இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-2007
From Tamil Wiki
இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-2007
மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
---|---|---|---|
ஜனவரி | அயோத்யா மண்டபம் | சுஜாதா | குமுதம் |
பிப்ரவரி | பொன் விழா! | இந்திரா பார்த்தசாரதி | கல்கி |
மார்ச் | சுமை வாங்கிகள் | ராஜன் ஆத்தியப்பன் | அமுதசுரபி |
ஏப்ரல் | காணாமல் போகும் காலம் | பாவண்ணன் | தீராநதி |
மே | ஆட்டம் | தேவிபாலா | குமுதம் |
ஜூன் | கோடை மழை | சாந்தா தத் | அமுதசுரபி |
ஜூலை | வெள்ளையம்மா | க. மகேஷ்வரன் | குமுதம் |
ஆகஸ்ட் | புனிதப் பயணம் | ஏ.ஏ.எச்.கே. கோரி | கல்கி |
செப்டம்பர் | காட்டாமணக்கு | சஞ்சய் ராமசாமி | கல்கி |
அக்டோபர் | பொற்கொடியும் பார்ப்பாள்! | அ. முத்துலிங்கம் | ஆனந்த விகடன் |
நவம்பர் | திரை | இரா. முருகன் | குங்குமம் |
டிசம்பர் | குருசேவ் குழந்தையாக இருந்தபொழுது... | க.சீ. சிவகுமார் | குங்குமம் |
2007-ம் ஆண்டின் சிறந்த சிறுகதை
2007-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, க. மகேஷ்வரன் எழுதிய ‘வெள்ளையம்மா’ தேர்ந்தெடுக்கப்பட்டது. எஸ். வைத்தீஸ்வரன் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை எஸ். ரமேஷ் தேர்வு செய்தார்.
உசாத்துணை
✅Finalised Page