standardised

சமணர் கழுவேற்றம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:சமணர் கழுவேற்றம் மதுரை சுவரோவியம்.jpg|thumb|சமணர் கழுவேற்றம் மதுரை சுவரோவியம்]]
[[File:சமணர் கழுவேற்றம் மதுரை சுவரோவியம்.jpg|thumb|சமணர் கழுவேற்றம் மதுரை சுவரோவியம்]]
சமணர் கழுவேற்றம் :தமிழ் சைவ மரபில் உருவான ஒரு தொன்மம். திருஞானசம்பந்தருடன் தத்துவ விவாதத்தில் ஈடுபட்டு தோற்றதனால் எட்டாயிரம் சமணர்கள் கழுவில் ஏறினார்கள் என்று மிகப்பிற்காலச் சைவநூல்களில் சொல்லப்படுகிறது. அதை தீவிர சைவர்களும், தமிழகத்தில் நிகழ்ந்த மதப்பூசல் பற்றி எழுதும் ஆய்வாளர்களில் சிலரும் வரலாறாக முன்வைக்கிறார்கள்.  அது ஆதாரமற்ற தொன்மம் மட்டுமே என்று ஆய்வாளர்களால் மறுக்கப்படுகிறது.  
சமணர் கழுவேற்றம்: தமிழ் சைவ மரபில் உருவான ஒரு தொன்மம். திருஞானசம்பந்தருடன் தத்துவ விவாதத்தில் ஈடுபட்டு தோற்றதனால் எட்டாயிரம் சமணர்கள் கழுவில் ஏறினார்கள் என்று மிகப்பிற்காலச் சைவநூல்களில் சொல்லப்படுகிறது. அதை தீவிர சைவர்களும், தமிழகத்தில் நிகழ்ந்த மதப்பூசல் பற்றி எழுதும் ஆய்வாளர்களில் சிலரும் வரலாறாக முன்வைக்கிறார்கள்.  அது ஆதாரமற்ற தொன்மம் மட்டுமே என்று ஆய்வாளர்களால் மறுக்கப்படுகிறது.  


== பின்புலம் ==
== பின்புலம் ==
Line 13: Line 13:


தொன்மங்களின்படி நின்றசீர் நெடுமாறன் என்றும் கூன்பாண்டியன் என்றும் அழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் ஆட்சி காலத்தில் சைவ மதத்தின் ஆசிரியர்களில் ஒருவரான  திருஞானசம்பந்தர் சோழநாட்டில் இருந்து பாண்டியநாட்டுக்கு வந்தார்.  கூன்பாண்டியன் சமணமதத்தைச் சார்ந்தவராக இருந்தார். அவர் மனைவி மங்கையர்க்கரசியும் அமைச்சர் குலச்சிறையாரும் சைவ நம்பிக்கை கொண்டவர். மங்கையர்க்கரசியின் வேண்டுகோளுக்கு இணங்க திருஞானசம்பந்தர் கூன்பாண்டியனின் வெப்புநோயை நீக்கவே கூன்பாண்டியன் சைவனாக மாறினார். இதனால் சீற்றம் கொண்ட சமணர்கள் நஞ்சூட்டியும் தீவைத்தும் ஞானசம்பந்தரை கொல்ல முயன்றனர். ஞானசம்பந்தர் அவர்களை மதவிவாதத்திற்கு அழைத்தார். அவ்விவாதத்தில் சமணர்கள் தோற்றனர். கூன்பாண்டியன் அவர்கள் எட்டாயிரம்பேரை கழுவிலேற்றினார். அந்த இடம் சாமணத்தம் எனப்படுகிறது.
தொன்மங்களின்படி நின்றசீர் நெடுமாறன் என்றும் கூன்பாண்டியன் என்றும் அழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் ஆட்சி காலத்தில் சைவ மதத்தின் ஆசிரியர்களில் ஒருவரான  திருஞானசம்பந்தர் சோழநாட்டில் இருந்து பாண்டியநாட்டுக்கு வந்தார்.  கூன்பாண்டியன் சமணமதத்தைச் சார்ந்தவராக இருந்தார். அவர் மனைவி மங்கையர்க்கரசியும் அமைச்சர் குலச்சிறையாரும் சைவ நம்பிக்கை கொண்டவர். மங்கையர்க்கரசியின் வேண்டுகோளுக்கு இணங்க திருஞானசம்பந்தர் கூன்பாண்டியனின் வெப்புநோயை நீக்கவே கூன்பாண்டியன் சைவனாக மாறினார். இதனால் சீற்றம் கொண்ட சமணர்கள் நஞ்சூட்டியும் தீவைத்தும் ஞானசம்பந்தரை கொல்ல முயன்றனர். ஞானசம்பந்தர் அவர்களை மதவிவாதத்திற்கு அழைத்தார். அவ்விவாதத்தில் சமணர்கள் தோற்றனர். கூன்பாண்டியன் அவர்கள் எட்டாயிரம்பேரை கழுவிலேற்றினார். அந்த இடம் சாமணத்தம் எனப்படுகிறது.
பெரியபுராணத்தில்


பெரியபுராணத்தில்
பெரியபுராணத்தில்
Line 23: Line 24:


கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க" வென்று கூற
கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க" வென்று கூற




Line 32: Line 34:


மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா திருந்த வேலை,
மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா திருந்த வேலை,




Line 41: Line 44:


வெண்பெருங் குன்றத் தெண்ணா யிரவரு மேறி னார்கள்.
வெண்பெருங் குன்றத் தெண்ணா யிரவரு மேறி னார்கள்.




Line 68: Line 72:
பெரியபுராணம் முற்றிலும் தொன்மங்களாலானது. அந்நூலுக்கு முதன்மை தரவுகளாக இருந்தவை தேவாரப் பதிகங்களும், சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திரு அந்தாதியும். பெரியபுராணம் எழுதப்பட்ட காலகட்டத்தில் சைவம் பெருமதமாக நிறுவப்பட்டுவிட்டது, சமணம் சுருங்கி சிறிய அளவில் எஞ்சியிருந்தது. சைவ நம்பிக்கையை அடித்தள மக்களிடையே ஆழமாக நிறுவும் நோக்கம் கொண்டது பெரியபுராணம். ஆலயவழிபாடு, சிவனடியார் வழிபாடு ஆகியவற்றை வலியுறுத்துவதும் எளிய பக்தியை முதன்மைப்படுத்துவதும் அதன் நோக்கம். அதன் எல்லா கதைகளுமே மிகைக்கற்பனையுடன் புராணத்தன்மை கொண்டவையாகவே உள்ளன. அது வெவ்வேறு வாய்மொழிக்கதைகளையே புனைந்துரைக்கிறது. அதை மட்டும் ஆதாரமாகக் கொண்டு இப்படி ஒரு வரலாற்று நிகழ்வை நிலைநிறுத்திவிடமுடியாது என ஆய்வாளர்கள் மறுக்கின்றனர்.
பெரியபுராணம் முற்றிலும் தொன்மங்களாலானது. அந்நூலுக்கு முதன்மை தரவுகளாக இருந்தவை தேவாரப் பதிகங்களும், சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திரு அந்தாதியும். பெரியபுராணம் எழுதப்பட்ட காலகட்டத்தில் சைவம் பெருமதமாக நிறுவப்பட்டுவிட்டது, சமணம் சுருங்கி சிறிய அளவில் எஞ்சியிருந்தது. சைவ நம்பிக்கையை அடித்தள மக்களிடையே ஆழமாக நிறுவும் நோக்கம் கொண்டது பெரியபுராணம். ஆலயவழிபாடு, சிவனடியார் வழிபாடு ஆகியவற்றை வலியுறுத்துவதும் எளிய பக்தியை முதன்மைப்படுத்துவதும் அதன் நோக்கம். அதன் எல்லா கதைகளுமே மிகைக்கற்பனையுடன் புராணத்தன்மை கொண்டவையாகவே உள்ளன. அது வெவ்வேறு வாய்மொழிக்கதைகளையே புனைந்துரைக்கிறது. அதை மட்டும் ஆதாரமாகக் கொண்டு இப்படி ஒரு வரலாற்று நிகழ்வை நிலைநிறுத்திவிடமுடியாது என ஆய்வாளர்கள் மறுக்கின்றனர்.


இந்நிகழ்வு நடந்திருந்தால் அது பொயு ஏழாம்நூற்றாண்டில் நடந்திருக்கும். கூன்பாண்டியன் என அழைக்கப்பட்ட நின்றசீர் நெடுமாறனின் காலம் பொ.யு 640 - 670 என ஊகிக்கப்படுகிறது. அவ்வாறென்றால் நிகழ்வுக்குப்பின் ஐநூறாண்டுகள் கழித்து பெரிய புராணம் இயற்றப்படுகிறது. இந்த ஐநூறாண்டுகளில் எழுதப்பட்ட எந்த நூலிலும் இந்த நிகழ்வு பற்றிய குறிப்புகள் இல்லை. சமணர்கள் மிக விரிவாக வரலாற்றை பதிவுசெய்பவர்கள்.  தமிழிலும் பிராகிருதத்திலும் அமைந்துள்ள சமண இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் இது பற்றிய எக்குறிப்பும் இடம்பெறவில்லை.   
இந்நிகழ்வு நடந்திருந்தால் அது பொயு ஏழாம்நூற்றாண்டில் நடந்திருக்கும். கூன்பாண்டியன் என அழைக்கப்பட்ட நின்றசீர் நெடுமாறனின் காலம் பொ.யு. 640 - 670 என ஊகிக்கப்படுகிறது. அவ்வாறென்றால் நிகழ்வுக்குப்பின் ஐநூறாண்டுகள் கழித்து பெரிய புராணம் இயற்றப்படுகிறது. இந்த ஐநூறாண்டுகளில் எழுதப்பட்ட எந்த நூலிலும் இந்த நிகழ்வு பற்றிய குறிப்புகள் இல்லை. சமணர்கள் மிக விரிவாக வரலாற்றை பதிவுசெய்பவர்கள்.  தமிழிலும் பிராகிருதத்திலும் அமைந்துள்ள சமண இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் இது பற்றிய எக்குறிப்பும் இடம்பெறவில்லை.   


அஷிம்குமார் ராய் எழுதிய சமணர் வரலாறு  கே.சி.ஜெயின் எழுதிய சமணர் வரலாறு இரண்டு வரலாறுகளிலுமே தமிழகத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் சமணர் கழுவேற்றம் என்னும் கொடுமைக்கு வரலாற்று ஆதாரமில்லை என்றே சொல்லப்பட்டுள்ளது. இரண்டுமே சமணர்கள் எழுதிய நூல்கள், புறவயமான தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை.   
அஷிம்குமார் ராய் எழுதிய சமணர் வரலாறு  கே.சி.ஜெயின் எழுதிய சமணர் வரலாறு இரண்டு வரலாறுகளிலுமே தமிழகத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் சமணர் கழுவேற்றம் என்னும் கொடுமைக்கு வரலாற்று ஆதாரமில்லை என்றே சொல்லப்பட்டுள்ளது. இரண்டுமே சமணர்கள் எழுதிய நூல்கள், புறவயமான தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை.   


இந்த நிகழ்வு தமிழகத்தில் சமணம் வன்முறையால் அழித்தொழிக்கப் பட்டமைக்கான சான்று என சிலர் சொல்வதுண்டு. ஆனால் இந்நிகழ்வுக்குப் பின்னர் உருவான சோழப்பேரரசின் அதிகாரபூர்வ மதமாக சைவம் இருந்தபோதிலும்கூட தமிழகத்தில் ஏராளமான சமணப்பள்ளிகளுக்கு முதலாம் முதலாம் பராந்தச் சோழன், ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திரன் உட்பட சோழமன்னர்கள் நிபந்தங்கள் அளித்தமைக்கு தெளிவான பல கல்வெட்டுச்சான்றுகள் உள்ளன.( [[திறக்கோல் கங்கரையப் பெரும்பள்ளி|திறக்கோல் கங்கரையப் பெரும்பள்ளி ,]] [[தொண்டூர்-வழுவா மொழிப் பெரும்பள்ளி]]   
இந்த நிகழ்வு தமிழகத்தில் சமணம் வன்முறையால் அழித்தொழிக்கப் பட்டமைக்கான சான்று என சிலர் சொல்வதுண்டு. ஆனால் இந்நிகழ்வுக்குப் பின்னர் உருவான சோழப்பேரரசின் அதிகாரபூர்வ மதமாக சைவம் இருந்தபோதிலும்கூட தமிழகத்தில் ஏராளமான சமணப்பள்ளிகளுக்கு முதலாம் முதலாம் பராந்தச் சோழன், ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திரன் உட்பட சோழமன்னர்கள் நிபந்தங்கள் அளித்தமைக்கு தெளிவான பல கல்வெட்டுச்சான்றுகள் உள்ளன. ([[திறக்கோல் கங்கரையப் பெரும்பள்ளி|திறக்கோல் கங்கரையப் பெரும்பள்ளி,]] [[தொண்டூர்-வழுவா மொழிப் பெரும்பள்ளி]])    


தமிழ்ச்சூழலிலும் இந்தியச் சூழலிலும் மதப்பூசல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. ஆனால் ஒரே குடும்பத்தில் வெவ்வேறு மதநம்பிக்கைகள் இருப்பது இருபதாம்நூற்றாண்டு வரையிலும்கூட ஏற்கப்பட்டதாகவே இருந்தது. ஒருவர் எல்லா மதத்து வழிபாட்டிடங்களிலும் வழிபட்ட சித்திரம் சிலப்பதிகாரத்தில் வருகிறது. தமிழகத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்நிகழ்வுக்குப் முன்போ பின்னரோ வேறெந்த நிகழ்வும் எவராலும் கூறப்படவுமில்லை.   
தமிழ்ச்சூழலிலும் இந்தியச் சூழலிலும் மதப்பூசல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. ஆனால் ஒரே குடும்பத்தில் வெவ்வேறு மதநம்பிக்கைகள் இருப்பது இருபதாம்நூற்றாண்டு வரையிலும்கூட ஏற்கப்பட்டதாகவே இருந்தது. ஒருவர் எல்லா மதத்து வழிபாட்டிடங்களிலும் வழிபட்ட சித்திரம் சிலப்பதிகாரத்தில் வருகிறது. தமிழகத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்நிகழ்வுக்குப் முன்போ பின்னரோ வேறெந்த நிகழ்வும் எவராலும் கூறப்படவுமில்லை.   

Revision as of 11:43, 16 April 2022

சமணர் கழுவேற்றம் மதுரை சுவரோவியம்

சமணர் கழுவேற்றம்: தமிழ் சைவ மரபில் உருவான ஒரு தொன்மம். திருஞானசம்பந்தருடன் தத்துவ விவாதத்தில் ஈடுபட்டு தோற்றதனால் எட்டாயிரம் சமணர்கள் கழுவில் ஏறினார்கள் என்று மிகப்பிற்காலச் சைவநூல்களில் சொல்லப்படுகிறது. அதை தீவிர சைவர்களும், தமிழகத்தில் நிகழ்ந்த மதப்பூசல் பற்றி எழுதும் ஆய்வாளர்களில் சிலரும் வரலாறாக முன்வைக்கிறார்கள். அது ஆதாரமற்ற தொன்மம் மட்டுமே என்று ஆய்வாளர்களால் மறுக்கப்படுகிறது.

பின்புலம்

சமணமதம் சங்ககாலம் முதலே தமிழகத்தில் வலுவாக இருந்தது என்பதற்கு ஏராளமான தொல்லியல் சான்றுகளும், இலக்கியச் சான்றுகளும் உள்ளன. சங்ககாலத்தையவை என சுட்டப்படும் பல கல்வெட்டுகள் சமணக்குகைகளில் உள்ளவை. உதாரணம் புகளூர் கல்வெட்டு, ஜம்பைஅதியமான் கல்வெட்டு போன்றவை. சிலப்பதிகாரம் சமணநூல் எனப்படுகிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சமணநூல்கள். திருக்குறளின் ஆசிரியர் சமணர் என்று ஆய்வாளர் கூறுகிறார்கள். நன்னூல் முதல் யாப்பெருங்கலம் வரை சமணர்கள் எழுதிய இலக்கணநூல்கள் தமிழகத்தில் உள்ளன.

பொ.யு ஏழாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் சைவ மதமும் வைணவ மதமும் புத்துயிர் கொண்டன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்றி அவ்விரு மதங்களையும் மக்களியக்கமாக ஆக்கினர். சைவமும் வைணவமும் சமண, பௌத்த மதங்களுடன் கடுமையான தத்துவ மோதலில் ஈடுபட்டன. சைவத்தில் திருஞானசம்பந்தரும் வைணவத்தில் திருமங்கை ஆழ்வாரும் சமண,பௌத்த மதங்களை கடுமையாக தாக்கினர். பல்லவ மன்னர் மகேந்திரவர்மன் சமணமதத்தில் இருந்து வைணவத்திற்கு மாறியபோது அரசு உதவிகள் வைணவத்திற்கு கிடைத்தன.

பொ.யு ஒன்பதாம் நூற்றாண்டு முதல் சோழப்பேரரசு உருவானபோது சைவத்திற்கு அரச ஆதரவு உருவானது. சைவமதம் அரசமதமாக வேரூன்றியது. மெல்லமெல்ல சமணம் மக்களிடமிருந்து அகன்றது. சிறுவட்டாரங்களில் மட்டும் நீடிப்பதாக ஆகியது.

தொன்மத்தின் அடிப்படைகள்

இத்தொன்மம் பற்றிய முதல்குறிப்பு பொ.யு 12-ஆம் நூற்றண்டில் எழுதப்பட்ட பெரியபுராணத்தில் உள்ளது. இதை எழுதிய சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித் தேவர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்தவர். அநபாயன் என அழைக்கப்பட்ட இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்தவர் என்னும் குறிப்பைக் கொண்டு இவர் வாழ்ந்த காலம் பொ.யு பன்னிரண்டாம் நூற்றாண்டு எனப்படுகிறது

தொன்மங்களின்படி நின்றசீர் நெடுமாறன் என்றும் கூன்பாண்டியன் என்றும் அழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் ஆட்சி காலத்தில் சைவ மதத்தின் ஆசிரியர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் சோழநாட்டில் இருந்து பாண்டியநாட்டுக்கு வந்தார். கூன்பாண்டியன் சமணமதத்தைச் சார்ந்தவராக இருந்தார். அவர் மனைவி மங்கையர்க்கரசியும் அமைச்சர் குலச்சிறையாரும் சைவ நம்பிக்கை கொண்டவர். மங்கையர்க்கரசியின் வேண்டுகோளுக்கு இணங்க திருஞானசம்பந்தர் கூன்பாண்டியனின் வெப்புநோயை நீக்கவே கூன்பாண்டியன் சைவனாக மாறினார். இதனால் சீற்றம் கொண்ட சமணர்கள் நஞ்சூட்டியும் தீவைத்தும் ஞானசம்பந்தரை கொல்ல முயன்றனர். ஞானசம்பந்தர் அவர்களை மதவிவாதத்திற்கு அழைத்தார். அவ்விவாதத்தில் சமணர்கள் தோற்றனர். கூன்பாண்டியன் அவர்கள் எட்டாயிரம்பேரை கழுவிலேற்றினார். அந்த இடம் சாமணத்தம் எனப்படுகிறது. பெரியபுராணத்தில்

பெரியபுராணத்தில்

மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித்

"துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்

முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார்

கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க" வென்று கூற


புகலியில் வந்த ஞான புங்கவ ரதனைக் கேட்டும்

இகலில ரெனினுஞ் சைவ ரிருந்துவாழ் மடத்திற் றீங்கு

தகவிலாச் சமணர் செய்த தன்மையாற் சாலு மென்றே

மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா திருந்த வேலை,


பண்புடை யமைச்ச னாரும் பாருளோ ரறியு மாற்றால்

கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையி லேற்ற

நண்புடை ஞான முண்டார் மடத்துத்தீ நாடி யிட்ட

வெண்பெருங் குன்றத் தெண்ணா யிரவரு மேறி னார்கள்.


தோற்றவர் கழுவி லேறித் தோற்றிடத் தோற்றுந் தம்பம்

ஆற்றிடை யமண ரோலை யழிவினா லார்ந்த தம்பம்

வேற்றொரு தெய்வ மின்மை விளக்கிய பதாகைத் தம்பம்

போற்றுசீர்ப் பிள்ளை யார்தாம் புகழ்ச்சயத் தம்ப மாகும்.

என்னும் பாடல்களில் சமணர் கழுவேற்றம் குறித்துச் சொல்கிறது. இதே நிகழ்வை பிற்காலப் புலவரான ஒட்டக்கூத்தர் தனது தக்கயாகப்பரணி எனும் நூலில் குறிப்பிடுகிறார். திருவிளையாடல் புராணமும் இதனைக் குறிப்பிடுகிறது.

பெரியபுராணத்தை ஒட்டி மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகளில் இக்கழுவேற்றம் நடத்திக் காட்டப்படுகிறது.

கழுகுமலைக் கோயில் சுவரோவியங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுவரோவியங்கள் ஆகியவற்றில் சமணர் கழுவேற்றம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அனல்வாதம் புனல்வாதம்

சமணருக்கும் ஞானசம்பந்தருக்கும் இடையே நிகழ்ந்த விவாதம் அனல்வாதம் புனல்வாதம் என இருவகைப்பட்டது என்று பெரியபுராணமும் அதன் வழிநூல்களும் சொல்கின்றன. நூல்கள் எழுதப்பட்ட ஏடுகளை நீரில் இட அவை ஓட்டத்திற்கு எதிராகவந்தன என்றால் அத்தரப்பு வென்றது என நிறுவுவது அனல்வாதம். அனலில் இட எரியாமல் எஞ்சும் ஏடுகளில் உள்ள தரப்பு வென்றது என நிறுவுவது அனல்வாதம்.

சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்றுத்தேடல்

மறுப்புகள்

வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களுமான எஸ். வையாபுரிப் பிள்ளை, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, ரா.ராகவையங்கார், கா.சுப்ரமணிய பிள்ளை, க.கைலாசபதி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ,திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் ஆகியவர்களும், தமிழ்ச் சமண அறிஞர்களான டி.எஸ்.ஸ்ரீபால் முதலானவர்களும் இந்நிகழ்வுக்கு சான்றுகள் இல்லை என்றும் பெரியபுராணமும் திருவிளையாடற்புராணமும் கூறும் செய்திகள் புராணக்கதைகள் மட்டுமே என்றும் கூறியிருக்கிறார்கள்.

அவ்வாறு சைவர்களிடமிருந்தே உருவான மறுப்புகளுக்கு சி. கே. சுப்பிரமணிய முதலியார், இனி ஒருசார் நவீன ஆராய்ச்சியாளர் இக்கழுவேற்றிய அரசதண்டம் நிகழ்ந்ததே இல்லை என்று முடிக்கவும் துணிந்தனர்; அவர் கூற்றுக்கள் சிலரை மயங்கவைக்குமாதலின் அவைபற்றி ஈண்டுச் சில பேசவேண்டியது அவசியமாகின்றது.” என்று சொல்லி சமணர் கழுவேற்றத்தை நிறுவ பெரியபுராணத்தின் மீதான நம்பிக்கையையே ஆதாரமாக முன்னிறுத்துகிறார். அ.ஈசுவரமூர்த்திப் பிள்ளை, வெள்ளைவாரணனார் போன்றவர்கள் இந்நிகழ்வை உண்மை என்கிறார்கள்.

பெரியபுராணம் முற்றிலும் தொன்மங்களாலானது. அந்நூலுக்கு முதன்மை தரவுகளாக இருந்தவை தேவாரப் பதிகங்களும், சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திரு அந்தாதியும். பெரியபுராணம் எழுதப்பட்ட காலகட்டத்தில் சைவம் பெருமதமாக நிறுவப்பட்டுவிட்டது, சமணம் சுருங்கி சிறிய அளவில் எஞ்சியிருந்தது. சைவ நம்பிக்கையை அடித்தள மக்களிடையே ஆழமாக நிறுவும் நோக்கம் கொண்டது பெரியபுராணம். ஆலயவழிபாடு, சிவனடியார் வழிபாடு ஆகியவற்றை வலியுறுத்துவதும் எளிய பக்தியை முதன்மைப்படுத்துவதும் அதன் நோக்கம். அதன் எல்லா கதைகளுமே மிகைக்கற்பனையுடன் புராணத்தன்மை கொண்டவையாகவே உள்ளன. அது வெவ்வேறு வாய்மொழிக்கதைகளையே புனைந்துரைக்கிறது. அதை மட்டும் ஆதாரமாகக் கொண்டு இப்படி ஒரு வரலாற்று நிகழ்வை நிலைநிறுத்திவிடமுடியாது என ஆய்வாளர்கள் மறுக்கின்றனர்.

இந்நிகழ்வு நடந்திருந்தால் அது பொயு ஏழாம்நூற்றாண்டில் நடந்திருக்கும். கூன்பாண்டியன் என அழைக்கப்பட்ட நின்றசீர் நெடுமாறனின் காலம் பொ.யு. 640 - 670 என ஊகிக்கப்படுகிறது. அவ்வாறென்றால் நிகழ்வுக்குப்பின் ஐநூறாண்டுகள் கழித்து பெரிய புராணம் இயற்றப்படுகிறது. இந்த ஐநூறாண்டுகளில் எழுதப்பட்ட எந்த நூலிலும் இந்த நிகழ்வு பற்றிய குறிப்புகள் இல்லை. சமணர்கள் மிக விரிவாக வரலாற்றை பதிவுசெய்பவர்கள். தமிழிலும் பிராகிருதத்திலும் அமைந்துள்ள சமண இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் இது பற்றிய எக்குறிப்பும் இடம்பெறவில்லை.

அஷிம்குமார் ராய் எழுதிய சமணர் வரலாறு கே.சி.ஜெயின் எழுதிய சமணர் வரலாறு இரண்டு வரலாறுகளிலுமே தமிழகத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் சமணர் கழுவேற்றம் என்னும் கொடுமைக்கு வரலாற்று ஆதாரமில்லை என்றே சொல்லப்பட்டுள்ளது. இரண்டுமே சமணர்கள் எழுதிய நூல்கள், புறவயமான தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை.

இந்த நிகழ்வு தமிழகத்தில் சமணம் வன்முறையால் அழித்தொழிக்கப் பட்டமைக்கான சான்று என சிலர் சொல்வதுண்டு. ஆனால் இந்நிகழ்வுக்குப் பின்னர் உருவான சோழப்பேரரசின் அதிகாரபூர்வ மதமாக சைவம் இருந்தபோதிலும்கூட தமிழகத்தில் ஏராளமான சமணப்பள்ளிகளுக்கு முதலாம் முதலாம் பராந்தச் சோழன், ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திரன் உட்பட சோழமன்னர்கள் நிபந்தங்கள் அளித்தமைக்கு தெளிவான பல கல்வெட்டுச்சான்றுகள் உள்ளன. (திறக்கோல் கங்கரையப் பெரும்பள்ளி, தொண்டூர்-வழுவா மொழிப் பெரும்பள்ளி)

தமிழ்ச்சூழலிலும் இந்தியச் சூழலிலும் மதப்பூசல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. ஆனால் ஒரே குடும்பத்தில் வெவ்வேறு மதநம்பிக்கைகள் இருப்பது இருபதாம்நூற்றாண்டு வரையிலும்கூட ஏற்கப்பட்டதாகவே இருந்தது. ஒருவர் எல்லா மதத்து வழிபாட்டிடங்களிலும் வழிபட்ட சித்திரம் சிலப்பதிகாரத்தில் வருகிறது. தமிழகத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்நிகழ்வுக்குப் முன்போ பின்னரோ வேறெந்த நிகழ்வும் எவராலும் கூறப்படவுமில்லை.

சமணர் கழுவேற்றத்துக்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டப்படும் ஓவியங்கள் மிகமிக பிற்காலத்தையவை. அவை சமணர்களின் கழுவேற்றம் பற்றியவை என்று சொல்ல எந்த ஆதாரமும் இல்லை.அவற்றில் கழுவிலேறியிருப்பவர்கள் நீண்ட தலைமுடி தாடியுடன் இருக்கிறார்கள். சமணர்கள் முடியை மழுங்க பிடுங்கிக்கொள்பவர்கள், இல்லறத்தார் மழித்துக்கொள்பவர்கள். முடிவளர்ப்பது அவர்களிடம் வழக்கமில்லை.

சமணர்கள் மதுரையிலும் சுற்றுப்புறங்களிலும் இன்றும் வாழ்கிறார்கள். தமிழகத்திலுள்ள சமண ஆலயங்களுக்கு நாயக்கர் ஆட்சிக்காலம் வரை நிபந்தங்களும் கொடைகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆலயங்கள் கட்டித்தரப்பட்டுள்ளன. அவற்றுக்கு கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

ஆய்வுநூல்

கோ.செங்குட்டுவன் எழுதிய சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்றுத் தேடல் என்னும் நூல் இந்தத் தொன்மத்தின் வரலாற்று ஆதாரங்களை பற்றிய விரிவாய ஆய்வு. ஆய்வாளர் இறுதியாக இப்படி ஒரு நிகழ்வு நடந்தமைக்கு பெரியபுராணம் மற்றும் அதன் வழிநூல்கள் அன்றி எந்தச் சான்றும் இல்லை, பெரியபுராணத்திலுள்ள பிற மிகைக்கூற்றுகள் புராணங்கள் போன்ற ஒரு மதத்தொன்மம் மட்டுமே இதுவும் என்னும் முடிவுக்கு வருகிறார். ஆய்வுலகில் அந்நூலுக்கு மறுப்புகள் எவையும் வரவில்லை.

விளக்கங்கள்

எண்ணாயிரம் என்பது எண்பெருங்குன்றம் எனப்படும் மதுரையைச் சுற்றியுள்ள எட்டு குன்றுகளையே உருவகமாக குறிக்கிறது என்று சொல்லப்படுகிறது. தமிழகத்து நகரத்தார் சமூகத்தில் நாலாயிரம், இரண்டாயிரம் என்று எண்ணிக்கையிலேயே அவர்களின் குல அடையாளங்கள் குறிக்கப்படுவதை ஆதாரமாக கொண்டு எண்ணாயிரம் என்பது ஒரு சமண வணிகர்குழுவைக் குறிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எண்ணாயிரம் என்பது ஒரு ஊரின் பெயர் என்றும் சொல்லப்படுகிறது.. அவ்வண்ணம் சிலர் தண்டிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அது பின்னர் கற்பனையாக விரிவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

சைவநாயன்மார்கள் பற்றிய கதைகள் எல்லாமே நாட்டார்த்தன்மை கொண்டவை. பிள்ளைக்கறி சமைப்பது உட்பட பலவகையான மிகைநிகழ்வுகள் அவற்றிலுள்ளன. அவற்றில் கிறிஸ்தவ தூயர்கள் கொடுமைப்படுத்தப்பட்டது பற்றிய தொன்மக்கதைகளின் செல்வாக்கு மிகுதி என ஜெயமோகன் குறிப்பிடுகிறார். இந்தியாவில் பொ.யு ஏழு - எட்டாம் நூற்றாண்டு முதலே சிரியா வழியாக கிறிஸ்தவம் வந்துவிட்டது என்பதற்கும் சான்றுகள் உள்ளன என்கிறார்.

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.