under review

சைமன் காசிச் செட்டி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
Line 4: Line 4:
சைமன் காசிச் செட்டி இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள புத்தளம் நகருக்கு அண்மையில் கற்பிட்டியில் காபிரியேல், மேரி றோசைறோ மகனாக மார்ச் 21, 1807-ல் பிறந்தார். சைமன் காசிச் செட்டி திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கொழும்புச் செட்டிமார் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆரம்பக்கல்வியை கற்பிட்டியில் பயின்றார். உயர்கல்வியை புத்தளம், கொழும்பு ஆகிய இடங்களில் பயின்றார். தனது பதினேழாவது வயதிற்குள் தாய்மொழியாகிய தமிழுடன், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார். சமஸ்கிருதம், ஒல்லாந்தம், போர்த்துக்கீசியம், லத்தீன், டச்சு, கிரேக்கம், எபிரேயம், அரபி, பாலி ஆகிய மொழிகளை சுயமாகக் கற்றுத் தேர்ந்தார்.
சைமன் காசிச் செட்டி இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள புத்தளம் நகருக்கு அண்மையில் கற்பிட்டியில் காபிரியேல், மேரி றோசைறோ மகனாக மார்ச் 21, 1807-ல் பிறந்தார். சைமன் காசிச் செட்டி திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கொழும்புச் செட்டிமார் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆரம்பக்கல்வியை கற்பிட்டியில் பயின்றார். உயர்கல்வியை புத்தளம், கொழும்பு ஆகிய இடங்களில் பயின்றார். தனது பதினேழாவது வயதிற்குள் தாய்மொழியாகிய தமிழுடன், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார். சமஸ்கிருதம், ஒல்லாந்தம், போர்த்துக்கீசியம், லத்தீன், டச்சு, கிரேக்கம், எபிரேயம், அரபி, பாலி ஆகிய மொழிகளை சுயமாகக் கற்றுத் தேர்ந்தார்.
== பணிகள் ==
== பணிகள் ==
சைமன் காசிச் செட்டி புத்தளம் நீதிமன்றத்தில் 1824-ஆம் ஆண்டு மொழி பெயர்ப்பாளராக பணியில் சேர்ந்தார். 1828-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மணியக்காரராகவும்(ஊர்த்தலைமகன்), மாவட்ட முதலியராகவும் பணிபுரிந்தார்.  
சைமன் காசிச் செட்டி புத்தளம் நீதிமன்றத்தில் 1824-ம் ஆண்டு மொழி பெயர்ப்பாளராக பணியில் சேர்ந்தார். 1828-ம் ஆண்டு முதல் புத்தளம் மணியக்காரராகவும்(ஊர்த்தலைமகன்), மாவட்ட முதலியராகவும் பணிபுரிந்தார்.  


கோல்புறூக் சீர்திருத்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டசபையில் தமிழ் பேசும் மக்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த ஆ. குமாரசுவாமி முதலியார் 1836 -ஆம் ஆண்டு நவம்பரில் காலமாகிவிட 1838 இல் சைமன் காசிச்செட்டி தேசாதிபதியால் இலங்கைச் சட்டசபை உறுப்பினராக நியமனம் பெற்றார். இலங்கை சட்ட நிரூபண சபை அங்கத்தினராக 1838 முதல் 1845 வரை செயல்பட்டார். 1845-ஆம் ஆண்டு இலங்கை ஆட்சிப் பணியில் (Ceylon Civil Service) சேர்ந்தார். 1848-ஆம் ஆண்டு முதல் தற்காலிக நீதிபதியாகவும், 1852-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றினார். இலங்கை நிருவாகச் சேவைக்கு இணைக்கப்பட்ட முதல் இலங்கையர். மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இலங்கையர்.
கோல்புறூக் சீர்திருத்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டசபையில் தமிழ் பேசும் மக்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த ஆ. குமாரசுவாமி முதலியார் 1836 -ம் ஆண்டு நவம்பரில் காலமாகிவிட 1838-ல் சைமன் காசிச்செட்டி தேசாதிபதியால் இலங்கைச் சட்டசபை உறுப்பினராக நியமனம் பெற்றார். இலங்கை சட்ட நிரூபண சபை அங்கத்தினராக 1838 முதல் 1845 வரை செயல்பட்டார். 1845-ம் ஆண்டு இலங்கை ஆட்சிப் பணியில் (Ceylon Civil Service) சேர்ந்தார். 1848-ம் ஆண்டு முதல் தற்காலிக நீதிபதியாகவும், 1852-ம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றினார். இலங்கை நிருவாகச் சேவைக்கு இணைக்கப்பட்ட முதல் இலங்கையர். மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இலங்கையர்.
== சேவைகள் ==
== சேவைகள் ==
தமது சொந்த ஊராகிய கற்பிட்டியில் ஐம்பது மாணவர்கள் படிக்கக் கூடிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். அப்பள்ளியில் ஏழை மாணவர்கள் இலவசமாகக் கற்பிக்க ஏற்பாடு செய்தார்.
தமது சொந்த ஊராகிய கற்பிட்டியில் ஐம்பது மாணவர்கள் படிக்கக் கூடிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். அப்பள்ளியில் ஏழை மாணவர்கள் இலவசமாகக் கற்பிக்க ஏற்பாடு செய்தார்.
Line 12: Line 12:
தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களையும், அவற்றைப் படைத்தோரையும் பற்றிய வரலாறு தமிழிலக்கிய வரலாற்றை எழுத முதன் முதல் முயற்சியில் ஈடுபட்டவர் சைமன் காசிக் செட்டி என அறியப்படுகிறார். காசிச் செட்டியின் நூல்களும், கட்டுரைகளும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டன.  
தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களையும், அவற்றைப் படைத்தோரையும் பற்றிய வரலாறு தமிழிலக்கிய வரலாற்றை எழுத முதன் முதல் முயற்சியில் ஈடுபட்டவர் சைமன் காசிக் செட்டி என அறியப்படுகிறார். காசிச் செட்டியின் நூல்களும், கட்டுரைகளும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டன.  
===== தமிழ் புளூட்டாக் =====
===== தமிழ் புளூட்டாக் =====
தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களின் முன்னோடியான 'தமிழ் புளூட்டாக்' நூலை சைமன் காசிச் செட்டி எழுதினார். ”The Tamil Plutarch Containing a summary Account of the Lives of the Poets and Poetesses Southern India and Ceylon. The Earliest to the present times, with select specimens of their compositions” என்னும் ஆங்கில நூல் 1859-ஆம் ஆண்டு வெளிவந்தது. மேற்கத்திய நாடுகளில் செல்வாக்குப் பெற்ற ‘வாழ்க்கைச் சரிதம்’ என்னும் வடிவத்தைக் கையாண்ட சைமன் காசிச் செட்டி தமிழ்ப் புலவர்களின் சரிதங்களை எழுதினார். தமிழ்ப் புலவர்களுடைய சரிதங்களை ஒரே நூலில் முதலில் அச்சேற்றிய பெருமை, சைமன் காசிக் செட்டியவர்களையே சாரும்.
தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களின் முன்னோடியான 'தமிழ் புளூட்டாக்' நூலை சைமன் காசிச் செட்டி எழுதினார். ”The Tamil Plutarch Containing a summary Account of the Lives of the Poets and Poetesses Southern India and Ceylon. The Earliest to the present times, with select specimens of their compositions” என்னும் ஆங்கில நூல் 1859-ம் ஆண்டு வெளிவந்தது. மேற்கத்திய நாடுகளில் செல்வாக்குப் பெற்ற ‘வாழ்க்கைச் சரிதம்’ என்னும் வடிவத்தைக் கையாண்ட சைமன் காசிச் செட்டி தமிழ்ப் புலவர்களின் சரிதங்களை எழுதினார். தமிழ்ப் புலவர்களுடைய சரிதங்களை ஒரே நூலில் முதலில் அச்சேற்றிய பெருமை, சைமன் காசிக் செட்டியவர்களையே சாரும்.
===== மதம் =====
===== மதம் =====
சைவசமயம் சம்பந்தமான நூல்களையும் எழுதினார். திருக்கோணேச்சரம் பற்றிக் கூறும் கவிராஜவரோதயரின் புராணப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1831-ல் வெளியிட்டார். திருவாதவூரர் புராணத்தின் ஆறாவது சருக்கத்தினையும், காசிக் காண்டத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
சைவசமயம் சம்பந்தமான நூல்களையும் எழுதினார். திருக்கோணேச்சரம் பற்றிக் கூறும் கவிராஜவரோதயரின் புராணப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1831-ல் வெளியிட்டார். திருவாதவூரர் புராணத்தின் ஆறாவது சருக்கத்தினையும், காசிக் காண்டத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
Line 30: Line 30:
மாலத்தீவு மொழியில் சிங்கள மொழி கலந்துள்ளமை பற்றியும், ஜாவாத்தீவின் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையையும் சைமன் காசிச்செட்டி எழுதினார். அத்துடன் இலங்கையின் வரலாற்றைக் கூறும் "சரித்திர சூதனம்" எனும் நூலை எழுதினார்.
மாலத்தீவு மொழியில் சிங்கள மொழி கலந்துள்ளமை பற்றியும், ஜாவாத்தீவின் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையையும் சைமன் காசிச்செட்டி எழுதினார். அத்துடன் இலங்கையின் வரலாற்றைக் கூறும் "சரித்திர சூதனம்" எனும் நூலை எழுதினார்.
== தமிழ் நுண்வரலாறுகள் ==
== தமிழ் நுண்வரலாறுகள் ==
யாழ்ப்பாணத்தின் வரலாறு, பரதவர்குல வரலாறு, தமிழ் நூல்களின் பட்டியல், தமிழர் சாதிப் பகுப்புமுறை, தமிழர் சடங்கு முறைகள் என்பனவும் இவர் எழுதியவற்றுள் அடங்குவன. கற்பிட்டிப் பகுதியில் கரையோரத்திலுள்ள ‘குதிரைமலை’ என்னும் இடத்தின் தொன்மைச் சிறப்புகளை ஆராய்ந்து எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொல் பழங்காலத்திலிருந்து ஒல்லாந்தர் கைப்பற்றிய 1658-ஆம் ஆண்டு வரையில் அவர் எழுதிய நூல், பிற்கால வரலாற்று ஆசிரியர்களுக்கு உதவியது. பல்வேறு நூல்களை ஆராய்ந்து எழுதிய ‘இலங்கை வரலாற்றுக் குறிப்பு’ (சரித்திர சூதனம்) என்னும் நூலின் மூலம் சிறந்த வரலாற்று ஆசிரியராகவும் போற்றப்படுகின்றார். சைமன் காசிச் செட்டி எழுதிய ‘தமிழ் புலவர் வரலாறு’ என்ற நூல் [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ.பொ. மீனாட்சி சுந்தரம்]]பிள்ளை, [[சுவாமி விபுலானந்தர்|விபுலாநந்த அடிகளார்]] ஆகியோரின் அணிந்துரையுடன் 1946-ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாணத்தின் வரலாறு, பரதவர்குல வரலாறு, தமிழ் நூல்களின் பட்டியல், தமிழர் சாதிப் பகுப்புமுறை, தமிழர் சடங்கு முறைகள் என்பனவும் இவர் எழுதியவற்றுள் அடங்குவன. கற்பிட்டிப் பகுதியில் கரையோரத்திலுள்ள ‘குதிரைமலை’ என்னும் இடத்தின் தொன்மைச் சிறப்புகளை ஆராய்ந்து எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொல் பழங்காலத்திலிருந்து ஒல்லாந்தர் கைப்பற்றிய 1658-ம் ஆண்டு வரையில் அவர் எழுதிய நூல், பிற்கால வரலாற்று ஆசிரியர்களுக்கு உதவியது. பல்வேறு நூல்களை ஆராய்ந்து எழுதிய ‘இலங்கை வரலாற்றுக் குறிப்பு’ (சரித்திர சூதனம்) என்னும் நூலின் மூலம் சிறந்த வரலாற்று ஆசிரியராகவும் போற்றப்படுகின்றார். சைமன் காசிச் செட்டி எழுதிய ‘தமிழ் புலவர் வரலாறு’ என்ற நூல் [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ.பொ. மீனாட்சி சுந்தரம்]]பிள்ளை, [[சுவாமி விபுலானந்தர்|விபுலாநந்த அடிகளார்]] ஆகியோரின் அணிந்துரையுடன் 1946-ம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டது.


சைமன் காசிச் செட்டி தமிழரின் சாதிப்பாகுபாடு, பழக்க வழக்கங்கள், குணவியல்புகள், இலக்கிய இலக்கண நூல்களை எழுதினார். இந்நூல்கள் தமிழ்நாட்டின் தொன்மை, தமிழ் மொழியின் பழமை, தமிழரின் உடைகள், அணிகலன்கள், நாகரிகச் சிறப்பு, உணவு வகைகள், மூத்தோரை மதிக்கும் பண்பு, பெண்கள் உயர்வாகப் போற்றப்படுதல், தமிழலின் திருமணச் சடங்கு முறைகள் பற்றிய விளக்கங்களைக் கூறுகிறது. இந்நூலுக்கு டாக்டர் எசு சிபோல் பாராட்டுரை எழுதியுள்ளார். இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 1934-ஆம் ஆண்டு வெளிவந்தது.
சைமன் காசிச் செட்டி தமிழரின் சாதிப்பாகுபாடு, பழக்க வழக்கங்கள், குணவியல்புகள், இலக்கிய இலக்கண நூல்களை எழுதினார். இந்நூல்கள் தமிழ்நாட்டின் தொன்மை, தமிழ் மொழியின் பழமை, தமிழரின் உடைகள், அணிகலன்கள், நாகரிகச் சிறப்பு, உணவு வகைகள், மூத்தோரை மதிக்கும் பண்பு, பெண்கள் உயர்வாகப் போற்றப்படுதல், தமிழலின் திருமணச் சடங்கு முறைகள் பற்றிய விளக்கங்களைக் கூறுகிறது. இந்நூலுக்கு டாக்டர் எசு சிபோல் பாராட்டுரை எழுதியுள்ளார். இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 1934-ம் ஆண்டு வெளிவந்தது.


"புத்தளப் பிரதேச முக்குவ குலத்தவரின் உற்பத்தியும் - வரலாறும்" எனும் ஆய்வுக் கட்டுரையையும் முஸ்லிம்களுடைய பாரம்பரியம், பழக்கவழக்கம் எனும் தலைப்பிலும் ஆய்வுக்கட்டுரையையும் எழுதியுள்ளார்.
"புத்தளப் பிரதேச முக்குவ குலத்தவரின் உற்பத்தியும் - வரலாறும்" எனும் ஆய்வுக் கட்டுரையையும் முஸ்லிம்களுடைய பாரம்பரியம், பழக்கவழக்கம் எனும் தலைப்பிலும் ஆய்வுக்கட்டுரையையும் எழுதியுள்ளார்.
===== பிற =====
===== பிற =====
‘சிலோன் கெஜட்டியார்’ (Ceylon Gazatteer) இலங்கைத் தீவுக்கும், இலங்கைத் தமிழ் மக்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் சிறந்த படைப்பாகும். இந்நூலுக்கு அந்நாளைய ஆங்கிலேய பிரதம நீதிபதியாக பதவி வகித்த சர்.சார்லஸ் மார்ஷல், பிரதம படைத் தளபதியாக இருந்த சர்.யோன்வில்சன் ஆகியோர் மதிப்புரை வழங்கியுள்ளனர். இந்நூல் 1934-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலின் பிரதி ஒன்று கொழும்பிலுள்ள ராயல் ஏசியாடிக் சங்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.  
‘சிலோன் கெஜட்டியார்’ (Ceylon Gazatteer) இலங்கைத் தீவுக்கும், இலங்கைத் தமிழ் மக்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் சிறந்த படைப்பாகும். இந்நூலுக்கு அந்நாளைய ஆங்கிலேய பிரதம நீதிபதியாக பதவி வகித்த சர்.சார்லஸ் மார்ஷல், பிரதம படைத் தளபதியாக இருந்த சர்.யோன்வில்சன் ஆகியோர் மதிப்புரை வழங்கியுள்ளனர். இந்நூல் 1934-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலின் பிரதி ஒன்று கொழும்பிலுள்ள ராயல் ஏசியாடிக் சங்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.  


உலக உருண்டையில் இலங்கைத் தீவு அமைந்துள்ள அகலம், நீளம், குறித்த அளவுகள் பற்றி, அக்கால புவியியலாளர்கள் வியக்கும் வகையில் எடுத்துக் கூறியவர். புதுமை அளவைக் கருவிகள் ஏதுமின்றி, மேலைநாட்டு அறிஞர்கள் வியக்கும் வகையில் இலங்கையின் நீளம், அகலம், சுற்றளவு, பரப்பு போன்றவற்றை துல்லியமாக முதன் முதலில் கூறியவர் சைமன் காசிச் செட்டி.
உலக உருண்டையில் இலங்கைத் தீவு அமைந்துள்ள அகலம், நீளம், குறித்த அளவுகள் பற்றி, அக்கால புவியியலாளர்கள் வியக்கும் வகையில் எடுத்துக் கூறியவர். புதுமை அளவைக் கருவிகள் ஏதுமின்றி, மேலைநாட்டு அறிஞர்கள் வியக்கும் வகையில் இலங்கையின் நீளம், அகலம், சுற்றளவு, பரப்பு போன்றவற்றை துல்லியமாக முதன் முதலில் கூறியவர் சைமன் காசிச் செட்டி.
Line 45: Line 45:
இலங்கையின் பிரித்தானிய அரசு பின்னர் வெளியிட்ட "கசெற்" என்னும் செய்தி வெளியீட்டுக்கும், இலங்கையில் ஆங்கிலேயர் வெளியிட்ட செய்திப் பத்திரிகைகளுக்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட "சிலோன் கசற்றியர்" என்னும் வெளியீட்டைச் செட்டியார் வெளியிட்டதன்மூலம் இலங்கையிலும், இலண்டனிலும் புகழ் பெற்றார்.  
இலங்கையின் பிரித்தானிய அரசு பின்னர் வெளியிட்ட "கசெற்" என்னும் செய்தி வெளியீட்டுக்கும், இலங்கையில் ஆங்கிலேயர் வெளியிட்ட செய்திப் பத்திரிகைகளுக்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட "சிலோன் கசற்றியர்" என்னும் வெளியீட்டைச் செட்டியார் வெளியிட்டதன்மூலம் இலங்கையிலும், இலண்டனிலும் புகழ் பெற்றார்.  
===== உதயாதித்தன் =====
===== உதயாதித்தன் =====
இவர் 1841-ஆம் ஆண்டு ‘உதயாதித்தன்’ என்ற பெயரில் மாத இதழ் ஒன்றைத் தொடங்கி ஓராண்டு காலம்வரை நடத்தினார்.
இவர் 1841-ம் ஆண்டு ‘உதயாதித்தன்’ என்ற பெயரில் மாத இதழ் ஒன்றைத் தொடங்கி ஓராண்டு காலம்வரை நடத்தினார்.
== இவரைப் பற்றிய நூல்கள் ==
== இவரைப் பற்றிய நூல்கள் ==
* சைமன் காசிச் செட்டியின் இலக்கியப் பணிகளைப் பாராட்டி டி.பீ.ஏ. ஹென்றி என்ற அறிஞர் ஆசிய சங்க இதழில் 1927-ல் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதினார்.
* சைமன் காசிச் செட்டியின் இலக்கியப் பணிகளைப் பாராட்டி டி.பீ.ஏ. ஹென்றி என்ற அறிஞர் ஆசிய சங்க இதழில் 1927-ல் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதினார்.
Line 53: Line 53:
* சைமன் காசிச் செட்டியின் முயற்சிகளைப் பாராட்டி சர். இராபர்ட் ஹோட்டன் என்பவர் பதிப்புச் செலவிற்கு 100 கினி பணத்தை அன்பளிப்பாக வழங்கினார். (கினி என்பது பிரிட்டிஷாரின் அன்றைய தங்க நாணயம்)
* சைமன் காசிச் செட்டியின் முயற்சிகளைப் பாராட்டி சர். இராபர்ட் ஹோட்டன் என்பவர் பதிப்புச் செலவிற்கு 100 கினி பணத்தை அன்பளிப்பாக வழங்கினார். (கினி என்பது பிரிட்டிஷாரின் அன்றைய தங்க நாணயம்)
* கற்பிட்டியில் சைமன் காசிச் செட்டி வாழ்ந்த வீடு இருந்த தெரு, அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘செட்டித் தெரு’ என்னும் பெயரை இலங்கை அரசு சூட்டியது.
* கற்பிட்டியில் சைமன் காசிச் செட்டி வாழ்ந்த வீடு இருந்த தெரு, அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘செட்டித் தெரு’ என்னும் பெயரை இலங்கை அரசு சூட்டியது.
* சைமன் காசிச் செட்டியின் புகழ் கூறும் பாராட்டு வாசகம் புத்தளம் நகரமன்றத்தில் 1983-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டது.
* சைமன் காசிச் செட்டியின் புகழ் கூறும் பாராட்டு வாசகம் புத்தளம் நகரமன்றத்தில் 1983-ம் ஆண்டு பொறிக்கப்பட்டது.
* இலங்கை அரசு சைமன் காசிச் செட்டியின் பணிகளைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில், அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலையை 1987-ஆம் ஆண்டு வெளியிட்டது.
* இலங்கை அரசு சைமன் காசிச் செட்டியின் பணிகளைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில், அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலையை 1987-ம் ஆண்டு வெளியிட்டது.
== மறைவு ==
== மறைவு ==
சைமன் காசிச்செட்டி நவம்பர் 5, 1860-ல் தன் ஐம்பத்து மூன்றாவது வயதில் காலமானார்.
சைமன் காசிச்செட்டி நவம்பர் 5, 1860-ல் தன் ஐம்பத்து மூன்றாவது வயதில் காலமானார்.

Latest revision as of 09:12, 24 February 2024

சைமன் காசிச் செட்டி

சைமன் காசிச் செட்டி (மார்ச் 21, 1807 - நவம்பர் 5, 1860) ஈழத்து தமிழறிஞர், வரலாற்று ஆய்வாளர். ஈழத்து தமிழ் வரலாற்று நூல்களை எழுதியவர். தமிழ் இனம், மொழி, இலக்கியம், புலவர்கள், நூல்கள் தொடர்பான நூல்களை எழுதினார். ஈழத்து வரலாறு, சமூகவியல், மானிடவியல், மொழியியல் சார்ந்த நூல்களின் முன்னோடி.

வாழ்க்கைக் குறிப்பு

சைமன் காசிச் செட்டி இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள புத்தளம் நகருக்கு அண்மையில் கற்பிட்டியில் காபிரியேல், மேரி றோசைறோ மகனாக மார்ச் 21, 1807-ல் பிறந்தார். சைமன் காசிச் செட்டி திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கொழும்புச் செட்டிமார் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆரம்பக்கல்வியை கற்பிட்டியில் பயின்றார். உயர்கல்வியை புத்தளம், கொழும்பு ஆகிய இடங்களில் பயின்றார். தனது பதினேழாவது வயதிற்குள் தாய்மொழியாகிய தமிழுடன், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார். சமஸ்கிருதம், ஒல்லாந்தம், போர்த்துக்கீசியம், லத்தீன், டச்சு, கிரேக்கம், எபிரேயம், அரபி, பாலி ஆகிய மொழிகளை சுயமாகக் கற்றுத் தேர்ந்தார்.

பணிகள்

சைமன் காசிச் செட்டி புத்தளம் நீதிமன்றத்தில் 1824-ம் ஆண்டு மொழி பெயர்ப்பாளராக பணியில் சேர்ந்தார். 1828-ம் ஆண்டு முதல் புத்தளம் மணியக்காரராகவும்(ஊர்த்தலைமகன்), மாவட்ட முதலியராகவும் பணிபுரிந்தார்.

கோல்புறூக் சீர்திருத்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டசபையில் தமிழ் பேசும் மக்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த ஆ. குமாரசுவாமி முதலியார் 1836 -ம் ஆண்டு நவம்பரில் காலமாகிவிட 1838-ல் சைமன் காசிச்செட்டி தேசாதிபதியால் இலங்கைச் சட்டசபை உறுப்பினராக நியமனம் பெற்றார். இலங்கை சட்ட நிரூபண சபை அங்கத்தினராக 1838 முதல் 1845 வரை செயல்பட்டார். 1845-ம் ஆண்டு இலங்கை ஆட்சிப் பணியில் (Ceylon Civil Service) சேர்ந்தார். 1848-ம் ஆண்டு முதல் தற்காலிக நீதிபதியாகவும், 1852-ம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றினார். இலங்கை நிருவாகச் சேவைக்கு இணைக்கப்பட்ட முதல் இலங்கையர். மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இலங்கையர்.

சேவைகள்

தமது சொந்த ஊராகிய கற்பிட்டியில் ஐம்பது மாணவர்கள் படிக்கக் கூடிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். அப்பள்ளியில் ஏழை மாணவர்கள் இலவசமாகக் கற்பிக்க ஏற்பாடு செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களையும், அவற்றைப் படைத்தோரையும் பற்றிய வரலாறு தமிழிலக்கிய வரலாற்றை எழுத முதன் முதல் முயற்சியில் ஈடுபட்டவர் சைமன் காசிக் செட்டி என அறியப்படுகிறார். காசிச் செட்டியின் நூல்களும், கட்டுரைகளும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டன.

தமிழ் புளூட்டாக்

தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களின் முன்னோடியான 'தமிழ் புளூட்டாக்' நூலை சைமன் காசிச் செட்டி எழுதினார். ”The Tamil Plutarch Containing a summary Account of the Lives of the Poets and Poetesses Southern India and Ceylon. The Earliest to the present times, with select specimens of their compositions” என்னும் ஆங்கில நூல் 1859-ம் ஆண்டு வெளிவந்தது. மேற்கத்திய நாடுகளில் செல்வாக்குப் பெற்ற ‘வாழ்க்கைச் சரிதம்’ என்னும் வடிவத்தைக் கையாண்ட சைமன் காசிச் செட்டி தமிழ்ப் புலவர்களின் சரிதங்களை எழுதினார். தமிழ்ப் புலவர்களுடைய சரிதங்களை ஒரே நூலில் முதலில் அச்சேற்றிய பெருமை, சைமன் காசிக் செட்டியவர்களையே சாரும்.

மதம்

சைவசமயம் சம்பந்தமான நூல்களையும் எழுதினார். திருக்கோணேச்சரம் பற்றிக் கூறும் கவிராஜவரோதயரின் புராணப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1831-ல் வெளியிட்டார். திருவாதவூரர் புராணத்தின் ஆறாவது சருக்கத்தினையும், காசிக் காண்டத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

கத்தோலிக்க சமயம் தொடர்பான நூல்களையும் இவர் எழுதியுள்ளார். "கத்தோலிக்கத் தேவாலயங்களின் வளர்ச்சியும், முன்னேற்றமும்" எனும் தலைப்பில் நூல் எழுதிய இவர் யோசப் வாஸ் எனும் பாதிரியார் பற்றி எழுதினார். கிரேக்க மொழியிலிருந்து கிறித்தவ வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்த 'பிலிப் டி மெல்லோ’ என்பவர் பற்றிய வரலாற்றை இவர் எழுதினார். அத்துடன் கிறித்தவ வேதாகமத்தின் பழைய ஏற்பாடான ஆதியாகமம் பற்றிய ஓர் நூலை எழுதினார். பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் நூலை இந்து முகமதிய மதச்சான்றுகளுடன் விளக்கவுரையுடன் எழுதினார். ஜோசப் பிலிப்-டி-மெல்லோ, வாசு ஆகியோரின் வரலாறுகளை எழுதினார்.

இஸ்ஸாமியர்களின் காப்பியமான சீறாப்புராணத்தை முழுமையாக ஆய்வு செய்து, 'சீறாப் புராணத்தின் சிறப்பு' என்னும் நூலை எழுதினார். குதர்க்கதிக்கரம் மஸ்தான சாயபு என்ற முஸ்லிம் கிறிஸ்து மத கண்டன வச்சிரதண்டம் நூலுக்கு மறுப்பு எழுதினார்.

திருக்கோணேச்சுரம் பற்றிக் கூறும் கவி ராஜவரோசுயரின் புராணப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1831-ல் வெளியிட்டார். திருவாதவூரர் புராணத்தின் ஆறாவது சருக்கத்தினையும், காசிக் காண்டத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

மொழிபெயர்ப்பு
  • ரேணர் எழுதிய ”Epitome of the History of Ceylon” என்னும் இலங்கை வரலாறு பற்றிய நூலை மொழிபெயர்த்தார்.
கட்டுரைகள்

சைமன் காசிச் செட்டி 1840-ல் ‘கொழும்பு அப்சர்வர்’ (The Colombo Observer) என்ற பத்திரிகையிலும், ‘சிலோன் மேகசின்’ (The Ceylon Magazine) என்ற இதழிலும் தமிழர்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும், தமிழ் இலக்கியங்கள் பற்றியும் கட்டுரைகள் எழுதினார். ‘சிலோன் மேகசின்’ இதழில் அகத்தியர், தேரையர், திருமூலர், கொங்கணர், மச்சமுனி, அப்பர், சம்பந்தர், சுந்தரர், நக்கீரர், ஒளவையார், திருவள்ளுவர், கபிலர், மாணிக்கவாசகர், அதிவீரராம பாண்டியன், வில்லிபுத்தூரார், தொல்காப்பியர், பவணந்தி முனிவர், அமிர்தசாகர், கச்சியப்பர், சேந்தன் (திவாகரர்), கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, மண்டலபுருடர், பரஞ்சோதி முனிவர், சிவவாக்கியார், அருணகிரி நாதர், பட்டணத்துப்பிள்ளையார், பத்திரகிரியார், குமரகுருபரர், தாயுமானசுவாமிகள், சீர்காழி அருணாசலக் கவிராயர் என்னும் முப்பத்திரண்டு தமிழறிஞர்கள் குறித்து எழுதினார்.

தமிழ் இலக்கியம்

தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்பற்றி எழுதியதோடு, தமிழ்-வடமொழி அகராதி, ஆங்கில-தமிழ் அகராதி, தமிழ்த் தாவரவியல் அகராதி நூல்களை எழுதினார். தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து, அவற்றை வரிசைப்படுத்தி எழுதினார். தமிழ்-வடமொழி-அகராதி, ஆங்கில-தமிழ் அகராதி, தமிழ்த தாவரவியல் அகராதி ஆகிய நூல்களையும் படைத்தார். மாலத்தீவு மொழிக்கும், சிங்கள மொழிக்கும் இடையேயுள்ள ஒற்றுமையைக் காட்டும் சொற்பட்டியல், ஜாவா மொழிக்கும், வடமொழிக்கும் இடையேயுள்ள ஒற்றுமை முதலிய மொழியியல் நூல்களையும் எழுதினார்.

மாலத்தீவு மொழியில் சிங்கள மொழி கலந்துள்ளமை பற்றியும், ஜாவாத்தீவின் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையையும் சைமன் காசிச்செட்டி எழுதினார். அத்துடன் இலங்கையின் வரலாற்றைக் கூறும் "சரித்திர சூதனம்" எனும் நூலை எழுதினார்.

தமிழ் நுண்வரலாறுகள்

யாழ்ப்பாணத்தின் வரலாறு, பரதவர்குல வரலாறு, தமிழ் நூல்களின் பட்டியல், தமிழர் சாதிப் பகுப்புமுறை, தமிழர் சடங்கு முறைகள் என்பனவும் இவர் எழுதியவற்றுள் அடங்குவன. கற்பிட்டிப் பகுதியில் கரையோரத்திலுள்ள ‘குதிரைமலை’ என்னும் இடத்தின் தொன்மைச் சிறப்புகளை ஆராய்ந்து எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொல் பழங்காலத்திலிருந்து ஒல்லாந்தர் கைப்பற்றிய 1658-ம் ஆண்டு வரையில் அவர் எழுதிய நூல், பிற்கால வரலாற்று ஆசிரியர்களுக்கு உதவியது. பல்வேறு நூல்களை ஆராய்ந்து எழுதிய ‘இலங்கை வரலாற்றுக் குறிப்பு’ (சரித்திர சூதனம்) என்னும் நூலின் மூலம் சிறந்த வரலாற்று ஆசிரியராகவும் போற்றப்படுகின்றார். சைமன் காசிச் செட்டி எழுதிய ‘தமிழ் புலவர் வரலாறு’ என்ற நூல் தெ.பொ. மீனாட்சி சுந்தரம்பிள்ளை, விபுலாநந்த அடிகளார் ஆகியோரின் அணிந்துரையுடன் 1946-ம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டது.

சைமன் காசிச் செட்டி தமிழரின் சாதிப்பாகுபாடு, பழக்க வழக்கங்கள், குணவியல்புகள், இலக்கிய இலக்கண நூல்களை எழுதினார். இந்நூல்கள் தமிழ்நாட்டின் தொன்மை, தமிழ் மொழியின் பழமை, தமிழரின் உடைகள், அணிகலன்கள், நாகரிகச் சிறப்பு, உணவு வகைகள், மூத்தோரை மதிக்கும் பண்பு, பெண்கள் உயர்வாகப் போற்றப்படுதல், தமிழலின் திருமணச் சடங்கு முறைகள் பற்றிய விளக்கங்களைக் கூறுகிறது. இந்நூலுக்கு டாக்டர் எசு சிபோல் பாராட்டுரை எழுதியுள்ளார். இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 1934-ம் ஆண்டு வெளிவந்தது.

"புத்தளப் பிரதேச முக்குவ குலத்தவரின் உற்பத்தியும் - வரலாறும்" எனும் ஆய்வுக் கட்டுரையையும் முஸ்லிம்களுடைய பாரம்பரியம், பழக்கவழக்கம் எனும் தலைப்பிலும் ஆய்வுக்கட்டுரையையும் எழுதியுள்ளார்.

பிற

‘சிலோன் கெஜட்டியார்’ (Ceylon Gazatteer) இலங்கைத் தீவுக்கும், இலங்கைத் தமிழ் மக்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் சிறந்த படைப்பாகும். இந்நூலுக்கு அந்நாளைய ஆங்கிலேய பிரதம நீதிபதியாக பதவி வகித்த சர்.சார்லஸ் மார்ஷல், பிரதம படைத் தளபதியாக இருந்த சர்.யோன்வில்சன் ஆகியோர் மதிப்புரை வழங்கியுள்ளனர். இந்நூல் 1934-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலின் பிரதி ஒன்று கொழும்பிலுள்ள ராயல் ஏசியாடிக் சங்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

உலக உருண்டையில் இலங்கைத் தீவு அமைந்துள்ள அகலம், நீளம், குறித்த அளவுகள் பற்றி, அக்கால புவியியலாளர்கள் வியக்கும் வகையில் எடுத்துக் கூறியவர். புதுமை அளவைக் கருவிகள் ஏதுமின்றி, மேலைநாட்டு அறிஞர்கள் வியக்கும் வகையில் இலங்கையின் நீளம், அகலம், சுற்றளவு, பரப்பு போன்றவற்றை துல்லியமாக முதன் முதலில் கூறியவர் சைமன் காசிச் செட்டி.

இலக்கிய இடம்

‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எழுதிய டாக்டர் கால்டுவெல், சைமன் காசிச் செட்டி எழுதிய ‘தமிழ் புளுராக்’ நூலின் சிறப்பு, முக்கியத்துவத்தை பதிவு செய்தார். சைமன் காசிச் செட்டி வரலாறு, சமூகவியல், மானிடவியல், மொழியியல் ஆகிய துறைகளிலும் புலமை மிக்கவராக விளங்கினார்.

இதழியல்

சிலோன் கசற்றியர்

இலங்கையின் பிரித்தானிய அரசு பின்னர் வெளியிட்ட "கசெற்" என்னும் செய்தி வெளியீட்டுக்கும், இலங்கையில் ஆங்கிலேயர் வெளியிட்ட செய்திப் பத்திரிகைகளுக்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட "சிலோன் கசற்றியர்" என்னும் வெளியீட்டைச் செட்டியார் வெளியிட்டதன்மூலம் இலங்கையிலும், இலண்டனிலும் புகழ் பெற்றார்.

உதயாதித்தன்

இவர் 1841-ம் ஆண்டு ‘உதயாதித்தன்’ என்ற பெயரில் மாத இதழ் ஒன்றைத் தொடங்கி ஓராண்டு காலம்வரை நடத்தினார்.

இவரைப் பற்றிய நூல்கள்

  • சைமன் காசிச் செட்டியின் இலக்கியப் பணிகளைப் பாராட்டி டி.பீ.ஏ. ஹென்றி என்ற அறிஞர் ஆசிய சங்க இதழில் 1927-ல் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதினார்.
  • சேவியர் தனிநாயகம் அடிகள் நடத்திய ‘Tamil Culture’ (தமிழ்ப் பண்பாடு) இதழ்களில் வித்துவான் எப்.எக்ஸ்.சி. நடராசு இவரின் தமிழ்ப் பணியைப் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்.

விருது/பாராட்டுக்கள்

  • ஆங்கிலேய ஆளுநராகப் பணியாற்றிய, மக்கந்சி, சிலோன் கெஜட்டியரின் வெளியீட்டினால் மகிழ்ந்தது ”ஆங்கிலேயர் அல்லாத மக்களுள் சைமன் காசிச் செட்டி அபூர்வ ஆற்றல் வாய்ந்த விவேகி” என இலங்கை சட்டசபைக் கூட்டத்தில் பாராட்டினார்.
  • சைமன் காசிச் செட்டியின் முயற்சிகளைப் பாராட்டி சர். இராபர்ட் ஹோட்டன் என்பவர் பதிப்புச் செலவிற்கு 100 கினி பணத்தை அன்பளிப்பாக வழங்கினார். (கினி என்பது பிரிட்டிஷாரின் அன்றைய தங்க நாணயம்)
  • கற்பிட்டியில் சைமன் காசிச் செட்டி வாழ்ந்த வீடு இருந்த தெரு, அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘செட்டித் தெரு’ என்னும் பெயரை இலங்கை அரசு சூட்டியது.
  • சைமன் காசிச் செட்டியின் புகழ் கூறும் பாராட்டு வாசகம் புத்தளம் நகரமன்றத்தில் 1983-ம் ஆண்டு பொறிக்கப்பட்டது.
  • இலங்கை அரசு சைமன் காசிச் செட்டியின் பணிகளைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில், அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலையை 1987-ம் ஆண்டு வெளியிட்டது.

மறைவு

சைமன் காசிச்செட்டி நவம்பர் 5, 1860-ல் தன் ஐம்பத்து மூன்றாவது வயதில் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • தமிழர் சாதிப்பகுப்பு முறை (1831)
  • புத்தளப் பகுதியிலுள்ள முக்குவரின் உற்பத்தியும் வரலாறும் (1831)
  • தமிழர் சடங்கு முறைகள் (1831)
  • இலங்கை சோனகரின் பழக்க வழக்கங்கள் (1832)
  • மலையகராதி
  • இலங்கைச் சரித்திர சூசனம் (தமிழ் மொழி பெயர்ப்பு)
  • யோசேப்பு வாஸ்முனிவர் சரித்திரம் (1848)
  • இலங்கையில் கத்தோலிக்க சமய அபிவிருத்தி (1848)
  • பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் (இந்து முகமதிய மதச்சான்றுகளுடன் விளக்கவுரை)
  • குதர்க்கதிக்கரம் (மஸ்தான சாயபு என்றும் முஸ்லிம் கிறிஸ்து மதகண்டன வச்சிரதண்டம் நூலுக்கு மறுப்பு)
  • கத்தோலிக்க கோயிலின் தோற்றமும் வளர்ச்சியும்
  • கற்பிட்டியில் கண்டெடுத்த நாணயங்கள்
  • பண்டைக்காலம் தொட்டு ஒல்லாந்தர் காலம் வரையிலுள்ள வரலாறு
ஆங்கிலம்
  • சிலோன் கெஜட்டியர் (The Ceylon Gazetteer)
  • Tamil Plutarch (தமிழ்ப் புலவர் வரலாறு)
மொழிபெயர்ப்பு
  • ரேணர் எழுதிய Epitome of the History of Ceylon

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page