கதைக்கோவை – தொகுதி 5
கதைக்கோவை – தொகுதி-5 (2019), அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு. இந்நூல், பிற நான்கு தொகுதிகளுடன் இணைந்து, ஐந்து தொகுதிகள் கொண்ட ஆறு நூல்களாக, 2019-ல், வெளியானது.
பிரசுரம், வெளியீடு
கதைக்கோவையின் ஐந்தாவது தொகுதி, 2019-ல், அல்லயன்ஸ் பதிப்பகத்தின் 117-வது ஆண்டில், 117 எழுத்தாளர்களின் 117 சிறுகதைகளுடன், இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டது.
கதைக்கோவையின் ஐந்து தொகுதிகளையும், புதிய மீள் பதிப்பாக, ஆறு நூல்களாக அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டது
கதைக்கோவை – ஐந்தாவது தொகுதி: முதல் பாகம்
கதைக்கோவையின் ஐந்தாவது தொகுதியின் முதல் பாகத்தில் 58 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றன.
உள்ளடக்கம் – முதல் பாகம்
கதைக்கோவையின் ஐந்தாவது தொகுதியின் முதல் பாகத்தில் கீழ்காணும் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்றன.
எண் | எழுத்தாளர் | சிறுகதை |
---|---|---|
1 | வ.பா. அக்கலாஞ் செட்டி | வேட்டையும் காதலும் |
2 | அசோகன் | வெறி |
3 | அநுத்தமா | சந்தேகம் |
4 | எஸ். அம்புஜம்மாள் | அவர் எங்கே இருப்பார்? |
5 | ஏ.ஆர். அருணாச்சலம் | சிதறிய வீணை |
6 | க. அருணாச்சலம் | பிராயச்சித்தம் |
7 | எஸ். ஆத்ரேயன் | பாசம் |
8 | எஸ். ஆறுமுகம் | திரை விலகியது |
9 | ஹேமா ஆனந்ததீர்த்தன் | கஷ்டம் தீர்ந்தது! |
10 | இராஜ நாயகன் (யாழ்பாணம்) | இதயக் கோயில் |
11 | க. கணபதி | கூடலுக்குப் பின் |
12 | கமலாதாஸ் | தியாகம் |
13 | கலைப்பித்தன் | அவள் முறையீடு |
14 | கி.நா. கிருஷ்ணமூர்த்தி | சிதைந்த வாழ்க்கை |
15 | டி.ஏ. கிருஷ்ணமூர்த்தி | பொங்கலுக்கு மறுநாள் |
16 | ஆர். கிருஷ்ணவேணி | ஆசாபாசம் |
17 | வி. கிருஷ்ணன் | பரிக்ஷை முடிவு |
18 | கீதா | தபால்கார ரங்கையன் |
19 | கோபாலராஜம் | மனப்புண் |
20 | கோபுலு | பாவம்! கான்ஸ்டேபிள் பொன்னுஸ்வாமி! |
21 | கோமதி சுவாமிநாதன் | தண்டனை |
22 | டி.கே. கோவிந்தன் | ஏகாங்கி! |
23 | கௌசிகன் | காளிங்கனின் கைகள் |
24 | சகி (ச.கி. சுவாமிநாதன்) | அம்மா |
25 | எஸ். சங்கரன் | துரதிர்ஷ்டசாலி |
26 | வீ.மு. சங்கரன் | ஊஞ்சல் |
27 | சசிதேவி | பெண் மனம் |
28 | சண்முகம் (யாழ்ப்பாணம்) | அபலை |
29 | வி.என். சதாசிவராவ் | சாந்த நிலை |
30 | சன்மிஷ்டை | அணைந்த தீபம் |
31 | சரஸா | அதிருஷ்டச் சங்கிலி |
32 | சாமா | ஆசையின் முடிவு |
33 | சாலிவாஹனன் (கலாமோகினி ராஜகோபால்) | பஞ்சபாணம் |
34 | ரா.வே. சாவித்திரி தேவி | சலனம் |
35 | வை. சுப்பிரமணியன் | தாம்பத்யம் |
36 | வ.உ.சி. சுப்பிரமணியம் | அன்னையின் அன்பு |
37 | சுபஸ்ரீ | களத்துமேட்டு விவகாரம் |
38 | சுவாமி | சலனமும் சாந்தியும் |
39 | டி.வி. சுவாமிநாதன் | லட்சியவாதி |
40 | சுவை | இலட்சியவாதி |
41 | சூரியன் | கடன் |
42 | வி. சேதுராமன் | கல்யாணி |
43 | தத்து (ரா. தத்தாத்ரி) | காளி |
44 | தமிழ்வாணன் | நன்றி கொன்றேன்! நான் வாழலாமா? |
45 | ப.இராசை தனுஷ்கோடி | அன்பின் சிகரம் |
46 | அரு. தியாகராஜன் | வாழ்க்கை நாடகம் |
47 | தேவநாதன் | வார விடுமுறை |
48 | தோத்தாத்ரிநாத் | தலைவிதி |
49 | சோ. நடேச முதலியார் | புஸ்தகத்தில் புதையல் |
50 | நாதப்ரியை | போன மச்சான் |
51 | கை. நாராயணசாமி | முதற் சம்பவம் |
52 | நித்யானந்தன் (கே.வி. கோபாலகிருஷ்ணன்) | விதியின் கயிறு |
53 | பங்கஜம்மாள் | ஜோஸியம் |
54 | பஞ்சாபகேசன் | தீர்ப்பு |
55 | ஏ.கே. பட்டுசாமி | புயலும் அமைதியும் |
56 | பத்மா சேஷாத்ரி | காதலும் கல்யாணமும் |
57 | ரா. பரத்குமார் | கருணை |
58 | ஜி.எஸ். பாலகிருஷ்ணன் | நாடோடி |
கதைக்கோவை – ஐந்தாவது தொகுதி: இரண்டாம் பாகம்
கதைக்கோவையின் ஐந்தாவது தொகுதியின் இரண்டாம் பாகத்தில் 59 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றன.
உள்ளடக்கம் – இரண்டாம் பாகம்
கதைக்கோவையின் ஐந்தாவது தொகுதியின் இரண்டாம் பாகத்தில் கீழ்காணும் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்றன.
எண் | எழுத்தாளர் | சிறுகதை |
---|---|---|
1 | சோ. ஆ. பாலசௌந்தரம் | தோடி ராகம் |
2 | பாலதேவன் | சரசுவின் டயரி |
3 | ஜி. பாலா | புரியாத புதிர் |
4 | பாலு | அன்னை வடிவம் |
5 | புவனா | சீனுவின் சாமர்த்தியம் |
6 | கே.டி.எஸ். புன்னைவனம் | காளி கோவில் |
7 | புஷ்பா மஹாதேவன் | அன்பளிப்பு |
8 | புஷ்யன் | யார் ஏழை? |
9 | பூர்ணம் விஸ்வநாதன் | நொண்டிக் கணவன் |
10 | தே.ப. பெருமாள் | மௌன மன்னிப்பு |
11 | சி. பொன்னுசாமி | தாயின் அன்பு |
12 | கே. பி. போஜராஜன் | சரசுவின் தியாகம் |
13 | இ. மகாதேவா (யாழ்ப்பாணம்) | ராஜு - அவன் ஒரு ஐன்ஸ்டைன் |
14 | மகாயன் (ரா.சு. கோமதிநாயகம்) | வல்லாரும் வையகமும் |
15 | மதிமுகன் | மரணத்தின் முன்னே! |
16 | மயிலன் கே. பொன்னுசாமி | பிச்சைக்காரி |
17 | ஆர். பி. மல்லாரி | நல்லகண்ணு |
18 | மாயா | புதிர் |
19 | மானஸீகன் | பிரிந்த காதலர் |
20 | மீனாட்சி கிருஷ்ணமூர்த்தி | லீலா ஸ்ரீகுப்தன் |
21 | மீனாட்சி சுந்தரம் | ஆகஸ்ட் எழுச்சி |
22 | மீனா நாராயணன் | ஆசாபாசம் |
23 | கே. எம். முகமது யூசுப் | காதலின் வேகம் |
24 | எம்.கே. முத்துக்குமரன் | ஞானோதயம் |
25 | முருகு | பொன்னுச்சாமி |
26 | ஏ. எஸ். பண்டிட் ரங்கநாத சிரோமணி | ராஜாயி |
27 | டி.எம். ரத்னா | கொடுத்த வாக்கு |
28 | ராம அடைக்கலவன் | புத்தவொளி |
29 | பி.வி. ராமகிருஷ்ணன் (பி.வி.ஆர்.) | பரிசு |
30 | ராவியாகினி பீவி (ராணி) | அது கூடாதுதான் |
31 | சி.வி. ராகவன் | மத்தியான ரகளை |
32 | என்.பி.வி. ராஜகோபால் | சிலையின் குறை |
33 | எஸ்.வி. ராஜகோபாலன் | மூன்று நாள் காய்ச்சல் |
34 | ஸி.ஆர். ராஜம்மா | மாலதி |
35 | ஸ்ரீமதி ராஜலக்ஷ்மி சந்திரசேகர் | பிரயாணி |
36 | எம்.எஸ் ராஜா (ராஜகோபாலன்) | வெற்றி யாருக்கு? |
37 | கு. ராஜாராம் | குழற் காதல் |
38 | ரா. ருக்மணி | அவள் கண்ட இன்பம் |
39 | கே.ஜே. ருக்மணி | பேராசையின் பலன் |
40 | லக்ஷ்மி | விசித்திரப் பிறவி |
41 | லக்ஷ்மி நாகராஜன் | உல்லாசப் படகு |
42 | கே. லக்ஷ்மி நாராயணன் | ஸஹானா |
43 | வசீகரன் | தயிர்வடையின் மஹாத்மியம் |
44 | தி.ச. வரதராஜன் (யாழ்ப்பாணம்) | இன்பத்திற்கு ஓர் எல்லை |
45 | மு. வரதராசன் | மன்னிக்க வேண்டும் |
46 | வலம்புரி சோமநாதன் | சுஜாதை |
47 | வஸுமதி ராமசாமி | அன்றும் இன்றும் |
48 | கி விஸ்வநாதன் | சந்தேகம் |
49 | எச். விஜயகுமார் | விதியும் வீணையும் |
50 | விஜயராகவாசார்யார் | விதி வழியே |
51 | விஜயஸ்ரீ சிவஸ்வாமி | பூனைக் குட்டி |
52 | ஜெ. வெங்கடேசன் | வேர்க்கடலை மோகம் |
53 | ரா. வேங்கடேஸ்வரன் | என் அத்தான் |
54 | வேணுபாய் பார்ஸி | மனோதத்துவம் |
55 | வேம்பு (விக்ரமன்) | பித்தளை மோதிரம் |
56 | வி.எஸ். ஜகந்நாதன் | மனித உள்ளம் |
57 | எஸ். ஜானகிராமன் | கைதியின் தீபாவளி |
58 | ஆ. ஸ்ரீநிவாஸன் | ஓய்வு |
59 | ஸ்ரீநிவாஸன் வி.எஸ். | வீரமும் காதலும் |
மதிப்பீடு
கதைக்கோவை தொகுதிகள், புதிய கருப்பொருள்களைக் கொண்ட சிறுகதைகளைப் படைத்த பல எழுத்தாளர்களைக் கவனப்படுத்தின. எழுத்தாளர்களும், அவர்களுடைய படைப்புகளும் வாசக கவனம் பெறக் காரணமாயின. கதைக்கோவைத் தொகுதிகள் குறித்து, தொகுதி நான்கின் பதிப்பாளர் உரையில், “தமிழ்நாட்டில் சிறுகதை உலகத்தில் கதைக் கோவைத் தொகுதிகள் நிரந்தரமான ஸ்தானத்தை அடைந்துவிட்டன. எழுத்தாளர்களின் எழுத்துத் திறமையை ஒருங்கே பார்க்கும் கண்ணாடியாக இவை உதவுகின்றன. தமிழ்நாட்டில் புதிய உணர்ச்சியும் புதிய ஜீவனும் உண்டாகி அற்புதங்களை விளைவிக்கின்றன என்பதைக் கதைக்கோவைத் தொகுதிகள் புதிது புதிதாக வெளியாவதாலும், ஒவ்வொன்றிலும் புதிய புதிய எழுத்தாளர்களின் கதைகள் வெளியாவதாலும் தெரிந்துகொள்ளலாம். தமிழ்க் கதைகளின் வளர்ச்சிக்குப் பத்திரிகைகள் செய்த தொண்டு மிகச்சிறந்ததென்பதற்குக் கதைக் கோவைத் தொகுதிகள் ஒரு சாட்சியாக இருக்கும்.” என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது.
உசாத்துணை
✅Finalised Page