர் உ.வே.சாமிநாதையருக்கு ஐம்பெருங்காப்பியங்களைப் பற்றிச் சொல்லி சீவகசிந்தாமணியின் ஓர் இலம்பகத்தையும் அளித்தார். அதை ஆராயத்தொடங்கிய உ.வே.சாமிநாதையர் அதுவரை அவர் வாழ்ந்து வந்த சிற்றிலக்கியங்கள் மற்றும் பக்தி இலக்கியங்களின் உலகில் இருந்து காப்பியங்களின் உலகுக்கும் சங்கத்தமிழ் படைப்புகளின் உலகுக்கும் சென்றார். சீவகசிந்தாமணியின் ஒருபகுதியை பிழைநோக்கி பதிப்பிக்க முயன்றார். சமண நண்பர்களின் உதவியுடன் சமணமதத்தின் கருத்துக்களையும், திருத்தக்கதேவரின் வாழ்க்கையையும் பற்றி அறிந்துகொண்டார். சமணக் காப்பியத்தை பதிப்பிப்பதை சைவர்கள் எதிர்த்தபோது தமிழ்ப்பணியே முதன்மையானது, மதநம்பிக்கை அல்ல என்று தன் முடிவை முன்வைத்தார்

சிந்தாமணி பதிப்பே சாமிநாதையரின் முதல் பதிப்பு முயற்சி. ஏற்கனவே பவர் என்னும் ஆங்கிலேயர் பதிப்பித்த சிந்தாமணி நாமகளிலம்பகம் அச்சுநூல் இருந்தது. தியாகராசசெட்டியார் தம்மிடமிருந்த பிரதியை அனுப்பி வைத்தார். சுப்பிரமணிய தேசிகர் திருநெல்வேலியிலிருந்து சில ஏட்டுப்பிரதிகளை வருவித்துக் கொடுத்தார். பல பிரதிகளையும் ஒப்பிட்டு, பாடபேதங்களைக் குறித்து நூலை செம்மைசெய்தார். சிந்தாமணியை முழுமையாக அச்சிடும்பொருட்டு சுவடிகளை மேலும் தேடி விருஷபதாச முதலியாரிடம் சுவடிகளைப் பெற்றார். அவ்வாறாக சிந்தாமணியின் 23 நகல்களை உ.வே.சா. சேர்த்தார்

உ.வே.சாமிநாதையர்

அன்றைய பதிப்புமுறை என்பது பதிப்பிக்கவிருக்கும் நூலை வாங்குவதாக செல்வந்தர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு நூலை அச்சிடுவது. உ.வே.சாமிநாதையர் தமிழார்வம் கொண்ட செல்வந்தர்களைச் சந்தித்து ஆதரவு பெற்று நூலை அச்சிட்டார். சோடசவதானம் சுப்பராய செட்டியாரும், ராஜ பாலாச்சாரியாரும் வேலுச்சாமிப் பிள்ளையும் அதில் உதவினர். அச்சிடுவதற்காகச் சென்னை சென்று ராமசாமி முதலியார் இல்லத்தில் தங்கியிருந்தார். சென்னைக்கும் கும்பகோணத்திற்குமாக பயணம் செய்து அச்சுப்பணியை நிகழ்த்தினார்.

உ.வே.சாமிநாதையர் சீவகசிந்தாமணியை விரிவான முன்னுரை, நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, கதைச்சுருக்கம் ஆகியவற்றுடன் அக்டோபர் 1887-ல் பதிப்பித்தார். தமிழ்ப்பதிப்பியக்கத்தில் முன்னோடியான முயற்சியாக அது அமைந்தது.

(பார்க்க சீவகசிந்தாமணி, உ.வே.சா.பதிப்பு)

பத்துப்பாட்டு

சீவகசிந்தாமணியை பதிப்பிக்கும்போதே பத்துப்பாட்டு சுவடிகளையும் உ.வே.சாமிநாதையர் சேர்த்திருந்தார். 1889-ம் வருடம் உ.வே.சா.வின் 34-வது வயதில் பத்துப்பாட்டும் பதிப்பிக்கப்பட்டது. இதில் முகவுரையும், நூலின்மூலம் நச்சினார்க்கினியர் உரை, உரைச்சிறப்பு, பாயிரம், அரும்பதவிளக்கம் அருந்தொடர்விளக்கம், பிழைதிருத்தம் என்பனவற்றை உ.வே.சா. சேர்த்திருந்தார். சீவக சிந்தாமணி பதிப்பிலும் பத்துப்பாட்டுப் பதிப்பிலும் திருமானூர் கிருஷ்ணையர் சென்னையில் தங்கி மேற்பார்வையிட்டு உ.வே.சாமிநாதையருக்கு உதவினார்

உ.வே.சாமிநாதையர்

திரு‌கச்சியப்ப முனிவர் இயற்றிய ஆநந்தருத்திரேசர் வண்டு விடுதூது, மாயூரம் ராமையர் இயற்றிய மயிலையந்தாதி முதலிய நூல்களையும் உ.வே.சா. பதிப்பித்து வெளியிட்டார்கள்.

சிலப்பதிகாரம்

சேலம் இராமசாமி முதலியார் சிலப்பதிகாரம் மூலமும் உரையும் அடங்கிய நூல் ஒன்றை உ.வே.சாமிநாதையரிடம் கொடுத்தார். ஏற்கனவே தியாகராச செட்டியார் கொடுத்த நூலும் உ.வே.சாமிநாதையரிடம் இருந்தது. சௌரிப்பெருமாள் அரங்கன் சிலப்பதிகாரத்தை பதிப்பித்திருந்தார். அடியார்க்கு நல்லார் உரையுடன் முழுமையாக சிலப்பதிகாரத்தை அச்சிட உ.வே.சாமிநாதையர் முயன்றார். சேலம், திருநெல்வேலி திருவைகுண்டம், பெருங்குளம், ஆறுமுகமங்கலம், நாங்குநேரி, களக்காடு, குன்றக்குடி, மிதிலைப்பட்டி போன்ற ஊர்களுக்குச் சென்று ஏட்டுச்சுவடிகளைத் தேடினார். அரசர்கள், நாடுகள், ஊர்கள், மலைகள், ஆறுகள், பொய்கைகள், தெய்வங்கள், புலவர்கள், ஆகிய பெயர்களுக்குத் தனித்தனியாக அகராதியும் அடியார்க்கு நல்லார் உரையில் கண்ட நூல்களுக்கு அகராதியும், தொகையகராதியும், விளங்கா மேற்கோளகராதியும், அபிதான விளக்கமும் எழுதினார். ஜூன் 1891-ல் கோடை விடுமுறையில் சென்னை சென்று சிலப்பதிகாரத்தை அச்சிட்டார்

புறநானூறு

புறநானூறு பதிப்பிக்கும் முயற்சியை உ‌.வே.சாமிநாதையர் தொடங்கியபோது கும்பகோணம் கல்லூரியில் சாித்திர ஆசிரியர் வைத்திருந்த பைபிளைக் கண்டு அதில் ஒரே மாதிரியான கருத்துள்ள பகுதிகளை ஆங்காங்கே சுட்டிக்காட்டிப் பதிப்பித்திருப்பதை கவனித்து புறநானூறையும் அதைப்போல பதிப்பிக்க முடிவுசெய்தார். செப்டம்பர் 1894-ல் புறநானூறு நூல் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. உ.வே.சாமிநாதையர் திப்பித்த எட்டுத்தொகை நூல்களுள் இதுவே முதலானது. இதன் முகவுரையில் எட்டுத்தொகை வரலாற்றையும், அகம் புறம் என்னும் இருவகைப் பொருளின் இயல்பையும் விளக்கி எழுதினார்

மணிமேகலை
உ.வே.சாமிநாதையர் ஓவியம்

மணிமேகலையை முன்னரே 1894ல் திருமயிலை சண்முகம் பிள்ளை மூலம் மட்டுமாக பதிப்பித்திருந்தார். உரையுடன் அதைப் பதிப்பிக்கும்பொருட்டு உ.வே.சா புத்தரைப் பற்றி படித்தார். ஜூன் 5, 1896-ல் மணிமேகலையை அச்சுக்குக் கொடுத்தார். ஜூலை 1898-ல் மணிமேகலை மூலமும், அரும்பதவுரையும் வெளியாகியது. முகவுரை, புத்தசரித்திரம், பெளத்ததருமம், பெளத்தசங்கம் மணிமேகலைக் கதைச்சுருக்கம் ஆகியவை இணைக்கப்பட்டிருந்தன. அந்நூலில் 59 தமிழ் நூல்களிலிருந்தும் 29 வடமொழிநூல்களிலிருந்தும் குறிப்புரையில் மேற்கோள்கள் காட்டியிருந்தார். .

பிறநூல்கள்

உ.வே.சாமிநாதையர் சீவகசிந்தாமணிக்குப்பின் பதிப்பித்த நூல் திருக்குடந்தை புராணம். சிந்தாமணி ஆராய்ச்சியோடு திருக்குடந்தை புராணப் பதிப்பும் நடைபெற்றுவந்தது. புறநாநூறுக்கு முன் புறப்பொருள் வெண்பா மாலையை பதிப்பித்தார். 1903-ம் ஆண்டில் ஐங்குறுநூறு நூலையும், 1904-ல் பதிற்றுப்பத்து நூலையும், 1918-ம் ஆண்டில் பரிபாடலையும் சாமிநாதையர் பதிப்பித்து வெளியிட்டார்.

கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் எழுதிய சிற்றிலக்கியங்களை திருப்பனந்தாள் காசிமடம் சுவாமிநாத தேசிகர் கோரிக்கையின்படி பதிப்பித்தார்.

இலக்கியப்பணி

உ.வே.சாமிநாதையரின் முதல் படைப்பு. உ.வே.சாமிநாதையர் பழைய செய்யுள் மரபைச் சேர்ந்த பிரபந்தங்களையும் தனிப்பாடல்களையும் இயற்றியிருக்கிறார். பதிப்பியக்கத்தின் தொடக்கத்தில் மிகக்கடுமையான சொற்றொடர்கள் கொண்ட மொழிநடை அவரிடமிருந்தது. மணிமேகலை உரை முதல் நடை எளிதாகத் தொடங்கியது. இறுதிக்காலத்தில் எழுதிய தன்வரலாறு, ஏடுதேடிய அனுபவங்கள் போன்றவை நவீன உரைநடையில் அமைந்திருந்தன. அன்றைய முதன்மையான புனைவெழுத்தாளர்களின் நடைக்கு நிகரான சொற்சிக்கனமும், புதிய சொற்றொடரமைப்பும் கொண்டிருந்தன. அதற்கு உ.வெ.சாமிநாதையர் தொடர்ந்து ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டிருந்தது முதன்மைக் காரணம் என குறிப்பிடப்படுகிறது.

என் சரித்திரம்

உ.வே.சாமிநாதையரின் உரைநடைநூல்கள் இரண்டுவகையில் முதன்மையான இலக்கியப்படைப்புகளாக கருதப்படுகின்றன. உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை என் சரித்திரம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950-ம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது. இந்நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டு தஞ்சாவூர் பகுதி கிராமத்து வாழ்க்கையை, குடும்ப அமைப்பை, அக்காலத்து கல்விமுறையை மிகநுட்பமாக விவரிக்கிறது. பலபகுதிகள் பெரும்புனைவுக்கு நிகரான நுட்பம் கொண்டவை. தன் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்றி உ.வே.சாமிநாதையர் எழுதிய வாழ்க்கைவரலாறு ஓர் ஆளுமையை சித்தரிப்பதில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படைப்பு. இலக்கிய விமர்சகரான க.நா.சுப்ரமணியம் தமிழில் நிகழ்ந்த இலக்கியச் சாதனை என அவ்விரு நூல்களையும் குறிப்பிடுகிறார். உ.வே.சாமிநாதையர் அவர் ஏடுதேடி அலைந்த அனுபவங்களை எழுதிய நினைவுமஞ்சரி என்னும் நூல் தமிழின் தலைசிறந்த சிறுகதைகளுக்கு நிகரான நிகழ்வுக்குறிப்புகள் அடங்கியது. தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நடைச்சித்திரங்கள் அவை என விமர்சகர் வெங்கட் சாமிநாதன் கருதுகிறார்.

நவீன இலக்கியத்திலும் ஆழமான ரசனை கொண்டிருந்த உ.வே.சாமிநாதையர் பல நவீன நூல்களுக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார். சித்தி ஜுனைதா பேகம் எழுதிய நாவலுக்கு அவர் அளித்த முன்னுரை அவர் புதிய எழுத்துக்களையும் கவனித்தார் என்பதற்கான சான்று.

பேச்சுத்திறன்

உ.வே.சாமிநாதையர் நகைச்சுவையுடனும் செறிவாகவும் மேடையில் பேசுபவர் என அறியப்பட்டிருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா. ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது.

உ.வே.சாமிநாதையர்

விருதுகள்

  • 1906-ல் ஆங்கில அரசு வழங்கிய ஆண்டில் மகாமகோபத்யாயர் பட்டம் .
  • 1917-ல் காசியிலுள்ள 'பாரத தர்ம மகா மண்டலம்’ வழங்கிய 'திராவிட வித்யாபூஷணம்’
  • 1925-ல் மதுரைத் தமிழ்ச் சங்க விழாவில் காஞ்சி காமகோடிபீடத் தலைவர் 'தாஷிணாத்யகலாநிதி’ பட்டம்..
  • 1932-ல் சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் (டி.லிட்) பட்டம் (ஆகஸ்ட் 3, 1932)

மறைவு

  • உ.வே.சாமிநாதையர் ஏப்ரல் 28, 1942-ல் மறைந்தார்.
உ.வே.சாமிநாதையர்

நினைவுகள், வாழ்க்கை வரலாறுகள்

நினைவுச்சின்னங்கள்
  • இந்திய அரசு, பிப்ரவரி 18, 2006 அன்று நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
  • உத்தமதானபுரத்தில் உ.வே.சா. வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.
  • 1942-ல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
  • உ.வே.சாமிநாதையர் பணியாற்றிய மாநிலக் கல்லூரி வாயிலில் மார்ச் 7, 1948-ல் உ.வே.சா. வின் உருவச்சிலை நிறுவப்பட்டது
  • சென்னையில் உ.வே.சா நூலகம் 1943-ல் நிறுவப்பட்டது
  • தமிழக அரசின் உ.வே.சா விருது 2012 முதல் வழங்கப்படுகிறது
நூல்கள்
  • தமிழ்த் தாத்தா (டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள் வாழ்வும் இலக்கியப் பணியும்), கி. வா. ஜகந்நாதன், 1983, சாகித்திய அக்காதெமி,
  • "என் ஆசிரியப்பிரான்", கி. வா. ஜகந்நாதன், 1983
  • தமிழ்த்தாத்தா, பேராசிரியர். வே. இரா.மாதவன்

இரு கவிஞர்களின் வாழ்த்துக்கள்

உ.வே.சாமிநாதையர் அஞ்சல்தலை

உ.வே.சாமிநாதையர் இந்தியாவின் இரண்டு பெரும் கவிஞர்களின் வாழ்த்துக்களைப் பெற்றவர்

சி.சுப்ரமணிய பாரதியார்

மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்ற உ.வே.சாமிநாதையருக்கு அவர் பணியாற்றிய சென்னை மாநிலக் கல்லூரியில் 1906-ல் நடந்த பாராட்டுக் கூட்டத்திற்கு சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியர் பொறுப்பில் இருந்த சி.சுப்ரமணிய பாரதியார் வந்து மூன்று செய்யுள்களை வாழ்த்துப் பாடலாக அளித்தார்.

மகாமகோபாத்யாயர் வாழ்த்து

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

செம்பரிதி ஒளிபெற்றான் பைந்நறவு சுவைபெற்றுத் திகழ்ந்தது ஆங்கண்

உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று எவரேகொல் உவத்தல் செய்வார்?

கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநாதப்புலவன் குறைவில் சீர்த்தி

பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல் பேருவகை படைக்கின்றீரே?

உ.வே.சா கல்லூரியில்

அன்னியர்கள் தமிழ்ச்செவ்வி யறியாதார் இன்றெம்மை ஆள்வோ ரேனும்

பன்னியர்சீர் மகாமகோ பாத்தியாயப்பதவி பரிவின் ஈந்து

பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநாதன் தனக்குப் புகழ்செய் வாரேல்,

முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின் இவன்பெருமை மொழிய லாமோ?

நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடிஇன்பவகை நித்தம் துய்க்கும்

கதியறியோம் என்றுமனம் வருந்தற்க; குடந்தைநகர்க் கலைஞர் கோவே!

பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில்

துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்கு வாயே.

ரவீந்த்திரநாத தாகூர்

ஏப்ரல் 1, 1919-அன்று சென்னைக்கு வந்த தாகூர் உ.வே.சாமிநாதையர் இல்லத்திற்கே வந்து அவர் பதிப்பித்த நூல்களைப் பார்வையிட்டுப் பாராட்டி ஒரு கவிதை எழுதினார்.

தேசிகோத்தம தேமாகரிப்ரணாம்

(வங்காளி மூலம்)

ஆதிஜூகேர் ஆந்தாரே தாலபத்ரே ச்சிலோ

த்ராவிட தேசேர் புராதன கீர்த்தி,

ஸேஇ மஹத்நிதி, ஹே தேசிகோத்தம

தோமார் த்வாரா நா கி பாஹிர்ஹயில்?

ஸே காலேர் அகஸ்த்யேர் மதஏஸே தோமார்மாகே

ஸிம்ஹாஸனே ரேகே திலே நாகிதுமிஸ ஸம்மானே?

ஆர் பாஞ்ச மஹா காவ்யேர் மாஜ்ஜே

சிந்தாமணி, நூபுரகாதா, மணிமேகலா இத்யாதி

ஸம்சோதன கரே தாஹார் பத ஜூகலே

ஸமர்ப்பணகரிலே நா கிதுமி?

ஸங்கே ஸங்கே ஸங்ககால ஸாஹித்யகே

ஜ்யோத்ஸ்னாய் ஃபுடித நித்ய மல்லிகார்மத

சோபித கரிலே நாகிதுமி? தேமாகரிப்ரணாம்

(தமிழாக்கம் )

ஆதியுகத்து இருளில் பனையோலைச் சுவடிகளில்

இருந்தது திராவிட நாட்டின் புராதன கீர்த்தி -

அந்தப் பெருநிதி, பேராசானேஉன்னால் அன்றோ வெளிப்பட்டது?

அந்தக் காலத்து அகஸ்தியனைப் போல நீயன்றோ வந்து

உன் அன்னையினைச் சிம்மாசனத்தில் பெரு மதிப்புடன் வீற்றிருக்க வைத்தாய்?

அம்மட்டோ ஐம்பெருங் காப்பியங்களுள்

சிந்தாமணி, சிலப்பதிகாரம் மணிமேகலை முதலானவற்றை

அந்த அன்னையின் இணையடியில்

சமர்ப்பித்தவன் நீ அன்றோ?

அவற்றுடன் சங்க இலக்கியத்தையும்

நிலவில் மலர்ந்த முல்லை என

ஒளிர வைத்தவனும் நீஅன்றோ? உன்னை வணங்கு கிறேன்."

(தமிழாக்கம் செய்தவர், த.நா.சேனாபதி)

உ.வே.சாமிநாதையர் வாழ்க்கை ஆண்டு வரிசை

பார்க்க உ.வே.சாமிநாதையர் வாழ்க்கை ஆண்டுவரிசை

இலக்கிய இடம்

உ.வே.சாமிநாதையர் தமிழ் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, மழவை மகாலிங்கையர், சௌரிப்பெருமாள் அரங்கன், வித்வான் தாண்டவராய முதலியார், களத்தூர் வேதகிரி முதலியார், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், திருவேங்கட முதலியார், ராஜகோபாலப் பிள்ளை என அவருக்கு சமகாலத்திலும் முன்பும் பல பதிப்பாளர்கள் இருந்தாலும் தமிழ் பதிப்பியக்கத்தின் தலைமகனாக உ.வே.சாமிநாதையர் கருதப்படுகிறார். அவர் முதன்முதலாக பதிப்பித்த பல நூல்கள் தமிழிலக்கியத்திற்கும் தமிழ்பண்பாட்டுக்குமே அடிப்படையானவை என்பது முதன்மைக் காரணம்.

அத்துடன் உ.வே.சாமிநாதையர் முற்றிலும் அறிவியல் முறைமைப்படி பிழைநோக்கி, பாடவேறுபாட்டுப் பட்டியல்களுடன், விரிவான உரைகள் மற்றும் ஆய்வுக் குறிப்புகளுடன் தன்நூல்களை பதிப்பித்தார். தமிழின் முதன்மைநூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி ஆகியவற்றை அச்சேற்றியவர் என்பதனால் தமிழிலக்கியத்தின் மறுபிறப்புக்கு காரணமானவர்.

நவீனத் தமிழ் உரைநடை உருவாகி வந்த காலத்தில் எழுதிய உ.வே.சாமிநாதையரின் பங்களிப்பு வாழ்க்கை வரலாற்றெழுத்து மற்றும் நடைச்சித்திர எழுத்து ஆகியவற்றில் முன்னோடியானது. தமிழின் உரைநடையில் அவருடைய தமிழ்நடையின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. நவீனத்தமிழ் விமர்சகர்களான க.நா.சுப்ரமணியம், வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி ஆகியோர் அதை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நூல்கள்

சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டைமணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4

நூல் வெளியான ஆண்டு
நீலி இரட்டை மணிமாலை 1874
வேணுவனலிங்க விலாசச் சிறப்பு 1878
திருக்குடந்தைப் புராணம் 1883
மத்தியார்ச்சுன மான்மியம் 1885
சீவக சிந்தாமணி 1887
கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது 1888
திருமயிலைத் திரிபந்தாதி 1888
பத்துப் பாட்டு மூலமும் உரையும் 1889
தண்டபாணி விருத்தம் 1891
சிலப்பதிகாரம் 1892
திருப்பெருந்துறைப் புராணம் 1892
புறநானூறு 1894
புறப்பொருள் வெண்பா மாலை 1895
புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம் 1898
மணிமேகலை 1898
மணிமேகலைக் கதைச் சுருக்கம் 1898
ஐங்குறுநூறு 1903
சீகாழிக் கோவை 1903
திருவாவடுதுறைக் கோவை 1903
வீரவனப் புராணம் 1903
சூரைமாநகர்ப் புராணம் 1904
திருக்காளத்தி நாதருலா 1904
திருப்பூவண நாதருலா 1904
பதிற்றுப் பத்து 1904
திருவாரூர்த் தியாகராச லீலை 1905
திருவாரூருலா 1905
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் 1906
தனியூர்ப் புராணம் 1907
தேவையுலா 1907
மண்ணிப்படிக்கரைப் புராணம் 1907
திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் 1908
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு 1910
திருக்காளத்திப் புராணம் 1912
திருத்தணிகைத் திருவிருத்தம் 1914
பரிபாடல் 1918
உதயணன் சரித்திரச் சுருக்கம் 1924
பெருங்கதை 1924
நன்னூல் சங்கர நமச்சிவாயருரை 1925
நன்னூல் மயிலை நாதருரை 1925
சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் 1928
தக்கயாகப் பரணி 1930
தமிழ்விடு தூது 1930
பத்துப் பாட்டு மூலம் 1931
மதுரைச் சொக்கநாதர் உலா 1931
கடம்பர் கோயிலுலா 1932
களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை 1932
சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் 1932
பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது 1932
பழனி பிள்ளைத் தமிழ் 1932
மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை 1932
வலிவல மும்மணிக் கோவை 1932
சங்கரலிங்க உலா 1933
திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா 1933
பாசவதைப் பரணி 1933
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 1 1933
சங்கர நயினார் கோயிலந்தாதி 1934
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 2 1934
விளத்தொட்டிப் புராணம் 1934
ஆற்றூர்ப் புராணம் 1935
உதயண குமார காவியம் 1935
கலைசைக் கோவை 1935
திரு இலஞ்சி முருகன் உலா 1935
பழமலைக் கோவை 1935
பழனி இரட்டைமணி மாலை 1935
இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை 1936
கனம் கிருஷ்ணயைர் 1936
கோபால கிருஷ்ண பாரதியார் 1936
திருநீலகண்டனார் சரித்திரம் 1936
திருமயிலை யமக அந்தாதி 1936
திருவள்ளுவரும் திருக்குறளும் 1936
நான் கண்டதும் கேட்டதும் 1936
புதியதும் பழையதும் 1936
புறநானூறு மூலம் 1936
பெருங்கதை மூலம் 1936
மகாவைத்தியநாதையைர் 1936
மான் விடு தூது 1936
குறுந்தொகை 1937
சிராமலைக் கோவை 1937
தமிழ்நெறி விளக்கம் 1937
திருவாரூர்க் கோவை 1937
நல்லுரைக் கோவை பகுதி 1 1937
நல்லுரைக் கோவை பகுதி 2 1937
நினைவு மஞ்சரி - பகுதி 1 1937
அழகர் கிள்ளை விடு தூது 1938
சிவசிவ வெண்பா 1938
திருக்கழுக்குன்றத்துலா 1938
திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை 1938
திருமலையாண்டவர் குறவஞ்சி 1938
நல்லுரைக் கோவை பகுதி 3 1938
குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு 1939
தணிகாசல புராணம் 1939
நல்லுரைக் கோவை பகுதி 4 1939
புகையிலை விடு தூது 1939
மகரநெடுங் குழைக்காதர் பாமாலை 1939
கபாலீசுவரர் பஞ்சரத்தினம் 1940
திருக்குற்றாலச் சிலேடை வெண்பா 1940
வில்லைப் புராணம் 1940
செவ்வைச் சூடுவார் பாகவதம் 1941
நினைவு மஞ்சரி - பகுதி 2 1942
வித்துவான் தியாகராச செட்டியார் 1942

உசாத்துணை


✅Finalised Page