under review

பரிபாடல்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(44 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
This page is created by ka. Siva
[[File:Image .jpg|thumb]]
பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான [[எட்டுத்தொகை]] நூல்களுள் ஒன்று. இது ஒரு பண்ணிசை இலக்கியம். ‘பரிபாட்டு’ என்னும் பெயராலும் இது வழங்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் தோன்றிய ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்திற்கு பரிபாடலே பக்திச் சுவையில் முன்னோடி.  


பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
==பெயர்க்காரணம்==
பரிபாடல் என்னும் பாவகையில் இயற்றப்பெற்றமையால் இந்நூல்  பரிபாடல் எனப் பெயர் பெற்றது. பரிந்து செல்லும் ஓசையுடைய (வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பாக்களுக்கும், பல்வேறு அடிகளுக்கும் பரிந்து இடமளிக்கும்) தன்மையால் இப்பாவகை 'பரிபாடல்' எனப் பெயர் பெற்றது. பரி(குதிரை) போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்டதால் இப்பெயர் அமைந்ததாகக் கருதப்படுகிறது. எட்டுத்தொகை நூல்களில் பாவகையால் பெயர் அமைந்தவை [[கலித்தொகை]]யும் பரிபாடலும்.  


== பரிபாடல் இலக்கணம் ==
====== தொல்காப்பியர் கூறும் பரிபாடலுக்கான இலக்கணம் ======
தொல்காப்பியம் பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகிறது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப்பாவில் இது பரிபாடல் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவை நான்கினுக்கும் பொதுவாய் அமைந்த யாப்பினை உடையது பரிபாடல் என அது குறிப்பிடுகிறது.


* நான்கு பாவின் உறுப்புகளும் கொண்ட பாடல்.
* நான்கு பாக்களின் உறுப்புகளும் கொண்ட பாடல்.
* வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும்.
* வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும்.
* வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும்.
* வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும்.
* கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்களையும் கொண்டிருக்கும். காமப் பொருளில் வரும்.
* கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்களையும் கொண்டிருக்கும்.  
* சொற்சீர் அடியும், முடுகியல் அடியம் கொள்வது உண்டு.
* பாடுபொருள் அகத்திணை சார்ந்ததாக இருக்கும்
* 25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும்.
* 25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும்.
* பரி(குதிரை) போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல் 'பரிபாடல்' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
* இந்நுால் 'பாிபாட்டு' எனவும் வழங்கப்படும்.


== பரிபாடல் நூல் தொகுப்பு ==
[[தொல்காப்பியர்]], [[இளம்பூரணர்]], பேராசிரியர், [[நச்சினார்க்கினியர்]] அனைவரும் பரிபாடல் என்னும் பாவகையில்  தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலே பற்றிவரும் என்று குறிப்பிடுகின்றனர்.
பரிபாடலில் அமைந்த பாடல்களின் தொகுப்பை,


"திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
சங்கத்தொகை நூலான பரிபாடல் பெரிதும்  தோத்திரப் பாடல்களாகவே அமைந்துள்ளது. அகப்பொருளும், புறப்பொருளும் பயின்று வருகின்றன.  எனவே"தொல்காப்பியர்க்குப் பிற்பட்ட காலத்தில் புறம் பற்றிய செய்திகளும் பரிபாடலில் பாடப்பெற்றன என்பது இப்பாக்களால் தெரிகின்றது" என்று [[மா. இராசமாணிக்கனார்]] குறிப்பிடுகிறார்.


== காலம் ==
பரிபாடல் தோன்றிய காலம் பற்றி அறிஞர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. [[எஸ். வையாபுரிப் பிள்ளை]] அதிக வடசொற்கள் இடம்பெறுவது, பரிபாடல்களைப் பாடிய புலவருள் எவரும் பிற சங்கத்தொகை நூல்களில் பாடாதது போன்ற பல காரணங்களினால் பரிபாடல் சங்ககாலத்திற்குப் பிற்பட்டது என்று கருதினார். இரா. இராசமாணிக்கனார் 'தமிழ்மொழி -இலக்கிய வரலாறு' நூலில் இக்கருத்துக்களை மறுத்துரைத்து பரிபாடலும் கலித்தொகையும் பொ.மு. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார். பரிபாடல்களைப் பாடிய புலவர்கள் பிறதொகை நூற்பாக்களைப் பாடிய புலவர்களே எனக் கொண்டாலும், வேறானவர் எனக் கொண்டாலும், அவர்கள் காலம் பொ.யு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதி என்றும் அதனால் பரிபாடல் சங்க காலத்தில் இயற்றப்பட்டதே என்றும் குறிப்பிடுகிறார்.
== பாடிய புலவர்கள் ==
{| class="wikitable"
|+
!பாடல்
எண்
!பாடியவர்
!பாடுபொருள்
!அடிகள்
!இசை வகுத்தவர்
!பண்
|-
|1
|அறிய முடியவில்லை
| திருமால்
|65
|அறிய முடியவில்லை
|
|-
|2
|[[கீரந்தையார்]]
|திருமால்
|76
|நன்னானகார்
|பாலையாழ்
|-
|3
|[[கடுவன் இளஎயினனார்|கடுவனிள எயினனார்]]
|திருமால்
|94
|பெட்டனாகனார்
|பாலையாழ்
|-
|4
| கடுவனிள எயினனார்
|திருமால்
|73
|பெட்டனாகனார்
|பாலையாழ்
|-
|5
| கடுவனிள எயினனார்
|செவ்வேள்
|81
|கண்ணனாகனார்
|பாலையாழ்
|-
|6
|[[நல்லந்துவனார்]]
|வையை
|106
|மருத்துவன் நல்லச்சுதனார்
|பாலையாழ்
|-
|7
|[[மையோடக் கோவனார்]]
| வையை
|86
|பித்தாமத்தர்
| பாலையாழ்
|-
|8
|[[நல்லந்துவனார்]]
|செவ்வேள்
| 130
|மருத்துவன் நல்லச்சுதனார்
|பாலையாழ்
|-
|9
|[[குன்றம்பூதனார்]]
|செவ்வேள்
|130
|மருத்துவன் நல்லச்சுதனார்
|பாலையாழ்
|-
|10
|கரும்பிள்ளைப் பூதனார்
|வையை
|131
|மருத்துவன் நல்லச்சுதனார்
|பாலையாழ்
|-
|11
|நல்லந்துவனார்
|வையை
|140
|நாகார்
|பாலையாழ்
|-
|12
|[[நல்வழுதியார்]]
|வையை
| 102
|நந்தாகனார்
|பாலையாழ்
|-
|13
|[[நல்லெழினியார்]]
|செவ்வேள்
|64
| -
|நோதிறம்
|-
|14
|[[கேசவனார்]]
|செவ்வேள்
|32
|மருத்துவன் நல்லச்சுதனார்
|பாலையாழ்
|-
|15
|[[இளம்பெருவழுதியார்]]
|திருமால்
|66
|மருத்துவன் நல்லச்சுதனார்
|நோதிறம்
|-
|16
|[[நல்லழிசியார்]]
|வையை
|55
|மருத்துவன் நல்லச்சுதனார்
|நோதிறம்
|-
|17
|நல்லழிசியார்
|செவ்வேள்
|53
|மருத்துவன் நல்லச்சுதனார்
|நோதிறம்
|-
|18
|குன்றம்பூதனார்
|செவ்வேள்
|53
|மருத்துவன் நல்லச்சுதனார்
|காந்தாரம்
|-
|19
|[[நப்பண்ணனார்]]
|செவ்வேள்
|106
|மருத்துவன் நல்லச்சுதனார்
|காந்தாரம்
|-
|20
|நல்லந்துவனார்
|வையை
|111
|மருத்துவன் நல்லச்சுதனார்
|காந்தாரம்
|-
|21
|[[நல்லச்சுதனார்]]
|செவ்வேள்
|70
|கண்ணகனார்
|காந்தாரம்
|-
|22
|அறிய முடியவில்லை
|
|45
|அறிய முடியவில்லை
|
|}
==நூல் அமைப்பு==
பரிபாடலில்  திருமாலுக்கு 8, செவ்வேளுக்கு 31, வைகைக்கு 26,  மதுரைக்கு 4, கொற்றவைக்கு 1 என 70 பாடல்கள் இருந்த்தாக [[இறையனார் களவியல் உரை]] குறிப்பிடுகிறது. 
<poem>
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம்.
</poem>
இன்று இருப்பவை  திருமாலுக்கு 6,முருகனுக்கு 8, வைகைக்கு 8 பாடல்கள் என  22 பாடல்கள். மேலும் தனிநிலையில் கிடைத்த 11 பாடல்கள் இந்த நூலினதாக இருக்கலாம் என்னும் கருத்தோடு ‘பரிபாடல் திரட்டு’ என்னும் தலைப்பில்  சேர்க்கப்பட்டுள்ளன. பரிபாடல் அகப்பொருளும் புறப்பொருளும் இணைந்த நூல்.


செய்யபரி பாடற் றிறம்".
பரிபாடலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும்  (1, 22 நீங்கலாக) ஆசிரியர் பெயர், துறை, பண், பண் வகுத்தோர் பெயர் ஆகிய குறிப்புகள் உள்ளன. பரிபாடலில் அமைந்துள்ள பண்களின் அமைதி கருதியே பரிபாடலின் அமைப்புமுறை அமைந்துள்ளது.  
 
மேற்கண்ட வெண்பாவின் துணைகொண்டு அறியலாகும்.
 
===== வெண்பாவின் விளக்கம்: =====
பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல்கள், செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல்கள், காடுகாளுக்கு  1 பாடல், படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல்கள், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல்கள் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. காடுகாள் என்றது காளியை. 'காடுகாட்கு' என்பதற்குப் பதில் 'கார்கோளுக்கு' என்றும் பாடபேதம் உண்டு. கார்கோள் என்பது கடல். அந்த ஒரு பாடல் காளியைப் பற்றியதா? கடலைப் பற்றியதா? என்று இப்பொழுது அறிய வழியில்லை. இவை முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைத்தவற்றுள், திருமாலுக்கு 6 பாடல்கள், முருகனுக்கு 8 பாடல்கள், வையைக்கு 8 பாடல்கள் என 22 பாடல்களே உள்ளன. எஞ்சியவை இறந்துபட்டன. எனினும்,
 
பழைய உரைகளிலிருந்தும், புறத்திரட்டுத் தொகை நூலிலிருந்தும் 2 முழுப் பாடல்களும், சில பாடல்களின் உறுப்புகளும்
 
தெரியவருகின்றன. இவை 'பரிபாடல்-திரட்டு' என்னும் தலைப்பில்  பரிபாடல் நூலின் இறுதியில் சேர்க்கப் பெற்றுள்ளன. 22 பாடல்களில் 6 திருமாலுக்கும், 8 முருகனுக்கும், 8 வையைக்கும் உரியனவாயுள்ளன. பரிபாடல் திரட்டில் உள்ள 2 முழுப்பாடல்களுள் ஒன்று திருமாலைப் பற்றியும், மற்றொன்று வையையைப் பற்றியும் அமைந்தவை. பாடற் பகுதிகளுள் சில மதுரையையும் வையையையும் குறித்தன. ஒரு சில உறுப்புகள் இன்னவற்றைச் சார்ந்தவை என்று தெரியக் கூடவில்லை.
 
== தொகுத்தவர் ==
பரிபாடல்  நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர், பெயர் ஒன்றும் அறியக் முடியவில்லை. தொகுத்த பாடல்களின் அடிவரையறை பற்றிய குறிப்பும் கிடைக்கவில்லை. பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி என்றும், பேரெல்லை 400 அடி என்றும், தொல்காப்பியர் வரையறுத்துள்ளனர். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் துறை, இயற்றிய ஆசிரியர் பெயர், இசை வகுத்தோர் பெயர், பண்ணின் பெயர்,பற்றிய
 
பழங் குறிப்புகள் உள்ளன. ஆயினும், பிரதிகளின் சிதைவினால் முதற் பாடலுக்கும் 22- ஆம் பாடலுக்கும் இக் குறிப்புகள் கிடைக்கவில்லை. 13- ஆம் பாடலுக்கு இசை வகுத்தோர் பெயர் காணப்படவில்லை. முதற் பாடலில் ராகமாக வருகின்ற 14 ஆம் வரி முதல் 28  ஆம் வரி வரையிலுள்ள பகுதி தெளிவின்றி உள்ளது. இப் பகுதியில் பொருள் வரையறை செய்வதற்குப் பிரதிகளின் உதவியும் பழைய  உரையின் உதவியும் கிடைக்கவில்லை. இவ்வாறே ஏனைய பாடல்கள் சிலவற்றிலும் ஒருசில இடங்கள் உள்ளன.
 
22 பாடல்களில் 'கடவுள் வாழ்த்து'ப் பொருளில் வந்தவை 14. ஏனைய எட்டுப் பாடல்களும் வையையைப் பற்றியன. இந்த எட்டிலும் அகப்பொருள் பற்றி எழுதப் பெற்ற பழைய கருத்துகளும் உள்ளன. பரிபாடல் நூல் செய்யுள்கள் மிக நீண்டனவாய் இருப்பதால்,
 
பாடல்களின் இடையிடையே, கருத்து விளங்கும் வகையில் தலைப்புகள் இடப்பட்டு சில பதிப்புகள்  அமைக்கப் பெற்றுள்ளன.
 
== ஆசிரியர்கள் ==
பரிபாடலில் உள்ள 22 பாடல்களில் 20 பாடல்களை 13 புலவர்கள் இயற்றியுள்ளனர். அவர்கள்;
 
===== நல்லந்துவனார் =====
செவ்வேள் பற்றிய 8-ஆம் பாடல்,
 
வையை பற்றிய 6, 11, 20 ஆகிய 4 பாடல்கள்
 
===== இளம் பெருவழுதியார் =====
திருமால் பற்றிய 15-ஆம் பாடல்
 
===== கடுவன் இளவெயினனார் =====
திருமால் பற்றிய 3 மற்றும் 4- ஆம் பாடல்கள், செவ்வேள் பற்றிய 5- ஆம் பாடல்
 
===== கரும்பிள்ளைப்பூதனார் =====
வையை பற்றிய 10- ஆம் பாடல்
 
===== கீரந்தையார் =====
திருமால் பற்றிய 2- ஆம் பாடல்
 
===== குன்றம்பூதனார் =====
செவ்வேள் பற்றிய 9 மற்றும் 18- ஆம் பாடல்
 
===== கேசவனார் =====
செவ்வேள் பற்றிய 14- ஆம் பாடல்
 
===== நப்பண்ணனார் =====
செவ்வேள் பற்றிய 19- ஆம் பாடல்
 
===== நல்லச்சுதனார் =====
செவ்வேள் பற்றிய 21- ஆம் பாடல்
 
===== நல்லழிசியார் =====
வையையைப்பற்றி 16-ஆம் பாடல், செவ்வேட்குரிய 17-ஆம் பாடல்
 
===== நல்லெழினியார்   =====
திருமால் பற்றிய 13- ஆம் பாடல்
 
===== நல்வழுதியார் =====
வையை பற்றிய 12- ஆம் பாடல்
 
===== மையோடக்கோவனார் =====
வையை பற்றிய 7- ஆம் பாடல்
 
== பாடல்களின் பண் ==
பரிபாடல்களில் 2 முதல் 12 வரை அமைந்த 11 பாடல்களின் பண் பாலை யாழ்;  13 முதல் 17 வரை அமைந்த  ஐந்து பாடல்களின் பண் நோதிறம். 18 முதல் 21 வரை அமைந்துள்ள நான்கு பாடல்களின் பண் காந்தாரம்.இவ் வகைப் பண் வரிசையில் பாடல்கள் அமைந்துள்ளதை நோக்கினால்,
 
தேவாரப் பாடல்களைப் போல், பரிபாடலும் பண்முறை கொண்டு தொகுக்கப் பெற்று, பாடகர்களால் பாடப் பெற்று வந்தன என்று கருத இடமுண்டு.
 
== உவமை சிறப்பு ==
பரிபாடல் நூலின் புறத்திரட்டில் உள்ள பாடல்;
 
"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
 
  பூவொடு புரையுஞ் சீரூர் பூவின்
 
  இதழகத் தனைய தெருவம் இதழகத்
 
  தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்
 
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்
 
  தாதுண், பறவை அனையர் பரிசில் வாழ்நர்
 
  பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
 
  நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
 
  ஏம வின்றுயில் எழுதல் அல்லதை
 
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
 
  கோழியின் எழாதெம் பேரூர் துயிலே".
 
பொருட் சுருக்கம்:
 
மதுரைநகரம் திருமாலின் உந்தியின் மலர்ந்த தாமரை மலரை ஒக்கும்; அந் நகரத்துள்ள தெருக்கள் அம் மலரின் இதழ்களை ஒக்கும்;
 
பாண்டியன் அரண்மனை அம்மலரகத்துள்ள பொகுட்டை ஒக்கும்; அந் நகரில்வாழும் தமிழராகிய குடிமக்கள் அம் மலரின் தாதுக்களை ஒப்பர்; அந் நகர்க்கு வரும் இரவலர் தாதுண்ண வரும் வண்டுகளை ஒப்பர். மதுரையிலுள்ள மாந்தர் வேத முழக்கத்தாலே நாள்தோறும் துயிலெழுவரேயன்றி வஞ்சி நகரத்தாரும் உறையூராரும் போலக் கோழி கூவுதலாலே துயிலெழுதலில்லை.
 
தாமரை மலரின் இதழ், பொகுட்டு, தாது, அதைச் சுற்றும் தேனீக்கள் போன்றவற்றை உவமையாகக் கொண்டு மதுரை நகரை பாடியுள்ளது சிறப்பானதாகும்.
 
== பதிப்பு வரலாறு ==
சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பரிமேலழகர் உரையுடன் 1918- ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.
 
===== பாடல்கள் அட்டவணை =====
1. தெரியவில்லை -  திருமால்- 65
 
2. கீராந்தையார் - திருமால் -76- நன்னானகார் - பாலையாழ்
 
3. கடுவனிள வெயினனார்- திருமால்- 94- பெட்டனாகனார்- பாலையாழ்
 
4. கடுவனிள வெயினனார்- திருமால்- 73 - பெட்டனாகனார்- பாலையாழ்
 
5. கடுவனிள வெயினனார்- செவ்வேள்- 81 - கண்ணனாகனார்- பாலையாழ்
 
6. நல்லந்துவனார்-வையை -106-.மருத்துவன் நல்லச்சுதனார்-
 
பாலையாழ்
 
7. மையோடக் கோவனார் - வையை - 86 - பித்தாமத்தர் - பாலையாழ்
 
8. நல்லந்துவனார் - செவ்வேள் - 130 -  மருத்துவன் நல்லச்சுதனார்-
 
பாலையாழ்
 
9. குன்றம்பூதனார் - செவ்வேள் - 130 -  மருத்துவன் நல்லச்சுதனார் - பாலையாழ்
 
10. கரும்பிள்ளைப் பூதனார் - வையை - 131 -  மருத்துவன் நல்லச்சுதனார் - பாலையாழ்
 
11. நல்லந்துவனார் - வையை - 140 -  நாகார் - பாலையாழ்
 
12. நல்வழுதியார் - வையை - 102 -  நந்தாகனார் - பாலையாழ்
 
13. நல்லெழினியார்- செவ்வேள் - 64 -   - நோதிறம்
 
'''14. கேசவனார் - செவ்வேள் - 32 -  மருத்துவன் நல்லச்சுதனார் - பாலையாழ்'''
 
15. இளம்பெருவழுதியார்  - திருமால் - 66 -  மருத்துவன் நல்லச்சுதனார் - நோதிறம்


16. நல்லழிசியார்  - வையை - 55 -  மருத்துவன் நல்லச்சுதனார் - நோதிறம்
மதுரை நகரையும், மதுரையையொட்டி ஒடுகின்ற வையை(வைகை) ஆற்றையும், திருபரங்குன்றத்தையும், திருமாலிருங் குன்றத்தையும் பாடுபொருளாகக் கொண்டு பரிபாடல் எழுந்துள்ளது என்பதனால் இந்நூலினை மதுரையைப் பற்றி எழுந்த நூல் எனலாம்.வையை(வைகை)யைப்‌ போற்றும் செய்யுட்கள்‌, அதனை ஆறாகக்‌ கொண்டு, அதன்‌ அழகை வியந்து போற்றாமல்‌, அதனை ஓரு நீர்த்‌ தெய்வமாகவே கொண்டு, அதனருளை வேண்டிப்‌  போற்‌றுகின்றன.


17.  நல்லழிசியார்  - செவ்வேள் - 53 -  மருத்துவன் நல்லச்சுதனார் -
திருமாலின் தோற்றப்பொலிவு,  திருமால் கண்ணனாக ஆயர்பாடியில் ஆய்ச்சியரோடு ஆடிய குரவைக்கூத்து,(பின்னாளில் குடக்கூத்து (3:83-85) எனப்பட்டது),  திருமாலின் அவதாரப் பெருமைகள் (ஐந்து அவதாரங்கள் மட்டும்  கூறப்பட்டுள்ளன) , அவனது அருள் போன்றவை இப்பாடல்களில் கூறப்படுகின்றன.  


நோதிறம்
சங்க இலக்கியங்களில் மற்ற நூல்களைக் காட்டிலும் பரிபாடலிலேயே கந்தவேளைப் பற்றிய செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. பரிபாடலில் கந்தவேள் அனைவருக்கும் அருளும் தெய்வமாகவும், சூரனையழித்த தேவசேனாபதியாகவும் சித்தரிக்கப்பட்டுளார். பரிபாடலில் மற்ற தலங்களைவிட பரங்குன்றம் மட்டும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. பரிபாடல்  விவரமாகக் கூறும் முருகனது பிறப்பு வரலாறு கந்த புராணத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது.


18. குன்றம்பூதனார்  - செவ்வேள் - 53 -  மருத்துவன் நல்லச்சுதனார் - காந்தாரம்
பரிபாடலில் ஒன்பது வையை(வைகை)ப்பாடல்கள் உள்ளன. அவற்றில் ஏழு பாடல்கள் முழுமையாகவும் ஒருபாடல் சிதைவடைந்த நிலையிலும் மற்றையது திரட்டுக்களில் இருந்து பெற்றுக்கொண்ட தனிப்பாடல்களும். வைகையைக் குறித்த செய்யுட்கள்‌ அதனை ஓரு நீர்த்‌ தெய்வமாகவே போற்றின.  இவற்றை அகப்பாடல்களாகக் கருதியே துறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாண்டியனின் ஆட்சிச்சிறப்பு, கொடைச்சிறப்பு, மதுரையின் சிறப்புக்கள் கூறப்படும் பகுதிகளில் புறத்திணைக்குரிய பண்புகள் உள்ளன. வைகையின் வரவும் வளம், நீராடுவோர் இயல்புகள், நீர்ப்பண்பாடுகள், அகப்பொருள் - புறப்பொருள் தழுவிய செய்திகள், வையையை வாழ்த்துதல் ஆகியன வையைப் பாடல்களின் பொதுவான அமைப்பாக அமைந்துள்ளன. தற்காலத்தில் 'ஆடிப்பெருக்கு' எனப்படும் புதுப்புனலின் வரவும் கூறப்படுகிறது.  திருவாதிரை அன்று தொடங்கி வைகையில் முதிய பெண்கள் முறைமை கூறி வழிகாட்ட கன்னியர் 'அம்பா ஆடல்' என்னும் தை நீராடிய குறிப்பு காணப்படுகிறது.


19. நப்பண்ணனார்  - செவ்வேள் - 106 -  மருத்துவன் நல்லச்சுதனார் - காந்தாரம்
==சிறப்புகள்==
<poem>
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே
பரிபாட் டாயிரு பாவினும்
உரிய தாகும் என்மனார் புலவர் -அகம்.: நூ. 51
</poem>
என்கிற தொல்காப்பிய அகத்திணை நூற்பா அகப்பொருளை நாடக வழக்கினும், உலக வழக்கிலும் பொருத்தி அழகுறப் பாட உரியன கலிப்பாவும் பரிபாடலுமே எனக் கூறுகிறது.


20. நல்லந்துவனார்  - வையை - 111 -  மருத்துவன் நல்லச்சுதனார் - காந்தாரம்
பிற்காலத்தில் சைவ சமயக் குரவர் நால்வர், [[ஆழ்வார்கள்]] ஆகியோர் பாடிய பக்தி இலக்கியங்களுக்கு பரிபாடலே முன்னோடியாகக் கருதப்படுகிறது.


21. நல்லச்சுதனார்  - செவ்வேள் - 70 -  கண்ணகனார் - காந்தாரம்
பண்டைத் தமிழ் நிலத்தின் வாழ்வியல், ஆன்மிகம் போன்ற பல  செய்திகளை பரிபாடல் அறியத் தருகிறது.


22. 45
==பாடல் நடை==


== உசாத்துணை ==
======அனைத்தும் நீயே======
தமிழ் இணைய கல்விக்கழகம், பரிபாடல் நூல்
பாடல் :  13                பாடியவர் : நல்லெழிநியார்<poem>
சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடுபோர் அண்ணால்!
அவை அவை கொள்ளும் கருவியும் நீயே:
முந்து யாம்கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே:
மூன்றின் உணரும் தீயும் நீயே;
நான்கின் உணரும் நீரும் நீயே,
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே,
அதனால், நின்மருங்கின்று-மூ-ஏழ் உலகமும்,
மூலமும் அறனும் முதன்மையின் இகந்த
காலமும் விசும்பும் காற்றோடு கனலும்(13)
</poem>


<nowiki>https://www.tamilvu.org/ta/library-l1250-html-l1250ind-124767</nowiki>
======திருமால்======
பாடல்: 2        பாடியவர் : கீரந்தையார்<poem>
தொல்முறை இயற்கையின் மதியொ....
... ... ... ... ... ... ... ... மரபிற்று ஆக.
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல,
கருவளர் வானத்து இசையின் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்;
செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுது.
</poem>
======செவ்வேள்======
பாடல்:14              பாடியவர்:கேசவனார்<poem>
கறையில்‌ கார்மழை பொங்கி யன்ன
நறையின்‌ நறும்புகை நனியமர்ந்‌ தோயே!  20
அறுமுகத்‌ தாறிரு தோளால்‌ வென்றி
நறுமலர்‌ வள்ளிப்‌ பூநயந்‌ தோமே!
கெழீஇக்‌ கேளிர்‌ சுற்ற நின்னை
எழீஇப்‌ பாடும்‌ பாட்டமர்ந்‌ தேயே!
"பிறந்த ஞான்றே நின்னை உட்கிச்‌ ட 2.
சிறந்தோர்‌ அஞ்சிய சீ ருடையோயே!
இருபிறப்‌ பிருபெயர்‌ ஈர நெஞ்சத்து
... ஒருபெயர்‌ அந்தணர்‌ அறனமர்ந்‌ தோயே!
அன்னை யாகலின்‌ அமர்ந்துயாம்‌ நின்னைத்‌
துன்னித்‌ துன்னி வழிபடு வதன்பயம்‌
இன்னு மின்னுமவை ஆகுக
தொன்முதிர்‌ மரபின்‌ புகழினும்‌ பலவே!
</poem>


பரிபாடல், உரை  பொ. வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு
======வந்தடைந்த புதுப் புனல்-வைகை======
பாடல்:11    பாடியவர் : நல்லந்துவனார்<poem>
விரிகதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்பு
எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து
தெருவிடைப் படுத்தமூன்று ஒன்பதிற் றிருக்கையுள்
உருகெழு வெள்ளிவந் தேற்றியல் சேர
வருடையைப் படிமகன் வாய்ப்பப்; பொருள்தெரி
புந்தி மிதுனம் பொருந்தப்; புலர்விடியல்
அங்கி உயர்நிற்ப அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்குப் பாலெய்த ; இறையமன்
வில்லிற் கண்டமகரம் மேவப்; பாம்பொல்லை
மதியம் மறைய வருநாளில்,வாய்ந்த
பொதியின் முனிவன் புரைவரைக் கீறி
மிதுனம் அடைய விரிகதிர் வேனில்
எதிர்வரவு மாரி இயைகென ; இவ்வாற்றான்
புரைகெழு சையம் பொழிம்ழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்
</poem>


{{being created}}
==உசாத்துணை==
*[https://www.tamilvu.org/ta/library-l1250-html-l1250ind-124767 தமிழ் இணைய கல்விக்கழகம், பரிபாடல் நூல்]
*[https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl9k0Uy தமிழ்மொழி-இலக்கிய வரலாறு, இரா, இராசமாணிக்கனார், தமிழ் இணைய கல்விக் கழகம்]
*பரிபாடல், உரை பொ. வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு
*[https://www.tamilvu.org/ta/library-l1300-html-l1300mun-128048 பாட்டும் தொகையும்-தமிழ் இணைய கல்விக் கழகம்]
*[https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3514:2016-08-24-02-28-28&catid=65:2014-11-23-05-26-56 சங்க இலக்கியத்தில் பரிபாடல்-வைகை காட்டும் சமூகம்]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 13:06, 25 November 2023

Image .jpg

பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது ஒரு பண்ணிசை இலக்கியம். ‘பரிபாட்டு’ என்னும் பெயராலும் இது வழங்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் தோன்றிய ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்திற்கு பரிபாடலே பக்திச் சுவையில் முன்னோடி.

பெயர்க்காரணம்

பரிபாடல் என்னும் பாவகையில் இயற்றப்பெற்றமையால் இந்நூல் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. பரிந்து செல்லும் ஓசையுடைய (வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பாக்களுக்கும், பல்வேறு அடிகளுக்கும் பரிந்து இடமளிக்கும்) தன்மையால் இப்பாவகை 'பரிபாடல்' எனப் பெயர் பெற்றது. பரி(குதிரை) போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்டதால் இப்பெயர் அமைந்ததாகக் கருதப்படுகிறது. எட்டுத்தொகை நூல்களில் பாவகையால் பெயர் அமைந்தவை கலித்தொகையும் பரிபாடலும்.

தொல்காப்பியர் கூறும் பரிபாடலுக்கான இலக்கணம்
  • நான்கு பாக்களின் உறுப்புகளும் கொண்ட பாடல்.
  • வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும்.
  • வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும்.
  • கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்களையும் கொண்டிருக்கும்.
  • பாடுபொருள் அகத்திணை சார்ந்ததாக இருக்கும்
  • 25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும்.

தொல்காப்பியர், இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் அனைவரும் பரிபாடல் என்னும் பாவகையில் தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலே பற்றிவரும் என்று குறிப்பிடுகின்றனர்.

சங்கத்தொகை நூலான பரிபாடல் பெரிதும் தோத்திரப் பாடல்களாகவே அமைந்துள்ளது. அகப்பொருளும், புறப்பொருளும் பயின்று வருகின்றன. எனவே"தொல்காப்பியர்க்குப் பிற்பட்ட காலத்தில் புறம் பற்றிய செய்திகளும் பரிபாடலில் பாடப்பெற்றன என்பது இப்பாக்களால் தெரிகின்றது" என்று மா. இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார்.

காலம்

பரிபாடல் தோன்றிய காலம் பற்றி அறிஞர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. எஸ். வையாபுரிப் பிள்ளை அதிக வடசொற்கள் இடம்பெறுவது, பரிபாடல்களைப் பாடிய புலவருள் எவரும் பிற சங்கத்தொகை நூல்களில் பாடாதது போன்ற பல காரணங்களினால் பரிபாடல் சங்ககாலத்திற்குப் பிற்பட்டது என்று கருதினார். இரா. இராசமாணிக்கனார் 'தமிழ்மொழி -இலக்கிய வரலாறு' நூலில் இக்கருத்துக்களை மறுத்துரைத்து பரிபாடலும் கலித்தொகையும் பொ.மு. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார். பரிபாடல்களைப் பாடிய புலவர்கள் பிறதொகை நூற்பாக்களைப் பாடிய புலவர்களே எனக் கொண்டாலும், வேறானவர் எனக் கொண்டாலும், அவர்கள் காலம் பொ.யு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதி என்றும் அதனால் பரிபாடல் சங்க காலத்தில் இயற்றப்பட்டதே என்றும் குறிப்பிடுகிறார்.

பாடிய புலவர்கள்

பாடல்

எண்

பாடியவர் பாடுபொருள் அடிகள் இசை வகுத்தவர் பண்
1 அறிய முடியவில்லை திருமால் 65 அறிய முடியவில்லை
2 கீரந்தையார் திருமால் 76 நன்னானகார் பாலையாழ்
3 கடுவனிள எயினனார் திருமால் 94 பெட்டனாகனார் பாலையாழ்
4 கடுவனிள எயினனார் திருமால் 73 பெட்டனாகனார் பாலையாழ்
5 கடுவனிள எயினனார் செவ்வேள் 81 கண்ணனாகனார் பாலையாழ்
6 நல்லந்துவனார் வையை 106 மருத்துவன் நல்லச்சுதனார் பாலையாழ்
7 மையோடக் கோவனார் வையை 86 பித்தாமத்தர் பாலையாழ்
8 நல்லந்துவனார் செவ்வேள் 130 மருத்துவன் நல்லச்சுதனார் பாலையாழ்
9 குன்றம்பூதனார் செவ்வேள் 130 மருத்துவன் நல்லச்சுதனார் பாலையாழ்
10 கரும்பிள்ளைப் பூதனார் வையை 131 மருத்துவன் நல்லச்சுதனார் பாலையாழ்
11 நல்லந்துவனார் வையை 140 நாகார் பாலையாழ்
12 நல்வழுதியார் வையை 102 நந்தாகனார் பாலையாழ்
13 நல்லெழினியார் செவ்வேள் 64 - நோதிறம்
14 கேசவனார் செவ்வேள் 32 மருத்துவன் நல்லச்சுதனார் பாலையாழ்
15 இளம்பெருவழுதியார் திருமால் 66 மருத்துவன் நல்லச்சுதனார் நோதிறம்
16 நல்லழிசியார் வையை 55 மருத்துவன் நல்லச்சுதனார் நோதிறம்
17 நல்லழிசியார் செவ்வேள் 53 மருத்துவன் நல்லச்சுதனார் நோதிறம்
18 குன்றம்பூதனார் செவ்வேள் 53 மருத்துவன் நல்லச்சுதனார் காந்தாரம்
19 நப்பண்ணனார் செவ்வேள் 106 மருத்துவன் நல்லச்சுதனார் காந்தாரம்
20 நல்லந்துவனார் வையை 111 மருத்துவன் நல்லச்சுதனார் காந்தாரம்
21 நல்லச்சுதனார் செவ்வேள் 70 கண்ணகனார் காந்தாரம்
22 அறிய முடியவில்லை 45 அறிய முடியவில்லை

நூல் அமைப்பு

பரிபாடலில் திருமாலுக்கு 8, செவ்வேளுக்கு 31, வைகைக்கு 26, மதுரைக்கு 4, கொற்றவைக்கு 1 என 70 பாடல்கள் இருந்த்தாக இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது.

திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம்.

இன்று இருப்பவை திருமாலுக்கு 6,முருகனுக்கு 8, வைகைக்கு 8 பாடல்கள் என 22 பாடல்கள். மேலும் தனிநிலையில் கிடைத்த 11 பாடல்கள் இந்த நூலினதாக இருக்கலாம் என்னும் கருத்தோடு ‘பரிபாடல் திரட்டு’ என்னும் தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. பரிபாடல் அகப்பொருளும் புறப்பொருளும் இணைந்த நூல்.

பரிபாடலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் (1, 22 நீங்கலாக) ஆசிரியர் பெயர், துறை, பண், பண் வகுத்தோர் பெயர் ஆகிய குறிப்புகள் உள்ளன. பரிபாடலில் அமைந்துள்ள பண்களின் அமைதி கருதியே பரிபாடலின் அமைப்புமுறை அமைந்துள்ளது.

மதுரை நகரையும், மதுரையையொட்டி ஒடுகின்ற வையை(வைகை) ஆற்றையும், திருபரங்குன்றத்தையும், திருமாலிருங் குன்றத்தையும் பாடுபொருளாகக் கொண்டு பரிபாடல் எழுந்துள்ளது என்பதனால் இந்நூலினை மதுரையைப் பற்றி எழுந்த நூல் எனலாம்.வையை(வைகை)யைப்‌ போற்றும் செய்யுட்கள்‌, அதனை ஆறாகக்‌ கொண்டு, அதன்‌ அழகை வியந்து போற்றாமல்‌, அதனை ஓரு நீர்த்‌ தெய்வமாகவே கொண்டு, அதனருளை வேண்டிப்‌ போற்‌றுகின்றன.

திருமாலின் தோற்றப்பொலிவு, திருமால் கண்ணனாக ஆயர்பாடியில் ஆய்ச்சியரோடு ஆடிய குரவைக்கூத்து,(பின்னாளில் குடக்கூத்து (3:83-85) எனப்பட்டது), திருமாலின் அவதாரப் பெருமைகள் (ஐந்து அவதாரங்கள் மட்டும் கூறப்பட்டுள்ளன) , அவனது அருள் போன்றவை இப்பாடல்களில் கூறப்படுகின்றன.

சங்க இலக்கியங்களில் மற்ற நூல்களைக் காட்டிலும் பரிபாடலிலேயே கந்தவேளைப் பற்றிய செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. பரிபாடலில் கந்தவேள் அனைவருக்கும் அருளும் தெய்வமாகவும், சூரனையழித்த தேவசேனாபதியாகவும் சித்தரிக்கப்பட்டுளார். பரிபாடலில் மற்ற தலங்களைவிட பரங்குன்றம் மட்டும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. பரிபாடல் விவரமாகக் கூறும் முருகனது பிறப்பு வரலாறு கந்த புராணத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது.

பரிபாடலில் ஒன்பது வையை(வைகை)ப்பாடல்கள் உள்ளன. அவற்றில் ஏழு பாடல்கள் முழுமையாகவும் ஒருபாடல் சிதைவடைந்த நிலையிலும் மற்றையது திரட்டுக்களில் இருந்து பெற்றுக்கொண்ட தனிப்பாடல்களும். வைகையைக் குறித்த செய்யுட்கள்‌ அதனை ஓரு நீர்த்‌ தெய்வமாகவே போற்றின. இவற்றை அகப்பாடல்களாகக் கருதியே துறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாண்டியனின் ஆட்சிச்சிறப்பு, கொடைச்சிறப்பு, மதுரையின் சிறப்புக்கள் கூறப்படும் பகுதிகளில் புறத்திணைக்குரிய பண்புகள் உள்ளன. வைகையின் வரவும் வளம், நீராடுவோர் இயல்புகள், நீர்ப்பண்பாடுகள், அகப்பொருள் - புறப்பொருள் தழுவிய செய்திகள், வையையை வாழ்த்துதல் ஆகியன வையைப் பாடல்களின் பொதுவான அமைப்பாக அமைந்துள்ளன. தற்காலத்தில் 'ஆடிப்பெருக்கு' எனப்படும் புதுப்புனலின் வரவும் கூறப்படுகிறது. திருவாதிரை அன்று தொடங்கி வைகையில் முதிய பெண்கள் முறைமை கூறி வழிகாட்ட கன்னியர் 'அம்பா ஆடல்' என்னும் தை நீராடிய குறிப்பு காணப்படுகிறது.

சிறப்புகள்

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே
பரிபாட் டாயிரு பாவினும்
உரிய தாகும் என்மனார் புலவர் -அகம்.: நூ. 51

என்கிற தொல்காப்பிய அகத்திணை நூற்பா அகப்பொருளை நாடக வழக்கினும், உலக வழக்கிலும் பொருத்தி அழகுறப் பாட உரியன கலிப்பாவும் பரிபாடலுமே எனக் கூறுகிறது.

பிற்காலத்தில் சைவ சமயக் குரவர் நால்வர், ஆழ்வார்கள் ஆகியோர் பாடிய பக்தி இலக்கியங்களுக்கு பரிபாடலே முன்னோடியாகக் கருதப்படுகிறது.

பண்டைத் தமிழ் நிலத்தின் வாழ்வியல், ஆன்மிகம் போன்ற பல செய்திகளை பரிபாடல் அறியத் தருகிறது.

பாடல் நடை

அனைத்தும் நீயே

பாடல் : 13 பாடியவர் : நல்லெழிநியார்

சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடுபோர் அண்ணால்!
அவை அவை கொள்ளும் கருவியும் நீயே:
முந்து யாம்கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே:
மூன்றின் உணரும் தீயும் நீயே;
நான்கின் உணரும் நீரும் நீயே,
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே,
அதனால், நின்மருங்கின்று-மூ-ஏழ் உலகமும்,
மூலமும் அறனும் முதன்மையின் இகந்த
காலமும் விசும்பும் காற்றோடு கனலும்(13)

திருமால்

பாடல்: 2 பாடியவர் : கீரந்தையார்

தொல்முறை இயற்கையின் மதியொ....
... ... ... ... ... ... ... ... மரபிற்று ஆக.
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல,
கருவளர் வானத்து இசையின் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்;
செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுது.

செவ்வேள்

பாடல்:14 பாடியவர்:கேசவனார்

கறையில்‌ கார்மழை பொங்கி யன்ன
நறையின்‌ நறும்புகை நனியமர்ந்‌ தோயே! 20
அறுமுகத்‌ தாறிரு தோளால்‌ வென்றி
நறுமலர்‌ வள்ளிப்‌ பூநயந்‌ தோமே!
கெழீஇக்‌ கேளிர்‌ சுற்ற நின்னை
எழீஇப்‌ பாடும்‌ பாட்டமர்ந்‌ தேயே!
"பிறந்த ஞான்றே நின்னை உட்கிச்‌ ட 2.
சிறந்தோர்‌ அஞ்சிய சீ ருடையோயே!
இருபிறப்‌ பிருபெயர்‌ ஈர நெஞ்சத்து
... ஒருபெயர்‌ அந்தணர்‌ அறனமர்ந்‌ தோயே!
அன்னை யாகலின்‌ அமர்ந்துயாம்‌ நின்னைத்‌
துன்னித்‌ துன்னி வழிபடு வதன்பயம்‌
இன்னு மின்னுமவை ஆகுக
தொன்முதிர்‌ மரபின்‌ புகழினும்‌ பலவே!

வந்தடைந்த புதுப் புனல்-வைகை

பாடல்:11 பாடியவர் : நல்லந்துவனார்

விரிகதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்பு
எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து
தெருவிடைப் படுத்தமூன்று ஒன்பதிற் றிருக்கையுள்
உருகெழு வெள்ளிவந் தேற்றியல் சேர
வருடையைப் படிமகன் வாய்ப்பப்; பொருள்தெரி
புந்தி மிதுனம் பொருந்தப்; புலர்விடியல்
அங்கி உயர்நிற்ப அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்குப் பாலெய்த ; இறையமன்
வில்லிற் கண்டமகரம் மேவப்; பாம்பொல்லை
மதியம் மறைய வருநாளில்,வாய்ந்த
பொதியின் முனிவன் புரைவரைக் கீறி
மிதுனம் அடைய விரிகதிர் வேனில்
எதிர்வரவு மாரி இயைகென ; இவ்வாற்றான்
புரைகெழு சையம் பொழிம்ழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்

உசாத்துணை


✅Finalised Page