மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
மதுரை, காருலவியம் என்ற ஊரில் பிறந்தார். நாடகம் இயற்றும் கூத்தர் தொழில் செய்து வந்தார்.
இலக்கிய வாழ்க்கை
மதுரைக் காருலவியங் கூத்தனாரின் பாடல் ஒன்று நற்றிணையில்(325) உள்ளது. கவிந்த தலையும், பருத்த மயிரும் கொண்ட ஆண் கரடி இரை தேடிக்கொண்டு இரவில் சென்று கரையானை உண்பதற்காகக் கரையான் புற்றைக் கிண்டும்போது, புற்றிலிருந்து பாம்பு வரக்கண்டு, தன் நகங்களால் ஒதுக்கித் தள்ளும் என்ற பாலையின் சித்திரம் காண்பிக்கப்படுகிறது.
பாடல் நடை
- நற்றிணை 325: பாலை; தோழி செலவு அழுங்குவித்தது.
கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரை தேர் வேட்கையின் இரவில் போகி,
நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த
அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென
முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும், 5
ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று- இவள்
பூப்போல் உண்கண் புது நலம் சிதைய,
வீங்கு நீர் வாரக் கண்டும்,
தகுமோ?- பெரும!- தவிர்க நும் செலவே.
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9
- சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page