இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1984
From Tamil Wiki
இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்
இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1984
மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
---|---|---|---|
ஜனவரி | தீயில் எதுவும் வேகும் | பிரதிபா ராஜகோபாலன் | குங்குமம் |
பிப்ரவரி | அதே சேலை | குளமங்கலம் செல்வராசன் | குங்குமம் |
மார்ச் | பள்ளங்கள் | கொ.மா. கோதண்டம் | தாமரை |
ஏப்ரல் | விடிவதற்குள்... | அசோகமித்திரன் | தினமணி கதிர் |
மே | கண்ணாடி அறை | அசோகமித்திரன் | தினமணி கதிர் |
ஜூன் | மனித உறவுகள் | கோமல் சுவாமிநாதன் | சாவி |
ஜூலை | யாரும் படிக்காத சிறுகதை | பிரபஞ்சன் | தினமணி கதிர் |
ஆகஸ்ட் | ஆத்மாவுக்கு ஆகாரம் | பா. அமிழ்தன் | தீபம் |
செப்டம்பர் | அவளும் பெண்தானே | ரோஹிணி | கலைமகள் (இதழ்) |
அக்டோபர் | வாழப் பிறந்தவர்கள் | சூர்யகாந்தன் | செம்மலர் |
நவம்பர் | வெள்ளை நிறத்தொரு பூனை | கே. தீபன் | தாய் |
டிசம்பர் | கீரைக்கட்டு | அழகாபுரி அழகப்பன் | குங்குமம் |
1984-ம் ஆண்டின் சிறந்த சிறுகதை
1984-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, அசோகமித்திரன் எழுதிய ‘விடிவதற்குள்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. எம்.வி. வெங்கட்ராம் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை மாலன் தேர்வு செய்தார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
31-Jan-2023, 05:54:03 IST