being created

மணிக்கொடி (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 26: Line 26:


== இரண்டாம் காலகட்டம் ==
== இரண்டாம் காலகட்டம் ==
இரண்டாவது காலகட்டத்தில் ( மார்ச் , 1935 முதல் 1939வரை ) பி.எஸ் . ராமையா ஆசிரியராகவும் , டி.எஸ்.சொக்கலிங்கம் மற்றும் கி.ராமச்சந்திரன் உதவி ஆசிரியர்களாகவும் இருந்தனர் . இதழ் வெளியானது . " பதினெட்டு மாத காலம் வாரப் பதிப்பாக வெளிவந்து மாத இதழாக வெளிவந்தது . உடன் ' காந்தி ' என்னும் இணைப்பிதழும் கொண்டிருக்கிற மணிக்கொடி இன்று முதல் , இலட்சியத்தில் தன்னுடன் வெளிவருகிறது . புதிய கொடி உருவத்திலும் , உள்ளடக்கத்திலும் ஒன்றுபட்ட காந்தியையும் இணைத்துக் கொண்டு , மாதமிருமுறை புதுஜென்மம் எடுத்திருக்கிறது ” என்ற அறிக்கையோடு மணிக்கொடியின் இரண்டாவது காலகட்டத்து முதல் இதழ் வெளிவந்தது
[[பி.எஸ். ராமையா]] மணிக்கொடி இதழ்பற்றி அறிந்து அதன் நிறுவனர் சீனிவாசனைச் சந்தித்தார். அவர், ராமையாவை விளம்பர சேகரிப்பாளராகப் பணியமர்த்தினார். அப்போது மணிக்கொடி சமூக, அரசியல் இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. அவ்வப்போது அதில் சிறுகதைகளும் வெளிவந்தன. ராமையா அதில் பல சிறுகதைகளையும், மொழிபெயர்ப்புக் கதைகளையும் எழுதினார்.  
[[பி.எஸ். ராமையா]] மணிக்கொடி இதழ்பற்றி அறிந்து அதன் நிறுவனர் சீனிவாசனைச் சந்தித்தார். அவர், ராமையாவை விளம்பர சேகரிப்பாளராகப் பணியமர்த்தினார். அப்போது மணிக்கொடி சமூக, அரசியல் இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. அவ்வப்போது அதில் சிறுகதைகளும் வெளிவந்தன. ராமையா அதில் பல சிறுகதைகளையும், மொழிபெயர்ப்புக் கதைகளையும் எழுதினார்.  


Line 41: Line 44:


== மூன்றாம் காலகட்டம் ==
== மூன்றாம் காலகட்டம் ==
மூன்றாவது காலகட்டத்தில் ( பிப்ரவரி , 1939 ) ப.ராமசாமி ஆசிரியராக இருந்தார் .
இதழின் முதல் காலகட்டத்தில் ( செப்டம்பர் 1933 தொடக்கம் -1935 வரை ) கே . சீனிவாசன் , வெளியீட்டாளராக இருந்தார் . நிர்வாக ஆசிரியராக வ.ரா. பணியாற்றினார் . உதவி ஆசிரியர்களாக டி.எஸ்.சொக்கலிங்கம் , பி.எஸ் . ராமையா ஆகியோர் பணியாற்றினர் . இக்காலகட்டத்தில் இதழ் வாரமொரு இதழாக , ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவந்தது .


1938 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதத்தில் ப. ராமஸ்வாமி ( ப.ரா. ) அதன் ஆசிரியரானார். தமிழில் சிறு பத்திரிகைகள்
1938 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதத்தில் ப. ராமஸ்வாமி ( ப.ரா. ) அதன் ஆசிரியரானார். தமிழில் சிறு பத்திரிகைகள்
Line 49: Line 55:


மணிக்கொடி இதழ், ஜூன் 1939-உடன் நிறுத்தப்பட்டது. பிறகு நின்றுவிட்டது. நவயுகப் பிரசுராலயம் லிமிடெட் நிறுவனத்தினர் புத்தகப் பிரசுரத்தில் மட்டுமே கருத்துச் செலுத்தலாயினர்.
மணிக்கொடி இதழ், ஜூன் 1939-உடன் நிறுத்தப்பட்டது. பிறகு நின்றுவிட்டது. நவயுகப் பிரசுராலயம் லிமிடெட் நிறுவனத்தினர் புத்தகப் பிரசுரத்தில் மட்டுமே கருத்துச் செலுத்தலாயினர்.
== நான்காவது காலகட்டத்தில்  ==
( 1950 ) பி.எஸ்.ராமையா ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார் . ஆனால் , இதழ் பொருளாதாரப் பிரச்சனைகளால் , நான்கே இதழ்களோடு நின்று போனது .
== next ==
நா . பார்த்தசாரதியின் வலியுறுத்தலைத் தொடர்ந்து தனது மணிக்கொடி கால அனுபவங்களை தொடராக ‘ தீபம் ' இதழில் எழுதி வந்தார் ராமையா . பின்னர் அவை தொகுக்கப்பட்டு " மணிக்கொடி காலம் " என்ற பெயரில் நூலாக வெளியானது . 1982 ல் அந்நூலுக்கு " சாகித்ய அகாதமி " விருது கிடைத்தது .


== பங்களிப்பு ==
== பங்களிப்பு ==
கு.ப.ரா. ந.பிச்சமூர்த்தி , புதுமைப்பித்தன் , மௌனி , பி.எஸ்.ராமையா , ந.சிதம்பர சுப்பிரமணியன் , சிட்டி , சி.சு.செல்லப்பா போன்றோர் ' மணிக்கொடி ' எழுத்தாளர்கள் என்று போற்றப்படுகின்றனர் . ராமையா இவ்விதழில் நாற்பது கதைகள் எழுதியுள்ளார் . புதுமைப்பித்தனின் சிறந்த 34 கதைகள் இவ்விதழில் வெளியாகியுள்ளன . சங்கு சுப்பிரமணியன் லா.ச.ராமாமிர்தம் , தி.ஜ.ரங்கநாதன் , க.நா.சுப்பிரமணியன் , பி.எம்.கண்ணன் , எம்.வி.வெங்கட்ராம் , ஆர்.சண்முகசுந்தரம் , சபரிராஜன் , பி.எஸ்.சங்கரன் உள்ளிட்ட இவ்விதழுக்குப் பங்களித்த பலர் , ' மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் ' என்று போற்றப்படுகின்றனர் .
மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று மூன்று பிரிவாகப் பிரித்துப் பார்க்கலாம். மணிக்கொடி [[சீனிவாசன்]], [[பி.எஸ். ராமையா]], [[புதுமைப்பித்தன்]], [[கு.ப. ராஜகோபாலன்|கு.ப. ரா.]], இவர்கள் ஒரு பிரிவு. [[க.நா.சுப்ரமணியம்|க.நா.சு.]], [[சி.சு. செல்லப்பா]], [[தி.ஜானகிராமன்|தி.ஜா.]], [[சிட்டி]], [[மௌனி]], [[லா.ச. ராமாமிர்தம்|லா.ச.ரா.]], [[நா. சிதம்பர சுப்பிரமணியன்]] இவர்கள் இரண்டாம் பிரிவினர், றாலி போன்றோர் மூன்றாம் பிரிவினர்.
மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று மூன்று பிரிவாகப் பிரித்துப் பார்க்கலாம். மணிக்கொடி [[சீனிவாசன்]], [[பி.எஸ். ராமையா]], [[புதுமைப்பித்தன்]], [[கு.ப. ராஜகோபாலன்|கு.ப. ரா.]], இவர்கள் ஒரு பிரிவு. [[க.நா.சுப்ரமணியம்|க.நா.சு.]], [[சி.சு. செல்லப்பா]], [[தி.ஜானகிராமன்|தி.ஜா.]], [[சிட்டி]], [[மௌனி]], [[லா.ச. ராமாமிர்தம்|லா.ச.ரா.]], [[நா. சிதம்பர சுப்பிரமணியன்]] இவர்கள் இரண்டாம் பிரிவினர், றாலி போன்றோர் மூன்றாம் பிரிவினர்.


Line 56: Line 71:


[[புதுமைப்பித்தன்]], [[ந. பிச்சமூர்த்தி]], [[கு.ப. ராஜகோபாலன்]], [[பி.எஸ். ராமையா]], [[ந. சிதம்பரசுப்பிரமணியன்]], [[பெ.கோ. சுந்தரராஜன்]] (சிட்டி), [[சி.சு. செல்லப்பா]], [[மௌனி]] ஆகிய படைப்பாளிகளின் சிறந்த கதைகள் பலவற்றை மணிக்கொடி வெளியிட்டுள்ளது. பின்னர் க. நா. சுப்ரமண்யமும் இக்குழுவில் சேர்ந்தார். கி.ரா., [[எம்.வி.வெங்கட்ராம்|எம்.வி. வெங்கட்ராம்]], [[ஆர். சண்முக சுந்தரம்]], [[லா.ச. ராமாமிர்தம்]] முதலிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்திய பெருமையும் மணிக்கொடிக்கு உண்டு.
[[புதுமைப்பித்தன்]], [[ந. பிச்சமூர்த்தி]], [[கு.ப. ராஜகோபாலன்]], [[பி.எஸ். ராமையா]], [[ந. சிதம்பரசுப்பிரமணியன்]], [[பெ.கோ. சுந்தரராஜன்]] (சிட்டி), [[சி.சு. செல்லப்பா]], [[மௌனி]] ஆகிய படைப்பாளிகளின் சிறந்த கதைகள் பலவற்றை மணிக்கொடி வெளியிட்டுள்ளது. பின்னர் க. நா. சுப்ரமண்யமும் இக்குழுவில் சேர்ந்தார். கி.ரா., [[எம்.வி.வெங்கட்ராம்|எம்.வி. வெங்கட்ராம்]], [[ஆர். சண்முக சுந்தரம்]], [[லா.ச. ராமாமிர்தம்]] முதலிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்திய பெருமையும் மணிக்கொடிக்கு உண்டு.
== uladakkam==
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மணிக்கொடிக்கு முக்கியமான இடமுண்டு . குறிப்பாக , பி.எஸ் . இராமையா காலத்து மணிக்கொடி , சிறுகதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது . " மணிக்கொடி ' என்றால் சிறுகதை , ' சிறுகதை என்றால் மணிக்கொடி " என்பதான மாற்றம் உருவானது ராமையா காலத்தில்தான் . தான் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் இதழின் உள்ளடக்கத்தில் பல்வேறு புதுமைகளைக் கையாண்டார் ராமையா , அவரும் , கி.ராமச்சந்திரனும் இணைந்து சிறந்த வெளிநாட்டுக் கதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டனர் . யிடுவது , ஆசிரியரைப் பற்றிய குறிப்பு , சிறுகதையைப் பற்றிய குறிப்பு , ஓவியங்களுடன் கதையை வெளியிடுவது , ஓவியரின் பெயரை வெளி
புதுமையாகக் கதை சொல்லும் பாணி , நாடக பாணிக் கதைகள் , இதிகாசப் பாணியில் கதை சொல்வது என்று பல்வேறு உத்திகளைக் கையாண்டார் ராமையா . வ.ரா.வின் வார மணிக்கொடிக்குப் பின் சிறுகதைக்கு என்றே அந்தப் பத்திரிக்கையைச் சாதனமாக ஆக்கி , தானும் எழுதி அதில் பல புதிய கதாசிரியர்களையும் எழுதவைத்து , சிறுகதை வளம் பெருக மூலகாரணமாக இருந்தவர் ராமையா .
' மணிக்கொடி காலம் இலக்கிய உலகின் பொற்காலம் ' என்று போற்றப்படுமளவுக்கு அதில் சிறப்பான பல்வேறு சிறுகதைகள் வெளியாகியுள்ளன . நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்பவர்கள் மணிக்கொடியை ஓர் எல்லையாகக் கொள்வது தவிர்க்க இயலாதது . புதுமைப்பித்தனின் “ கவந்தனும் காமனும் , " துன்பக்கேணி ” உள்ளிட்ட புகழ்மிக்க பல கதைகள் மணிக்கொடியில் வெளியானவையே ! சி.சு.செல்லப்பாவின் ' ஸரஸாவின் பொம்மை ' , மௌனியின் ' அழியாச்சுடர் ' போன்ற காலத்தால் அழிக்க முடியாத கலைப்படைப்புகளும் மணிக்கொடியில்தான் வெளியாகின . பெண் எழுத்தாளர்களின் குறிப்பிடத்தகுந்த கதைகளும் மணிக்கொடியில் வெளியாகியுள்ளன . பெண் எழுத்தாளர்களுக்கென்றே " அத்தனையும் ஸ்த்ரீகள் ” என்ற தலைப்பில் ஒரு கதைச் சிறப்பிதழ் வெளியிட்டது மணிக்கொடி . அதில் பங்களித்தவர்கள் பி.வி.லக்ஷ்மி , ஸ்ரீமதி ராஜி , ஸ்ரீமதி க.பத்மாவதி , ஸ்ரீமதி மீனாக்ஷி கணேசய்யர் , வை.மு.கோதைநாயகி , குப.சேது அம்மாள் ஆகியோர் . உண்மையில் போதிய அளவுக்குப் பெண் எழுத்தாளர்களின் கதைகள் கிடைக்கப் பெறாததால் தங்கள் மனைவியின் பெயரில் கி.ரா.வும் ( சங்கரி ராமசந்திரன் ) . பி.எஸ்.ராமையாவும் ( ஸ்ரீமதி சௌபாக்கியம் ) அதில் சிறுகதைகள் எழுதினர் . வை.மு.கோதைநாயகி , கு.ப.சேது அம்மாள் , எஸ்.விசாலாஷி , எஸ்.கமலாம்பாள் , மதுரம் , ஸ்ரீமதி மங்களம் , ஸ்ரீமதி ராஜி , என்.நாமகிரியம்மாள் , கே.கமலா , கமலா விருத்தாசலம் , அனசூயா தேவி , க , பத்மாவதி , பி.வி.லக்ஷ்மி , ஸ்ரீமதி கமலா பாய் எனப் பல பெண் எழுத்தாளர்கள் இவ்விதழுக்குப் பங்களித்துள்ளனர் . "


== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
முதல் மற்றும் இரண்டாவது கால கட்டங்களில் வெளியான சிறுகதைகள் மூலம் இலக்கிய மறுமலர்ச்சியை உண்டாக்கியது மணிக்கொடி .
’தமிழில் சிறுகதைக்கு என்று தனியாக ஒரு பத்திரிகை இல்லாத குறையை நீக்குவதற்காகவும், பிற நாட்டவர் கண்டு போற்றும்படியான உயர்ந்த கதைகளை எழுதக்கூடிய தமிழ் எழுத்தாளர்களை வெளிப்படுத்தவும்,மணிக்கொடி தோன்றியுள்ளது ’என்று பி.எஸ். ராமையா முதல் இதழில் குறிப்பிட்டிருக்கிறார். பிச்சமூர்த்தியின் 'தாய்' போன்ற உயர்ந்த தரத்துச் சில கதைகளை வெளியிட வாய்த்ததிலேயே, மணிக்கொடி கதைப் பதிப்பு முயற்சி ஒரு சாதனையாக நிறைவு பெற்று விட்டது என்று கூறலாம். மணிக்கொடி காலம் என்பதற்கு அந்த மாதிரி இலக்கியத்தரமான கதைகள் எழுதப்பட்ட ஒரு காலகட்டம் என்று பொருள் கொள்ளலாம் என்று தோன்றுகிறது என்று அவர் கூறுகிறார்('மணிக்கொடி காலம்').
’தமிழில் சிறுகதைக்கு என்று தனியாக ஒரு பத்திரிகை இல்லாத குறையை நீக்குவதற்காகவும், பிற நாட்டவர் கண்டு போற்றும்படியான உயர்ந்த கதைகளை எழுதக்கூடிய தமிழ் எழுத்தாளர்களை வெளிப்படுத்தவும்,மணிக்கொடி தோன்றியுள்ளது ’என்று பி.எஸ். ராமையா முதல் இதழில் குறிப்பிட்டிருக்கிறார். பிச்சமூர்த்தியின் 'தாய்' போன்ற உயர்ந்த தரத்துச் சில கதைகளை வெளியிட வாய்த்ததிலேயே, மணிக்கொடி கதைப் பதிப்பு முயற்சி ஒரு சாதனையாக நிறைவு பெற்று விட்டது என்று கூறலாம். மணிக்கொடி காலம் என்பதற்கு அந்த மாதிரி இலக்கியத்தரமான கதைகள் எழுதப்பட்ட ஒரு காலகட்டம் என்று பொருள் கொள்ளலாம் என்று தோன்றுகிறது என்று அவர் கூறுகிறார்('மணிக்கொடி காலம்').


Line 65: Line 89:


'மணிக்கொடி பத்திரிகையானது வெளிவரும் முன்பு எத்தனையோ இலக்கியப் பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், புதிய இடம் தொடுக்கும்- உற்காகம் ஊட்டும்- வரவேற்கும் பத்திரிகை காலத்தின் தேவையாக இருந்தது.உலக இலக்கியங்களை ஆங்கிலத்தின் மூலம் நன்கு அறிந்திருந்த திறமையாளர்கள் இலக்கியத்தரமான சிறுகதைகளை- கதைக்கலையின் பல்வேறு தன்மையான படைப்புகளை- வாழ்க்கையின் அடிமட்டம் வரை ஆழ்ந்து அலசிப் பார்த்து உண்மைகளை உள்ளது உள்ளபடி சித்திரிக்கும் சிருஷ்டிகளை- பலரகமான உணர்ச்சி வெளிப்பாடுகளை எல்லாம் ஆழமாகவும் அழுத்தமாகவும் தமிழிலும் உருவாக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார்கள். இத்தகைய புது முயற்சிகளுக்கு மணிக்கொடி இடம் அளித்தது.' என்கிறார் வல்லிக்கண்ணன்
'மணிக்கொடி பத்திரிகையானது வெளிவரும் முன்பு எத்தனையோ இலக்கியப் பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், புதிய இடம் தொடுக்கும்- உற்காகம் ஊட்டும்- வரவேற்கும் பத்திரிகை காலத்தின் தேவையாக இருந்தது.உலக இலக்கியங்களை ஆங்கிலத்தின் மூலம் நன்கு அறிந்திருந்த திறமையாளர்கள் இலக்கியத்தரமான சிறுகதைகளை- கதைக்கலையின் பல்வேறு தன்மையான படைப்புகளை- வாழ்க்கையின் அடிமட்டம் வரை ஆழ்ந்து அலசிப் பார்த்து உண்மைகளை உள்ளது உள்ளபடி சித்திரிக்கும் சிருஷ்டிகளை- பலரகமான உணர்ச்சி வெளிப்பாடுகளை எல்லாம் ஆழமாகவும் அழுத்தமாகவும் தமிழிலும் உருவாக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார்கள். இத்தகைய புது முயற்சிகளுக்கு மணிக்கொடி இடம் அளித்தது.' என்கிறார் வல்லிக்கண்ணன்
இதழை வாங்கி வாசித்த கல்கி , “ பத்திரிகை என்றால் இதுதான் பத்திரிகை ; இந்தத் தமிழ் வேறு யாரால் எழுதமுடியும் ” என்று பாராட்டினார் .


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
* தமிழில் சிறு பத்திரிகைகள் - வல்லிக் கண்ணன் (மணிவாசகர் பதிப்பகம்)
* தமிழில் சிறு பத்திரிகைகள் - வல்லிக் கண்ணன் (மணிவாசகர் பதிப்பகம்)
* 'மணிக்கொடி காலம்' - பி.எஸ். ராமையா (மெய்யப்பன் பதிப்பகம்)
* 'மணிக்கொடி காலம்' - பி.எஸ். ராமையா (மெய்யப்பன் பதிப்பகம்)
* https://www.dinamani.com/tamilnadu/2011/jun/05/மணிக்கொடி---சில-சிந்தனைகள்-361277.html
* https://www.dinamani.com/tamilnadu/2011/jun/05/மணிக்கொடி---சில-சிந்தனைகள்-361277.html
* http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=9547
* http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=9547
* https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2010/may/16/அக்கிரஹாரத்தின்-அதிசய-மனிதர்-183243.html
* https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2010/may/16/அக்கிரஹாரத்தின்-அதிசய-மனிதர்-183243.html


{{being created}}
{{being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 22:23, 23 May 2022

மணிக்கொடி
மணிக்கொடி காலம்

மணிக்கொடி ( 1933- ) தேசிய இயக்கத்துக்கும் தமிழிலக்கிய மறுமலர்ச்சிக்கும் பங்களிப்பாற்றிய இதழ். அரசியல் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட வார இதழ் பின்னர் இலக்கிய மாத இதழாக மாறியது. தமிழ்ச் சிறுகதைகளின் உருவாக்கம் மணிக்கொடியில் நிகழ்ந்தது. மணிக்கொடி இதழை ஒட்டி உருவான இலக்கியவாதிகளின் சிறு வட்டம் மணிக்கொடி எழுத்தாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

தோற்றம், வரலாறு

விடுதலைக்கு முந்தைய கால கட்டங்களில் நவீன இலக்கியத்திற்கு முக்கியப் பங்களித்த இதழ் ‘மணிக்கொடி’. இது தொடர்ச்சியாக நான்கு காலகட்டங்களில் வெளிவந்த இதழ். செப்டம்பர் 17, 1933 ஞாயிறு அன்று மணிக்கொடியின் முதல் இதழ் வெளியானது. " பாரதி பாடியது மணிக்கொடி ; காந்தி ஏந்தியது மணிக்கொடி ; காங்கிரஸ் உயர்த்தியது மணிக்கொடி; சுதந்திரப் போராட்டத்தில் பல்லா யிரம் வீரர்களை ஈடுபடச் செய்து அவர்களுக்கு உற்சாகம் ஊட்டியது மணிக்கொட ; மணிக்கொடி பாரத மக்களின் மனத்திடை ஓங்கி வளரும் அரசியல் இலட்சியத்தின் நுனி , முனை , கொழுந்து " என்ற அறிவிப்புடன் வெளியானது மணிக்கொடி.

இந்தியச் சுதந்திரப்போராட்டத்தில் 1922-ல் சௌரி சௌரா என்னுமிடத்தில் நிகழ்ந்த வன்முறையை ஒட்டி காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை பின்னிழுத்துக்கொண்டு காங்கிரஸ் அமைப்பை கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட்டார். இது பொதுவாகச் சுதந்திரப்போராட்டக் களத்தில் ஒரு சோர்வை உருவாக்கினாலும் களப்போராளிகளாக திகழ்ந்த பலர் கலையிலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டனர். இந்திய மொழிகளில் இலக்கிய வளர்ச்சி நிகழ்ந்தது. இதழ்கள் பல தொடங்கப்பட்டன.

சுதந்திரப்போராட்டக் காலத்தில் சிறைவாசத்தின்போது வ.ரா.வும், டி.எஸ்.சொக்கலிங்கமும் நெருங்கிய நண்பர்களானார்கள். சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, இலக்கியப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டார் சீனிவாசன். திருப்பழனத்துக்குச் சென்று அங்கே வசித்து வந்த வ.ரா.வை அழைத்துவந்தார். அவ்வாறு தொடங்கப்பட்ட தேசிய இதழ்களில் ஒன்று மணிக்கொடி. ஆங்கில இலக்கியம் முன்னேறியது போன்று தமிழ் இலக்கியமும் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு மிக்கவர் வ.ரா.

முதல் காலகட்டம்

1933 செப்டம்பர் 17-ம் பிறந்த வார ஏடு 'மணிக்கொடி' அரசியல் பத்திரிகையாகத்தான் செயலாற்றியது. ஆரம்பத்தில் வ.ராமசாமி ஐயங்கார், டி.எஸ். சொக்கலிங்கம், கே. சீனிவாசன் ஆகியோரின் கூட்டு முயற்சியால் அது இயங்கியது.

வார இதழின் ஆரம்பகாலத்தில் கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. கே.சீனிவாசன், வ. ரா., டி.எஸ். சொக்கலிங்கம் கட்டுரைகள் புதுமையாகவும், சிந்தனை வேகத்துடனும் அமைந்தன. தமிழில் புது முயற்சியான 'நடைச்சித்திரம்' என்பதை வ. ரா. இதில் தொடர்ந்து எழுதினார். வாழ்க்கையில் காணப்படுகிற பல தொழில் துறை நபர்களையும் பற்றிய விவரணைச் சித்திரங்கள் இவை.

சிட்டி, ந. ராமரத்னம், கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி முதலியோர் முதலில் கட்டுரைகளே எழுதினார்கள். பின்னர் மணிக் கொடி வார இதழில் சிறுகதைகளும் வெளியாகின. மணிக்கொடி வார இதழ் பெரிய அளவில் வந்து கொண்டிருந்தது.

அரசியல் மற்றும் சமூக விஷயங்களுக்கும், கட்டுரைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வந்தது 'மணிக்கொடி' வாரப் பதிப்பு.

பின்னர், பத்திரிகையின் கூட்டுப் பொறுப்பாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படவும் 'மணிக்கொடி' ஜனவரி 1935-ல் நின்று விட்டது.

அதன் பிறகு, 1935 மார்ச் முதல்- பி.எஸ். ராமையாவின் பெரும் முயற்சியால், மணிக்கொடி கதைப் பத்திரிகையாக வெளிவந்தது.

இரண்டாம் காலகட்டம்

இரண்டாவது காலகட்டத்தில் ( மார்ச் , 1935 முதல் 1939வரை ) பி.எஸ் . ராமையா ஆசிரியராகவும் , டி.எஸ்.சொக்கலிங்கம் மற்றும் கி.ராமச்சந்திரன் உதவி ஆசிரியர்களாகவும் இருந்தனர் . இதழ் வெளியானது . " பதினெட்டு மாத காலம் வாரப் பதிப்பாக வெளிவந்து மாத இதழாக வெளிவந்தது . உடன் ' காந்தி ' என்னும் இணைப்பிதழும் கொண்டிருக்கிற மணிக்கொடி இன்று முதல் , இலட்சியத்தில் தன்னுடன் வெளிவருகிறது . புதிய கொடி உருவத்திலும் , உள்ளடக்கத்திலும் ஒன்றுபட்ட காந்தியையும் இணைத்துக் கொண்டு , மாதமிருமுறை புதுஜென்மம் எடுத்திருக்கிறது ” என்ற அறிக்கையோடு மணிக்கொடியின் இரண்டாவது காலகட்டத்து முதல் இதழ் வெளிவந்தது

பி.எஸ். ராமையா மணிக்கொடி இதழ்பற்றி அறிந்து அதன் நிறுவனர் சீனிவாசனைச் சந்தித்தார். அவர், ராமையாவை விளம்பர சேகரிப்பாளராகப் பணியமர்த்தினார். அப்போது மணிக்கொடி சமூக, அரசியல் இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. அவ்வப்போது அதில் சிறுகதைகளும் வெளிவந்தன. ராமையா அதில் பல சிறுகதைகளையும், மொழிபெயர்ப்புக் கதைகளையும் எழுதினார்.

கருத்து வேறுபாட்டால் அதன் ஆசிரியர்கள் அதிலிருந்து விலகியபோது, ராமையா மணிக்கொடியின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். பி.எஸ். ராமையா தீவிரமாக முயன்று, மார்ச் 1935 முதல் 'மணிக்கொடி'யை மாதம் இருமுறை பத்திரிகையாகக் கொண்டு வந்தார்.

மணிக்கொடியின் அமைப்பும் உள்ளடக்கமும், நோக்கும் முற்றிலும் மாறுபட்டுவிட்ட போதிலும், அது பழைய தொடர்ச்சியாகவே கணக்கிடப்பட்டது. கதைமட்டுமாக வந்த இதழ் 'கொடி 3, மணி 1' என்று இலக்கம் பெற்றிருந்தது.

இந்த முதல் இதழில் புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணி’, சி.சு. செல்லப்பாவின் 'ஸரஸாவின் பொம்மை', பி.எஸ். ராமையாவின் 'புலியின் பெண்டாட்டி', சங்கு சுப்பிரமணியனின் 'வேதாளம் சொன்ன கதை' முதலியன பிரசுரம் பெற்றன.

மணிக்கொடி என்றால் பி.எஸ். ராமையா என்று அடையாளப்படுத்துமளவிற்கு அந்த இதழைப் பல்லாண்டு காலம் உழைத்து நிலை நிறுத்தினார். ஆனால் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்திடையேயான கருத்து வேறுபாட்டால் திடீரென முன்னறிவிப்பின்றி மணிக்கொடி ஆசிரியர் பொறுப்பிலிருந்து ராமையா நீக்கப்பட்டார்.

பத்திரிகை லிமிடெட் கம்பெனியின் நிர்வாகத்துக்கு வந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு பி. எஸ். ராமையா ஆசிரியப் பொறுப்பை விட்டு விட நேரிட்டது. மணிக்கொடி நிர்வாகத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக 1938 ஜனவரி 27-ம் நாளுடன், மணிக்கொடியோடு ராமையாவுக்கு இருந்த தொடர்பு முடிந்தது.

மூன்றாம் காலகட்டம்

மூன்றாவது காலகட்டத்தில் ( பிப்ரவரி , 1939 ) ப.ராமசாமி ஆசிரியராக இருந்தார் .

இதழின் முதல் காலகட்டத்தில் ( செப்டம்பர் 1933 தொடக்கம் -1935 வரை ) கே . சீனிவாசன் , வெளியீட்டாளராக இருந்தார் . நிர்வாக ஆசிரியராக வ.ரா. பணியாற்றினார் . உதவி ஆசிரியர்களாக டி.எஸ்.சொக்கலிங்கம் , பி.எஸ் . ராமையா ஆகியோர் பணியாற்றினர் . இக்காலகட்டத்தில் இதழ் வாரமொரு இதழாக , ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவந்தது .

1938 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதத்தில் ப. ராமஸ்வாமி ( ப.ரா. ) அதன் ஆசிரியரானார். தமிழில் சிறு பத்திரிகைகள்

ப. ரா. முதலில் ஒரு அரசியல்வாதி. இலக்கிய ஈடுபாடு அடுத்தபட்சம் தான் அவருக்கு. அவருடைய பொறுப்பில், மணிக்கொடியில் அரசியல் விவகாரங்களும் மிகுந்த கவனிப்பைப் பெற்றன. ஏ. ஜி. வெங்கடாச்சாரி யின் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் பக்கங்களை எடுத்துக் பல கொண்டன. அரசியல் கார்ட்டூன்கள் வெளியிடப் பெற்றன.

ராமையா காலத்தில் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் மணிக் கொடிக்குக் கதைகள் எழுதி, அதற்குத் தனிச்சிறப்பு அளித்துவந்த படைப்பாளிகள் சிறிது சிறிதாகத் தங்கள் தொடர்பைக் குறைத்து, அப் புறம் எழுதாமலே இருந்துவிட்டார்கள். புது எழுத்தாளர்களின் கதைகள் அதிகம் வந்துள்ளன. உலகத்துக் கதைகளின் மொழிபெயர்ப்புகள் வேறு சிலரால் ( முக்கியமாக, ப. ரா. வின் தம்பி 'சஞ்சீவி' யால்) செய்யப் பட்டிருக்கின்றன.

மணிக்கொடி இதழ், ஜூன் 1939-உடன் நிறுத்தப்பட்டது. பிறகு நின்றுவிட்டது. நவயுகப் பிரசுராலயம் லிமிடெட் நிறுவனத்தினர் புத்தகப் பிரசுரத்தில் மட்டுமே கருத்துச் செலுத்தலாயினர்.

நான்காவது காலகட்டத்தில்

( 1950 ) பி.எஸ்.ராமையா ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார் . ஆனால் , இதழ் பொருளாதாரப் பிரச்சனைகளால் , நான்கே இதழ்களோடு நின்று போனது .

next

நா . பார்த்தசாரதியின் வலியுறுத்தலைத் தொடர்ந்து தனது மணிக்கொடி கால அனுபவங்களை தொடராக ‘ தீபம் ' இதழில் எழுதி வந்தார் ராமையா . பின்னர் அவை தொகுக்கப்பட்டு " மணிக்கொடி காலம் " என்ற பெயரில் நூலாக வெளியானது . 1982 ல் அந்நூலுக்கு " சாகித்ய அகாதமி " விருது கிடைத்தது .

பங்களிப்பு

கு.ப.ரா. ந.பிச்சமூர்த்தி , புதுமைப்பித்தன் , மௌனி , பி.எஸ்.ராமையா , ந.சிதம்பர சுப்பிரமணியன் , சிட்டி , சி.சு.செல்லப்பா போன்றோர் ' மணிக்கொடி ' எழுத்தாளர்கள் என்று போற்றப்படுகின்றனர் . ராமையா இவ்விதழில் நாற்பது கதைகள் எழுதியுள்ளார் . புதுமைப்பித்தனின் சிறந்த 34 கதைகள் இவ்விதழில் வெளியாகியுள்ளன . சங்கு சுப்பிரமணியன் லா.ச.ராமாமிர்தம் , தி.ஜ.ரங்கநாதன் , க.நா.சுப்பிரமணியன் , பி.எம்.கண்ணன் , எம்.வி.வெங்கட்ராம் , ஆர்.சண்முகசுந்தரம் , சபரிராஜன் , பி.எஸ்.சங்கரன் உள்ளிட்ட இவ்விதழுக்குப் பங்களித்த பலர் , ' மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் ' என்று போற்றப்படுகின்றனர் .

மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று மூன்று பிரிவாகப் பிரித்துப் பார்க்கலாம். மணிக்கொடி சீனிவாசன், பி.எஸ். ராமையா, புதுமைப்பித்தன், கு.ப. ரா., இவர்கள் ஒரு பிரிவு. க.நா.சு., சி.சு. செல்லப்பா, தி.ஜா., சிட்டி, மௌனி, லா.ச.ரா., நா. சிதம்பர சுப்பிரமணியன் இவர்கள் இரண்டாம் பிரிவினர், றாலி போன்றோர் மூன்றாம் பிரிவினர்.

முதல் பிரிவினர், மணிக்கொடியின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் துணை நின்றவர்கள். சிறுகதையின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள். இரண்டாம் பிரிவினர் சிறுகதை, நாவல், கவிதை என்ற பிரிவுகளில் சோதனை முயற்சிகள் செய்தவர்கள். பிறநாட்டு சாத்திரங்களைப் படித்து அதுபோலவே எழுத முன் வந்தவர்கள்.

புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், பி.எஸ். ராமையா, ந. சிதம்பரசுப்பிரமணியன், பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), சி.சு. செல்லப்பா, மௌனி ஆகிய படைப்பாளிகளின் சிறந்த கதைகள் பலவற்றை மணிக்கொடி வெளியிட்டுள்ளது. பின்னர் க. நா. சுப்ரமண்யமும் இக்குழுவில் சேர்ந்தார். கி.ரா., எம்.வி. வெங்கட்ராம், ஆர். சண்முக சுந்தரம், லா.ச. ராமாமிர்தம் முதலிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்திய பெருமையும் மணிக்கொடிக்கு உண்டு.


uladakkam

தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மணிக்கொடிக்கு முக்கியமான இடமுண்டு . குறிப்பாக , பி.எஸ் . இராமையா காலத்து மணிக்கொடி , சிறுகதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது . " மணிக்கொடி ' என்றால் சிறுகதை , ' சிறுகதை என்றால் மணிக்கொடி " என்பதான மாற்றம் உருவானது ராமையா காலத்தில்தான் . தான் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் இதழின் உள்ளடக்கத்தில் பல்வேறு புதுமைகளைக் கையாண்டார் ராமையா , அவரும் , கி.ராமச்சந்திரனும் இணைந்து சிறந்த வெளிநாட்டுக் கதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டனர் . யிடுவது , ஆசிரியரைப் பற்றிய குறிப்பு , சிறுகதையைப் பற்றிய குறிப்பு , ஓவியங்களுடன் கதையை வெளியிடுவது , ஓவியரின் பெயரை வெளி புதுமையாகக் கதை சொல்லும் பாணி , நாடக பாணிக் கதைகள் , இதிகாசப் பாணியில் கதை சொல்வது என்று பல்வேறு உத்திகளைக் கையாண்டார் ராமையா . வ.ரா.வின் வார மணிக்கொடிக்குப் பின் சிறுகதைக்கு என்றே அந்தப் பத்திரிக்கையைச் சாதனமாக ஆக்கி , தானும் எழுதி அதில் பல புதிய கதாசிரியர்களையும் எழுதவைத்து , சிறுகதை வளம் பெருக மூலகாரணமாக இருந்தவர் ராமையா .

' மணிக்கொடி காலம் இலக்கிய உலகின் பொற்காலம் ' என்று போற்றப்படுமளவுக்கு அதில் சிறப்பான பல்வேறு சிறுகதைகள் வெளியாகியுள்ளன . நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்பவர்கள் மணிக்கொடியை ஓர் எல்லையாகக் கொள்வது தவிர்க்க இயலாதது . புதுமைப்பித்தனின் “ கவந்தனும் காமனும் , " துன்பக்கேணி ” உள்ளிட்ட புகழ்மிக்க பல கதைகள் மணிக்கொடியில் வெளியானவையே ! சி.சு.செல்லப்பாவின் ' ஸரஸாவின் பொம்மை ' , மௌனியின் ' அழியாச்சுடர் ' போன்ற காலத்தால் அழிக்க முடியாத கலைப்படைப்புகளும் மணிக்கொடியில்தான் வெளியாகின . பெண் எழுத்தாளர்களின் குறிப்பிடத்தகுந்த கதைகளும் மணிக்கொடியில் வெளியாகியுள்ளன . பெண் எழுத்தாளர்களுக்கென்றே " அத்தனையும் ஸ்த்ரீகள் ” என்ற தலைப்பில் ஒரு கதைச் சிறப்பிதழ் வெளியிட்டது மணிக்கொடி . அதில் பங்களித்தவர்கள் பி.வி.லக்ஷ்மி , ஸ்ரீமதி ராஜி , ஸ்ரீமதி க.பத்மாவதி , ஸ்ரீமதி மீனாக்ஷி கணேசய்யர் , வை.மு.கோதைநாயகி , குப.சேது அம்மாள் ஆகியோர் . உண்மையில் போதிய அளவுக்குப் பெண் எழுத்தாளர்களின் கதைகள் கிடைக்கப் பெறாததால் தங்கள் மனைவியின் பெயரில் கி.ரா.வும் ( சங்கரி ராமசந்திரன் ) . பி.எஸ்.ராமையாவும் ( ஸ்ரீமதி சௌபாக்கியம் ) அதில் சிறுகதைகள் எழுதினர் . வை.மு.கோதைநாயகி , கு.ப.சேது அம்மாள் , எஸ்.விசாலாஷி , எஸ்.கமலாம்பாள் , மதுரம் , ஸ்ரீமதி மங்களம் , ஸ்ரீமதி ராஜி , என்.நாமகிரியம்மாள் , கே.கமலா , கமலா விருத்தாசலம் , அனசூயா தேவி , க , பத்மாவதி , பி.வி.லக்ஷ்மி , ஸ்ரீமதி கமலா பாய் எனப் பல பெண் எழுத்தாளர்கள் இவ்விதழுக்குப் பங்களித்துள்ளனர் . "

இலக்கிய இடம்

முதல் மற்றும் இரண்டாவது கால கட்டங்களில் வெளியான சிறுகதைகள் மூலம் இலக்கிய மறுமலர்ச்சியை உண்டாக்கியது மணிக்கொடி .

’தமிழில் சிறுகதைக்கு என்று தனியாக ஒரு பத்திரிகை இல்லாத குறையை நீக்குவதற்காகவும், பிற நாட்டவர் கண்டு போற்றும்படியான உயர்ந்த கதைகளை எழுதக்கூடிய தமிழ் எழுத்தாளர்களை வெளிப்படுத்தவும்,மணிக்கொடி தோன்றியுள்ளது ’என்று பி.எஸ். ராமையா முதல் இதழில் குறிப்பிட்டிருக்கிறார். பிச்சமூர்த்தியின் 'தாய்' போன்ற உயர்ந்த தரத்துச் சில கதைகளை வெளியிட வாய்த்ததிலேயே, மணிக்கொடி கதைப் பதிப்பு முயற்சி ஒரு சாதனையாக நிறைவு பெற்று விட்டது என்று கூறலாம். மணிக்கொடி காலம் என்பதற்கு அந்த மாதிரி இலக்கியத்தரமான கதைகள் எழுதப்பட்ட ஒரு காலகட்டம் என்று பொருள் கொள்ளலாம் என்று தோன்றுகிறது என்று அவர் கூறுகிறார்('மணிக்கொடி காலம்').

"மணிக்கொடி ஒரு பத்திரிகை அல்ல, ஓர் இயக்கம். இந்த இயக்கத்தின் வாழ்வோடு தான் தமிழ் மறுமலர்ச்சி இலக்கியம் இணைந்துள்ளது” என்கிறார் பி.எஸ். ராமையா.

மணிக்கொடி போன்ற தனித்தன்மை உள்ள ஒரு பத்திரிகை காலத்தின் தேவையாக இருந்தது.இது குறித்துப் புதுமைப்பித்தன் 'ஆண்மை' என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் கூறியிருக்கிறார்.’

'மணிக்கொடி பத்திரிகையானது வெளிவரும் முன்பு எத்தனையோ இலக்கியப் பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், புதிய இடம் தொடுக்கும்- உற்காகம் ஊட்டும்- வரவேற்கும் பத்திரிகை காலத்தின் தேவையாக இருந்தது.உலக இலக்கியங்களை ஆங்கிலத்தின் மூலம் நன்கு அறிந்திருந்த திறமையாளர்கள் இலக்கியத்தரமான சிறுகதைகளை- கதைக்கலையின் பல்வேறு தன்மையான படைப்புகளை- வாழ்க்கையின் அடிமட்டம் வரை ஆழ்ந்து அலசிப் பார்த்து உண்மைகளை உள்ளது உள்ளபடி சித்திரிக்கும் சிருஷ்டிகளை- பலரகமான உணர்ச்சி வெளிப்பாடுகளை எல்லாம் ஆழமாகவும் அழுத்தமாகவும் தமிழிலும் உருவாக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார்கள். இத்தகைய புது முயற்சிகளுக்கு மணிக்கொடி இடம் அளித்தது.' என்கிறார் வல்லிக்கண்ணன்

இதழை வாங்கி வாசித்த கல்கி , “ பத்திரிகை என்றால் இதுதான் பத்திரிகை ; இந்தத் தமிழ் வேறு யாரால் எழுதமுடியும் ” என்று பாராட்டினார் .

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.