எண்செய்யுள்: Difference between revisions
Subhasrees (talk | contribs) (Ready for review added) |
(Moved to Standardised) |
||
Line 31: | Line 31: | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{ | {{Standardised}} |
Revision as of 13:51, 27 February 2022
எண்செய்யுள் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவன் ஒருவனின் ஊரையும் பெயரையும் சிறப்பித்து, பத்து முதல் ஆயிரம் பாடல்கள் வரை அமையப்பெற்றது எண்செய்யுள் . ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட பாடலை இறைவன் குடிகொண்டுள்ள அல்லது அரசன் வாழும் ஊரின் பெயரைச் சொல்லிப் புகழ்வது எண்செய்யுள். [1] [2] நூலின் பெயர் இதில் உள்ள பாடல்களின் எண்ணிக்கையைக் குறித்து அமையும்[3].
எடுத்துக்காட்டு நூல்கள்
எண்செய்யுள் நூல்கள் சில:
- முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டியர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு ஒவ்வொருவர் மீதும் தொள்ளாயிரம் பாடல்கள் அமையப் பாடப்பட்டது. அதனால் இது முத்தொள்ளாயிரம் (மூன்று தொள்ளாயிரம்) எனப் பெயர் பெற்றது.
- அரும்பைத்தொள்ளாயிரம்
- திருஈங்கோய்மலை எழுபது,
- திருவொற்றியூர் ஒருபா ஒருபது
குறிப்புகள்
- ↑
ஒத்திடும் பாட்டுடைத்தலைவன் ஊர்பெயரினை
எடுத்தும் எண்ணால் பெயர் பெற
ஈரைந்து கவிமுதல் ஆயிரம்வரை சொல்லல்
எண்செய்யுள் ஆகுமன்றே - ↑ பிரபந்த தீபம்-21
- ↑
ஊரையும் பெயரையும் உவந்து எண்ணாலே
சீரிதின் பாடல் எண்செய்யுள் ஆகும்
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.