இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1971
From Tamil Wiki
இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்
இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1971
மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
---|---|---|---|
ஜனவரி | பிள்ளையிட்ட தீ | ஶ்ரீரங்கம் நரசிம்மன் | கல்கி |
பிப்ரவரி | கனவுக் கதை | சார்வாகன் | ஞானரதம் |
மார்ச் | இங்கே சில ஹிப்பிகள் | அசோக்ராஜா | தினமணி கதிர் |
ஏப்ரல் | வீணை | நா. அனந்தகிருஷ்ணன் | ஆனந்த விகடன் |
மே | அரும்பு உலகம் | ஆர்.சூடாமணி | கலைமகள் |
ஜூன் | மன்னிப்பா! கேட்கணுமா? நானா? எதற்கு? | கரிச்சான் குஞ்சு | குமுதம் |
ஜூலை | கோணல் வடிவங்கள் | ஆர். இராசேந்திரசோழன் | கசடதபற |
ஆகஸ்ட் | பாயாசம் | தி. ஜானகிராமன் | கணையாழி |
செப்டம்பர் | உரிமைத் தாகம் | பூமணி | தாமரை |
அக்டோபர் | காத்திருத்தல் | அசோகமித்திரன் | தீபம் |
நவம்பர் | நேர்மை | டி.என். சுகி சுப்பிரமணியன் | கலைமகள் |
டிசம்பர் | அம்மா ஒரு கொலை செய்தாள் | அம்பை | கசடதபற |
1971-ம் ஆண்டின் சிறந்த சிறுகதை
1971-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, சார்வாகன் எழுதிய ‘கனவுக்கதை’ தேர்ந்தெடுக்கப்பட்டது. சுந்தர ராமசாமி இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை ஐராவதம் தேர்ந்தெடுத்தார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
30-Jan-2023, 05:44:04 IST