கலம்பகம் (இலக்கியம்): Difference between revisions
(Created page with "தமிழ் இலக்கியத்தில், '''கலம்பகம்''' என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். பல்பூ மிடைந்த...") |
Tamizhkalai (talk | contribs) |
||
(21 intermediate revisions by 5 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
''கலம்பகம்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதும் கலம்பகம் . இறைவனையோ, அரசனையோ, தலைவனாகக் கொண்டு, பலவகைச் செய்யுள்களால் பாடப்படுவது. | |||
கலம்பக இலக்கிய வகையின் முதல் நூல் [[நந்திக் கலம்பகம்]]. | |||
== தோற்றமும் வளர்ச்சியும் == | |||
சங்க நூல் பெரும்பாணாற்றுப்படையில் | |||
== | பல்பூ மிடைந்த படலைக் கண்ணி (174) | ||
== | (பல் = பல; பூ = பூக்கள்; மிடைந்து = கலந்து) | ||
என்று ஓர் அடி வருகின்றது. பலவாகிய பூக்கள் கலந்து கட்டப்பட்ட கலம்பக மாலை என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுகிறார். பல்வேறு பூக்களால் ஆன மாலை கலம்பகம் எனப்படுவது போலப் பல்வேறு உறுப்புக்களைக் கலந்து இயற்றிய நூல் கலம்பகம் என்று அழைக்கப்படுகின்றது. | |||
கலம்பக இலக்கிய வகையின் உறுப்புகள் பல தொல்காப்பியத்தில் இடம் பெறக் காணலாம். அம்மானை, ஊசல், காலம், வண்டு, கைக்கிளை, பாண், தழை, இரங்கல், குறம், தூது என்ற கலம்பக உறுப்புகள் தொல்காப்பிய அகத்துறை சார்ந்தவை. மறம், புயம் போன்றவை தொல்காப்பியப் புறத்துறை சார்ந்தவை. இதிலிருந்து பின்னர் கலம்பகம் என்ற இலக்கிய வகை தோன்றியிருக்கலாம். | |||
== இலக்கணம் == | |||
நவநீதப் பாட்டியல், கலந்து பாடுவது கலம்பகம் என வகுக்கிறது. பன்னிரு பாட்டியல், பிரபந்த மரபியல் போன்ற இலக்கண நூல்கள் தேவர்க்கு (இறைவனுக்கு) நூறும், முனிவர்க்குத் தொண்ணூற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும் ஆகப் பாடல்கள் பாடப்படுதல் வேண்டும், அமைச்சர்களுக்கு எழுபது, வணிகர்க்கு ஐம்பது, வேளாளர்களுக்கு முப்பது என்று கலம்பகத்துக்கான வரையறையை அளிக்கிறது<ref><poem>நூறு தேவர், தொண்ணூற்றைந்து பார்ப்பார்க்கு, | |||
அரசர் தொண்ணூறு, அமைச்சர்க்கு எழுபஃது, | |||
ஐம்பான் வைசியர்க்கு, ஆறைந்து சூத்திரர்க்கு | |||
என்ப இதன் இயல்புணர்ந்தோரே | |||
- பிரபந்த மரபியல்</poem></ref>. | |||
[[பன்னிரு பாட்டியல்]] என்னும் நூல் இதில் அமைய வேண்டிய யாப்புகளின், உறுப்புகளின் இலக்கணத்தைக் கூறுகிறது.<ref> | |||
<poem>சொல்லிய கலம்பகம் சொல்லின் ஒருபோகு | <poem>சொல்லிய கலம்பகம் சொல்லின் ஒருபோகு | ||
முதற்கண் வெண்பாக் கலித்துறை புயமே | முதற்கண் வெண்பாக் கலித்துறை புயமே | ||
Line 17: | Line 28: | ||
செய்யுள் கலந்து உடன் எய்தி அந்தம் | செய்யுள் கலந்து உடன் எய்தி அந்தம் | ||
ஆதி யாக வரும் என மொழிப </poem>(பன்னிரு பாட்டியல் 213 - தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 264)</ref> | ஆதி யாக வரும் என மொழிப </poem>(பன்னிரு பாட்டியல் 213 - தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 264)</ref> | ||
கலம்பக இலக்கிய வகையின் இலக்கணம் கூறும் வேறு [[பாட்டியல்]] நூல்கள் பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், பிரபந்த தீபிகை ஆகியவை. இந்நூல்கள் கலம்பகத்துக்கு பதினெட்டு உறுப்புகளைச் சுட்டுகின்றன. இந்த உறுப்புகளிடையே நூல்களில் வேறுபாடுகளும் இருக்கின்றன. | |||
[[ஒருபோகு]]ம், [[வெண்பா]]வும், முதல் கலியுறுப்பாக | [[ஒருபோகு]]ம், [[வெண்பா]]வும், முதல் கலியுறுப்பாக வந்து [[புயவகுப்பு]], [[மதங்கம்]], [[அம்மானை]], [[காலம் (கலம்பக உறுப்பு)|காலம்]], [[சம்பிரதம்]], [[கார் (கலம்பக உறுப்பு)|கார்]], [[தவம் (கலம்பக உறுப்பு)|தவம்]], [[குறம்]], [[மறம் (கலம்பக உறுப்பு)|மறம்]], [[பாண் (கலம்பக உறுப்பு)|பாண்]], [[களி (கலம்பக உறுப்பு)|களி]], [[சித்து (கலம்பக உறுப்பு)|சித்து]], [[இரங்கல் (கலம்பக உறுப்பு)|இரங்கல்]], [[கைக்கிளை (கலம்பக உறுப்பு)|கைக்கிளை]], [[தூது (கலம்பக உறுப்பு)|தூது]], [[வண்டு (கலம்பக உறுப்பு)|வண்டு]], [[தழை (கலம்பக உறுப்பு)|தழை]], [[ஊசல் (கலம்பக உறுப்பு)|ஊசல்]] என்னும் பதினெட்டுப் [[யாப்பில் பொருட்கூறு|பொருட் கூற்று உறுப்பு]]க்களும் அமைய, [[மடக்கு]], [[மருட்பா]], [[ஆசிரியப்பா]], [[கலிப்பா]], [[வஞ்சிப்பா]], [[ஆசிரிய விருத்தம்]], [[கலி விருத்தம்]], [[கலித்தாழிசை]], [[வஞ்சி விருத்தம்]], [[வஞ்சித்துறை]], [[வெண்துறை]] என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ [[அந்தாதித் தொடை]]யால் பாடுவது கலம்பகம். | ||
கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் யாப்பியல் நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100- க்கு அதிகமாகவும், 50-க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன. | |||
கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் | ==கலம்பக நூல்கள்== | ||
* ஆளுடையப் பிள்ளையார் திருக்கலம்பகம் | |||
==கலம்பக | |||
* | |||
* [[நந்திக் கலம்பகம்]] | * [[நந்திக் கலம்பகம்]] | ||
* [[காசிக் கலம்பகம்]] | * [[காசிக் கலம்பகம்]] | ||
* [[திருவரங்கக் கலம்பகம்]] | * [[திருவரங்கக் கலம்பகம்]] | ||
* | * மதுரைக் கலம்பகம் | ||
* | * வீரகேரளம்புதூர் நவநீதகிருட்டிணன் கலம்பகம் | ||
* | * திருக்கண்ணபுரக் கலம்பகம் | ||
* [[திருவருணைக் கலம்பகம்]] | * [[திருவருணைக் கலம்பகம்]] | ||
* | * திருக்காவலூர்க் கலம்பகம் | ||
* | * தில்லைக் கலம்பகம் | ||
* | * மறைசைக் கலம்பகம் | ||
* | * அருணைக் கலம்பகம் | ||
* | * கதிர்காமக் கலம்பகம் | ||
* [[கச்சிக் கலம்பகம்]] | * [[கச்சிக் கலம்பகம்]] | ||
* | * வெங்கைக் கலம்பகம் | ||
* | * புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம் | ||
* | * திருவாமாத்தூர்க் கலம்பகம் | ||
== அடிக்குறிப்புகள் == | |||
==அடிக்குறிப்புகள்== | <references /> | ||
== இதர இணைப்புகள் == | |||
* [[பாட்டியல்]] | |||
[[ | * [[சிற்றிலக்கியங்கள்]] | ||
[[ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] |
Latest revision as of 04:16, 6 May 2024
கலம்பகம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதும் கலம்பகம் . இறைவனையோ, அரசனையோ, தலைவனாகக் கொண்டு, பலவகைச் செய்யுள்களால் பாடப்படுவது.
கலம்பக இலக்கிய வகையின் முதல் நூல் நந்திக் கலம்பகம்.
தோற்றமும் வளர்ச்சியும்
சங்க நூல் பெரும்பாணாற்றுப்படையில்
பல்பூ மிடைந்த படலைக் கண்ணி (174)
(பல் = பல; பூ = பூக்கள்; மிடைந்து = கலந்து)
என்று ஓர் அடி வருகின்றது. பலவாகிய பூக்கள் கலந்து கட்டப்பட்ட கலம்பக மாலை என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுகிறார். பல்வேறு பூக்களால் ஆன மாலை கலம்பகம் எனப்படுவது போலப் பல்வேறு உறுப்புக்களைக் கலந்து இயற்றிய நூல் கலம்பகம் என்று அழைக்கப்படுகின்றது.
கலம்பக இலக்கிய வகையின் உறுப்புகள் பல தொல்காப்பியத்தில் இடம் பெறக் காணலாம். அம்மானை, ஊசல், காலம், வண்டு, கைக்கிளை, பாண், தழை, இரங்கல், குறம், தூது என்ற கலம்பக உறுப்புகள் தொல்காப்பிய அகத்துறை சார்ந்தவை. மறம், புயம் போன்றவை தொல்காப்பியப் புறத்துறை சார்ந்தவை. இதிலிருந்து பின்னர் கலம்பகம் என்ற இலக்கிய வகை தோன்றியிருக்கலாம்.
இலக்கணம்
நவநீதப் பாட்டியல், கலந்து பாடுவது கலம்பகம் என வகுக்கிறது. பன்னிரு பாட்டியல், பிரபந்த மரபியல் போன்ற இலக்கண நூல்கள் தேவர்க்கு (இறைவனுக்கு) நூறும், முனிவர்க்குத் தொண்ணூற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும் ஆகப் பாடல்கள் பாடப்படுதல் வேண்டும், அமைச்சர்களுக்கு எழுபது, வணிகர்க்கு ஐம்பது, வேளாளர்களுக்கு முப்பது என்று கலம்பகத்துக்கான வரையறையை அளிக்கிறது[1]. பன்னிரு பாட்டியல் என்னும் நூல் இதில் அமைய வேண்டிய யாப்புகளின், உறுப்புகளின் இலக்கணத்தைக் கூறுகிறது.[2] கலம்பக இலக்கிய வகையின் இலக்கணம் கூறும் வேறு பாட்டியல் நூல்கள் பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், பிரபந்த தீபிகை ஆகியவை. இந்நூல்கள் கலம்பகத்துக்கு பதினெட்டு உறுப்புகளைச் சுட்டுகின்றன. இந்த உறுப்புகளிடையே நூல்களில் வேறுபாடுகளும் இருக்கின்றன. ஒருபோகும், வெண்பாவும், முதல் கலியுறுப்பாக வந்து புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டுப் பொருட் கூற்று உறுப்புக்களும் அமைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம். கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் யாப்பியல் நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100- க்கு அதிகமாகவும், 50-க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன.
கலம்பக நூல்கள்
- ஆளுடையப் பிள்ளையார் திருக்கலம்பகம்
- நந்திக் கலம்பகம்
- காசிக் கலம்பகம்
- திருவரங்கக் கலம்பகம்
- மதுரைக் கலம்பகம்
- வீரகேரளம்புதூர் நவநீதகிருட்டிணன் கலம்பகம்
- திருக்கண்ணபுரக் கலம்பகம்
- திருவருணைக் கலம்பகம்
- திருக்காவலூர்க் கலம்பகம்
- தில்லைக் கலம்பகம்
- மறைசைக் கலம்பகம்
- அருணைக் கலம்பகம்
- கதிர்காமக் கலம்பகம்
- கச்சிக் கலம்பகம்
- வெங்கைக் கலம்பகம்
- புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம்
- திருவாமாத்தூர்க் கலம்பகம்
அடிக்குறிப்புகள்
- ↑
நூறு தேவர், தொண்ணூற்றைந்து பார்ப்பார்க்கு,
அரசர் தொண்ணூறு, அமைச்சர்க்கு எழுபஃது,
ஐம்பான் வைசியர்க்கு, ஆறைந்து சூத்திரர்க்கு
என்ப இதன் இயல்புணர்ந்தோரே
- பிரபந்த மரபியல் - ↑
சொல்லிய கலம்பகம் சொல்லின் ஒருபோகு
முதற்கண் வெண்பாக் கலித்துறை புயமே
அம்மனை ஊசல் யமகம் களி மறம்
சித்துக் காலம் மதங்கி வண்டே
கொண்டல் மருள் சம்பிரதம் வெண்டுறை
தவசு வஞ்சித்துறையே இன்னிசை
குறம் அகவல் விருத்தம் என வரும்
செய்யுள் கலந்து உடன் எய்தி அந்தம்
ஆதி யாக வரும் என மொழிப
இதர இணைப்புகள்
✅Finalised Page