under review

திருக்காரவாயில் கோபால பிள்ளை

From Tamil Wiki

திருக்காரவாயில் கோபால பிள்ளை (ஆகஸ்ட் 14, 1886 - மார்ச் 18, 1976) ஒரு தவில் கலைஞர்.

இளமை, கல்வி

திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்காரவாயில் என்னும் ஊரில் ஆகஸ்ட் 14, 1886 அன்று முருகையா பிள்ளை - அம்மாக்குட்டி அம்மாள் ஆகியோருக்கு கோபால பிள்ளை பிறந்தார்.

உள்ளூரிலேயே மஹாலிங்கம் பிள்ளை என்பவரின் சீடராகத் தவிற்கலை பயின்றார்.

தனிவாழ்க்கை

கோபால பிள்ளைக்கு கோவிந்தம்மாள் (கணவர்: செல்லையா பிள்ளை) என்ற ஒரு மூத்த சகோதரி இருந்தார்.

யாழ்ப்பாணம் பொன்னுஸ்வாமி தவில்காரரின் மகள் மாணிக்கத்தம்மாளை கோபால பிள்ளை முதலில் மணந்தார். இரண்டாவது மனைவி வடபாதிமங்கலம் பிச்சுத் தவில்காரரின் மகள் ராஜம்மாள். கோபால பிள்ளையின் பிள்ளைகள்:

  • வீராஸ்வாமி (தவில்)
  • ராமமூர்த்தி
  • காளிதாஸ் (தவில்)
  • தனராஜன் (நாதஸ்வரம்)
  • பிச்சையா
  • கிருஷ்ணமூர்த்தி
  • ஜயராமன்
  • சின்னக்கண்ணன்
  • மரகதவல்லி
  • ஸௌந்தரவல்லி
  • அஞ்சம்மாள்
  • தனலக்ஷ்மி

இசைப்பணி

கோபால பிள்ளை புதிதுபுதிதாக கற்பனை வளத்தோடு சொற்கட்டுக்களை வாசிப்பதில் பெயர் பெற்றவர்.

மாணவர்கள்

திருக்காரவாயில் கோபால பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • நாகலிங்கம்
  • பழனிவேலு
  • கிருஷ்ணமூர்த்தி
உடன் வாசித்த கலைஞர்கள்

திருக்காரவாயில் கோபால பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

மறைவு

திருக்காரவாயில் கோபால பிள்ளை மார்ச் 18, 1976 அன்று காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page