கிருபா சத்தியநாதன்: Difference between revisions
(Corrected text format issues) |
(Corrected Category:நாவலாசிரியர்கள் to Category:நாவலாசிரியர்) |
||
(8 intermediate revisions by the same user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=கிருபா|DisambPageTitle=[[கிருபா (பெயர் பட்டியல்)]]}} | |||
{{OtherUses-ta|TitleSection=சத்தியநாதன்|DisambPageTitle=[[சத்தியநாதன் (பெயர் பட்டியல்)]]}} | |||
[[File:Kirupa.png|thumb|கிருபா சத்தியநாதன்]] | [[File:Kirupa.png|thumb|கிருபா சத்தியநாதன்]] | ||
{{Read English|Name of target article=Krupa Satthianadhan|Title of target article=Krupa Satthianadhan}} | {{Read English|Name of target article=Krupa Satthianadhan|Title of target article=Krupa Satthianadhan}} | ||
Line 10: | Line 12: | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
கிருபாபாய் சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க தன் 16 வயதில் தனியாக சென்னைக்கு வந்தார். சென்னையில் அவர் சென்னை சீயோன் தேவாலயத்தில் பணியாற்றி வந்த புகழ்பெற்ற மதப்பரப்புநரான ரெவெரெண்ட் வில்லியம் தாமஸ் சத்தியநாதனின் ([[டபிள்யூ.டி. சத்தியநாதன்]]) குடும்பத்துடன் தங்கினார். 1878-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கிருபா சத்தியநாதன் மருத்துவப்பணியில் காசநோய் தொற்றுக்கு ஆளானார். 1879-ல் புனேவில் உள்ள தனது சகோதரியிடம் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்றார். | கிருபாபாய் சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க தன் 16 வயதில் தனியாக சென்னைக்கு வந்தார். சென்னையில் அவர் சென்னை சீயோன் தேவாலயத்தில் பணியாற்றி வந்த புகழ்பெற்ற மதப்பரப்புநரான ரெவெரெண்ட் வில்லியம் தாமஸ் சத்தியநாதனின் ([[டபிள்யூ.டி. சத்தியநாதன்]]) குடும்பத்துடன் தங்கினார். 1878-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கிருபா சத்தியநாதன் மருத்துவப்பணியில் காசநோய் தொற்றுக்கு ஆளானார். 1879-ல் புனேவில் உள்ள தனது சகோதரியிடம் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்றார். | ||
கிருபா சத்தியநாதனின் மகன் [[சாமுவேல் சத்தியநாதன்]]னை காதலித்து1881-ல் மணந்துகொண்டார். சாமுவேல் கேம்ப்ரிட்ஜ் மாணவர். சாமுவேல் ஊட்டியில் 'Breeks Memorial School' பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றச் சென்றார். கிருபா மருத்துவக் கல்வியை முடிக்காமல் ஊட்டிக்குச் சென்று அங்கே கல்விப்பணிகளில் ஈடுபட்டார். ஊட்டியில் அவருடைய காசநோய் கட்டுக்குள் இருந்தது. அங்குதான் அவர் தன் ஆரம்பகட்ட கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார். | கிருபா சத்தியநாதனின் மகன் [[சாமுவேல் சத்தியநாதன்]]னை காதலித்து1881-ல் மணந்துகொண்டார். சாமுவேல் கேம்ப்ரிட்ஜ் மாணவர். சாமுவேல் ஊட்டியில் 'Breeks Memorial School' பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றச் சென்றார். கிருபா மருத்துவக் கல்வியை முடிக்காமல் ஊட்டிக்குச் சென்று அங்கே கல்விப்பணிகளில் ஈடுபட்டார். ஊட்டியில் அவருடைய காசநோய் கட்டுக்குள் இருந்தது. அங்குதான் அவர் தன் ஆரம்பகட்ட கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார். | ||
[[File:Satthianadhans andson thumb.jpg|thumb|ரெவெரெண்ட் சத்யநாதன் குடும்பம்]] | [[File:Satthianadhans andson thumb.jpg|thumb|ரெவெரெண்ட் சத்யநாதன் குடும்பம்]] | ||
மூன்றாண்டுகளுக்குப்பின் சாமுவேலும் கிருபாவும் இன்றைய ஆந்திரமாநிலத்தில் ராஜமந்திரிக்கு சென்றனர். அங்கே வெம்மையான சூழலில் கிருபா மீண்டும் நோயுற்றார். ராஜமந்திரியில் இருந்து அவர்கள் கும்பகோணத்துக்கு மாறினார்கள். அவருடைய உடல்நிலை சீர்கெட்டிருந்தாலும் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். | மூன்றாண்டுகளுக்குப்பின் சாமுவேலும் கிருபாவும் இன்றைய ஆந்திரமாநிலத்தில் ராஜமந்திரிக்கு சென்றனர். அங்கே வெம்மையான சூழலில் கிருபா மீண்டும் நோயுற்றார். ராஜமந்திரியில் இருந்து அவர்கள் கும்பகோணத்துக்கு மாறினார்கள். அவருடைய உடல்நிலை சீர்கெட்டிருந்தாலும் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். | ||
1886-ல் சாமுவேல் சத்தியநாதன் சென்னை மாநிலக்கல்லூரியில் ஆசிரியராக பொறுப்பேற்றதும் அவர்கள் மீண்டும் சென்னைக்கே வந்துசேர்ந்தனர். | 1886-ல் சாமுவேல் சத்தியநாதன் சென்னை மாநிலக்கல்லூரியில் ஆசிரியராக பொறுப்பேற்றதும் அவர்கள் மீண்டும் சென்னைக்கே வந்துசேர்ந்தனர். | ||
சென்னையில் கிருபா அவருடைய முதல் நாவலை எழுதினார். 'சகுணா ஒரு கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை' 1887 முதல் 1888 வரை அன்று மதிப்பு மிக்கதாக இருந்த Madras Christian College Magazine-ல் வெளிவந்தது. இந்தக் காலகட்டத்தில் கிருபாவின் ஒரே குழந்தை ஒருவயது நிறைவதற்குள் இறந்தது. அது கிருபாவை ஆழ்ந்த உளச்சோர்வுக்குள் தள்ளியது. அவருடைய காசநோயும் உச்சமடைந்தது.,அப்போதுதான் அவர் 'கமலா ஒரு இந்துப்பெண்ணின் கதை'யை எழுதினார். நடுவே தன் மாமனாரைப்பற்றியும் தன் மாமியாரைப்பற்றியும் இரு நினைவுக்குறிப்புகளை எழுதினார்.கிருபாவின் இறப்புக்குப்பின் ’கமலா இந்துப்பெண்ணின் கதை’ வெளிவந்தது. | சென்னையில் கிருபா அவருடைய முதல் நாவலை எழுதினார். 'சகுணா ஒரு கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை' 1887 முதல் 1888 வரை அன்று மதிப்பு மிக்கதாக இருந்த Madras Christian College Magazine-ல் வெளிவந்தது. இந்தக் காலகட்டத்தில் கிருபாவின் ஒரே குழந்தை ஒருவயது நிறைவதற்குள் இறந்தது. அது கிருபாவை ஆழ்ந்த உளச்சோர்வுக்குள் தள்ளியது. அவருடைய காசநோயும் உச்சமடைந்தது.,அப்போதுதான் அவர் 'கமலா ஒரு இந்துப்பெண்ணின் கதை'யை எழுதினார். நடுவே தன் மாமனாரைப்பற்றியும் தன் மாமியாரைப்பற்றியும் இரு நினைவுக்குறிப்புகளை எழுதினார்.கிருபாவின் இறப்புக்குப்பின் ’கமலா இந்துப்பெண்ணின் கதை’ வெளிவந்தது. | ||
== பொதுப்பணிகள் == | == பொதுப்பணிகள் == | ||
Line 19: | Line 24: | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
[[File:Kamala.book.jpg|thumb|கிருபா சத்யநாதன்]] | [[File:Kamala.book.jpg|thumb|கிருபா சத்யநாதன்]] | ||
கிருபா ஊட்டியில் இருந்த காலகட்டத்தில் An Indian Lady என்ற பெயரில் குறிப்புகளை Soth India Observer , National Indian Journal போன்ற இதழ்களில் எழுதினார். அவர் எழுதிய A Visit to the Todas அவருக்கு அறிமுகத்தை உருவாக்கி அளித்தது. | கிருபா ஊட்டியில் இருந்த காலகட்டத்தில் An Indian Lady என்ற பெயரில் குறிப்புகளை Soth India Observer , National Indian Journal போன்ற இதழ்களில் எழுதினார். அவர் எழுதிய A Visit to the Todas அவருக்கு அறிமுகத்தை உருவாக்கி அளித்தது. 1893-ல் கிருபா அவருடைய முதல் சிறுகதையான The Story of Conversion எழுதினார். | ||
கிருபா சத்தியநாதன் 1887-1888-ல் [[வில்லியம் மில்லர்]] ஆசிரியத்துவத்தில் வெளிவந்த மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மாகஸீன் ஆங்கில மாத இதழில் 'Saguna ‘ என்னும் நாவலை தொடராக எழுதினார். 1892ல் அது 'Saguna: A Story of Native Christian Life’ என்ற தலைப்பில் நூல்வடிவாகியது. 1893-ல் ' Kamala -The Story of a Hindu Girl" என்னும் நாவலை எழுதினார். 1894 ல் அவர் மறைந்தபின்னரே அது நூல்வடிவாகியது | |||
கிருபா சத்தியநாதன் 1887-1888-ல் [[வில்லியம் மில்லர்]] ஆசிரியத்துவத்தில் வெளிவந்த மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மாகஸீன் ஆங்கில மாத இதழில் 'Saguna ‘ என்னும் நாவலை தொடராக எழுதினார். 1892ல் அது 'Saguna: A Story of Native Christian Life’ என்ற தலைப்பில் நூல்வடிவாகியது. 1893-ல் ' Kamala -The Story of a Hindu Girl" என்னும் நாவலை எழுதினார். 1894-ல் அவர் மறைந்தபின்னரே அது நூல்வடிவாகியது | |||
இந்நாவல்களை [[சாமுவேல் பவுல்]] என்னும் மதப்பிரச்சாரகர் தமிழுக்கு மொழியாக்கம் செய்து , சகுணா- ஒரு கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை,கமலா- ஒரு இந்துப்பெண்ணின் வாழ்க்கை என்னும் தலைப்புகளில் 1896-ல் நூலாக வெளியிட்டார். | இந்நாவல்களை [[சாமுவேல் பவுல்]] என்னும் மதப்பிரச்சாரகர் தமிழுக்கு மொழியாக்கம் செய்து , சகுணா- ஒரு கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை,கமலா- ஒரு இந்துப்பெண்ணின் வாழ்க்கை என்னும் தலைப்புகளில் 1896-ல் நூலாக வெளியிட்டார். | ||
கிருபாவின் நாவல்கள் அவை வெளிவந்த காலத்தில் பெரிதும்பேசப்பட்டாலும் பின்னர் மறக்கப்பட்டன. பின் காலனிய ஆய்வாளர்களான Susie Tharu & K. Lalitha தன் ''landmark Women Writing in India'' (1991) என்னும் நூலில் கிருபா சத்தியநாதன் பற்றி எழுதினார்கள். அதன்பின்னரே அந்நாவல்கள் மறுபிரசுரம் கண்டன. | கிருபாவின் நாவல்கள் அவை வெளிவந்த காலத்தில் பெரிதும்பேசப்பட்டாலும் பின்னர் மறக்கப்பட்டன. பின் காலனிய ஆய்வாளர்களான Susie Tharu & K. Lalitha தன் ''landmark Women Writing in India'' (1991) என்னும் நூலில் கிருபா சத்தியநாதன் பற்றி எழுதினார்கள். அதன்பின்னரே அந்நாவல்கள் மறுபிரசுரம் கண்டன. | ||
== மறைவு == | == மறைவு == | ||
Line 27: | Line 35: | ||
== நினைவுகள் == | == நினைவுகள் == | ||
கிருபாபாய் பேரில் சென்னை மருத்துவக் கல்லூரியில் ஓர் உதவித்தொகை நிறுவப்பட்டுள்ளது. | கிருபாபாய் பேரில் சென்னை மருத்துவக் கல்லூரியில் ஓர் உதவித்தொகை நிறுவப்பட்டுள்ளது. | ||
சென்னை பல்கலையில் ஆங்கிலத்தில் முதலிடம்பெறும் மாணவிக்கு ஒரு தங்கப்பதக்கமும் கிருபாபாயின் பெயரால் வழங்கப்படுகிறது | சென்னை பல்கலையில் ஆங்கிலத்தில் முதலிடம்பெறும் மாணவிக்கு ஒரு தங்கப்பதக்கமும் கிருபாபாயின் பெயரால் வழங்கப்படுகிறது | ||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
Line 34: | Line 43: | ||
[[File:கிருபா கல்லறை.png|thumb|கிருபா கல்லறை]] | [[File:கிருபா கல்லறை.png|thumb|கிருபா கல்லறை]] | ||
ஆய்வாளர் தேவிகா, கிருபா சத்தியநாதனின் நாவல்களில் உள்ள இந்த இருபக்க இடர்களையும் அவருடைய நூல்களுக்கு முன்னுரைகள் எழுதிய வெள்ளையர் புரிந்துகொள்ளவில்லை என்று சொல்கிறார். அவர்கள் தங்களுடைய சேவைகளுக்காகவும், கிறிஸ்தவத்தை அளித்தமைக்காகவும் கிருபா நன்றியுடன் இருப்பதாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.கிருபாவின் மறைவுக்குப் பின் அவர் நூல்களுக்கு முன்னுரை அளித்த வெள்ளைப் பெண்மணிகள் அரவணைக்கும் பாவனையிலேயே எழுதியிருக்கிறார்கள். கிருபாவிற்கு முன்னுரை அளித்த குடும்ப நண்பர் திருமதி எலிசபெத் கிரிக் (Mrs Elisabeth Grigg) கிருபா வெள்ளைக் கிறிஸ்தவர்களின் இனக்காழ்ப்பு பற்றி சொன்னவை அவருடைய தனிப்பட்ட சமநிலையின்மையின் விளைவு என்று கருதுகிறார்.<ref>[https://www.sahapedia.org/how-krupabai-satthianadhan-pioneered-indian-feminist-writing-english How Krupabai Satthianadhan Pioneered Indian Feminist Writing in English | Sahapedia]</ref> | ஆய்வாளர் தேவிகா, கிருபா சத்தியநாதனின் நாவல்களில் உள்ள இந்த இருபக்க இடர்களையும் அவருடைய நூல்களுக்கு முன்னுரைகள் எழுதிய வெள்ளையர் புரிந்துகொள்ளவில்லை என்று சொல்கிறார். அவர்கள் தங்களுடைய சேவைகளுக்காகவும், கிறிஸ்தவத்தை அளித்தமைக்காகவும் கிருபா நன்றியுடன் இருப்பதாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.கிருபாவின் மறைவுக்குப் பின் அவர் நூல்களுக்கு முன்னுரை அளித்த வெள்ளைப் பெண்மணிகள் அரவணைக்கும் பாவனையிலேயே எழுதியிருக்கிறார்கள். கிருபாவிற்கு முன்னுரை அளித்த குடும்ப நண்பர் திருமதி எலிசபெத் கிரிக் (Mrs Elisabeth Grigg) கிருபா வெள்ளைக் கிறிஸ்தவர்களின் இனக்காழ்ப்பு பற்றி சொன்னவை அவருடைய தனிப்பட்ட சமநிலையின்மையின் விளைவு என்று கருதுகிறார்.<ref>[https://www.sahapedia.org/how-krupabai-satthianadhan-pioneered-indian-feminist-writing-english How Krupabai Satthianadhan Pioneered Indian Feminist Writing in English | Sahapedia]</ref> | ||
சமீபகாலமாக பெண்ணிய நோக்குடன் கிருபா சத்யநாதனின் கதைகளை ஆராயும் ஆய்வாளர்களான பிரியா ஜோஷி போன்றவர்களே கிருபாவின் பார்வை என்பது கிறிஸ்தவ ஆதரவு நோக்கு கொண்டது அல்ல அது பிராமணியக் குடும்ப அமைப்பு கிறிஸ்தவ இனவாதம் ஆகிய அனைத்துக்கும் எதிரான பெண்ணின் விடுதலைக்கான குரல் என கருதுகிறார்கள். | சமீபகாலமாக பெண்ணிய நோக்குடன் கிருபா சத்யநாதனின் கதைகளை ஆராயும் ஆய்வாளர்களான பிரியா ஜோஷி போன்றவர்களே கிருபாவின் பார்வை என்பது கிறிஸ்தவ ஆதரவு நோக்கு கொண்டது அல்ல அது பிராமணியக் குடும்ப அமைப்பு கிறிஸ்தவ இனவாதம் ஆகிய அனைத்துக்கும் எதிரான பெண்ணின் விடுதலைக்கான குரல் என கருதுகிறார்கள். | ||
கிருபா சத்தியநாதன் தொடர்களை எழுதிய சென்னை கிறிஸ்தவக் கல்லூரி இதழில் [[அ. மாதவையா|அ.மாதவையா]] உள்ளிட்ட அன்றைய முன்னோடி தமிழ் நாவலாசிரியர்கள் எழுதிக்கொண்டிருந்தனர். சென்னையில் இருந்து வெளிவந்த [[விவேக சிந்தாமணி|விவேகசிந்தாமணி]] இதழில் அ.மாதவையா 1892-ல் 'சாவித்ரி சரித்திரம்' என்றபெயரில் ஒரு நாவலை எழுதிக்கொண்டிருந்தார். (பின்னாளில் அது [[முத்துமீனாட்சி]] என்னும் நாவலாகியது) இந்நாவல்கள் எல்லாம் ஒரே காலகட்டத்தில் ஏறத்தாழ ஒரே வகையான கதைக்கருக்களைக் கொண்டவையாக உள்ளன. ஆகவே இவை ஒப்பீட்டு ஆய்வுக்குரியவை | கிருபா சத்தியநாதன் தொடர்களை எழுதிய சென்னை கிறிஸ்தவக் கல்லூரி இதழில் [[அ. மாதவையா|அ.மாதவையா]] உள்ளிட்ட அன்றைய முன்னோடி தமிழ் நாவலாசிரியர்கள் எழுதிக்கொண்டிருந்தனர். சென்னையில் இருந்து வெளிவந்த [[விவேக சிந்தாமணி|விவேகசிந்தாமணி]] இதழில் அ.மாதவையா 1892-ல் 'சாவித்ரி சரித்திரம்' என்றபெயரில் ஒரு நாவலை எழுதிக்கொண்டிருந்தார். (பின்னாளில் அது [[முத்துமீனாட்சி]] என்னும் நாவலாகியது) இந்நாவல்கள் எல்லாம் ஒரே காலகட்டத்தில் ஏறத்தாழ ஒரே வகையான கதைக்கருக்களைக் கொண்டவையாக உள்ளன. ஆகவே இவை ஒப்பீட்டு ஆய்வுக்குரியவை | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* ''The Satthianadhan Family Album'', by Eunice de Souza | * ''The Satthianadhan Family Album'', by Eunice de Souza | ||
== | == அடிக்குறிப்புகள் == | ||
<references /> | <references /> | ||
* [https://www.youtube.com/watch?v=vMsdu9KglvM&ab_channel=WithoutJesusiamnothing கிருபா சத்தியநாதன் காணொளி] | * [https://www.youtube.com/watch?v=vMsdu9KglvM&ab_channel=WithoutJesusiamnothing கிருபா சத்தியநாதன் காணொளி] | ||
*[http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=15034 கிருபா சத்தியநாதன் - பா.சு.ரமணன் தென்றல் இதழ்] | *[http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=15034 கிருபா சத்தியநாதன் - பா.சு.ரமணன் தென்றல் இதழ்] | ||
* [https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2020/may/03/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3411769.html நூறாண்டு கண்ட மொழிபெயர்ப்பு நாவல்கள் தினமணி] | * [https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2020/may/03/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3411769.html நூறாண்டு கண்ட மொழிபெயர்ப்பு நாவல்கள் தினமணி] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 13:32:14 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:நாவலாசிரியர்]] |
Latest revision as of 12:11, 17 November 2024
- கிருபா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கிருபா (பெயர் பட்டியல்)
- சத்தியநாதன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சத்தியநாதன் (பெயர் பட்டியல்)
To read the article in English: Krupa Satthianadhan.
கிருபா சத்தியநாதன் (கிருபாபாய் சத்தியநாதன்/ கிருபை சத்தியநாதன்) (பிப்ரவரி 14, 1862 - 1894) தமிழ்ப்பெண்களின் வாழ்க்கையை பற்றி ஆங்கிலத்தில் நாவல்களை எழுதியவர். இவரது நாவல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. ஆகவே சில ஆய்வாளர்கள் இவரை தமிழ் நாவலாசிரியர்களின் பட்டியலில் சேர்ப்பதுண்டு. இவர் 'Kamala- A Hindu life' மற்றும் ' Saguna-A Christian life' என்னும் இரு நாவல்களை எழுதியிருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெண்களின் வாழ்க்கை பற்றிய பெண்நிலைவாதச் சித்திரங்களை எழுதியவர் என இன்று மதிப்பிடப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
கிருபாபாய் சத்தியநாதன் பிப்ரவரி 14, 1862-ல் அன்றைய மகாராஷ்டிர மாநிலத்தில் அகமதுநகரில் பிறந்தார். தந்தை பெயர் ஹரிபந்த் கிஷ்டி (Haripant Khisti) தாய் ராதாபாய். பிராமணக்குடியில் பிறந்த ஹரிபந்த் ராதாபாய் இருவரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினர்.
கிருபாபாய்க்கு பாஸ்கர் என்ற அண்ணன் இருந்தார். பாஸ்கர் கிருபா பாய்க்கு இலக்கியத்தையும் நூல்களையும் அறிமுகம் செய்தார். ஆனால் இளமையிலேயே பாஸ்கர் மறைந்தார். அது கிருபாபாயின் உள்ளத்தில் பெரிய காயமாக ஆகியது. தன் 'சகுணா கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை' நாவலில் பாஸ்கரை சிறந்த கதாபாத்திரமாகப் படைத்திருக்கிறார். பாஸ்கரின் மறைவால் உளம்சோர்ந்திருந்த கிருபாபாயைத் தேற்றிய இரு வெள்ளையின கிறிஸ்தவப் பெண்கள் அவரது கல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். மும்பைக்கு கல்வி கற்கச்சென்ற கிருபா ஓரு அமெரிக்க பெண் மருத்துவரைச் சந்தித்து மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டார்.கூரிய மாணவியான கிருபாபாய் இரு வெள்ளையப் பெண்களின் கல்வி உதவித்தொகை பெற்று சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க தன் 16 வயதில் தனியாக சென்னைக்கு வந்தார். சென்னை மருத்துவக்கல்லூரியில் 1878-ல் சேர்ந்தார். காசநோய்க்கு ஆளானதால் மருத்துவப்படிப்பை முடிக்கவில்லை
தனிவாழ்க்கை
கிருபாபாய் சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க தன் 16 வயதில் தனியாக சென்னைக்கு வந்தார். சென்னையில் அவர் சென்னை சீயோன் தேவாலயத்தில் பணியாற்றி வந்த புகழ்பெற்ற மதப்பரப்புநரான ரெவெரெண்ட் வில்லியம் தாமஸ் சத்தியநாதனின் (டபிள்யூ.டி. சத்தியநாதன்) குடும்பத்துடன் தங்கினார். 1878-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கிருபா சத்தியநாதன் மருத்துவப்பணியில் காசநோய் தொற்றுக்கு ஆளானார். 1879-ல் புனேவில் உள்ள தனது சகோதரியிடம் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்றார்.
கிருபா சத்தியநாதனின் மகன் சாமுவேல் சத்தியநாதன்னை காதலித்து1881-ல் மணந்துகொண்டார். சாமுவேல் கேம்ப்ரிட்ஜ் மாணவர். சாமுவேல் ஊட்டியில் 'Breeks Memorial School' பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றச் சென்றார். கிருபா மருத்துவக் கல்வியை முடிக்காமல் ஊட்டிக்குச் சென்று அங்கே கல்விப்பணிகளில் ஈடுபட்டார். ஊட்டியில் அவருடைய காசநோய் கட்டுக்குள் இருந்தது. அங்குதான் அவர் தன் ஆரம்பகட்ட கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார்.
மூன்றாண்டுகளுக்குப்பின் சாமுவேலும் கிருபாவும் இன்றைய ஆந்திரமாநிலத்தில் ராஜமந்திரிக்கு சென்றனர். அங்கே வெம்மையான சூழலில் கிருபா மீண்டும் நோயுற்றார். ராஜமந்திரியில் இருந்து அவர்கள் கும்பகோணத்துக்கு மாறினார்கள். அவருடைய உடல்நிலை சீர்கெட்டிருந்தாலும் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.
1886-ல் சாமுவேல் சத்தியநாதன் சென்னை மாநிலக்கல்லூரியில் ஆசிரியராக பொறுப்பேற்றதும் அவர்கள் மீண்டும் சென்னைக்கே வந்துசேர்ந்தனர்.
சென்னையில் கிருபா அவருடைய முதல் நாவலை எழுதினார். 'சகுணா ஒரு கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை' 1887 முதல் 1888 வரை அன்று மதிப்பு மிக்கதாக இருந்த Madras Christian College Magazine-ல் வெளிவந்தது. இந்தக் காலகட்டத்தில் கிருபாவின் ஒரே குழந்தை ஒருவயது நிறைவதற்குள் இறந்தது. அது கிருபாவை ஆழ்ந்த உளச்சோர்வுக்குள் தள்ளியது. அவருடைய காசநோயும் உச்சமடைந்தது.,அப்போதுதான் அவர் 'கமலா ஒரு இந்துப்பெண்ணின் கதை'யை எழுதினார். நடுவே தன் மாமனாரைப்பற்றியும் தன் மாமியாரைப்பற்றியும் இரு நினைவுக்குறிப்புகளை எழுதினார்.கிருபாவின் இறப்புக்குப்பின் ’கமலா இந்துப்பெண்ணின் கதை’ வெளிவந்தது.
பொதுப்பணிகள்
கிருபா ஊட்டியில் இருந்தபோது அங்கே தலித் - முஸ்லீம் பெண்குழந்தைகளுக்காக ஒரு பள்ளியை சர்ச் மிஷனரி சொசைட்டி உதவியுடன் தொடங்கினார்.
இலக்கிய வாழ்க்கை
கிருபா ஊட்டியில் இருந்த காலகட்டத்தில் An Indian Lady என்ற பெயரில் குறிப்புகளை Soth India Observer , National Indian Journal போன்ற இதழ்களில் எழுதினார். அவர் எழுதிய A Visit to the Todas அவருக்கு அறிமுகத்தை உருவாக்கி அளித்தது. 1893-ல் கிருபா அவருடைய முதல் சிறுகதையான The Story of Conversion எழுதினார்.
கிருபா சத்தியநாதன் 1887-1888-ல் வில்லியம் மில்லர் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மாகஸீன் ஆங்கில மாத இதழில் 'Saguna ‘ என்னும் நாவலை தொடராக எழுதினார். 1892ல் அது 'Saguna: A Story of Native Christian Life’ என்ற தலைப்பில் நூல்வடிவாகியது. 1893-ல் ' Kamala -The Story of a Hindu Girl" என்னும் நாவலை எழுதினார். 1894-ல் அவர் மறைந்தபின்னரே அது நூல்வடிவாகியது
இந்நாவல்களை சாமுவேல் பவுல் என்னும் மதப்பிரச்சாரகர் தமிழுக்கு மொழியாக்கம் செய்து , சகுணா- ஒரு கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை,கமலா- ஒரு இந்துப்பெண்ணின் வாழ்க்கை என்னும் தலைப்புகளில் 1896-ல் நூலாக வெளியிட்டார்.
கிருபாவின் நாவல்கள் அவை வெளிவந்த காலத்தில் பெரிதும்பேசப்பட்டாலும் பின்னர் மறக்கப்பட்டன. பின் காலனிய ஆய்வாளர்களான Susie Tharu & K. Lalitha தன் landmark Women Writing in India (1991) என்னும் நூலில் கிருபா சத்தியநாதன் பற்றி எழுதினார்கள். அதன்பின்னரே அந்நாவல்கள் மறுபிரசுரம் கண்டன.
மறைவு
கிருபாபாய் சத்தியநாதன் 1894-ல் தன் 31-வது வயதில் உயிரிழந்தார்.புரசைவாக்கத்தில், அவரது மகளது சமாதியின் அருகே ஒரு சமாதி அமைக்கப்பட்டது.
நினைவுகள்
கிருபாபாய் பேரில் சென்னை மருத்துவக் கல்லூரியில் ஓர் உதவித்தொகை நிறுவப்பட்டுள்ளது.
சென்னை பல்கலையில் ஆங்கிலத்தில் முதலிடம்பெறும் மாணவிக்கு ஒரு தங்கப்பதக்கமும் கிருபாபாயின் பெயரால் வழங்கப்படுகிறது
நூல்கள்
கிருபாபாய் சத்தியநாதன் மற்றும் சத்தியநாதன் குடும்பத்தினரைப் பற்றி யூனிஸ் டி சூசா (Eunice D'susa ) என்னும் ஆய்வாளர் The Sathiyanadhan Family Album என்னும் நூலை வெளியிட்டார். இதில் கிருபாபாய் சத்தியநாதனின் சிறுகதை இடம்பெற்றுள்ளது.
இலக்கிய இடம்
கிருபா சத்தியநாதனின் நாவல்கள் இரண்டுமே தன் வரலாற்றுத்தன்மை கொண்டவை. 'சகுணா ஒரு கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை' பெருமளவுக்கு அவருடைய வாழ்க்கையையும் 'கமலா ஒரு இந்துப்பெண்ணின் வாழ்க்கை' பெருமளவுக்கு அவர் தாயின் வாழ்க்கையையும் காட்டுகிறது என ஆய்வாளர்கள் கருதுகிறர்கள். கமலா சமகாலத்தில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும் கிருபாவின் தாய் அடைந்த பழமைவாதக் குடும்பத்து அடக்குமுறைகளையே அது பெரிதும் பேசுகிறது. இந்நாவல்களில் பெண்களின் துயர்களை கிருபா எழுதிக்காட்டுகிறார். மதம் மாறுவது எளிமையான தீர்வாக இருப்பதில்லை. மதம் மாறுபவர்கள் சொந்த சமூகத்தை இழப்பதுடன் தங்களை மதமாற்றிய வெள்ளையர்களின் இனமேட்டிமை நோக்கையும் எதிர்கொள்ள நேர்கிறது. கிருபாவின் நாவல்கள் பெண்கள் அடையும் அந்த இடர்களையே பெரிதும் எழுதுகின்றன.
ஆய்வாளர் தேவிகா, கிருபா சத்தியநாதனின் நாவல்களில் உள்ள இந்த இருபக்க இடர்களையும் அவருடைய நூல்களுக்கு முன்னுரைகள் எழுதிய வெள்ளையர் புரிந்துகொள்ளவில்லை என்று சொல்கிறார். அவர்கள் தங்களுடைய சேவைகளுக்காகவும், கிறிஸ்தவத்தை அளித்தமைக்காகவும் கிருபா நன்றியுடன் இருப்பதாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.கிருபாவின் மறைவுக்குப் பின் அவர் நூல்களுக்கு முன்னுரை அளித்த வெள்ளைப் பெண்மணிகள் அரவணைக்கும் பாவனையிலேயே எழுதியிருக்கிறார்கள். கிருபாவிற்கு முன்னுரை அளித்த குடும்ப நண்பர் திருமதி எலிசபெத் கிரிக் (Mrs Elisabeth Grigg) கிருபா வெள்ளைக் கிறிஸ்தவர்களின் இனக்காழ்ப்பு பற்றி சொன்னவை அவருடைய தனிப்பட்ட சமநிலையின்மையின் விளைவு என்று கருதுகிறார்.[1]
சமீபகாலமாக பெண்ணிய நோக்குடன் கிருபா சத்யநாதனின் கதைகளை ஆராயும் ஆய்வாளர்களான பிரியா ஜோஷி போன்றவர்களே கிருபாவின் பார்வை என்பது கிறிஸ்தவ ஆதரவு நோக்கு கொண்டது அல்ல அது பிராமணியக் குடும்ப அமைப்பு கிறிஸ்தவ இனவாதம் ஆகிய அனைத்துக்கும் எதிரான பெண்ணின் விடுதலைக்கான குரல் என கருதுகிறார்கள்.
கிருபா சத்தியநாதன் தொடர்களை எழுதிய சென்னை கிறிஸ்தவக் கல்லூரி இதழில் அ.மாதவையா உள்ளிட்ட அன்றைய முன்னோடி தமிழ் நாவலாசிரியர்கள் எழுதிக்கொண்டிருந்தனர். சென்னையில் இருந்து வெளிவந்த விவேகசிந்தாமணி இதழில் அ.மாதவையா 1892-ல் 'சாவித்ரி சரித்திரம்' என்றபெயரில் ஒரு நாவலை எழுதிக்கொண்டிருந்தார். (பின்னாளில் அது முத்துமீனாட்சி என்னும் நாவலாகியது) இந்நாவல்கள் எல்லாம் ஒரே காலகட்டத்தில் ஏறத்தாழ ஒரே வகையான கதைக்கருக்களைக் கொண்டவையாக உள்ளன. ஆகவே இவை ஒப்பீட்டு ஆய்வுக்குரியவை
உசாத்துணை
- The Satthianadhan Family Album, by Eunice de Souza
அடிக்குறிப்புகள்
- கிருபா சத்தியநாதன் காணொளி
- கிருபா சத்தியநாதன் - பா.சு.ரமணன் தென்றல் இதழ்
- நூறாண்டு கண்ட மொழிபெயர்ப்பு நாவல்கள் தினமணி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:14 IST