under review

திருப்போரூர் முருகன் சந்நிதி முறை

From Tamil Wiki

திருப்போரூர் முருகன் சந்நிதி முறை (பதிப்பு: 1967) திருப்போரூர் முருகப்பெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. இந்நூலை இயற்றியவர் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்.

வெளியீடு

திருப்போரூர் முருகன் சந்நிதி முறை நூலை, 1967, திருப்போரூர் கந்தசுவாமி தேவஸ்தானம் வெளியிட்டது.

ஆசிரியர்

சிதம்பர சுவாமிகள் (சிதம்பர அடிகள்) வீரசைவ மரபைச் சேர்ந்த பக்திக் கவிஞர். வீரசைவ மரபைச் சேர்ந்த துறையூர் சாந்தலிங்க அடிகளின் மாணவர். திருப்போரூரில் கோயில் கொண்ட முருகன் மேல் பல துதி நூல்களை இயற்றியவர்.

சந்நிதி முறை விளக்கம்

இறைவனிடம் அன்பு செலுத்துவோர் தம் தாழ்ந்த நிலையையும், தம்முடைய குறைகளையும் இறைவன் வீற்றிருக்கும் தலத்தில், இறைவன் திருமுன்பு எடுத்துரைப்பதாக, இறைவனிடம் வேண்டி விரும்பிப் பாடும் விண்ணப்பப் பாடல்களே சந்நிதி முறை.

நூல் அமைப்பு

திருப்போரூர் முருகன் சந்நிதி முறை தொகுப்பு நூலில் கீழ்க்காணும் பாடல் நூல்கள் இடம்பெற்றன.

மதிப்பீடு

திருப்போரூர் முருகன் சந்நிதி முறை தொகுப்பு நூல், முருகன் மீதான பக்தி இலக்கியங்களில் ஒன்றாகவும், 17-ம் நூற்றாண்டில் தோன்றிய சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • திருப்போரூர் முருகன் சந்நிதி முறை, திருப்போரூர் கந்தசுவாமி தேவஸ்தானம், முதல் பதிப்பு: 1967


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Oct-2025, 11:34:00 IST