ராஜமார்த்தாண்டன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 13: Line 13:
ஆகஸ் 1975இல் அ. திருமாலிந்திரசிங், ராஜமார்த்தாண்டன், அ.ராஜேந்திரன், ஆ. தசரதன் ஆகியோர் சேர்ந்து திரு மாலிந்திரசிங் ஆசிரியர் பொறுப்பில் [[கோகயம்]] என்ற இருமாதம் ஒருமுறை வெளிவரும் சிற்றிதழைத் தொடங்கினார்கள். நான்காவது இதழுடன் பிப்ரவரி 1976இல் கோகயம் வெளியீடு நிறுத்தப்பட்டது.
ஆகஸ் 1975இல் அ. திருமாலிந்திரசிங், ராஜமார்த்தாண்டன், அ.ராஜேந்திரன், ஆ. தசரதன் ஆகியோர் சேர்ந்து திரு மாலிந்திரசிங் ஆசிரியர் பொறுப்பில் [[கோகயம்]] என்ற இருமாதம் ஒருமுறை வெளிவரும் சிற்றிதழைத் தொடங்கினார்கள். நான்காவது இதழுடன் பிப்ரவரி 1976இல் கோகயம் வெளியீடு நிறுத்தப்பட்டது.


முனைவர் பட்டப்படிப்பை முடிக்காமல் ஊரில் இருந்த நாட்களில் ராஜமார்த்தாண்டன் [[கொல்லிப்பாவை]] என்னும் சிற்றிதழை அக்டோபர் 1976இல் தொடங்கி நடத்தினார்.
முனைவர் பட்டப்படிப்பை முடிக்காமல் ஊரில் இருந்த நாட்களில் ராஜமார்த்தாண்டன் [[கொல்லிப்பாவை]] என்னும் சிற்றிதழை அக்டோபர் 1976இல் தொடங்கி நடத்தினார். 12 இதழ்களை ராஜமார்த்தாண்டன் நடத்தினார்.


== மறைவு ==
ராஜமார்த்தாண்டன் 6 ஜூன் 2009 அன்று நாகர்கோயிலில் காலமானார்


மறைவு
== நூல்கள் ==


ராஜமார்த்தாண்டன் 6 ஜூன் 2009 அன்று நாகர்கோயிலில் காலமானார்
====== கவிதை ======


====== நூல்கள் ======
* ''அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்)''
கவிதை


* ''அப்படியே நிற்கட்டும் அந்த மரம்'' (கவிதைகள், அஜிதா பதிப்பகம்)
* ''என் கவிதை (கவிதைகள்)''
* ''என் கவிதை'' (கவிதைகள்)
* ''ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு)''
* ''ராஜமார்த்தாண்டன் கவிதைகள்'' (கவிதைகள், தமிழினி வெளியீடு)


====== ''தொகைநூல்'' ======
====== ''தொகைநூல்'' ======

Revision as of 10:13, 13 February 2022

ராஜமார்த்தாண்டன் (1948 - 2009-) தமிழ் இலக்கிய விமர்சகர், கவிஞர், இதழாளர். சிற்றிதழ் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட ராஜமார்த்தாண்டன் தினமணி நாளிதழிலும் பணியாற்றினார். தமிழ்க் கவிதை குறித்து விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். நவீனத்தமிழ் கவிதைகளில் பெருந்தொகுப்பான ‘கொங்குதேர் வாழ்க்கை’ நூலின் ஆசிரியர்

பிறப்பு

ராஜமார்த்தாண்டன் கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி என்னும் ஊரில் 1948 ல் பிறந்தார். தந்தை நிலக்கிழார். கொட்டாரம் அரசுப்பள்ளியில் ஆரம்பக் கல்வி. நாகர்கோயில் எஸ்.எல்பி பள்ளியிலும் பள்ளிநிறைவுக் கல்வி. தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் பட்டப்படிப்பு. முதுகலைப்படிப்புக்காக 1972ல் கேரளத்தில் பாலக்காடு அருகிலுள்ள சித்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே பேராசிரியர் ஜேசுதாசனின் மாணவரானார். 1976 முதல் 1980 வரை கேரளப்பல்கலையில் முனைவர் பட்ட ஆய்வு செய்தார். ஆய்வை முடிக்கவில்லை.

தனிவாழ்க்கை

ராஜமார்த்தாண்டன் தினமணி நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றினார். மதுரையில் சிறிதுகாலம் பணியாற்றியபின் சென்னைக்குச் சென்று தினமணி கதிர் இதழில் துணையாசிரியராக பணியாற்றினார். 2006ல் பணிநிறைவு அடைந்து நாகர்கோயில் வந்து மூன்றாண்டுகள் காலச்சுவடு இதழில் பணியாற்றினார். ராஜமார்த்தாண்டனுக்கு மணமாகி இரண்டு குழந்தைகள்.

இலக்கிய வாழ்க்கை

ராஜமார்த்தாண்டன் எம். ஏ. முடித்துவிட்டு ஓராண்டு காலம் ஊரில் இருந்த காலத்தில் சதங்கை ஆசிரியர் வனமாலிகையுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் மூலம் எம்.சிவசுப்ரமணியம் அறிமுகமானார். அவர்வழியாகச் சுந்தர ராமசாமியுடன் அறிமுகம் ஏற்பட்டது. சுந்தர ராமசாமியின் காகங்கள் என்னும் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில் அ.கா. பெருமாள் போன்ற ஆய்வாளர்களிடமும் பழக்கம் உருவானது. 1975ல் பிரமிள் வந்து ராஜமார்த்தாண்டனுடன் அவருடைய ஊரில் தங்கியிருந்தார். உமாபதி, ராஜகோபாலன் என்று இலக்கியப் படைப்பாளிகள், வாசகர்களுடனான தொடர்பு விரிவடைந்தது.கேரளப் பல்கலைக் கழகத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக முனைவர் பட்ட ஆய்வாளனாக இருந்த காலகட்டத்தில் நகுலன், ஷண்முக சுப்பையா, ஆ. மாதவன், நீல பத்மநாபன், எம். எஸ். ராமசாமி, காசியபன் ஆகியோருடன்நெருக்கம் உருவானது.

இதழியல்

ஆகஸ் 1975இல் அ. திருமாலிந்திரசிங், ராஜமார்த்தாண்டன், அ.ராஜேந்திரன், ஆ. தசரதன் ஆகியோர் சேர்ந்து திரு மாலிந்திரசிங் ஆசிரியர் பொறுப்பில் கோகயம் என்ற இருமாதம் ஒருமுறை வெளிவரும் சிற்றிதழைத் தொடங்கினார்கள். நான்காவது இதழுடன் பிப்ரவரி 1976இல் கோகயம் வெளியீடு நிறுத்தப்பட்டது.

முனைவர் பட்டப்படிப்பை முடிக்காமல் ஊரில் இருந்த நாட்களில் ராஜமார்த்தாண்டன் கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை அக்டோபர் 1976இல் தொடங்கி நடத்தினார். 12 இதழ்களை ராஜமார்த்தாண்டன் நடத்தினார்.

மறைவு

ராஜமார்த்தாண்டன் 6 ஜூன் 2009 அன்று நாகர்கோயிலில் காலமானார்

நூல்கள்

கவிதை
  • அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்)
  • என் கவிதை (கவிதைகள்)
  • ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு)
தொகைநூல்
  • கொங்குதேர் வாழ்க்கை (நவீனக்கவிதைகள் தொகுப்பு பகுதி 2)
விமர்சனம்
  • புதுக்கவிதை வரலாறு
  • புதுமைப்பித்தனும் கயிற்றரவும்
  • பசுவய்யா கவிதைகள் திறனாய்வு

உசாத்துணை

https://www.tamilhindu.com/2009/06/kavi-rajamarthandan-anjali/

எழுத்து முதல் கொல்லிப்பாவை வரை- பேட்டி