under review

சுத்தானந்த பாரதி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
Line 6: Line 6:
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
சுத்தானந்த பாரதி பனையூரைச் சொந்த ஊராகக்கொண்ட சிவிகுல ஜடாதரய்யருக்கும் காமாட்சி அம்மையாருக்கும் நான்காவது குழந்தையாக மே 11, 1897-ல் சிவகங்கையில் பிறந்தார். இயற்பெயர் வேங்கட சுப்பிரமணியன். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள், ஒரு மூத்த சகோதரி. ஜடாதரய்யர் குடும்பம் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள். வேதம், இசை ஆகியவற்றை தொழிலாகக் கொண்டவர்கள். இவருடைய வீட்டுக்கு வந்த இவரது உறவினரும் துறவியுமான பூர்ணானந்தர் இவரது ஆற்றலை உணர்ந்து இவருக்கு சுத்தானந்தர் என்று பெயர் சூட்டினார் என தன்வரலாற்றில் சொல்கிறார். சுத்தானந்தரின் தகப்பனார் ஜடாதரய்யர் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
சுத்தானந்த பாரதி பனையூரைச் சொந்த ஊராகக்கொண்ட சிவிகுல ஜடாதரய்யருக்கும் காமாட்சி அம்மையாருக்கும் நான்காவது குழந்தையாக மே 11, 1897-ல் சிவகங்கையில் பிறந்தார். இயற்பெயர் வேங்கட சுப்பிரமணியன். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள், ஒரு மூத்த சகோதரி. ஜடாதரய்யர் குடும்பம் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள். வேதம், இசை ஆகியவற்றை தொழிலாகக் கொண்டவர்கள். இவருடைய வீட்டுக்கு வந்த இவரது உறவினரும் துறவியுமான பூர்ணானந்தர் இவரது ஆற்றலை உணர்ந்து இவருக்கு சுத்தானந்தர் என்று பெயர் சூட்டினார் என தன்வரலாற்றில் சொல்கிறார். சுத்தானந்தரின் தகப்பனார் ஜடாதரய்யர் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
மதுரையில் இவரது தாயின் குடும்பமும் வசதியான குடும்பம். மதுரையில் இவரது தாய் மாமாவும் ஒரு வழக்கறிஞர். இளமையிலேயே தந்தையை இழந்த சுத்தானந்த பாரதியார் மதுரையில் தன் தாய்மாமாவுடன் தங்கிப் படித்தார். சுத்தானந்த பாரதி சிவகங்கையில் ஐந்து வயதில் ரங்க ஐயங்கார் திண்ணைப் பள்ளியில் படித்தார். பின்னர் அரசர் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரைக்குச் சென்று மதுரை பசுமலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றார். சுத்தானந்த பாரதி யோகம், ஆன்மிகம், இலக்கியம், இசை, தேசியப் போராட்டம், கல்வி கற்பித்தல் என பல துறைகளில் நாட்டம் கொண்டிருந்தார். சுத்தானந்தர் சிவகங்கையில் தெய்வசிகாமணியோகி என்பவரிடம் முறையாகத் தமிழ் படித்தார். பின்னர் பூரணானந்தர் உட்பட வெவ்வேறு அறிஞர்களிடம் தமிழ் பக்தி இலக்கியங்களையும் மெய்ஞான நூல்களையும் கற்றார்.
மதுரையில் இவரது தாயின் குடும்பமும் வசதியான குடும்பம். மதுரையில் இவரது தாய் மாமாவும் ஒரு வழக்கறிஞர். இளமையிலேயே தந்தையை இழந்த சுத்தானந்த பாரதியார் மதுரையில் தன் தாய்மாமாவுடன் தங்கிப் படித்தார். சுத்தானந்த பாரதி சிவகங்கையில் ஐந்து வயதில் ரங்க ஐயங்கார் திண்ணைப் பள்ளியில் படித்தார். பின்னர் அரசர் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரைக்குச் சென்று மதுரை பசுமலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றார். சுத்தானந்த பாரதி யோகம், ஆன்மிகம், இலக்கியம், இசை, தேசியப் போராட்டம், கல்வி கற்பித்தல் என பல துறைகளில் நாட்டம் கொண்டிருந்தார். சுத்தானந்தர் சிவகங்கையில் தெய்வசிகாமணியோகி என்பவரிடம் முறையாகத் தமிழ் படித்தார். பின்னர் பூரணானந்தர் உட்பட வெவ்வேறு அறிஞர்களிடம் தமிழ் பக்தி இலக்கியங்களையும் மெய்ஞான நூல்களையும் கற்றார்.
== ஆன்மீகம் ==
== ஆன்மீகம் ==
சுத்தானந்த பாரதியின் மூத்த தாய்மாமாவின் பெயர் ராமசாமி ஐயர். அவருடைய மகளின் கணவர் ஆன்மிகத்தேடல் கொண்டவர். அவரை மனநலமில்லாதவர் என்று துரத்திவிட்டனர். அவர் சுத்தானந்தரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு 'இவர்களுக்கு நம் வழி புரியவில்லை, நீயும் என்னுடன் வந்து விடு' என்றார். அதுவே தன் ஆன்மிக நாட்டத்துக்கு தொடக்கம் என சுத்தானந்தர் தன்வரலாற்றில் சொல்கிறார். அவர் தன்னிடம் "ஞானிகளைப் பித்தர் என்று கூறும் இந்த நரகம் உனக்கு வேண்டாம். உலகம் ஒரு துன்பக்காடு, உள்ளுறவுதான் நல்ல உறவு. நீ தனித்திரு, இனித்திரு" என்றதாக சுத்தானந்தர் பதிவு செய்கிறார். மறுபக்கம் சுத்தானந்த பாரதியின் சித்தியின் கணவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். அவர் தகாத உறவொன்றை வைத்துக் கொண்டு இவரது சித்தியைப் படாத பாடு படுத்தி வந்தார். இந்த இருமுனையில் தான் ஆன்மிகப்பாதையை தெரிவுசெய்ததாக சுத்தானந்த பாரதியார் எழுதுகிறார்.  
சுத்தானந்த பாரதியின் மூத்த தாய்மாமாவின் பெயர் ராமசாமி ஐயர். அவருடைய மகளின் கணவர் ஆன்மிகத்தேடல் கொண்டவர். அவரை மனநலமில்லாதவர் என்று துரத்திவிட்டனர். அவர் சுத்தானந்தரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு 'இவர்களுக்கு நம் வழி புரியவில்லை, நீயும் என்னுடன் வந்து விடு' என்றார். அதுவே தன் ஆன்மிக நாட்டத்துக்கு தொடக்கம் என சுத்தானந்தர் தன்வரலாற்றில் சொல்கிறார். அவர் தன்னிடம் "ஞானிகளைப் பித்தர் என்று கூறும் இந்த நரகம் உனக்கு வேண்டாம். உலகம் ஒரு துன்பக்காடு, உள்ளுறவுதான் நல்ல உறவு. நீ தனித்திரு, இனித்திரு" என்றதாக சுத்தானந்தர் பதிவு செய்கிறார். மறுபக்கம் சுத்தானந்த பாரதியின் சித்தியின் கணவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். அவர் தகாத உறவொன்றை வைத்துக் கொண்டு இவரது சித்தியைப் படாத பாடு படுத்தி வந்தார். இந்த இருமுனையில் தான் ஆன்மிகப்பாதையை தெரிவுசெய்ததாக சுத்தானந்த பாரதியார் எழுதுகிறார்.  
சுத்தானந்த பாரதி சிறுவயதிலேயே பூரணானந்தர், ஞானசித்தர். ரமணர், அரவிந்தர். மேஷர்மிபாபா, சிவானந்தர் எனப் பல ஆன்மிக யோகிகளைச் சந்தித்து ஆன்மீகத்தாக்கத்தை அடைந்தார். தன் 30-33 வயதுக்கு இடைப்பட்ட காலங்களில் கேதார்நாத், பத்ரிநாத், உத்தரகாசி, கங்கோத்ரி போன்ற இடங்களுக்குத் தொடர்ந்து பயணம் செய்து அங்கே இரண்டு மாதங்கள் தங்கித் தவம் செய்தார். அக்காலங்களில் யோகிகளையும் துறவிகளையும் சந்தித்தார். சிரவண பெலகோலாவிலும் திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்திலும் சில காலம் தங்கியிருந்தார்.
சுத்தானந்த பாரதி சிறுவயதிலேயே பூரணானந்தர், ஞானசித்தர். ரமணர், அரவிந்தர். மேஷர்மிபாபா, சிவானந்தர் எனப் பல ஆன்மிக யோகிகளைச் சந்தித்து ஆன்மீகத்தாக்கத்தை அடைந்தார். தன் 30-33 வயதுக்கு இடைப்பட்ட காலங்களில் கேதார்நாத், பத்ரிநாத், உத்தரகாசி, கங்கோத்ரி போன்ற இடங்களுக்குத் தொடர்ந்து பயணம் செய்து அங்கே இரண்டு மாதங்கள் தங்கித் தவம் செய்தார். அக்காலங்களில் யோகிகளையும் துறவிகளையும் சந்தித்தார். சிரவண பெலகோலாவிலும் திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்திலும் சில காலம் தங்கியிருந்தார்.
சுத்தானந்த பாரதி புதுச்சேரி அரவிந்தாஸ்ரமத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் மவுனவிரதம் பூண்டிருக்கும் போது பிரெஞ்சு உட்பட பல மொழிப் புத்தகங்களைப் படித்தார். வடலூரில் யோகசமாஜம் நிறுவி சிலகாலம் இருந்தபோதும் மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார். சிவகங்கை சோழபுரத்தில் சர்வதேசக் குழந்தை ஆண்டில் (1979) சுத்தானந்த யோக சமாஜம் நிறுவினார். சுத்தானந்த பாரதி அரவிந்தரால் யோகி என்றும் சுவாரி சிவானந்தரால் ரிஷி என்றும் சிருங்கேரி நரசிம்ம பாரதி ஸ்வாமிகளால் கவியோகி என்றும் அழைக்கப்பட்டார். இந்தப் பெயர்களில் [[அரவிந்தர்]] கொடுத்த பெயரே நிலைத்தது.
சுத்தானந்த பாரதி புதுச்சேரி அரவிந்தாஸ்ரமத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் மவுனவிரதம் பூண்டிருக்கும் போது பிரெஞ்சு உட்பட பல மொழிப் புத்தகங்களைப் படித்தார். வடலூரில் யோகசமாஜம் நிறுவி சிலகாலம் இருந்தபோதும் மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார். சிவகங்கை சோழபுரத்தில் சர்வதேசக் குழந்தை ஆண்டில் (1979) சுத்தானந்த யோக சமாஜம் நிறுவினார். சுத்தானந்த பாரதி அரவிந்தரால் யோகி என்றும் சுவாரி சிவானந்தரால் ரிஷி என்றும் சிருங்கேரி நரசிம்ம பாரதி ஸ்வாமிகளால் கவியோகி என்றும் அழைக்கப்பட்டார். இந்தப் பெயர்களில் [[அரவிந்தர்]] கொடுத்த பெயரே நிலைத்தது.
== ஆசிரியர் வாழ்க்கை ==
== ஆசிரியர் வாழ்க்கை ==
Line 16: Line 19:
== அரசியல் ==
== அரசியல் ==
சுத்தானந்த பாரதி மதுரை பசுமலை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே [[வ.உ. சிதம்பரனார்|வ.உ.சிதம்பரம் பிள்ளை]], ஜி.சுப்பிரமணிய ஐயர், சுப்ரமணிய சிவா ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. அதன் வழியாக சுத்தானந்த பாரதி இந்திய நாட்டு விடுதலையில் ஈடுபாடு கொண்டார். திருச்சியில் காங்கிரஸ் ஆபீசுக்குச் சென்று அங்கிருந்த [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] , [[தி.சே.சௌ.ராஜன்]] ஆகியோருடன் அறிமுகம் செய்துகொண்டார். நாமக்கல் கவிஞர் [[வெ. இராமலிங்கம் பிள்ளை]] யுடன் அணுக்கமானார். திருச்சியில் காந்தியைச் சந்தித்தார். அது முதல் இறுதிக்காலம் வரை தீவிர காந்தியராகவே திகழ்ந்தார்.  
சுத்தானந்த பாரதி மதுரை பசுமலை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே [[வ.உ. சிதம்பரனார்|வ.உ.சிதம்பரம் பிள்ளை]], ஜி.சுப்பிரமணிய ஐயர், சுப்ரமணிய சிவா ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. அதன் வழியாக சுத்தானந்த பாரதி இந்திய நாட்டு விடுதலையில் ஈடுபாடு கொண்டார். திருச்சியில் காங்கிரஸ் ஆபீசுக்குச் சென்று அங்கிருந்த [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] , [[தி.சே.சௌ.ராஜன்]] ஆகியோருடன் அறிமுகம் செய்துகொண்டார். நாமக்கல் கவிஞர் [[வெ. இராமலிங்கம் பிள்ளை]] யுடன் அணுக்கமானார். திருச்சியில் காந்தியைச் சந்தித்தார். அது முதல் இறுதிக்காலம் வரை தீவிர காந்தியராகவே திகழ்ந்தார்.  
சுத்தானந்த பாரதி வ.வே. சுப்ரமணிய ஐயர் நடத்திய பாரத்வாஜ ஆசிரமத்தில் சேர்ந்து அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றினார். 1917-ல் திலகர், விபின் சந்திரர், தாகூர், மகாத்மா எனப் பலரைச் சந்தித்தார். 1918-1920-ல் தேசவிடுதலைப் பிரச்சாரத்துக்காக நாடெங்கும் சுற்றியலைந்தபோது சுபாஷ் சந்திரபோசைச் சந்தித்தார். அதனால் பிரிட்டிஷ் அரசின் கண்காணிப்புக்கு ஆளானார்.  
சுத்தானந்த பாரதி வ.வே. சுப்ரமணிய ஐயர் நடத்திய பாரத்வாஜ ஆசிரமத்தில் சேர்ந்து அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றினார். 1917-ல் திலகர், விபின் சந்திரர், தாகூர், மகாத்மா எனப் பலரைச் சந்தித்தார். 1918-1920-ல் தேசவிடுதலைப் பிரச்சாரத்துக்காக நாடெங்கும் சுற்றியலைந்தபோது சுபாஷ் சந்திரபோசைச் சந்தித்தார். அதனால் பிரிட்டிஷ் அரசின் கண்காணிப்புக்கு ஆளானார்.  
சுத்தானந்த பாரதி தன் சுயசரிதையில் அவர் ஊர் ஊராக அலைந்து ஒவ்வொரு கிராமத்திலும் தன் பாடல்களையும் [[சி.சுப்ரமணிய பாரதியார்]] பாடல்களையும் பாடியும் சொற்பொழிவாற்றியும் தேசவிடுதலைக் கருத்துக்களைப் பரப்பியதை விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் உள்ள தேசியப்போராட்ட ஆர்வலர்களின் பெயர்களையும் குறிப்பிடுகிறார். தேசவிடுதலைக்காக நன்கொடை வசூல் செய்து அதை காந்திக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்.
சுத்தானந்த பாரதி தன் சுயசரிதையில் அவர் ஊர் ஊராக அலைந்து ஒவ்வொரு கிராமத்திலும் தன் பாடல்களையும் [[சி.சுப்ரமணிய பாரதியார்]] பாடல்களையும் பாடியும் சொற்பொழிவாற்றியும் தேசவிடுதலைக் கருத்துக்களைப் பரப்பியதை விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் உள்ள தேசியப்போராட்ட ஆர்வலர்களின் பெயர்களையும் குறிப்பிடுகிறார். தேசவிடுதலைக்காக நன்கொடை வசூல் செய்து அதை காந்திக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்.
தேசவிடுதலை நோக்குடன் சுத்தானந்த பாரதி ஏராளமாக எழுதியிருக்கிறார். அவர் எழுதிய நூல்களில் 'தமிழர் புரட்சி', 'சுதந்திரக்கனல்', 'வீரத்தேவன்' ஆகியன வெள்ளையருக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய போராட்டத்தின் சரித்திரத்தைப் பின்னணியாகக் கொண்டவை. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்த மருது சகோதரர்களின் வாழ்க்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை 'தமிழர் புரட்சி'.
தேசவிடுதலை நோக்குடன் சுத்தானந்த பாரதி ஏராளமாக எழுதியிருக்கிறார். அவர் எழுதிய நூல்களில் 'தமிழர் புரட்சி', 'சுதந்திரக்கனல்', 'வீரத்தேவன்' ஆகியன வெள்ளையருக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய போராட்டத்தின் சரித்திரத்தைப் பின்னணியாகக் கொண்டவை. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்த மருது சகோதரர்களின் வாழ்க்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை 'தமிழர் புரட்சி'.
ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியன், இந்தி, தெலுங்கு சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் அறிந்தவர். 1928-1930-ஆம் ஆண்டுகளில் தேசவிடுதலைப்போரில் கலந்துகொள்வதற்காக இந்தியா முழுக்கச் சுற்றினார். சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய கவிதைநூல் பாரதசக்தி காவியம். நாட்டுப் பற்று, மதுவிலக்கு, தீண்டாமை போன்றவற்றை அவரது நாடகங்களும் சிறுகதைகளும் வற்புறுத்தியன.  
ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியன், இந்தி, தெலுங்கு சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் அறிந்தவர். 1928-1930-ஆம் ஆண்டுகளில் தேசவிடுதலைப்போரில் கலந்துகொள்வதற்காக இந்தியா முழுக்கச் சுற்றினார். சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய கவிதைநூல் பாரதசக்தி காவியம். நாட்டுப் பற்று, மதுவிலக்கு, தீண்டாமை போன்றவற்றை அவரது நாடகங்களும் சிறுகதைகளும் வற்புறுத்தியன.  
== இலக்கியப் பணிகள் ==
== இலக்கியப் பணிகள் ==
Line 42: Line 49:
== தமிழ் இசை ==
== தமிழ் இசை ==
சுத்தானந்த பாரதியின் முக்கியப் பங்களிப்புகளில் தமிழ் இசையைப் பரப்பியதும் ஒன்று. சுத்தானந்த பாரதி கர்நாடக இசையை முறையாகப் படித்தவர்.அவரது இசை நூல்களில் கீர்த்தனாஞ்சலி, மேளராக மாலை சங்கீத ரத்னாகரம் ஆகியன முக்கியமானவை. அண்ணாமலை செட்டியார் அவரது தமிழிசை கீர்த்தனைகளை அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார். அவரது தமிழ்ப் பாடல்களுக்கு [[டைகர் வரதாச்சாரியார்]] ,பொன்னையா பிள்ளை, [[சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை]], கோமதிசங்கர், [[தண்டபாணி தேசிகர்]] போன்றோர் ஸ்வரம் அமைத்துள்ளனர். [[எம்.எஸ். சுப்புலட்சுமி]], [[டி.கே. பட்டம்மாள்]], [[எம்.எல். வசந்தகுமாரி]], பி.யு. சின்னப்பா, சிதம்பரம் ஜெயராமன் போன்றோர் சுத்தானந்த பாரதியின் இசைப்பாடல்களை மேடையில் பாடினர்.  
சுத்தானந்த பாரதியின் முக்கியப் பங்களிப்புகளில் தமிழ் இசையைப் பரப்பியதும் ஒன்று. சுத்தானந்த பாரதி கர்நாடக இசையை முறையாகப் படித்தவர்.அவரது இசை நூல்களில் கீர்த்தனாஞ்சலி, மேளராக மாலை சங்கீத ரத்னாகரம் ஆகியன முக்கியமானவை. அண்ணாமலை செட்டியார் அவரது தமிழிசை கீர்த்தனைகளை அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார். அவரது தமிழ்ப் பாடல்களுக்கு [[டைகர் வரதாச்சாரியார்]] ,பொன்னையா பிள்ளை, [[சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை]], கோமதிசங்கர், [[தண்டபாணி தேசிகர்]] போன்றோர் ஸ்வரம் அமைத்துள்ளனர். [[எம்.எஸ். சுப்புலட்சுமி]], [[டி.கே. பட்டம்மாள்]], [[எம்.எல். வசந்தகுமாரி]], பி.யு. சின்னப்பா, சிதம்பரம் ஜெயராமன் போன்றோர் சுத்தானந்த பாரதியின் இசைப்பாடல்களை மேடையில் பாடினர்.  
சுத்தானந்த பாரதி நாட்டிய சாஸ்திரம் பற்றி நவரச நடனாஞ்சலி என்னும் நூல் இயற்றியிருக்கிறார். அவருடைய கீர்த்தனைகள் அடங்கிய கீர்த்தனாஞ்சலி என்னும் நூல் வெளிவந்துள்ளது.( [http://www.ibiblio.org/guruguha/MusicResearchLibrary/Books-Tam/BkTm-SuddhanandaBharati-SuddhAnanda-kIrtanAnjali-1963-0149.pdf இணையநூலகம்] )  
சுத்தானந்த பாரதி நாட்டிய சாஸ்திரம் பற்றி நவரச நடனாஞ்சலி என்னும் நூல் இயற்றியிருக்கிறார். அவருடைய கீர்த்தனைகள் அடங்கிய கீர்த்தனாஞ்சலி என்னும் நூல் வெளிவந்துள்ளது.( [http://www.ibiblio.org/guruguha/MusicResearchLibrary/Books-Tam/BkTm-SuddhanandaBharati-SuddhAnanda-kIrtanAnjali-1963-0149.pdf இணையநூலகம்] )  
சுத்தானந்தரின் கீர்த்தனைகளில் புகழ்பெற்றவை சில  
சுத்தானந்தரின் கீர்த்தனைகளில் புகழ்பெற்றவை சில  
* எப்படி பாடினரோ -அடியார், அப்படிப் பாடநான் ஆசைகொண்டேன் சிவமே   
* எப்படி பாடினரோ -அடியார், அப்படிப் பாடநான் ஆசைகொண்டேன் சிவமே   
Line 53: Line 62:
== இதழியல் ==
== இதழியல் ==
சுத்தானந்த பாரதி வ.வே. சுப்ரமணிய ஐயர் நிறுவிய சேரன்மாதேவி குருகுலத்திலிருந்து வெளிவந்த பாலபாரதி பத்திரிகையை முழுப்பொறுப்பு எடுத்து நடத்தினார். கும்பகோணத்திலிருந்து வெளிவந்த [[சமரசபோதினி]]யின் ஆசிரியர் குழுவில் இருந்தார். [[தி.ஜ.ரங்கநாதன்]] சமரசபோதியின் சுத்தானந்த பாரதியுடன் பணியாற்றினார். காங்கிரஸ் தலைவர் டி.பிரகாசம் நடத்திய 'ஸ்வயராஜ்யா' இதழிலும் சுத்தானந்த பாரதி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.  
சுத்தானந்த பாரதி வ.வே. சுப்ரமணிய ஐயர் நிறுவிய சேரன்மாதேவி குருகுலத்திலிருந்து வெளிவந்த பாலபாரதி பத்திரிகையை முழுப்பொறுப்பு எடுத்து நடத்தினார். கும்பகோணத்திலிருந்து வெளிவந்த [[சமரசபோதினி]]யின் ஆசிரியர் குழுவில் இருந்தார். [[தி.ஜ.ரங்கநாதன்]] சமரசபோதியின் சுத்தானந்த பாரதியுடன் பணியாற்றினார். காங்கிரஸ் தலைவர் டி.பிரகாசம் நடத்திய 'ஸ்வயராஜ்யா' இதழிலும் சுத்தானந்த பாரதி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.  
சுத்தானந்த பாரதி நடத்திய ஆங்கிலப் பத்திரிகைகள் 'Renaissance', 'Call - Divine, Nector' 'Jeevan Prakash' ஆகியன. சுத்தானந்த பாரதி தன் இறுதிக்காலத்தில் சென்னை அடையாற்றில் வாழ்ந்தபோது, 'யோகப் பயிற்சி' என்ற பத்திரிகையை நடத்தியிருக்கிறார்.  
சுத்தானந்த பாரதி நடத்திய ஆங்கிலப் பத்திரிகைகள் 'Renaissance', 'Call - Divine, Nector' 'Jeevan Prakash' ஆகியன. சுத்தானந்த பாரதி தன் இறுதிக்காலத்தில் சென்னை அடையாற்றில் வாழ்ந்தபோது, 'யோகப் பயிற்சி' என்ற பத்திரிகையை நடத்தியிருக்கிறார்.  
== சமூகப்பணி ==
== சமூகப்பணி ==
Line 58: Line 68:
== யோகசமாஜம் ==
== யோகசமாஜம் ==
சுத்தானந்த பாரதி தன்னுடைய மெய்யியல் செய்தி உலகமெங்கும் செல்லவேண்டும் என்னும் நோக்குடன் 'யோகசமாஜம்' என்னும் அமைப்பை 1977-ல் சென்னை பள்ளிப்பட்டு ஸ்ரீராம் நகரில் உருவாக்கினார். பின்னர் அது அடையாறுக்கு மாற்றப்பட்டது. 'யோகப்பயிற்சி' என்னும் இதழையும் அங்கிருந்து வெளியிட்டுவந்தார்.
சுத்தானந்த பாரதி தன்னுடைய மெய்யியல் செய்தி உலகமெங்கும் செல்லவேண்டும் என்னும் நோக்குடன் 'யோகசமாஜம்' என்னும் அமைப்பை 1977-ல் சென்னை பள்ளிப்பட்டு ஸ்ரீராம் நகரில் உருவாக்கினார். பின்னர் அது அடையாறுக்கு மாற்றப்பட்டது. 'யோகப்பயிற்சி' என்னும் இதழையும் அங்கிருந்து வெளியிட்டுவந்தார்.
1977-ல் சிவகங்கையின் யோகசமாஜத்தின் கிளையை அமைத்தார். செப்டம்பர் 1, 1979 அன்று சிவகங்கை அருகே சோழபுரம் என்னும் ஊரில் நன்கொடையாகப் பெற்ற தன்னுடைய செல்வத்தைக் கொண்டும், நகரத்தார் உதவியுடனும் 'சுத்தானந்த யோகசமாஜம்' என்னும் அமைப்பை தொடங்கினார். அதனுடன் இணைந்து 'சுத்தானந்த தேசிய வித்யாலயா' என்னும் பள்ளியும் தொடங்கப்பட்டது.ஜூன் 1,1987-ல் அந்நிறுவனம் சொந்தக் கட்டிடங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது.
1977-ல் சிவகங்கையின் யோகசமாஜத்தின் கிளையை அமைத்தார். செப்டம்பர் 1, 1979 அன்று சிவகங்கை அருகே சோழபுரம் என்னும் ஊரில் நன்கொடையாகப் பெற்ற தன்னுடைய செல்வத்தைக் கொண்டும், நகரத்தார் உதவியுடனும் 'சுத்தானந்த யோகசமாஜம்' என்னும் அமைப்பை தொடங்கினார். அதனுடன் இணைந்து 'சுத்தானந்த தேசிய வித்யாலயா' என்னும் பள்ளியும் தொடங்கப்பட்டது.ஜூன் 1,1987-ல் அந்நிறுவனம் சொந்தக் கட்டிடங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது.
1982-ல் சுத்தானந்த பாரதி சென்னையில் இருந்து சோழபுரம் சுத்தானந்த யோகசமாஜத்துக்கு வந்து சேர்ந்தார். பின்னர் நிரந்தரமாக அங்கேயே தங்கியிருந்தார். தன் முதுமையில் மீண்டும் ஒருமுறை ரிஷிகேஷ் செல்ல விரும்பி மாணவர்களுடன் ரிஷிகேஷ் சென்றார். அங்கே சிலரைச் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. பிப்ரவரி,1990-ல் ஊர் திரும்பினார். கிளம்பும்போதே ரிஷிகேஷ் சென்று வந்தபின் உயிர்விடுவேன் என்று கூறித் தன் சமாதிமேல் வைக்கப்படவேண்டிய சிவலிங்கத்தைச் செதுக்க ஏற்பாடு செய்திருந்தார். ரிஷிகேஷ் பயணத்திலேயே உடல்நலம் கெட்டு திரும்பிவந்தார். நோயுற்று சில நாட்கள் மௌனவிரதத்தில் இருந்து பின்னர் மார்ச் மாதம் மறைந்தார்.
1982-ல் சுத்தானந்த பாரதி சென்னையில் இருந்து சோழபுரம் சுத்தானந்த யோகசமாஜத்துக்கு வந்து சேர்ந்தார். பின்னர் நிரந்தரமாக அங்கேயே தங்கியிருந்தார். தன் முதுமையில் மீண்டும் ஒருமுறை ரிஷிகேஷ் செல்ல விரும்பி மாணவர்களுடன் ரிஷிகேஷ் சென்றார். அங்கே சிலரைச் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. பிப்ரவரி,1990-ல் ஊர் திரும்பினார். கிளம்பும்போதே ரிஷிகேஷ் சென்று வந்தபின் உயிர்விடுவேன் என்று கூறித் தன் சமாதிமேல் வைக்கப்படவேண்டிய சிவலிங்கத்தைச் செதுக்க ஏற்பாடு செய்திருந்தார். ரிஷிகேஷ் பயணத்திலேயே உடல்நலம் கெட்டு திரும்பிவந்தார். நோயுற்று சில நாட்கள் மௌனவிரதத்தில் இருந்து பின்னர் மார்ச் மாதம் மறைந்தார்.
== விருதுகள் ==
== விருதுகள் ==
Line 77: Line 89:
== வரலாற்று இடம் ==
== வரலாற்று இடம் ==
சுத்தானந்த பாரதிக்கு தமிழ் வரலாற்றில் யோகி, இலக்கியவாதி , இசைப்பாடலாசிரியர் என்னும் மூன்று தளங்களில் முக்கியமான இடம் உண்டு. தமிழகத்து சித்தர்,யோகியர் முதலிய ஆன்மிகவாதிகளுக்கு நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சியும், ஞானமரபும் உண்டு. அவர்கள் பொதுவாக அரசியல் முதலிய உலகியல் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் விலகியிருப்பதே வழக்கம். மெய்ஞான மரபில் இருந்து நேரடியாக அரசியல் களத்துக்கு வந்த முதல் ஆளுமை சுத்தானந்தர். சுவாமி [[சகஜானந்தர்]] இன்னொரு உதாரணம். காந்திய இயக்கங்களில் தீவிரமாக ஈடுபடும்போதே சுத்தானந்தர் யோகியாகவும், ஆன்மிகப் பிரச்சாரகராகவும் திகழ்ந்தார். இந்தியாவில் பத்தொன்பது -இருபதாம் நூற்றாண்டுகளில் அரசியல்பணியும் ஆன்மிகப்பணியும் ஒன்றாக ஆனமைக்கான உதாரணம் அவர். அரசியல் என்பது ஒரு தொண்டு என்றும் தொண்டு என்பது ஒரு யோகம் என்றும் சுத்தானந்தர் தன் நூல்களில் விளக்குகிறார். இந்த இணைப்பு காந்திய இயக்கத்தின் தத்துவ உள்ளுறையை ஒட்டி நிகழ்ந்தது. காந்தியைப் புரிந்துகொள்ள சுத்தானந்தர் போன்ற யோகிகள் அவர் தலைமையை ஏற்றதைக் கருத்தில் கொண்டாகவேண்டும். காந்தியத்தில் இந்த ஆன்மிக அம்சம் இருந்தது.  
சுத்தானந்த பாரதிக்கு தமிழ் வரலாற்றில் யோகி, இலக்கியவாதி , இசைப்பாடலாசிரியர் என்னும் மூன்று தளங்களில் முக்கியமான இடம் உண்டு. தமிழகத்து சித்தர்,யோகியர் முதலிய ஆன்மிகவாதிகளுக்கு நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சியும், ஞானமரபும் உண்டு. அவர்கள் பொதுவாக அரசியல் முதலிய உலகியல் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் விலகியிருப்பதே வழக்கம். மெய்ஞான மரபில் இருந்து நேரடியாக அரசியல் களத்துக்கு வந்த முதல் ஆளுமை சுத்தானந்தர். சுவாமி [[சகஜானந்தர்]] இன்னொரு உதாரணம். காந்திய இயக்கங்களில் தீவிரமாக ஈடுபடும்போதே சுத்தானந்தர் யோகியாகவும், ஆன்மிகப் பிரச்சாரகராகவும் திகழ்ந்தார். இந்தியாவில் பத்தொன்பது -இருபதாம் நூற்றாண்டுகளில் அரசியல்பணியும் ஆன்மிகப்பணியும் ஒன்றாக ஆனமைக்கான உதாரணம் அவர். அரசியல் என்பது ஒரு தொண்டு என்றும் தொண்டு என்பது ஒரு யோகம் என்றும் சுத்தானந்தர் தன் நூல்களில் விளக்குகிறார். இந்த இணைப்பு காந்திய இயக்கத்தின் தத்துவ உள்ளுறையை ஒட்டி நிகழ்ந்தது. காந்தியைப் புரிந்துகொள்ள சுத்தானந்தர் போன்ற யோகிகள் அவர் தலைமையை ஏற்றதைக் கருத்தில் கொண்டாகவேண்டும். காந்தியத்தில் இந்த ஆன்மிக அம்சம் இருந்தது.  
சுத்தானந்தர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர். ஆகவே நேர்ப்பிரச்சாரமாகவே அவர் தன் ஆக்கங்களை எழுதினார். ஆகவே அவற்றில் இலக்கியத்துக்குரிய நுண்மையும் வடிவ ஒருமையும் அமையவில்லை. ஆகவே இலக்கிய விமர்சகர்களால் அவர் இலக்கியப்படைப்பாளியாக கருத்தில் கொள்ளப்படுவதில்லை. சுத்தானந்தர் மொழியாக்கம் செய்த விக்டர் ஹ்யூகோவின்(Victor Hugo) 'ஏழைபடும்பாடு' (Les Miserables) போன்ற நூல்கள் நவீனத் தமிழிலக்கியத்தில் செல்வாக்கு செலுத்தியவை.  
சுத்தானந்தர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர். ஆகவே நேர்ப்பிரச்சாரமாகவே அவர் தன் ஆக்கங்களை எழுதினார். ஆகவே அவற்றில் இலக்கியத்துக்குரிய நுண்மையும் வடிவ ஒருமையும் அமையவில்லை. ஆகவே இலக்கிய விமர்சகர்களால் அவர் இலக்கியப்படைப்பாளியாக கருத்தில் கொள்ளப்படுவதில்லை. சுத்தானந்தர் மொழியாக்கம் செய்த விக்டர் ஹ்யூகோவின்(Victor Hugo) 'ஏழைபடும்பாடு' (Les Miserables) போன்ற நூல்கள் நவீனத் தமிழிலக்கியத்தில் செல்வாக்கு செலுத்தியவை.  
சுத்தானந்தர் ஓர் இசைப்பாடலாசிரியராக ஓர் வாழும் படைப்பாளி. அவருடைய இசைப்பாடல்கள் மரபிசை மேடைகளில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இசைகற்றவர் என்பதனாலும், இசைப்பாடல்களில் அவருடைய பிரச்சாரநடையும் மனநிலையும் இல்லாமல் நெகிழ்ச்சியான மனநிலையும் அதற்குரிய மொழியும் அமைந்திருப்பதனாலும் அவை இலக்கியப்படைப்புகளாகவும் முக்கியமானவை.  
சுத்தானந்தர் ஓர் இசைப்பாடலாசிரியராக ஓர் வாழும் படைப்பாளி. அவருடைய இசைப்பாடல்கள் மரபிசை மேடைகளில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இசைகற்றவர் என்பதனாலும், இசைப்பாடல்களில் அவருடைய பிரச்சாரநடையும் மனநிலையும் இல்லாமல் நெகிழ்ச்சியான மனநிலையும் அதற்குரிய மொழியும் அமைந்திருப்பதனாலும் அவை இலக்கியப்படைப்புகளாகவும் முக்கியமானவை.  
== நூல்கள் பட்டியல் ==
== நூல்கள் பட்டியல் ==
Line 168: Line 182:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 20:13, 12 July 2023

சுத்தானந்த பாரதி
சுத்தானந்த கீர்த்தனாஞ்சலி
சுத்தானந்தர் ஆசிரியராக இருந்த சக்தி இதழில் அவர் எழுதிய கவிதை. 1939(நன்றி பசுபதி பக்கங்கள்)
கவியோகி- கல்கி அட்டை 1944

சுத்தானந்த பாரதி (யோகி சுத்தானந்த பாரதியார்) (மே 11, 1897 - மார்ச் 7, 1990) தமிழறிஞர், துறவி, விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர். தமிழில் காப்பியம், கவிதை, நாடகம், நாட்டியம், இசைப்பாடல், வரலாறு, கடித இலக்கியம், வாழ்க்கை வரலாறு, சுயவரலாறு, நாட்டுவரலாறு, புனைகதைகள், பயண இலக்கியம், சிறுகதை, இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம் ஆன்மிகம், உடல்கூறு ஆய்வு, யோகம் எனப் பல துறைகளில் எழுதியவர். 'பாரதசக்தி காப்பியம்' அவரின் முக்கியமான படைப்புகளில் ஒன்று.

பிறப்பு, கல்வி

சுத்தானந்த பாரதி பனையூரைச் சொந்த ஊராகக்கொண்ட சிவிகுல ஜடாதரய்யருக்கும் காமாட்சி அம்மையாருக்கும் நான்காவது குழந்தையாக மே 11, 1897-ல் சிவகங்கையில் பிறந்தார். இயற்பெயர் வேங்கட சுப்பிரமணியன். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள், ஒரு மூத்த சகோதரி. ஜடாதரய்யர் குடும்பம் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள். வேதம், இசை ஆகியவற்றை தொழிலாகக் கொண்டவர்கள். இவருடைய வீட்டுக்கு வந்த இவரது உறவினரும் துறவியுமான பூர்ணானந்தர் இவரது ஆற்றலை உணர்ந்து இவருக்கு சுத்தானந்தர் என்று பெயர் சூட்டினார் என தன்வரலாற்றில் சொல்கிறார். சுத்தானந்தரின் தகப்பனார் ஜடாதரய்யர் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.

மதுரையில் இவரது தாயின் குடும்பமும் வசதியான குடும்பம். மதுரையில் இவரது தாய் மாமாவும் ஒரு வழக்கறிஞர். இளமையிலேயே தந்தையை இழந்த சுத்தானந்த பாரதியார் மதுரையில் தன் தாய்மாமாவுடன் தங்கிப் படித்தார். சுத்தானந்த பாரதி சிவகங்கையில் ஐந்து வயதில் ரங்க ஐயங்கார் திண்ணைப் பள்ளியில் படித்தார். பின்னர் அரசர் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரைக்குச் சென்று மதுரை பசுமலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றார். சுத்தானந்த பாரதி யோகம், ஆன்மிகம், இலக்கியம், இசை, தேசியப் போராட்டம், கல்வி கற்பித்தல் என பல துறைகளில் நாட்டம் கொண்டிருந்தார். சுத்தானந்தர் சிவகங்கையில் தெய்வசிகாமணியோகி என்பவரிடம் முறையாகத் தமிழ் படித்தார். பின்னர் பூரணானந்தர் உட்பட வெவ்வேறு அறிஞர்களிடம் தமிழ் பக்தி இலக்கியங்களையும் மெய்ஞான நூல்களையும் கற்றார்.

ஆன்மீகம்

சுத்தானந்த பாரதியின் மூத்த தாய்மாமாவின் பெயர் ராமசாமி ஐயர். அவருடைய மகளின் கணவர் ஆன்மிகத்தேடல் கொண்டவர். அவரை மனநலமில்லாதவர் என்று துரத்திவிட்டனர். அவர் சுத்தானந்தரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு 'இவர்களுக்கு நம் வழி புரியவில்லை, நீயும் என்னுடன் வந்து விடு' என்றார். அதுவே தன் ஆன்மிக நாட்டத்துக்கு தொடக்கம் என சுத்தானந்தர் தன்வரலாற்றில் சொல்கிறார். அவர் தன்னிடம் "ஞானிகளைப் பித்தர் என்று கூறும் இந்த நரகம் உனக்கு வேண்டாம். உலகம் ஒரு துன்பக்காடு, உள்ளுறவுதான் நல்ல உறவு. நீ தனித்திரு, இனித்திரு" என்றதாக சுத்தானந்தர் பதிவு செய்கிறார். மறுபக்கம் சுத்தானந்த பாரதியின் சித்தியின் கணவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். அவர் தகாத உறவொன்றை வைத்துக் கொண்டு இவரது சித்தியைப் படாத பாடு படுத்தி வந்தார். இந்த இருமுனையில் தான் ஆன்மிகப்பாதையை தெரிவுசெய்ததாக சுத்தானந்த பாரதியார் எழுதுகிறார்.

சுத்தானந்த பாரதி சிறுவயதிலேயே பூரணானந்தர், ஞானசித்தர். ரமணர், அரவிந்தர். மேஷர்மிபாபா, சிவானந்தர் எனப் பல ஆன்மிக யோகிகளைச் சந்தித்து ஆன்மீகத்தாக்கத்தை அடைந்தார். தன் 30-33 வயதுக்கு இடைப்பட்ட காலங்களில் கேதார்நாத், பத்ரிநாத், உத்தரகாசி, கங்கோத்ரி போன்ற இடங்களுக்குத் தொடர்ந்து பயணம் செய்து அங்கே இரண்டு மாதங்கள் தங்கித் தவம் செய்தார். அக்காலங்களில் யோகிகளையும் துறவிகளையும் சந்தித்தார். சிரவண பெலகோலாவிலும் திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்திலும் சில காலம் தங்கியிருந்தார்.

சுத்தானந்த பாரதி புதுச்சேரி அரவிந்தாஸ்ரமத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் மவுனவிரதம் பூண்டிருக்கும் போது பிரெஞ்சு உட்பட பல மொழிப் புத்தகங்களைப் படித்தார். வடலூரில் யோகசமாஜம் நிறுவி சிலகாலம் இருந்தபோதும் மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார். சிவகங்கை சோழபுரத்தில் சர்வதேசக் குழந்தை ஆண்டில் (1979) சுத்தானந்த யோக சமாஜம் நிறுவினார். சுத்தானந்த பாரதி அரவிந்தரால் யோகி என்றும் சுவாரி சிவானந்தரால் ரிஷி என்றும் சிருங்கேரி நரசிம்ம பாரதி ஸ்வாமிகளால் கவியோகி என்றும் அழைக்கப்பட்டார். இந்தப் பெயர்களில் அரவிந்தர் கொடுத்த பெயரே நிலைத்தது.

ஆசிரியர் வாழ்க்கை

சுத்தானந்த பாரதி ஆசிரியர் பயிற்சி பெற்றபின்னர் மதுரை அருகே திருமங்கலத்தில் அரசுப்பள்ளியில் ஆசிரியர் பணிக்குச் சென்றார். அங்கே நிரம்பியிருந்த ஊழலைக் கண்டு ஓடிவந்து விட்டதாகப் பதிவுசெய்கிறார். முசிறி அருகே இருந்த காட்டுப்புத்தூர் எனும் ஜமீன் கிராமத்தில் சிறிதுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். அங்கே மாணவர்களுக்கு தீக்குச்சி செய்யக் கற்றுக்கொடுக்க முற்பட்டபோது வெடிமருந்து எரிந்தமையால் விபத்து ஏற்பட்டது. அந்த வேலையில் இருந்து நீக்கப்பட்டார். தேவகோட்டையில் ஆசிரியராகப் பணிபுரிகையில் வ.வே.சு ஐயரின் அழைப்பை ஏற்று சேரன்மாதேவி பாரத்வாஜ ஆசிரமத்தில் சிறிதுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.

சுத்தானந்த பாரதி

அரசியல்

சுத்தானந்த பாரதி மதுரை பசுமலை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஜி.சுப்பிரமணிய ஐயர், சுப்ரமணிய சிவா ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. அதன் வழியாக சுத்தானந்த பாரதி இந்திய நாட்டு விடுதலையில் ஈடுபாடு கொண்டார். திருச்சியில் காங்கிரஸ் ஆபீசுக்குச் சென்று அங்கிருந்த கல்கி , தி.சே.சௌ.ராஜன் ஆகியோருடன் அறிமுகம் செய்துகொண்டார். நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை யுடன் அணுக்கமானார். திருச்சியில் காந்தியைச் சந்தித்தார். அது முதல் இறுதிக்காலம் வரை தீவிர காந்தியராகவே திகழ்ந்தார்.

சுத்தானந்த பாரதி வ.வே. சுப்ரமணிய ஐயர் நடத்திய பாரத்வாஜ ஆசிரமத்தில் சேர்ந்து அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றினார். 1917-ல் திலகர், விபின் சந்திரர், தாகூர், மகாத்மா எனப் பலரைச் சந்தித்தார். 1918-1920-ல் தேசவிடுதலைப் பிரச்சாரத்துக்காக நாடெங்கும் சுற்றியலைந்தபோது சுபாஷ் சந்திரபோசைச் சந்தித்தார். அதனால் பிரிட்டிஷ் அரசின் கண்காணிப்புக்கு ஆளானார்.

சுத்தானந்த பாரதி தன் சுயசரிதையில் அவர் ஊர் ஊராக அலைந்து ஒவ்வொரு கிராமத்திலும் தன் பாடல்களையும் சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்களையும் பாடியும் சொற்பொழிவாற்றியும் தேசவிடுதலைக் கருத்துக்களைப் பரப்பியதை விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் உள்ள தேசியப்போராட்ட ஆர்வலர்களின் பெயர்களையும் குறிப்பிடுகிறார். தேசவிடுதலைக்காக நன்கொடை வசூல் செய்து அதை காந்திக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்.

தேசவிடுதலை நோக்குடன் சுத்தானந்த பாரதி ஏராளமாக எழுதியிருக்கிறார். அவர் எழுதிய நூல்களில் 'தமிழர் புரட்சி', 'சுதந்திரக்கனல்', 'வீரத்தேவன்' ஆகியன வெள்ளையருக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய போராட்டத்தின் சரித்திரத்தைப் பின்னணியாகக் கொண்டவை. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்த மருது சகோதரர்களின் வாழ்க்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை 'தமிழர் புரட்சி'.

ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியன், இந்தி, தெலுங்கு சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் அறிந்தவர். 1928-1930-ஆம் ஆண்டுகளில் தேசவிடுதலைப்போரில் கலந்துகொள்வதற்காக இந்தியா முழுக்கச் சுற்றினார். சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய கவிதைநூல் பாரதசக்தி காவியம். நாட்டுப் பற்று, மதுவிலக்கு, தீண்டாமை போன்றவற்றை அவரது நாடகங்களும் சிறுகதைகளும் வற்புறுத்தியன.

இலக்கியப் பணிகள்

சுத்தானந்த பாரதி வ.வே.சுப்ரமணிய ஐயரின் சேரன்மாதேவி குருகுலத்தில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அவர்கள் நடத்திவந்த பாலபாரதி இதழில் தொடர்ச்சியாக எழுதினார். சுத்தானந்த பாரதி தமிழில் காப்பியம், கவிதை, நாடகம், நாட்டியம், இசைப்பாடல் வரலாறு, கடித இலக்கியம், வாழ்க்கை வரலாறு, சுயவரலாறு, நாட்டுவரலாறு, புனைகதைகள், பயண இலக்கியம், சிறுகதை, இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம் ஆன்மிகம், உடல்கூறு ஆய்வு, யோகம் எனப் பல துறைகளில் எழுதியவர். அவர் ஆரம்பகாலத்தில் எழுதிய 'பைந்தமிழ்ச் சோலை' என்ற நூல் தமிழின் தொன்மை, இலக்கிய வளம் பற்றிக் கூறுகிறது. தமிழ் இலக்கியங்கள் பண்டிதர்களுக்காகவே எழுதப்பட்ட காலக்கட்டத்தில் சாதாரண வாசகன் புரிந்து கொள்ளும்படி எழுதியவர் சுத்தானந்த பாரதி.பழைய இலக்கியங்களை கல்வியாளர் அல்லாதவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர்களில் அவரும் ஒருவர்.

சுத்தானந்த பாரதி (பாரத்வாஜ ஆசிரமம்)
நூல்கள்

தெலுங்கில் 2, இந்தியில் 4, பிரெஞ்சு மொழியில் 6, ஆங்கிலத்தில் 38 என 50 நூல்களை எழுதியுள்ளார். சுத்தானந்த பாரதி எழுதி அச்சில் வந்தவை 270 நூல்கள். அச்சில் வராதவை 800 அளவில் உள்ளன. இவை தவிர தமிழகத்தில் முப்பது, நாற்பதுகளில் வெளிவந்த இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகளில் பல நூல் வடிவில் வரவில்லை. 1897 முதல் 1990 வரை 93 ஆண்டுகள் வாழ்ந்த இவருடைய பல புத்தகங்கள் இப்போது கிடைப்பதில்லை. நூல்பட்டியல் மட்டுமே கிடைக்கின்றது.

புனைவிலக்கியம்

சுத்தானந்த பாரதி பத்து சிறுகதைத் தொகுதிகளையும், 19 நாவல்களையும் எழுதியுள்ளார். அவருடைய கதைகள் தொடர்ச்சியாக வெவ்வேறு இதழ்களில் வெளிவந்தாலும் முறையாகத் தொகுக்கப்படவில்லை.

மெய்யியல் நூல்கள்

யோகியான சுத்தானந்த பாரதியாரின் குறள்பா வடிவிலான யோகசித்தி என்ற நூல் அவரின் அனுபவத்தின் வெளிப்பாடாக அமைந்தது. அதில் 12 இயல்களும் 405 குறள்பாக்களும் உள்ளன. இதற்கு அவரே உரையும் எழுதியிருக்கிறார். அதே நூலை அவர் 'The Gospel of Project Life' என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்த நூல் அவரது 'பாரதசக்தி' காப்பியத்தின் ஒரு பகுதியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.

கவிதை

சுத்தானந்த பாரதி பாரதியாருக்குப்பின் உருவான இரு கவிதை மரபுகளில் நாமக்கல் கவிஞர் மரபு எனப்படும் போக்குடன் அடையாளப்படுத்தப்படவேண்டியவர். எளிய மொழி, சந்தம், நேரடியான கூறுமுறை, நாட்டாரியல் பாடல்முறைகளின் செல்வாக்கு கொண்டவை அவருடைய கவிதைகள்

காவியம்

சுத்தானந்த பாரதியின் முதன்மை நூல் அவர் பாரதமாதாவை நாயகியாக்கி எழுதிய 'பாரத மகாசக்தி' காப்பியம். ஐந்து காண்டங்களும் 416 படலங்களும் 50000 பாடல்களும் கொண்டது. 1948-ல் வெளிவந்தது. அதன் மறுபதிப்பு 1969-ல் வந்தது.

பயணநூல்கள்

சுத்தானந்த பாரதி சென்று வந்த நாடுகள் ரஷ்யா, இலங்கை, மலாயா (மலேசியா), தாய்லாந்து, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, இத்தாலி ஆகியவை. அவற்றைப் பற்றிய பயணக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 'நான் கண்ட ரஷ்யா', 'நான் கண்ட ஜப்பான்' அவருடைய நூல்களில் புகழ்பெற்றவை.

நாடகப்பணி

சுத்தானந்த பாரதி அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்கள் இயற்றியுள்ளார். சீவக சிந்தாமணி (காமதிலகன்) சிலப்பதிகாரம் (கண்ணகி) மணிமேகலை (அமுதசுரபி) கம்ப ராமாயணம் (மாயமான், ராமதூதன்) போன்ற இலக்கியங்களை வேறு தலைப்புகளில் நாடகமாக்கினார். அவரது சரித்திர நாடகங்கள் எழுதப்பட்ட காலத்திலேயே அரங்கேறின. அவருக்கு மேடைநாடகம் பற்றிய அனுபவம் உண்டு. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேடை நாடகங்கள் பல நடத்திய நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அவரிடம் நாடகம் பற்றிய செய்திகளை விவாதித்திருக்கிறார். இராஜமாணிக்கம் சுத்தானந்த பாரதிக்கு எழுதிய கடிதத்தில் ஐரோப்பிய ஓபரா நாடகம் (இசை நாடகம்) போல் தமிழகத்தில் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் என அ.கா.பெருமாள் குறிப்பிடுகிறார்.

சுத்தானந்த பாரதி அரவிந்த ஆசிரமம்

திரைப்படம்

சுத்தானந்த பாரதி தீவிரமாக நாடகங்கள் எழுதிய காலகட்டத்தில் (1930-1940) தயாரிப்பாளர்கள் அவரது நாடகங்களை படமாக்குவதில் ஆர்வம் காட்டினர். சுத்தானந்த பாரதி ஆண்டாள், கிருஷ்ண பக்தி, அபூர்வ சிந்தாமணி, ஏழை படும் பாடு, பொன்வயல் (கல்கியின் பொய்மான் கரடு) போன்ற சினிமாக்களுக்கு உரையாடல் எழுதியுள்ளார். பொன்வயல் சினிமாவில் வரும் சிரிப்புத்தான் வருகுதய்யா (சீர்காழி கோவிந்தராசன் பாடியது) என்ற பாடல் அவர் எழுதியது.

தமிழ் இசை

சுத்தானந்த பாரதியின் முக்கியப் பங்களிப்புகளில் தமிழ் இசையைப் பரப்பியதும் ஒன்று. சுத்தானந்த பாரதி கர்நாடக இசையை முறையாகப் படித்தவர்.அவரது இசை நூல்களில் கீர்த்தனாஞ்சலி, மேளராக மாலை சங்கீத ரத்னாகரம் ஆகியன முக்கியமானவை. அண்ணாமலை செட்டியார் அவரது தமிழிசை கீர்த்தனைகளை அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார். அவரது தமிழ்ப் பாடல்களுக்கு டைகர் வரதாச்சாரியார் ,பொன்னையா பிள்ளை, சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, கோமதிசங்கர், தண்டபாணி தேசிகர் போன்றோர் ஸ்வரம் அமைத்துள்ளனர். எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி, பி.யு. சின்னப்பா, சிதம்பரம் ஜெயராமன் போன்றோர் சுத்தானந்த பாரதியின் இசைப்பாடல்களை மேடையில் பாடினர்.

சுத்தானந்த பாரதி நாட்டிய சாஸ்திரம் பற்றி நவரச நடனாஞ்சலி என்னும் நூல் இயற்றியிருக்கிறார். அவருடைய கீர்த்தனைகள் அடங்கிய கீர்த்தனாஞ்சலி என்னும் நூல் வெளிவந்துள்ளது.( இணையநூலகம் )

சுத்தானந்தரின் கீர்த்தனைகளில் புகழ்பெற்றவை சில

  • எப்படி பாடினரோ -அடியார், அப்படிப் பாடநான் ஆசைகொண்டேன் சிவமே
  • அருள் புரிவாய் கருணைக் கடலே, ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே, அருள்புரிவாய் கருணைக் கடலே
  • சகல கலா வாணியே- சரணம் தாயே சங்கீத வீணா பாணியே ---சகலகலாவாணியே
  • ஜங்கார ஸ்ருதி செய்குவாய் -ஜீவ வீணையில் சங்கீதாமிருதம் பெய்குவாய்- ஜகதீஸ்வரனே
  • கருணை செய்வாய் -கஜவதனா கானரசம் பொங்கும் ஞான வரம் தந்தே
  • அருவியைப் போலும் காலைக் குருவியைப் போலும் அருளை நான் பாடுகின்றேன்
சுத்தானந்த பாரதி சிவகங்கை

இதழியல்

சுத்தானந்த பாரதி வ.வே. சுப்ரமணிய ஐயர் நிறுவிய சேரன்மாதேவி குருகுலத்திலிருந்து வெளிவந்த பாலபாரதி பத்திரிகையை முழுப்பொறுப்பு எடுத்து நடத்தினார். கும்பகோணத்திலிருந்து வெளிவந்த சமரசபோதினியின் ஆசிரியர் குழுவில் இருந்தார். தி.ஜ.ரங்கநாதன் சமரசபோதியின் சுத்தானந்த பாரதியுடன் பணியாற்றினார். காங்கிரஸ் தலைவர் டி.பிரகாசம் நடத்திய 'ஸ்வயராஜ்யா' இதழிலும் சுத்தானந்த பாரதி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

சுத்தானந்த பாரதி நடத்திய ஆங்கிலப் பத்திரிகைகள் 'Renaissance', 'Call - Divine, Nector' 'Jeevan Prakash' ஆகியன. சுத்தானந்த பாரதி தன் இறுதிக்காலத்தில் சென்னை அடையாற்றில் வாழ்ந்தபோது, 'யோகப் பயிற்சி' என்ற பத்திரிகையை நடத்தியிருக்கிறார்.

சமூகப்பணி

சுத்தானந்த பாரதி திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள பாமணி கிராமத்தில் ஓர் ஆசிரமம் அமைத்து தங்கி கிராமநலவாழ்வுப் பணிகளை செய்தார். பாலையூர் எனுமிடத்துக்குப் போய் அங்கு இடம் வாங்கி தங்கி ஆசிரமம் ஏற்படுத்திக்கொண்டு கிராம முன்னேற்றத்துக்குப் பாடுபட்டார்.

யோகசமாஜம்

சுத்தானந்த பாரதி தன்னுடைய மெய்யியல் செய்தி உலகமெங்கும் செல்லவேண்டும் என்னும் நோக்குடன் 'யோகசமாஜம்' என்னும் அமைப்பை 1977-ல் சென்னை பள்ளிப்பட்டு ஸ்ரீராம் நகரில் உருவாக்கினார். பின்னர் அது அடையாறுக்கு மாற்றப்பட்டது. 'யோகப்பயிற்சி' என்னும் இதழையும் அங்கிருந்து வெளியிட்டுவந்தார்.

1977-ல் சிவகங்கையின் யோகசமாஜத்தின் கிளையை அமைத்தார். செப்டம்பர் 1, 1979 அன்று சிவகங்கை அருகே சோழபுரம் என்னும் ஊரில் நன்கொடையாகப் பெற்ற தன்னுடைய செல்வத்தைக் கொண்டும், நகரத்தார் உதவியுடனும் 'சுத்தானந்த யோகசமாஜம்' என்னும் அமைப்பை தொடங்கினார். அதனுடன் இணைந்து 'சுத்தானந்த தேசிய வித்யாலயா' என்னும் பள்ளியும் தொடங்கப்பட்டது.ஜூன் 1,1987-ல் அந்நிறுவனம் சொந்தக் கட்டிடங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது.

1982-ல் சுத்தானந்த பாரதி சென்னையில் இருந்து சோழபுரம் சுத்தானந்த யோகசமாஜத்துக்கு வந்து சேர்ந்தார். பின்னர் நிரந்தரமாக அங்கேயே தங்கியிருந்தார். தன் முதுமையில் மீண்டும் ஒருமுறை ரிஷிகேஷ் செல்ல விரும்பி மாணவர்களுடன் ரிஷிகேஷ் சென்றார். அங்கே சிலரைச் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. பிப்ரவரி,1990-ல் ஊர் திரும்பினார். கிளம்பும்போதே ரிஷிகேஷ் சென்று வந்தபின் உயிர்விடுவேன் என்று கூறித் தன் சமாதிமேல் வைக்கப்படவேண்டிய சிவலிங்கத்தைச் செதுக்க ஏற்பாடு செய்திருந்தார். ரிஷிகேஷ் பயணத்திலேயே உடல்நலம் கெட்டு திரும்பிவந்தார். நோயுற்று சில நாட்கள் மௌனவிரதத்தில் இருந்து பின்னர் மார்ச் மாதம் மறைந்தார்.

விருதுகள்

  • 1984-ல் தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் சுத்தானந்த பாரதி.
  • சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.
  • தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் 1987-ல் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசளித்தது. அது அவரது மொத்தத் தமிழ்ப் பணிக்கு என்றாலும் அப்போது பாரதமகாசக்தி காவியத்திற்காக நல்கப்பட்டது என்றே சொல்லப்பட்டது.
சுத்தானந்த பாரதி இறுதிக்காலம்

மறைவு

யோகி சுத்தானந்த பாரதி அடையாறு தன் தொண்ணூற்றி இரண்டாவது வயதில் சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் மார்ச் 7, 1990-ல் சமாதியானார்.

நாட்டுடைமை

சுத்தானந்த பாரதியின் படைப்புகளை தமிழக அரசு 1998-ல் நாட்டுடைமை ஆக்கியது.

சமாதி

சுத்தானந்தரின் சமாதி அவர் நிறுவிய சிவங்கை சோழபுரம் சுத்தானந்த யோகசமாஜத்தின் பள்ளி வளாகத்திலேயே ஓர் ஆலயமாகக் கட்டப்பட்டுள்ளது. அங்கே நாள்தோறும் பூசைகள் நடந்து வருகின்றன.

நினைவுநூல்,வாழ்க்கை வரலாறு

  • சுத்தானந்த பாரதி வாழ்க்கை வரலாற்றை பெ.சுபாசு சந்திரபோசு இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசைக்காக எழுதியிருக்கிறார்
  • சுத்தானந்த பாரதியின் உறவினரான ஆர்.வெங்கடகிருஷ்ண ஐயர் 'Experiences of a pilgrim soul' என்னும் நூலை சுத்தானந்த பாரதியின் வாழ்க்கை வரலாறாக எழுதியிருக்கிறார்.
  • சோதனையும் சாதனையும் என்ற பேரில் சுத்தானந்தர் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்.

வரலாற்று இடம்

சுத்தானந்த பாரதிக்கு தமிழ் வரலாற்றில் யோகி, இலக்கியவாதி , இசைப்பாடலாசிரியர் என்னும் மூன்று தளங்களில் முக்கியமான இடம் உண்டு. தமிழகத்து சித்தர்,யோகியர் முதலிய ஆன்மிகவாதிகளுக்கு நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சியும், ஞானமரபும் உண்டு. அவர்கள் பொதுவாக அரசியல் முதலிய உலகியல் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் விலகியிருப்பதே வழக்கம். மெய்ஞான மரபில் இருந்து நேரடியாக அரசியல் களத்துக்கு வந்த முதல் ஆளுமை சுத்தானந்தர். சுவாமி சகஜானந்தர் இன்னொரு உதாரணம். காந்திய இயக்கங்களில் தீவிரமாக ஈடுபடும்போதே சுத்தானந்தர் யோகியாகவும், ஆன்மிகப் பிரச்சாரகராகவும் திகழ்ந்தார். இந்தியாவில் பத்தொன்பது -இருபதாம் நூற்றாண்டுகளில் அரசியல்பணியும் ஆன்மிகப்பணியும் ஒன்றாக ஆனமைக்கான உதாரணம் அவர். அரசியல் என்பது ஒரு தொண்டு என்றும் தொண்டு என்பது ஒரு யோகம் என்றும் சுத்தானந்தர் தன் நூல்களில் விளக்குகிறார். இந்த இணைப்பு காந்திய இயக்கத்தின் தத்துவ உள்ளுறையை ஒட்டி நிகழ்ந்தது. காந்தியைப் புரிந்துகொள்ள சுத்தானந்தர் போன்ற யோகிகள் அவர் தலைமையை ஏற்றதைக் கருத்தில் கொண்டாகவேண்டும். காந்தியத்தில் இந்த ஆன்மிக அம்சம் இருந்தது.

சுத்தானந்தர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர். ஆகவே நேர்ப்பிரச்சாரமாகவே அவர் தன் ஆக்கங்களை எழுதினார். ஆகவே அவற்றில் இலக்கியத்துக்குரிய நுண்மையும் வடிவ ஒருமையும் அமையவில்லை. ஆகவே இலக்கிய விமர்சகர்களால் அவர் இலக்கியப்படைப்பாளியாக கருத்தில் கொள்ளப்படுவதில்லை. சுத்தானந்தர் மொழியாக்கம் செய்த விக்டர் ஹ்யூகோவின்(Victor Hugo) 'ஏழைபடும்பாடு' (Les Miserables) போன்ற நூல்கள் நவீனத் தமிழிலக்கியத்தில் செல்வாக்கு செலுத்தியவை.

சுத்தானந்தர் ஓர் இசைப்பாடலாசிரியராக ஓர் வாழும் படைப்பாளி. அவருடைய இசைப்பாடல்கள் மரபிசை மேடைகளில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இசைகற்றவர் என்பதனாலும், இசைப்பாடல்களில் அவருடைய பிரச்சாரநடையும் மனநிலையும் இல்லாமல் நெகிழ்ச்சியான மனநிலையும் அதற்குரிய மொழியும் அமைந்திருப்பதனாலும் அவை இலக்கியப்படைப்புகளாகவும் முக்கியமானவை.

நூல்கள் பட்டியல்

சுத்தானந்த பாரதியாரின் 29 நூல்கள் இணையநூலகச் சேமிப்பில் உள்ளன[1].

  • உடலுறுதி
  • விஞ்ஞான மணிகள்
  • கவிக் கனவுகள்
  • கீர்த்தனாஞ்சலி
  • நவரஸ நடனாஞ்சலி
  • பாரத கீதம்
  • தமிழ்க் கனல்
  • இளிச்சவாயன்
  • அன்னை
  • இவளும் அவளும்
  • நாகரிகப் பண்ணை
  • இல்லற ஒழுக்கம்
  • இதுதான் உலகம்
  • பாப்பா பாட்டு
  • கலிமாவின் காதல்
  • பொது நெறி
  • கல்விக்கதிர்
  • பாட்டாளி பாட்டு
  • திருக்குறள் இன்பம்
  • சிலம்புச் செல்வம்
  • மணிமேகலை அமுதம்
  • நாட்டியக் கலை விளக்கம்
சுத்தானந்தர் வரலாறு
ஆன்மிகம்
  • திருமந்திர விளக்கம்
  • பகவத் கீதை
  • தியான சாதனம்
  • ஸ்ரீ அரவிந்த யோக தீபிகை
  • பேரின்பம்
  • யோக சித்தி
  • அருட்செல்வம்
வாழ்க்கை வரலாறு
  • ஞானி எமர்ஸன்
  • நாவலர் பெருமான்
  • பெரியவாள் கதை
  • தயானந்த ஜோதி
  • நாவலர் பெருமான்
  • அருட்பெருமான்
  • சிவானந்த ஜோதி
காவியம்
  • பாரத சக்தி மகா காவியம்
கவிதை
  • பேரின்ப மாலை வீரர் பாட்டு
  • வளையாபதி அகவல்
தன்வரலாற்று நூல்
கதைச் சுருக்கங்கள்
  • விக்டர் ஹியூகோவின் Les Miserable - ஏழைபடும் பாடு (தமிழ்)
  • The Laughing Man - இளிச்சவாயன் (தமிழ்)
  • டிவைன் காமெடி - தாந்தே - 1940 (தமிழினி பதிப்பகம் வழி 1998-ல் இரண்டாம் பதிப்பாக வந்திருக்கிறது)
இசை ஆசிரியர்கள் வரலாறு
  • பூச்சி அய்யங்கார்
  • மதுரை பொன்னுசாமிப் பிள்ளை
  • புதுக்கோட்டை சமஸ்தான ஆஸ்தான இசைக்கலைஞர் ஹரிதீர்த்தம் அய்யர்
ஆங்கிலம்
  • Sri Aurobindo
  • Integral Yoga
  • The Gospel of Perfect Life
  • Yogi Shuddhananda
  • Yoga for All
  • Our religion
  • Cosmic Riddles
  • Lord Krishna and His Gospel
  • Experiences of a Pilgrim Soul

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page