அ.கா. பெருமாள்: Difference between revisions
(Moved Category Stage markers to bottom) |
|||
Line 621: | Line 621: | ||
== வெளி இணைப்புகள் == | == வெளி இணைப்புகள் == | ||
* https://akperumal.blogspot.com/ | * [https://akperumal.blogspot.com/ அ.கா. பெருமாள் இணையதளம்] | ||
*[https://www.youtube.com/watch?v=giwpgRxLSAA&list=PL3_eQLX7xLY8WBtldxIl68Or-VQgc_Bp3 | *[https://www.youtube.com/watch?v=giwpgRxLSAA&list=PL3_eQLX7xLY8WBtldxIl68Or-VQgc_Bp3 குமரி மாவட்ட வரலாறு | பாகம் -1 | ஆய் மன்னர்கள் காலம் | முனைவர்அ க பெருமாள் |] | ||
* [https://www.jeyamohan.in/6168/ அ.கா.பெருமாள் பற்றி ஜெயமோகன்] | * [https://www.jeyamohan.in/6168/ அ.கா.பெருமாள் பற்றி ஜெயமோகன்] | ||
*[https://www.jeyamohan.in/887/ அ.கா. | *[https://www.jeyamohan.in/887/ அ.கா.பெரிமாள் 60, ஜெயமோகன்] | ||
*https://www.hindutamil.in/news/literature/126364-.html | *[https://www.hindutamil.in/news/literature/126364-.html அ.கா.பெருமாள் நாட்டார்கதை ஆய்வாளர், ஆர்.ஜெய்குமார், இந்து தமிழ் திசை, மே 2018] | ||
*[https://youtu.be/38vMKQGQxVo அ. கா. பெருமாள் – கலந்துரையாடல் நிகழ்வு, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், 17 அக்டோபர் 2020,] | |||
*https://youtu.be/38vMKQGQxVo | *[https://mankuthiray.blogspot.com/2015/01/blog-post_27.html “பதிவுசெய்யப்பட்டது முழுமையான வரலாறல்ல” - நாட்டார் வழக்காற்றியலாளர் அ.கா.பெருமாள் நேர்காணல், மண்குதிரை இணையதளம்] | ||
*https://mankuthiray.blogspot.com/2015/01/blog-post_27.html | |||
Revision as of 08:08, 23 April 2022
அ.கா. பெருமாள் (1947) தமிழின் நாட்டாரியல் ஆய்வாளர். குமரிமாவட்ட வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வுகளை செய்பவர். இலக்கிய வரலாற்றாசிரியர். நாட்டாரியல் மற்றும் தொல்லியல் களப்பணி அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டின் வாய்மொழி வரலாறு, கல்வெட்டு, சிற்பவியல், கோவில்கலை, ஏடு, நாட்டார் கதைகள், கலைகள் ஆகியவற்றை சேகரித்து பதிப்பிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறார்
பிறப்பு, கல்வி
அ.கா. பெருமாள் 1947-இல் குமரி மாவட்டத்தில் பறக்கை என்ற ஊரில் அழகம்பெருமாள், பகவதி அம்மா ஆகியோருக்கு பிறந்தவர். முழுப்பெயர் அ. காக்கும் பெருமாள் (1947, பறக்கை, குமரி மாவட்டம்). இவரது தந்தையான அழகம்பெருமாள் மலையாள ஆசிரியராகவும், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகவும் பணி புரிந்தார். தாயார் பகவதி அம்மாள்.
பறக்கை அரசுப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். நாகர்கோயில் தெ.தி.இந்துக் கல்லூரியில் இளங்கலை முடித்த பிறகு பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். பாலக்காடு அருகிலுள்ள சித்தூர் கல்லூரியில் முதுநிலைப் படிப்பில் சேர்ந்தார். அங்கே பேராசிரியர் ஜேசுதாசன் இவருக்கு ஆசிரியர். எஸ். வையாபுரிப் பிள்ளை பற்றி ‘தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியாரின் கணிப்பு’ என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்ய எண்ணினாலும் அதை தொடரவில்லை. மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் “நாஞ்சில் நாட்டு வில்லுப்பாட்டுகள்” எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பிற்காலத்தில் "Inside the Drama-House: Rama Stories and Shadow Puppets in South India" போன்ற புத்தகங்களை எழுதிய ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் இவருடன் படித்தவர்.
தனிவாழ்க்கை
அ.கா. பெருமாளின் மனைவி தேவகுமாரி. மகள் ரம்யா. ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழாசிரியராகப் (ஓய்வு) பணியாற்றினார். நாகர்கோயிலில் வாழ்கிறார்.
ஆய்வுப் பணி
1972-ல் ஜூன் மாதம் அ.கா.பெருமாள் சுந்தர ராமசாமியைச் சந்தித்தார். அப்போது சுந்தர ராமசாமியின் எதிர் வீட்டில்தான் குடியிருந்தார்.சுந்தர ராமசாமி இல்லத்துக்கு வந்த நா. பார்த்தசாரதி, சி.சு. செல்லப்பா, பிரமிள், க.நா.சுப்ரமணியம் போன்ற எழுத்தாளர்கள் அறிமுகம் ஆனார்கள். சுந்தர ராமசாமியின் பெரிய நூலகத்தை பயன்படுத்திக்கொண்டார்.
அ.கா.பெருமாள் இலக்கிய ஆய்வாளராக தன் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் நாட்டாரியல், தொல்லியல், இலக்கிய வரலாறு ஆகிய மூன்று களங்களில் பங்களிப்பாற்றினார்.
நாட்டாரியல்
வெங்கட் சாமிநாதன் எழுதி நடத்திய யாத்ரா இதழை நாகர்கோயிலில் இருந்து அ.கா.பெருமாள் அச்சிட்டு வெளியிட்டார். வெங்கட் சாமிநாதன் நாட்டாரியல் ஆய்வுகளின் தேவை குறித்த கட்டுரைகளை யாத்ராவில் எழுதினார். வெங்கட் சாமிநாதன் தந்த ஊக்கத்தில் அ.கா.பெருமாள் நாட்டாரியல் ஆய்வுகளில் முனைந்தார். யாத்ரா’ இதழில் இசக்கி அம்மன் வழிபாடு, கணியான் கூத்து பற்றி கட்டுரைகளை எழுதினார். கன்னியாகுமரி மாவட்ட வில்லிசைப் பாடல்கள் குறித்து ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். இதுதான் நாட்டார் வழக்காற்றியல் துறையில் இவரது முதல் ஆய்வு. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டாரியல் மையம் தொடங்கப்பட்டபோது அதன் அமைப்பாளர் அருள்பணி ஜெயபதி அவர்களிடமிருந்து நாட்டாரியலை முறைப்படி கற்றார். நாட்டாரியல் அறிஞர் ஆலன் டன்டிஸின் வகுப்புகளில் பங்கெடுத்தார். நாட்டாரியல் ஆய்வாளர்கள் தே.லூர்து, ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.
தோல்பாவைக்கூத்து கலை குறித்து விரிவான ஆய்வுகள் செய்து நூல்களைப் பதிப்பித்துள்ளார். இதில் ‘தோல்பாவைக்கூத்து’ விரிவான அறிமுக நூலாகும். இவரது ‘ராமாயண தோல்பாவைக்கூத்து’ நூல் கூத்துக்குரிய வாய்மொழி ராமாயணப்பிரதியின் பதிவு செய்யப்பட்ட வடிவத்தையும், விரிவான ஆய்வுக் குறிப்புகளையும் கொண்டது. குமரிமாவட்ட வாய்மொழி வில்லுப்பாட்டுகளைப் பற்றிய ஆய்வு, பொன்னிறத்தாள் அம்மன் கதை, பூலங்கொண்டாள் அம்மன் கதை, தம்பிமார் கதை உட்பட ஆறுக்கும் மேற்பட்ட கதைகளை அச்சுக்குக் கொண்டு வந்துள்ளார். நாட்டார் கலைகளுக்கான கலைக்களஞ்சியம் ஒன்றை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டாரியல் ஆய்வு மையத்துக்காக தொகுத்து வெளியிட்டார். சடங்கில் கரைந்த கலைகள், தெய்வங்கள் முளைக்கும் நிலம், சுண்ணாம்பு கேட்ட இசக்கி என நாட்டார் கலைகளைப் பற்றியும் நாட்டாரியல் கள அனுபவங்கள் பற்றியும் நூல்களை எழுதியிருக்கிறார்.
வரலாற்றாய்வு
வட்டார நுண்வரலாற்றாய்வில் அ.கா.பெருமாள் முப்பதாண்டுக்கால ஆய்வுகளைச் செய்திருக்கிறார். நாட்டாரியலை கருத்தில் கொண்டு வரலாற்றாய்வை மேற்கொள்வது அ.கா.பெருமாளின் வழிமுறை. ’வரலாறு மீட்டுருவாக்கக் கோட்பாட்டின்படி நாட்டார் வழக்காற்றியலை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் பண்பாட்டு வரலாறு திரும்ப எழுதப்பட வேண்டும். அப்படி எழுதப்படும்பட்சத்தில் ஏற்கனவே உள்ள தமிழகப் பண்பாட்டு வரலாற்றின் முகம் மாறும். சில விஷயங்கள் இன்னும் அழுத்தமும் தெளிவும் பெறும்’ என்று அ.கா.பெருமாள் கருதுகிறார்*.
தென்திருவிதாங்கூர் வரலாற்றாய்வாளர் டாக்டர் திரிவிக்ரமன் தம்பி அ.கா.பெருமாளுக்கு ஆய்வு முன்னோடி. செந்தீ நடராசனுடன் இணைந்து அ.கா.பெருமாள் குமரிமாவட்ட கல்வெட்டுகளைத் தேடி அலைந்து ஆவணப்படுத்தினார். முதலியார் ஓலைகளை பாடம்நோக்கி பதிப்பித்தார். குமரிமாவட்டத்தின் தொன்மையான ஆலயங்களான சுசீந்திரம் தாணுமாலையன் ஆலயம், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயில் பற்றி நூல்களை எழுதினார். தென்குமரிக்கோயில்கள், சிவாலய ஓட்டம் ஆகிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். இவை ஆலயங்களின் சமூக,வரலாற்று முக்கியத்துவத்தையும், கோயிலைச் சுற்றிய நிலமானிய முறையைப் பற்றியும் விரிவாக ஆராயும் நூல்கள். தென்குமரியின் கதை என்னும் தலைப்பின் குமரிமாவட்ட வரலாற்றை எழுதியிருக்கிறார் அ.கா.பெருமாள்.
இலக்கிய ஆய்வு
அ.கா.பெருமாள் எஸ். வையாபுரிப் பிள்ளையின் ஆய்வுமுறைமைகளைப் பின்பற்றி இலக்கிய ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார். வையாபுரியாரின் கால ஆராய்ச்சி அவருடைய முதல்நூல். தமிழிலக்கிய வரலாறு, தமிழறிஞர்கள் போன்றவை தமிழிலக்கிய வரலாற்று நூல்கள். கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையின் நூல்களை பதிப்பித்தார். தேவசகாயம் பிள்ளை கூத்து, ஐயா வைகுண்டரின் அகவல் ஆகியவற்றை ஆய்வுரையுடன் பதிப்பித்திருக்கிறார்.
கல்விநூல்கள்
- அ.கா.பெருமாளின் “நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி” பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி எம்.ஏ. பாடத்திட்டத்தில் 1997 முதல் பாடமாக உள்ளது.
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பி.ஏ., பி.எஸ்.ஸி. தமிழ் முதல் தாளுக்கு ‘ஆய்வுக்கட்டுரைகள்’ என்ற நூல் பாடமாக 1996 முதல் 1999 வரை இருந்தது.
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘பி.லிட்.’ வகுப்பிற்கு தமிழக வரலாறும் பண்பாடும், தற்கால இலக்கியம் குறித்த பாடங்கள் எழுதியுள்ளார்.
- கேரளப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் இரண்டிலும் பி.ஏ. தமிழ் பாடத்திட்டத்தில் அ.கா.பெருமாள் எழுதிய ‘ஆய்வுக்கட்டுரை’ என்ற நூல் 1996 முதல் 1999 வரை பாடமாக இருந்துள்ளது.
- தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் நாட்டுப்புறவியல் துறையில் “நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி” நூல் 2001 முதல் பாடமாக உள்ளது.
- திருச்சி பெரியார் அரசு தன்னாட்சி கல்லூரியில் (திருச்சி) ‘ஆய்வுக்கட்டுரைகள்’ நூல் பாடமாக 2003 முதல் 2006 வரை இருந்துள்ளது.
- “பொன்னிறத்தாள் கதை” நூல் புதுதில்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பாடத்திட்டத்தில் பாடமாக 2002 முதல் 2005 வரை இருந்துள்ளது.
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய வரலாறு பி.ஏ. தமிழிற்குப் பாடமாக 2003 முதல் உள்ளது.
- குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கிய வரலாறு பாடமாக 2007 முதல் உள்ளது.
பிற பணிகள்
- ஆலோசகர், கன்னியாகுமரி மாவட்டக் கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்கம்.
- ஆலோசகர், தமிழக கணிகர் தோல்பாவைக்கூத்துக் கலைஞர் சங்கம், நாகர்கோவில்.
- செயலர், செம்பவளம் ஆய்வுத்தளம், நாகர்கோவில்.
- ஆயுள் உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.
விருதுகள்
- தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை விருது - "தென்னிந்தியாவில் தோல் பாவைக் கூத்து" என்னும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில், நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
- தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை விருது - தமிழில் 2003-இல் வெளிவந்த சிறந்த நூலுக்காகத் ‘தென்குமரியின் கதை’ என்ற நூலுக்குப் பாராட்டிதழ் அளித்தது (31.03.2004)
- Great contribution Award - People Parliament for unity and development, Kanyakumari (19 ஆகஸ்ட் 2017)
நூல் பட்டியல்
வ.எண். | நூலின் பெயர் | பதிப்பகம் | ஆண்டு |
---|---|---|---|
1. | நாட்டார் கதைகள் பகுதி 1 | கோமளா ஸ்டோர்,
நாகர்கோவில் சோபிதம், நாகர்கோவில். |
1978
1986 |
2. | புதிய தமிழில் பழைய கவிதை | மீனாட்சி புத்தக நிலையம்,
மதுரை. |
1979 |
3. | கன்னியாகுமரி அன்னை மாயம்மா | கன்னியா பிரசுராலயம்,
நாகர்கோவில். |
1979 |
4. | தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி | க்ரியா,
சென்னை. |
1983 |
5. | கவிமணியின் இன்னொரு பக்கம் | பயோனீர் புக் சர்வீஸஸ்,
சென்னை. |
1990 |
6. | தொல்பழம் சமயக்கூறுகள் | பயோனீர் புக் சர்வீஸஸ்,
சென்னை. |
1990 |
7. | ஆய்வுக்கட்டுரைகள் | பத்மா புக்ஸ் ஏஜென்சி,
பப்ளிஷர்ஸ், நாகர்கோவில். |
1993
1997 2003 2005 2007 |
8. | கன்னியாகுமரி மாவட்ட வரலாறு | சுபா பதிப்பகம்,
நாகர்கோவில். |
1995 |
9. | நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி | ரோகிணி பிரிண்டர்ஸ் (பி)லிட் நாகர்கோவில். | 1995 |
10. | பொதுக்கட்டுரைகள் | பத்மாபுக்ஸ்டால்,
நாகர்கோவில். |
1997
2000 2001 |
11. | பெயரில் என்ன இருக்கிறது | பத்மா புக்ஸ் ஏஜென்சி,
பப்ளிஷர்ஸ், நாகர்கோவில். |
1997 |
12. | கோவில் சார்ந்த நாட்டார் கலைகள் | வருண் பதிப்பகம்,
நாகர்கோவில். |
1997 |
13. | பொன்னிறத்தாள்கதை (ப.ஆ) | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை. |
1997 |
14. | தோல்பாவைக் கூத்து | வருண் பதிப்பகம்,
நாகர்கோவில். |
1998 |
15. | வில்லுப்பாட்டுப் புராணக்கதைகள் | வருண் பதிப்பகம்,
நாகர்கோவில். |
1998 |
16. | முல்லைப்பாட்டு (உரையும் விளக்கமும்) | உமா பதிப்பகம்,
சென்னை. |
1998 |
17. | குமரி மாவட்டக் கிராமியக் கலைகளும், கலைஞரும் | வருண் பதிப்பகம்,
நாகர்கோவில். |
1999 |
18. | தம்பிமார் கதை (ப.ஆ) (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) | ஆசியவியல் நிறுவனம்,
சென்னை. |
1999 |
19. | நூல்வடிவில் வராத கவிமணியின் படைப்புகள் | ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை. |
1999 |
20. | நாஞ்சில்நாட்டு முதலியார் ஓலைச்சுவடிகள் காட்டும் சமூகம் | மக்கள் வெளியீடு,
சென்னை. |
1999 |
21.அ. | தமிழ் இலக்கிய வரலாறு | நிர்மால்யம்,
நாகர்கோவில். |
2000
2001 2002 2003 2004 |
21.ஆ. | தமிழ் இலக்கிய வரலாறு | சுதர்சன் புக்ஸ்,
நாகர்கோவில். (முழுவதும் திருத்தப்பட்ட பதிவு) |
2005
2006 2007 2008 2009 2010 2011 2012 2013 2014 |
22. | இராம கீர்த்தனம் (ப.ஆ) | ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை. |
2000 |
23. | நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் | தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம்,
சென்னை. |
2001 |
24. | கவிமணியின் வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் (மொ.ப) | ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை. |
2001 |
25. | நாட்டுப்புற மகாபாரதக் கதைகள் | ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை. |
2001 |
26. | குமரி நாட்டுப்புறவியல் (ப.ஆ) | தன்னனானே பதிப்பகம், பெங்களூர் | ஜுன், டிச.2001 |
27. | சுசீந்திரம் கோவில் | வருண் பதிப்பகம்,
நாகர்கோவில். |
2001 |
28. | கம்பரின் தனிப்பாடல்கள் | ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை. |
2001 |
29. | இயக்கியம்மன் கதையும் வழிபாடும் (ப.ஆ) | ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை. |
2002 |
30. | தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து | தன்னனானே பதிப்பகம்,
சென்னை. |
2002 |
31. | கவிமணியின் கவிதைகள் முழுதும் அடங்கிய ஆய்வுப்பதிப்பு (ப.ஆ) | ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை. |
2002 |
32. | ஸ்ரீ நாராயணகுரு வாழ்வும் வாக்கும் | ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை. |
2003 |
33. | பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில் | ரோகிணி ஏஜென்சிஸ்,
நாகர்கோவில். |
2003 |
34. | இராமாயணத் தோல்பாவைக் கூத்து | தன்னனானே பதிப்பகம்,
சென்னை. |
2003 |
35. | தெய்வங்கள் முளைக்கும் நிலம் | தமிழினி,
சென்னை. |
2003 |
36. | குருகுல மக்கள் கதை (ப.ஆ) | ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை. |
2003 |
37. | தென்குமரியின் கதை | யுனைடெட் ரைட்டர்ஸ்,
சென்னை |
2003 |
38. | நல்லதங்காள் (ப.ஆ) | தன்னனானே பதிப்பகம்,
சென்னை |
2004 |
39. | நாஞ்சில் வட்டார வழக்கு சொல்லகராதி | தமிழினி,
சென்னை. |
2004 |
40. | ஒரு குடும்பத்தின் கதை | யுனைடெட் ரைட்டர்ஸ்,
சென்னை. |
2004 |
41. | வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை வரலாறு | யுனைடெட் ரைட்டர்ஸ்,
சென்னை. |
2004 |
42. | கவிமணியின் கட்டுரைகள் | தமிழினி,
சென்னை. |
2004 |
43. | கர்ப்பமாய் பெற்ற கன்னிகள் | தமிழினி,
சென்னை. |
2004 |
44. | சனங்களின் சாமி கதைகள் | யுனைடெட் ரைட்டர்ஸ்,
சென்னை. |
2004 |
45. | சித்தூர் தளவாய் மாடன் கதை (ப.ஆ) | காவ்யா, சென்னை | 2004 |
46. | கானலம் பெருந்துறை (ப.ஆ) | தமிழினி,
சென்னை. |
2005 |
47. | அலைகளினூடே (ப.ஆ) | யுனைடெட் ரைட்டர்ஸ்,
சென்னை. |
2005 |
48. | முதலியார் ஆவணங்கள் (ப.ஆ) | தமிழினி,
சென்னை. |
2005 |
49. | காகங்களின் கதை | காலச்சுவடு அறக்கட்டளை,
நாகர்கோவில். |
2005 |
50. | சுண்ணாம்பு கேட்ட இசக்கி | யுனைடெட் ரைட்டர்ஸ்,
சென்னை. |
2005 |
51. | ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் | தமிழினி,
சென்னை. |
2006 |
52. | தாணுமாலையன் ஆலயம் | தமிழினி,
சென்னை. |
2008 |
53. | வாழ்வை நகர்த்தும் கலைஞன் | முத்து பதிப்பகம்,
சென்னை. |
2008 |
54. | நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் (ப.ஆ) | காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில். |
2008
2010 2016 |
55. | குடிபோதை - புனைவுகள் தெளிவுகள், (ப.ஆ) | தமிழினி,
சென்னை. |
2008 |
56. | படிக்கக் கேட்ட பழங்கதைகள் | மருதம் வெளியீடு,
நெய்வேலி. |
2008 |
57. | அகிலத்திரட்டு அம்மானை (ப.ஆ) | காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில். |
2009 |
58. | சடங்கில் கரைந்த கலைகள் | காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில். |
2009,
2010 |
59. | இராமன் எத்தனை இராமனடி | காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில். |
2010 |
60. | சிவாலய ஓட்டம் | காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில். |
2011 |
61. | காலந்தோறும் தொன்மங்கள் | தமிழினி,
சென்னை. |
2011 |
62. | உணவுப் பண்பாடு | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை. |
2012 |
63. | தென்குமரியின் சரித்திரம் | சுதர்சன் புக்ஸ்,
நாகர்கோவில். |
2012,
2013 |
64. | அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள் | காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில். |
2012 |
65. | தென்குமரிக் கோவில்கள் | சுதர்சன் புக்ஸ்,
நாகர்கோவில். |
2014 |
66. | தமிழர் கலையும் பண்பாடும் | பாவை பதிப்பகம்,
சென்னை. |
2014 |
67. | Kavimani Desivinayagam Pillai Historical Research Articles (Edi) | Raghav Publication,
Nagercoil. |
2015 |
68. | Desivinayagam Pillai Kandalar Salar (Edi) | Raghav Publication,
Nagercoil. |
2015 |
69. | வயல் காட்டு இசக்கி | காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில். |
2015 |
70. | தென்னிந்திய தோல்பாவைக்கூத்து | காவ்யா,
சென்னை, |
2015 |
71. | திருக்கோயில்கள் வழிகாட்டி கன்னியாகுமரி மாவட்டம் | தமிழக அரசு. | 2015 |
72. | மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொருபக்கம் | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை. |
2016 |
73. | முதலையர் ஓலைகள் | காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில். |
2016 |
74. | இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை | காவ்யா
சென்னை |
2017 |
75. | சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம் | காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில் |
2018 |
76. | பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் | என்.பி.எச்,
சென்னை |
2018 |
77. | கவிமணி வரலாற்றாய்வாளர் | என்.பி.எச், சென்னை | 2018 |
78. | வையாபுரிப்பிள்ளையின் கால ஆராய்ச்சி | காவ்யா, சென்னை | 2018 |
79. | தமிழறிஞர்கள் | காலச்சுவடு, நாகர்கோவில் | 2018 |
80. | தமிழர் பண்பாடு (பிற். சோழர் காலம் வரை) | என்.சி.பி.எச்., சென்னை | 2018 |
81. | கவிமணியின் கட்டுரைகள் | காவ்யா, சென்னை | 2019 |
82. | பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை | 2020 |
83. | பூதமடம் நம்பூதிரி | காலச்சுவடு, நாகர்கோவில் | 2020 |
84. | அடிமை ஆவணங்கள் | காலச்சுவடு, நாகர்கோவில் | 2021 |
85. | கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள் | சுதர்சன் புக்ஸ் & கிராப் பிட்ஸ், நாகர்கோவில் | 2021 |
86. | தமிழக வரலாறும் பண்பாடும் | நியூசெஞ்சுரிபுக் ஹவுஸ், சென்னை | 2021 |
87.
89 |
தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள் | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை | 2021 |
வெளி இணைப்புகள்
- அ.கா. பெருமாள் இணையதளம்
- குமரி மாவட்ட வரலாறு | பாகம் -1 | ஆய் மன்னர்கள் காலம் | முனைவர்அ க பெருமாள் |
- அ.கா.பெருமாள் பற்றி ஜெயமோகன்
- அ.கா.பெரிமாள் 60, ஜெயமோகன்
- அ.கா.பெருமாள் நாட்டார்கதை ஆய்வாளர், ஆர்.ஜெய்குமார், இந்து தமிழ் திசை, மே 2018
- அ. கா. பெருமாள் – கலந்துரையாடல் நிகழ்வு, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், 17 அக்டோபர் 2020,
- “பதிவுசெய்யப்பட்டது முழுமையான வரலாறல்ல” - நாட்டார் வழக்காற்றியலாளர் அ.கா.பெருமாள் நேர்காணல், மண்குதிரை இணையதளம்
✅Finalised Page