under review

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1989

From Tamil Wiki
Revision as of 16:34, 27 June 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)

இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1989

மாதம் சிறுகதைத் தலைப்பு ஆசிரியர் இதழ்
ஜனவரி போதைகள் அகிலன் கண்ணன் தினமணி கதிர்
பிப்ரவரி உண்ணாம தின்னாம... டி.செல்வராஜ் செம்மலர்
மார்ச் தெருவின் சுபாவம் ஷங்கன்னா ஆனந்த விகடன்
ஏப்ரல் சுமையில்லா கனங்கள் கி. ஜயசேகரன் கலைமகள்
மே தோழியரே... தோழியரே... சு. சமுத்திரம் தாய்
ஜூன் தாட்சாயிணி இந்து வரதன் செம்மலர்
ஜூலை அறுவடை செங்கை ஆழியான் தாமரை
ஆகஸ்ட் அரும்பு மேலாண்மை பொன்னுச்சாமி கல்கி
செப்டம்பர் வெளிச்சத்துக்கு வராத இருள் சேத்தூர் அன்பழகன் ஆனந்த விகடன்
அக்டோபர் கண்கள் இரண்டினில் ஒன்று சுப்புராஜ் தினமணி கதிர்
நவம்பர் அற்றது பற்றெனில் இந்திரா பார்த்தசாரதி அமுதசுரபி
டிசம்பர் கத்தி ஆதவன் இந்தியா டுடே

1989-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை

1989 -ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘அற்றது பற்றெனில்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏ.எஸ்.ராகவன் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை எம்.ஆர். நடராஜன் தேர்வு செய்தார்.

உசாத்துணை


✅Finalised Page