நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 21:58, 7 July 2022 by Logamadevi (talk | contribs)

நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை (நவம்பர் 8, 1910 - ஏப்ரல் 10, 1964) தவில் இசைக் கலைஞர்.

இளமை, கல்வி

ராகவப் பிள்ளை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகே உள்ள நாச்சியார்கோவிலில் நவம்பர் 8, 1910 அன்று பக்கிரி நட்டுவனார் - கண்ணம்மாள் தம்பதிக்கு கடைசி மகனாகப் பிறந்தார்.

திருவாழப்புத்தூர் பசுபதிப் பிள்ளையிடம் ராகவப் பிள்ளை தவில் கற்று, இரண்டு ஆண்டுகளில் வாசிக்கத் தொடங்கினார். நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் குருகுலமாக பதினோரு ஆண்டுகள் தங்கி, தவிலில் மேற்பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

ராகவப் பிள்ளைக்கு ராமச்சந்திர பிள்ளை (நட்டுவனார்), ரங்கஸ்வாமி பிள்ளை (பாடகர்), நடராஜ பிள்ளை என்ற மூத்த சகோதரர்களும், காமு அம்மாள், அம்மணி அம்மாள், வஞ்சுள வல்லியம்மாள் என்ற மூத்த சகோதரிகளும் இருந்தனர்.

நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தன் மகள் ஜயலக்ஷ்மியை ராகவப் பிள்ளைக்கு மே 7, 1935 அன்று மணமுடித்து வைத்தார். இவர்களுக்கு கமலாம்பாள், கோமதி, வேம்பு, சித்ரா என்ற பெண்களும் வாசுதேவன் என்ற ஒரு மகனும் பிறந்தனர்.

இசைப்பணி

நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளையின் லயக்கணக்குகள் புகழ்பெற்றவை.

மாணவர்கள்

நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

உடன் வாசித்த கலைஞர்கள்

நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

மறைவு

ராகவப் பிள்ளை ஏப்ரல் 10, 1964 அன்று நாச்சியார்கோவிலில் மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013

{{first review completed}