ஆற்றுப்படை: Difference between revisions
(Created page with "'''ஆற்றுப்படை''' நூலுக்குத் தொல்காப்பியம் இலக்கணம் கூறுகிறது. சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஆற்றுப்படைப் பாடல்கள் உள்ளன. சங்கநூல் பத்துப்பாட்டில் ஐந்து பாட...") |
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries) |
||
Line 27: | Line 27: | ||
[[பகுப்பு:ஆற்றுப்படைகள்]] | [[பகுப்பு:ஆற்றுப்படைகள்]] | ||
[[ | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{being created}} | {{being created}} |
Revision as of 22:09, 10 February 2022
ஆற்றுப்படை நூலுக்குத் தொல்காப்பியம் இலக்கணம் கூறுகிறது. சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஆற்றுப்படைப் பாடல்கள் உள்ளன. சங்கநூல் பத்துப்பாட்டில் ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படை நூல்கள்.
பிற்காலத்தில் ஆற்றுப்படை நூலைத் தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கலாயினர். இதனைப் பாட்டியல் வகைகளுள் ஒன்றாக்கினர். ஆற்றுப்படுத்துதல் என்பது வழிப்படுத்துதல் என்னும் பொருள் உடையது. விறலியர், பாணர், கூத்தர், பொருநர் என்போர் தமது வறுமையைப் போக்க வள்ளல்களிடம் சென்று பொருள் பெறுவது அக்கால வழக்கம். அவ்வாறு பரிசு பெற்றுச் செல்லும் மேற்கூறிய நால்வகைப் பிரிவினருள் ஒருவன், பரிசு பெறச் செல்லும் இன்னொருவனை வழிப்படுத்தும் முறையில் அமைவதே ஆற்றுப்படை ஆகும். அகவற்பாக்களாக அமையும் இப் பாடல்கள் தலைவனின் புகழ், கொடை, கொற்றம் ஆகியவை பற்றி எடுத்துக் கூறுவதாக அமையும்.[1].
- ஆற்றுப்படைப் பாடல்கள்
- ஆற்றுப்படைப் பாட்டுகள்
குறிப்புகள்
- ↑ முத்துவீரியம், பாடல் 113
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம் Template:Webarchive
இவற்றையும் பார்க்கவும்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.