வியோமசிவன்
வியோமசிவன் (व्योमशिव) ( பொயு 1000) இந்திய தத்துவ அறிஞர். வைசேஷிகம், நியாயம் ஆகிய தரிசனங்களுக்கு விளக்கநூல்கள் எழுதினார். காஷ்மீரி சைவர். வியோமசேகரர் என்றும் சில நூல்களில் சொல்லப்படுகிறார். வியோமசிவாசாரியார் என்றும் சொல்லப்படுவதுண்டு.
ஆசிரியர்
வியோமசிவன் என்ற பெயரில் இருந்து இவர் காஷ்மீரி சைவர் என ஊகிக்கப்படுகிறது. இவருடைய காலம் பொயு 1000 ஆக இருக்கலாம் என இவர் குறிப்பிடும் பிற ஆசிரியர்களைக் கொண்டு ஊகிக்கப்படுகிறது.
படைப்புகள்
கணாதர் எழுதிய வைசேஷிக தரிசனத்தின் முதல்நூலாகிய வைசேஷிக சூத்ரத்திற்கு பிரசஸ்தபாதர் எழுதிய விளக்கவுரையான பதாத்ததர்ம சம்கிரகம் என்னும் நூலுக்கு வியோமசிவன் எழுதிய வியோமாவதி என்னும் விளக்கவுரையே தொன்மையானது. இந்நூலில் வியோமசிவன் மோட்சம் என்னும் கருத்தைப்பற்றிய வெவ்வேறு ஆசிரியர்களின் கருத்துக்களை பரிசீலிக்கிறார். பிரசஸ்தபாதர் ஆறுவகை பொருண்மைக் குணங்களை விவாதிக்கிறார். இன்மை என்பது அதில் சேர்க்கப்படவில்லை. வியோமசிவன் இன்மையும் ஒரு பொருண்மைக்குணம் என்று சேர்த்துக்கொள்கிறார்.
உசாத்துணை
- வியோமசிவம்- விஸ்டம் லைப்ரரி
- A Study of Vaisesika Philosophy- With Special Reference to Vyomasivacarya
- History of vaisheshika ontology
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Nov-2024, 19:47:11 IST