under review

கோதமனார்

From Tamil Wiki

கோதமனார் கடைச்சங்ககால தமிழ்ப்புலவர்களில் ஒருவர். திருவள்ளுவமாலையில் பாயிரம் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

காசிச்செட்டியாரும், சதாசிவம்பிள்ளையாரும் கோதமனாருக்கு திருவள்ளுவமாலையின் அடிப்படையில் இடமளித்தனர்.

இலக்கிய வாழ்க்கை

கோதமனார் திருவள்ளுவமாலையில் பாயிரம் எழுதினார். கோதமானார் தருமனைப் பாடிய புறப்பாட்டு ஒன்று உண்டு.

விவாதம்

பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தினைப்பாடிய பாலைக் கெளதமனாரும், சிலப்பதிகாரத்திலும், பழமொழி நானூறிலும் உள்ள கெளதமரும் ஒருவரா, பலரா என்பது தெரியவில்லை.

பாடல் நடை

ஆற்ற லழியுமென் றந்தணர்க ணான்மறையைப்
போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதார் ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினு மாற்றல்சோர் வின்று

உசாத்துணை


✅Finalised Page