தமிழ் விக்கி: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
| (One intermediate revision by the same user not shown) | |||
| Line 19: | Line 19: | ||
*[[சோழன் நலங்கிள்ளி]] சங்க காலப் புலவர்களில் ஒருவர், சோழ மன்னர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் புறநானூறில் இடம்பெற்றுள்ளன. | *[[சோழன் நலங்கிள்ளி]] சங்க காலப் புலவர்களில் ஒருவர், சோழ மன்னர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் புறநானூறில் இடம்பெற்றுள்ளன. | ||
<div class="frameless-thumb">[[File: | <div class="frameless-thumb">[[File:Madhuranthakam-Narendra-1.jpg|thumb|133x133px|link=மதுராந்தகம் நரேந்திரா]]</div> | ||
*[[மதுராந்தகம் நரேந்திரா]] தெலுங்கு எழுத்தாளர், கவிஞர். ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். இலக்கிய தொகுதிகளையும் உருவாக்கியுள்ளார் | *[[மதுராந்தகம் நரேந்திரா]] தெலுங்கு எழுத்தாளர், கவிஞர். ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். இலக்கிய தொகுதிகளையும் உருவாக்கியுள்ளார் | ||
| Line 32: | Line 32: | ||
<div class="frameless-thumb">[[File:Rajamanikkanar.jpg|thumb|175x150px|link=மா. இராசமாணிக்கனார்]]</div> | <div class="frameless-thumb">[[File:Rajamanikkanar.jpg|thumb|175x150px|link=மா. இராசமாணிக்கனார்]]</div> | ||
* [[மா. இராசமாணிக்கனார்]] தமிழ் வரலாற்று ஆய்வாளர். இலக்கிய தரவுகளைக் | * [[மா. இராசமாணிக்கனார்]] தமிழ் வரலாற்று ஆய்வாளர். இலக்கிய தரவுகளைக் கொண்டு வரலாற்றாய்வை நிகழ்த்துவதில் முன்னோடி. சைவ சமய ஆய்வாளர். | ||
</div> | </div> | ||
</div> | </div> | ||
Latest revision as of 08:14, 5 December 2025
- ஜெயந்த் காய்கினி கன்னட எழுத்தாளர், கவிஞர், திரைப்பாடலாசிரியர், சிறுகதையாசிரியர், ஊடகவியலாளர். தன் 19-வது வயதில் ரங்கடிந்தோஷிது தூரா என்ற முதல் கவிதைத் தொகுதிக்காக கன்னட சாகித்ய அகாதமி விருதைப் பெற்று புகழ்பெற்றார்.
- டி.டி. கல்யாணசுந்தரம் தமிழ்நாட்டின் மூத்த நாடகக் கலைஞர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். இசைப் பாடலாசிரியராகவும் புகழ் பெற்றிருந்தார்.
- சோழன் நலங்கிள்ளி சங்க காலப் புலவர்களில் ஒருவர், சோழ மன்னர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் புறநானூறில் இடம்பெற்றுள்ளன.
- மதுராந்தகம் நரேந்திரா தெலுங்கு எழுத்தாளர், கவிஞர். ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். இலக்கிய தொகுதிகளையும் உருவாக்கியுள்ளார்
- தேவதேவன் நவீனத் தமிழின் முதன்மைக் கவிஞர்களில் ஒருவர். இயற்கையின் வழியாக அடைந்த ஆன்மிக நிலையை வெளிப்படுத்தும் கவிதைகளை எழுதியவர்.
- கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்காக, தஞ்சாவூரில் உள்ள கருந்தட்டைகுடி என்னும் கரந்தையில் 1911-ல் தோற்றுவிக்கப்பட்டது. நூறாண்டுகளைக் கடந்து இன்றும் செயல்பட்டு வருகிறது.
- மா. இராசமாணிக்கனார் தமிழ் வரலாற்று ஆய்வாளர். இலக்கிய தரவுகளைக் கொண்டு வரலாற்றாய்வை நிகழ்த்துவதில் முன்னோடி. சைவ சமய ஆய்வாளர்.
தமிழ்.விக்கி தூரன் விருது 2025
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஈரோடு அமைப்பின் சார்பில் 2025-ம் ஆண்டுக்கான ‘தமிழ்விக்கி- தூரன் விருது’ தொல்லியல் ஆய்வாளரும் கல்வெட்டியல் ஆய்வாளருமான முனைவர் வெ. வேதாசலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
விழா ஈரோட்டில் ஆகஸ்ட் 15 மதியம் முதல் ஆகஸ்ட் 16 மாலை வரை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக வரலாற்றாசிரியர் எ. சுப்பராயலு, தொல்லியல் ஆய்வாளர் வசந்த் ஷிண்டே, நாணயவியல் ஆய்வாளர் ஆறுமுக சீதாராமன் ஆகியோர் கலந்துகொண்டு விருதாளரை சிறப்பித்தனர்.
தமிழ் விக்கி பற்றி
| ஆசிரியர் குழு | பதிவு வகைகள் | பங்களிக்க | தொடர்புக்கு | ஒருங்கிணைப்பாளர்கள் |
சமூகப் பங்களிப்புடன் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும் இணையக் கலைக்களஞ்சியமான தமிழ் விக்கி முதன்மையாக தமிழிலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த தகவல்களின் தொகுப்பு. ஆவணப்பதிவாக மட்டும் இல்லாமல் படங்களுடனும் நேர்த்தியான மொழியுடனும் வாசிப்புக்குரிய இதழாகவும் அமைந்துள்ளது. மிக விரிவான உள்தொடுப்புகளுடன் ஒவ்வொன்றையும் உரிய அனைத்துடனும் தொடர்புபடுத்தி முழுமையான அறிதலை அளிக்கிறது. உசாத்துணைகள், இணையத்தொடுப்புகள் ஆகியன ஆய்வுக்கு உதவியான மையமாக இதை ஆக்குகின்றன.
வாசகர்களே திருத்தவும் பங்களிக்கவும் வாய்ப்புள்ள பொதுத்தளம் ஆயினும் மூத்த படைப்பாளிகளும் கல்வித்துறை ஆய்வாளர்களும் அடங்கிய ஆசிரியர் குழுவால் சரிபார்க்கப்பட்டு, ஆலோசனைக்குழுவின் ஒப்புதலுடன்தான் திருத்தங்களும் பதிவுகளும் வெளியிடப்படும்.
