கபிலர்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:Kabilarkundru-3.jpg|thumb]] | [[File:Kabilarkundru-3.jpg|thumb]] | ||
This page is created by ka. Siva | This page is created by ka. Siva | ||
கபிலர் சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். சங்க இலக்கியப் | |||
கபிலர் சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். சங்க இலக்கியப் பாடல்களுள் மிக அதிக எண்ணிக்கையில் பாடல்களை இயற்றியவர். | |||
== குறிஞ்சிக் கவிஞர் == | == குறிஞ்சிக் கவிஞர் == | ||
இவர் அகத்திணைகள் பலவற்றைப் பாடும் திறமுடையவராயினும் குறிஞ்சித் திணையில் பாடுவதில் தேர்ந்தவர். கலித்தொகை நூலில் | இவர் [[அகத்திணை|அகத்திணைகள்]] பலவற்றைப் பாடும் திறமுடையவராயினும் குறிஞ்சித் திணையில் பாடுவதில் தேர்ந்தவர். கலித்தொகை நூலில் [[குறிஞ்சிக் கலி]], [[பத்துப்பாட்டு|பத்துப்பாட்டு நூலில்]] [[குறிஞ்சிப் பாட்டு]], [[ஐங்குறு நூறு]] நூலில் குறிஞ்சித் திணை பாடல்கள் நூறு மேலும் [[அகநானூறு]], [[குறுந்தொகை]] மற்றும் [[நற்றிணை|நற்றிணையிலும்]] இடம் பெற்றுள்ள மிகுதியான குறிஞ்சித் திணை பாடல்கள் கபிலர் இயற்றியதாகும். இதனால் குறிஞ்சி பாடிய கபிலர் என்றே இவரை அழைக்கிறார்கள். | ||
== காலம் == | == காலம் == | ||
சங்க காலப் புலவர் கபிலரின் காலம் கி.மு 3-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகும். | சங்க காலப் புலவர் கபிலரின் காலம் கி.மு 3-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகும். | ||
Line 12: | Line 13: | ||
== கபிலர் பாடிய பாடல்கள் == | == கபிலர் பாடிய பாடல்கள் == | ||
சங்க இலக்கியப் பாடல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களில் கபிலரின் பாடல்கள் மொத்தம் 235 ஆகும். | சங்க இலக்கியப் பாடல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களில் கபிலரின் பாடல்கள் மொத்தம் 235 ஆகும். | ||
{| class="wikitable" | |||
அகநானூறு | |+ | ||
!'''அகநானூறு''' | |||
ஐங்குறுநூறு | !'''-''' | ||
!'''18''' | |||
கலித்தொகை | ! | ||
|- | |||
குறுந்தொகை | |ஐங்குறுநூறு | ||
| - | |||
நற்றிணை | |100 | ||
| | |||
பதிற்றுப்பத்து | |- | ||
|கலித்தொகை | |||
குறிஞ்சிப்பாட்டு | | - | ||
|29 | |||
புறநானூறு | | | ||
|- | |||
மொத்தம் | |குறுந்தொகை | ||
| - | |||
இவற்றுள் புறநானூறு (28) மற்றும் பதிற்றுப்பத்தில் (10) இடம் பெற்றுள்ள 38 பாடல்கள் புறத்திணைப் பாடல்களாகும். மற்ற 197 பாடல்களும் அகத்திணைப் பாடல்களாகும். இந்த அகத்திணை பாடல்களுள் பாலைத்திணை ஒன்று ( அகம் 203), நெய்தல் திணை மூன்று ( குறுந்தொகை 248, நற்றிணை 267, 291), முல்லைத்திணை ஒன்று ( நற்றிணை 59), மருதத்திணை ஒன்று ( நற்றிணை 320) என ஆறு பாடல்கள் தவிர 191 பாடல்கள் குறிஞ்சித்திணை பாடல்களாகும். | |29 | ||
| | |||
|- | |||
|நற்றிணை | |||
| - | |||
|20 | |||
| | |||
|- | |||
|பதிற்றுப்பத்து | |||
| - | |||
|10 | |||
| | |||
|- | |||
|குறிஞ்சிப்பாட்டு | |||
| - | |||
|1 | |||
| | |||
|- | |||
|புறநானூறு | |||
| - | |||
|28 | |||
| | |||
|- | |||
|மொத்தம் | |||
| - | |||
|235 | |||
| | |||
|} | |||
இவற்றுள் [[புறநானூறு]] (28) மற்றும் பதிற்றுப்பத்தில் (10) இடம் பெற்றுள்ள 38 பாடல்கள் புறத்திணைப் பாடல்களாகும். மற்ற 197 பாடல்களும் அகத்திணைப் பாடல்களாகும். இந்த அகத்திணை பாடல்களுள் பாலைத்திணை ஒன்று ( அகம் 203), நெய்தல் திணை மூன்று ( குறுந்தொகை 248, நற்றிணை 267, 291), முல்லைத்திணை ஒன்று ( நற்றிணை 59), மருதத்திணை ஒன்று ( நற்றிணை 320) என ஆறு பாடல்கள் தவிர 191 பாடல்கள் குறிஞ்சித்திணை பாடல்களாகும். | |||
கிடைத்துள்ள 2381 சங்கப்பாடல்களில் கபிலரது பாடல்களின் பங்கு 10-இல் ஒரு பங்குக்கு மேல் உள்ளது. பெயர் தெரிந்த 473 புலவர்களில் இவர் ஒருவரின் பாடல்கள் மட்டும் 10-இல் ஒரு பங்குக்கு மேல் என்று காணும்போது இவரது செல்வாக்கினை நன்கு உணரமுடிகிறது. | |||
== கபிலரால் பாடப்பட்டோர் == | == கபிலரால் பாடப்பட்டோர் == | ||
* அகுதை, இருங்கோவேள், செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் மாந்தரஞ்சேரல் இலும்பொறை, ஓரி, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, மலையன், விச்சிக்கோன், வையாவி கோபெரும் பேகன், வேள்பாரி ஆகியோரைப் பற்றி கபிலர் பாடியுள்ளார். இவர்களுள் பாரியின் பண்பைப் பற்றி இவர் பாடிய பாடல்களே அதிகம். | |||
* கபிலர், பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தினை சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பவனைப் பற்றி பாடியதற்கு நூறாயிரம் காணமும், அவனது "நன்றா" என்னும் மலையின் மீது ஏறித் தனது கண்பட்ட அளவும் கொடுத்த நாட்டையும் பரிசிலாகப் பெற்றார். | |||
பேகன் தன் மனைவியைப் பிரிந்து இன்னொருத்தியுடன் கூடி வாழ்ந்த போது பாணர், அரசில் கிழார் போன்ற புலவர்களுடன் சென்று பேகனை நல்வழிப் படுத்த முயன்றார் (புறம் 145) எனவும் அறியலாம். இவரது (புறம் 201) பாடலில், இருங்கோவேளின் முன்னோர்கள் நாற்பத்தி ஒன்பது தலைமுறையாகத் துவரை என்னும் நகரை ஆண்டு வந்தனர் எனக் குறிப்பிடுகிறார். சங்க கால புலவர்களில் கபிலரே முதன்முதலில் துவரை (துவாரகை) நகரம் பற்றிக் கூறுகிறார். | * [[பேகன்]] தன் மனைவியைப் பிரிந்து இன்னொருத்தியுடன் கூடி வாழ்ந்த போது பாணர், அரசில் கிழார் போன்ற புலவர்களுடன் சென்று பேகனை நல்வழிப் படுத்த முயன்றார் (புறம் 145) எனவும் அறியலாம். | ||
* இவரது (புறம் 201) பாடலில், இருங்கோவேளின் முன்னோர்கள் நாற்பத்தி ஒன்பது தலைமுறையாகத் துவரை என்னும் நகரை ஆண்டு வந்தனர் எனக் குறிப்பிடுகிறார். சங்க கால புலவர்களில் கபிலரே முதன்முதலில் துவரை (துவாரகை) நகரம் பற்றிக் கூறுகிறார். | |||
கபிலர் வேள்பாரியின் உற்ற நண்பராக விளங்கினார். அவன்பால் மட்டுமின்றி அவனது பறம்பு மலையினிடத்தும் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். வேள்பாரி பற்றிய இவரது பாடல்கள், இவரது அன்பையும் வேள்பாரியின் வள்ளல் தன்மையையும் தமிழகத்தில் நிலைக்கச் செய்துள்ளன. மூவேந்தரும் வஞ்சகமாகப் வேள்பாரியைக் கொன்றது கண்டு உள்ளம் வெதும்பி கபிலர் பாடிய செய்யுட்கள், கற்போரைத் துயரத்துள் ஆழ்த்துவன ஆகும். வேள்பாரிக்குப் பின் அவரின் மகள்களான அங்கவை, சங்கவை இருவருக்கும் நல்வாழ்வு அமைக்க இவர் அடைந்த துயரங்கள் பல. பாரியின் மகளிரைத் தம் மகளிராகவே கருதித் தக்க அரசர்களை நாடி இப்பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார் கபிலர். அவ்வகையில் விச்சிகோன், இருங்கோவேள் என்ற இரண்டு அரசர்களைச் சென்று கபிலர் வேண்டியதைப் புறநானூறு பாடல்கள் 200 மற்றும் 201 தெரிவிக்கிறன. இறுதியில், அங்கவை, சங்கவை இருவரையும் தக்க சான்றோரிடம் அடைக்கலம் தந்துவிட்டு, தாமும் வடக்கிருந்து உயிர் நீத்து தன் நண்பனான பாரியுடன் விண்ணகம் சேர்ந்தார் (புறம் 236). | * கபிலர் [[வேள்பாரி|வேள்பாரியின்]] உற்ற நண்பராக விளங்கினார். அவன்பால் மட்டுமின்றி அவனது பறம்பு மலையினிடத்தும் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். வேள்பாரி பற்றிய இவரது பாடல்கள், இவரது அன்பையும் வேள்பாரியின் வள்ளல் தன்மையையும் தமிழகத்தில் நிலைக்கச் செய்துள்ளன. மூவேந்தரும் வஞ்சகமாகப் வேள்பாரியைக் கொன்றது கண்டு உள்ளம் வெதும்பி கபிலர் பாடிய செய்யுட்கள், கற்போரைத் துயரத்துள் ஆழ்த்துவன ஆகும். வேள்பாரிக்குப் பின் அவரின் மகள்களான அங்கவை, சங்கவை இருவருக்கும் நல்வாழ்வு அமைக்க இவர் அடைந்த துயரங்கள் பல. பாரியின் மகளிரைத் தம் மகளிராகவே கருதித் தக்க அரசர்களை நாடி இப்பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார் கபிலர். அவ்வகையில் விச்சிகோன், இருங்கோவேள் என்ற இரண்டு அரசர்களைச் சென்று கபிலர் வேண்டியதைப் புறநானூறு பாடல்கள் 200 மற்றும் 201 தெரிவிக்கிறன. இறுதியில், அங்கவை, சங்கவை இருவரையும் தக்க சான்றோரிடம் அடைக்கலம் தந்துவிட்டு, தாமும் வடக்கிருந்து உயிர் நீத்து தன் நண்பனான பாரியுடன் விண்ணகம் சேர்ந்தார் (புறம் 236). | ||
== கபிலர் குன்று == | == கபிலர் குன்று == | ||
திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள "கபிலர் குன்று" (கபிலக்கல்) என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டரில் வீரட்டானேசுவரர் கோவிலின் அருகில் தென்பெண்ணையாற்றின் நடுவில் "கபிலர்குன்று" உள்ளது. கபிலர்குன்று என இன்று அழைக்கப்பட்டாலும் "கபிலக்கல்" என்றே இந்த இடத்தை கல்வெட்டு குறிப்பிடுகின்றது. | திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள "[[கபிலர் குன்று]]" (கபிலக்கல்) என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டரில் வீரட்டானேசுவரர் கோவிலின் அருகில் தென்பெண்ணையாற்றின் நடுவில் "கபிலர்குன்று" உள்ளது. கபிலர்குன்று என இன்று அழைக்கப்பட்டாலும் "கபிலக்கல்" என்றே இந்த இடத்தை கல்வெட்டு குறிப்பிடுகின்றது. | ||
கபிலர்மலை தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். இங்கு புகழ்பெற்ற பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது. | கபிலர்மலை தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். இங்கு புகழ்பெற்ற பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது. | ||
== கபிலரைப் பாராட்டியுள்ள சங்கப்பாடல்கள் == | == கபிலரைப் பாராட்டியுள்ள சங்கப்பாடல்கள் == | ||
சங்ககாலப் புலவர்களே கபிலரை பாராட்டிப் பாடியுள்ளனர். இதனால் இவரது பெருமை விளங்கும். | சங்ககாலப் புலவர்களே கபிலரை பாராட்டிப் பாடியுள்ளனர். இதனால் இவரது பெருமை விளங்கும். | ||
== புலன் அழுக்கற்ற அந்தணாளன் == | ===== புலன் அழுக்கற்ற அந்தணாளன் ===== | ||
பரிசில் பெறவேண்டிப் புலவர்கள் பாட யாரும் இல்லாத அளவுக்கு எல்லாப் புரவலர்களையும் கபிலன் பாடிவிட்டான். குட்டுவன் குடகடலில் பொன்னைக் கொண்டுவரும் நாவாய் ஓட்டினான். அப்போது பிற கலங்கள்(நாவாய்க் கப்பல்கள்) செல்லவில்லை. அதுபோலக் கபிலர் பாடும்போது பிற புலவர்கள் | பரிசில் பெறவேண்டிப் புலவர்கள் பாட யாரும் இல்லாத அளவுக்கு எல்லாப் புரவலர்களையும் கபிலன் பாடிவிட்டான். குட்டுவன் குடகடலில் பொன்னைக் கொண்டுவரும் நாவாய் ஓட்டினான். அப்போது பிற கலங்கள்(நாவாய்க் கப்பல்கள்) செல்லவில்லை. அதுபோலக் கபிலர் பாடும்போது பிற புலவர்கள் பாடுவதில்லை என மாறோக்கத்து நப்பசலையார் குறிப்பிடுகிறார். (புறம் 136) | ||
===== வாய்மொழிக் கபிலன் ===== | |||
பலரும் புகழும் நல்ல பாடல்களை இசையோடு பாடிக்கொண்டு ஊர்மக்கள் சூழ ஊர் ஊராகத் திரியும் கபிலன் என்கிறார் நக்கீரர் (புறம் 78). | |||
== வாய்மொழிக் கபிலன் == | ===== விளங்கு புகழ்க் கபிலர் ===== | ||
பலரும் புகழும் நல்ல பாடல்களை இசையோடு பாடிக்கொண்டு ஊர்மக்கள் சூழ ஊர் ஊராகத் திரியும் கபிலன் என்கிறார் நக்கீரர்(புறம் 78). | |||
== விளங்கு புகழ்க் கபிலர் == | |||
கபிலர் பாடும் செய்யுள்கள் நன்செய் வயலில் நீர் தேங்குவது போலச் சமனிலை கொண்டவை. செறிந்த பொருளாழம் கொண்டவை. அவருடைய நாக்கு செவ்விய செந்தண்மை கொண்டவை. பிறர் சொல்வதைக் கேட்டுக்கொள்ளும் செவிச் செல்வம் பெற்றவர் என பொருந்தில் இளங்கீரனார் (புறம் 53) குறிப்பிடுகிறார். | கபிலர் பாடும் செய்யுள்கள் நன்செய் வயலில் நீர் தேங்குவது போலச் சமனிலை கொண்டவை. செறிந்த பொருளாழம் கொண்டவை. அவருடைய நாக்கு செவ்விய செந்தண்மை கொண்டவை. பிறர் சொல்வதைக் கேட்டுக்கொள்ளும் செவிச் செல்வம் பெற்றவர் என பொருந்தில் இளங்கீரனார் (புறம் 53) குறிப்பிடுகிறார். | ||
== நல்லிசைக் கபிலர் பெற்ற ஊர் == | ===== நல்லிசைக் கபிலர் பெற்ற ஊர் ===== | ||
"அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய, | "அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய, | ||
Line 65: | Line 90: | ||
நனவில் பாடிய நல்லிசைக், கபிலர் பெற்ற ஊர்" என பெருங்குன்றூர் கிழார் (பதிற்றுப்பத்து 85) குறிப்பிடுகின்றார். | நனவில் பாடிய நல்லிசைக், கபிலர் பெற்ற ஊர்" என பெருங்குன்றூர் கிழார் (பதிற்றுப்பத்து 85) குறிப்பிடுகின்றார். | ||
== கபிலர் பாரியைப் பாடியவை == | == கபிலர் பாரியைப் பாடியவை == | ||
பறம்பு நாட்டை வேலால் வெல்ல இயலாது. கிணையுடன் பாடிவந்தால் பெற்றுக்கொள்ளலாம் (புறம் 111). | * வேட்கை உடையோருக்கு நீர் போலப் பாரி இனிய சாயலை உடையவன். விறலியருக்குப் பொன்னணிகள் வழங்குவான் (புறம் 105) | ||
* எருக்கம் பூவையும் கடவுள் ஏற்றுக்கொள்வது போலப் பாரி எளியோரையும் ஏற்றுக்கொள்வான்(புறம் 106) | |||
* பாரியின் வள்ளல் தன்மைக்கு இணை மழை மட்டுமே (புறம் 107) | |||
* பரிசிலாகக் கேட்டால் தன்னையே கொடுத்துவிடுவான் (புறம் 108) | |||
* பெரும் யானைப் படையுடன் நாட்டைக் கைப்பற வந்திருக்கும் வேந்தர் விறலியர் போல ஆடிப் பாடிக்கொண்டு வந்தால் பெற்றுக்கொள்ளலாமே (புறம் 109) | |||
* பறம்பு நாட்டு 300 ஊர்களையும் பரிசிலர் பெற்றுக்கொண்டனர். அப்படியிருக்க மூவேந்தர்கள் இதனை எதற்காக முற்றுகை இட்டுள்ளனர்? (புறம் 110) | |||
* பறம்பு நாட்டை வேலால் வெல்ல இயலாது. கிணையுடன் பாடிவந்தால் பெற்றுக்கொள்ளலாம் (புறம் 111). | |||
== பாரி இறந்த பின் பாடியது == | == பாரி இறந்த பின் பாடியது == | ||
நிழலில்லாத வழியில் தழைத்திரும் தனிமரம் போல விளங்கிய பாரி தன்னிடம் பொருள் இல்லை என்றாலும் மூவேந்தரிடம் சென்று இரந்து வாங்கிவந்து வழங்கினான் (புறம் 118). | * இவன் மலையில் ஒருபக்கம் அருவி ஒழுகும். மற்றொரு பக்கம் பாணர்க்கு ஊற்றிய தேறல் வழியும். இது வேந்தர்க்கு இன்னா நிலை (புறம் 115 ). | ||
* கோள்நிலை மாறினாலும் பாரியின் கோல்நிலை சாயாது (புறம் 117 ). | |||
பகைவரை ஓடச்செய்தவன (புறம் 119 ). | * நீர் நிரம்பிய குளம் உடைந்த்து போல ஆகிவிட்டதே, பாரியின் நாடு (புறம் 118 ). | ||
* நிழலில்லாத வழியில் தழைத்திரும் தனிமரம் போல விளங்கிய பாரி தன்னிடம் பொருள் இல்லை என்றாலும் மூவேந்தரிடம் சென்று இரந்து வாங்கிவந்து வழங்கினான் (புறம் 118). | |||
* பகைவரை ஓடச்செய்தவன (புறம் 119 ). | |||
== பாரி மகளிர் திருமணம் == | == பாரி மகளிர் திருமணம் == | ||
வளையல் அணிந்த கைகளும், மணக்கும் கூந்தலும் உடையவர்கள் (புறம் 113 ). | * பாரி மகளிர் விளையாட்டுச் சிறுமியர். சுரைக்கொடி படர்ந்திருந்த தம் வீட்டுக் கூரைமீது ஏறி உப்பு விற்க வரும் உமணர்களின் வண்டியை ஒன்று, இரண்டு, என எண்ணிக்கொண்டு விளையாடுவார்கள். பாரியின் பறம்பு மலையை மூவேந்தர் முற்றுகை இட்டிருந்தபோது, அவர்கள் மழை போன்ற கண்களுடன் படைக் குதிரைகளை எண்ணி விளையாடிக் கொண்டிருந்தனர் (புறம் 116 ). | ||
* வளையல் அணிந்த கைகளும், மணக்கும் கூந்தலும் உடையவர்கள் (புறம் 113 ). | |||
களிறு போலத் தோன்றிய மலையில் வாழ்ந்தனர். போருக்குப் பின்னர் அது களிறு மென்று தள்ளிய கவளம் போல ஆன பின் கபிலர் அவர்களுக்கு மணமகனைத் தேடி அழைத்துச் சென்றார் (புறம் 114 ). | * களிறு போலத் தோன்றிய மலையில் வாழ்ந்தனர். போருக்குப் பின்னர் அது களிறு மென்று தள்ளிய கவளம் போல ஆன பின் கபிலர் அவர்களுக்கு மணமகனைத் தேடி அழைத்துச் சென்றார் (புறம் 114 ). | ||
* விச்சிக்கோன் அவர்களைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டான் (புறம் 200 ). இருங்கோவேளும் மறுத்துவிட்டான் (புறம் 201 ). எனவே திருமுடி காரி மலையமான் எனும் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டுக் கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்தார் (புறம் 236 ). | |||
விச்சிக்கோன் அவர்களைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டான் (புறம் 200 ). இருங்கோவேளும் மறுத்துவிட்டான் (புறம் 201 ). எனவே திருமுடி காரி மலையமான் எனும் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டுக் கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்தார் (புறம் 236 ). | |||
== பேகனுக்கு அறிவுரை == | == பேகனுக்கு அறிவுரை == | ||
பேகன் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வேறொருத்தியுடன் வாழ்ந்துவந்தான். அவனைத் தன் மனைவியிடம் செல்லுபடி கபிலர் நயமாக எடுத்துரைக்கிறார். “நேற்று உன் அரண்மனை வாயிலில் நின்று உன்னையும் உன் மலையையும் வாழ்த்திப் பாடினேன். அப்போது உள்ளே இருந்து வாயிலுக்கு வந்து தன் மார்பை நனைக்கும் கண்ணீரை நிறுத்த முடியாமல் அழுதுகொண்டு ஒருத்தி நின்றாளே, அவள் உனக்கு யார்? இரங்கத் தக்கவள் (புறம் 143 ). | பேகன் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வேறொருத்தியுடன் வாழ்ந்துவந்தான். அவனைத் தன் மனைவியிடம் செல்லுபடி கபிலர் நயமாக எடுத்துரைக்கிறார். “நேற்று உன் அரண்மனை வாயிலில் நின்று உன்னையும் உன் மலையையும் வாழ்த்திப் பாடினேன். அப்போது உள்ளே இருந்து வாயிலுக்கு வந்து தன் மார்பை நனைக்கும் கண்ணீரை நிறுத்த முடியாமல் அழுதுகொண்டு ஒருத்தி நின்றாளே, அவள் உனக்கு யார்? இரங்கத் தக்கவள் (புறம் 143 ). | ||
== செல்வக் கடுங்கோவை பாடியது == | == செல்வக் கடுங்கோவை பாடியது == | ||
மற்றொரு பாடலில் செல்வக் கடுங்காவுக்கு வானத்திலுள்ள ஈடாகாது எனச் சிலேடையாகப் பாடியுள்ளார் (புறம் 8 ). | * சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதான் கபிலரின் கைகளைப் பற்றி அவை மென்மையாக உள்ளன என்றான். படைக்கருவிகளைத் தாங்கி அரசன் கைகள் காப்புக் காய்த்து வன்மையாக உள்ளன. அவன் அளித்த விருந்தை உண்டு தம் கைகள் மென்மையாக உள்ளன என அவனது வள்ளண்மையைப் புலவர் பாராட்டினார் (புறம் 14 ). | ||
* மற்றொரு பாடலில் செல்வக் கடுங்காவுக்கு வானத்திலுள்ள ஈடாகாது எனச் சிலேடையாகப் பாடியுள்ளார் (புறம் 8 ). | |||
* பதிற்றுப்பத்து தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஏழாம் பத்துப் பாடல்களிலும் கபிலர் சேரமான் செல்வக் கடுங்கோவை புகழ்ந்து பாடியுள்ளார். | |||
== கபிலரின் குறிஞ்சிப்பாட்டு == | == கபிலரின் குறிஞ்சிப்பாட்டு == | ||
வடநாட்டு அரசன் பிரகத்தன் திருமண முறையில் தமிழரின் களவு நெறி தீது என்றதாகவும் அவனுக்குத் தமிழ்நெறி மேன்மை உடையது என்பதை எடுத்துக்காட்ட இந்தக் குறிஞ்சிப்பாட்டு நூலைக் கபிலர் பாடியதாகவும் இப்பாடலின் அடிக்குறிப்பில் உள்ளது என டாக்டர் மு.வரதராசன் தனது "தமிழ் இலக்கிய வரலாறு" நூலில் தெரிவிக்கிறார். தமிழரின் களவுநெறி கற்புநெறியாக முடியும் என்பதை குறிஞ்சிப் பாட்டு விளக்குகிறது. தினைப்புனம் காக்கும் மகளிர் பூக்களைக் குவித்து விளையாடியதைக் கூறுமிடத்தில் 99 மலர்களின் பெயர்களை கபிலர் குறிப்பிட்டுள்ளது இந்நூலின் சிறப்பு. | வடநாட்டு அரசன் பிரகத்தன் திருமண முறையில் தமிழரின் களவு நெறி தீது என்றதாகவும் அவனுக்குத் தமிழ்நெறி மேன்மை உடையது என்பதை எடுத்துக்காட்ட இந்தக் குறிஞ்சிப்பாட்டு நூலைக் கபிலர் பாடியதாகவும் இப்பாடலின் அடிக்குறிப்பில் உள்ளது என டாக்டர் மு.வரதராசன் தனது "தமிழ் இலக்கிய வரலாறு" நூலில் தெரிவிக்கிறார். தமிழரின் களவுநெறி கற்புநெறியாக முடியும் என்பதை குறிஞ்சிப் பாட்டு விளக்குகிறது. தினைப்புனம் காக்கும் மகளிர் பூக்களைக் குவித்து விளையாடியதைக் கூறுமிடத்தில் 99 மலர்களின் பெயர்களை கபிலர் குறிப்பிட்டுள்ளது இந்நூலின் சிறப்பு. | ||
== குறிஞ்சிக்கலி (கலித்தொகை) == | == குறிஞ்சிக்கலி (கலித்தொகை) == | ||
* கலிப்பாக்களால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு கலித்தொகையாகும். இதில் ஐந்து புலவர்கள் ஐந்து திணை பாடல்களை இயற்றியுள்ளனர். பாலைத் திணை பாடல்களை பெருங்கடுங்கோனும், குறிஞ்சித் திணை பாடல்களை கபிலரும், மருதத்திணை பாடல்களை மருதன் இளநாகனாரும், முல்லைத் திணை பாடல்களை சோழன் நல்லுருத்திரனும், நெய்தல் திணைப் பாடல்களை நல்லந்துவனாரும் பாடியுள்ளனர். இவற்றைத் தொகுத்தவர் நல்லந்துவனார் ஆவார். | |||
* குறிஞ்சித் திணை பாடல்கள் குறிஞ்சிக்கலி என அழைக்கப்படுகிறது. இதில் கபிலரின் 29 பாடல்கள் உள்ளன. இவற்றில் தோழியும் தலைவியும் மாறி மாறிப் பாடும் வள்ளைப்பாட்டு உரையாடல், முதுபார்ப்பான் காதல் முதலான செய்திகள் இடம்பெற்றுள்ளன. | |||
* சங்க இலக்கியத்துள் அகப்பாடல்களில் கைக்கிளைத் திணைக்கு உரியனவாக இடம் பெற்றிருப்பவை நான்கு பாடல்களே. நான்குமே கலித்தொகையிலேயே உள்ளன. அவற்றில் மூன்று கபிலர் பாடிய குறிஞ்சிக்கலி பாடல்கள் 20, 21 மற்றும் 22 ஆகும். எஞ்சிய ஒன்று நல்லுருத்திரனார் இயற்றிய முல்லைக் கலி பாடல் எண் 10. | |||
== குறிஞ்சி நூறு (ஐங்குறு நூறு) == | == குறிஞ்சி நூறு (ஐங்குறு நூறு) == | ||
ஐங்குறு நூறு என்னும் தொகைநூலில் 500 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு திணைக்கும் நூறு என்று ஐந்து திணைக்கும் ஐந்நூறு பாடல்கள். ஒவ்வொரு திணையின் நூறு பாடல்களும் ஒவ்வொரு புலவரால் காடப்பட்டவை. இந்த வகையில் குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பாடியவர் கபிலர். | ஐங்குறு நூறு என்னும் தொகைநூலில் 500 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு திணைக்கும் நூறு என்று ஐந்து திணைக்கும் ஐந்நூறு பாடல்கள். ஒவ்வொரு திணையின் நூறு பாடல்களும் ஒவ்வொரு புலவரால் காடப்பட்டவை. இந்த வகையில் குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பாடியவர் கபிலர். | ||
== கபில நெடுநகர் == | == கபில நெடுநகர் == | ||
புறநாறூற்றுப் பாடல் 337- இல் கபிலர், கபில நெடுநகர் என்னும் ஊரைக் குறிப்பிட்டுள்ளார். பெண் தர மறுக்கப்பட்ட மறவர் மகளைப் பற்றிக் குறிப்பிடும்போது அவள் பாரியின் பனிச்சுனை போலக் காண்பதற்கு இனியவள் என்றும், (அச் சுனையில் நீராடிய பின்) அவள் தன் கூந்தலைப் உலர்த்தும் அகில் நறும்புகை கபில நெடுநகர் வரையில் கமழும் என்றும் கபிலர் குறிப்பிடுகிறார். இதனால் இவ்வூர் பாரியின் பனிச்சுனைக்கு அருகில் இருந்தது என்பதை உணரமுடிகிறது. கபிலர் வாழ்ந்த இந்த ஊரை மக்கள் கபில நெடுநகர் என்றனர். இது கபிலருக்குப் பாரி வழங்கிய ஊர் எனலாம். | |||
== பிற கபிலர்கள் == | == பிற கபிலர்கள் == | ||
கபிலர் என்ற பெயரில் வேறு புலவர்களும் உள்ளனர். அவர்கள் விவரம்; | கபிலர் என்ற பெயரில் வேறு புலவர்களும் உள்ளனர். அவர்கள் விவரம்; | ||
கபிலதேவர் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான "இன்னா நாற்பது" நூலை இயற்றியவர். | * கபிலதேவர் - [[பதினெண்கீழ்க்கணக்கு]] நூல்களில் ஒன்றான "[[இன்னா நாற்பது]]" நூலை இயற்றியவர். | ||
* கபிலதேவ நாயனார்- இவர் பாடியனவாக மூத்த பிள்ளையார் [[இரட்டைமணிமாலை]], சிவபெருமான் [[திருவிரட்டைமணிமாலை]], சிவபெருமான் [[திருவந்தாதி]] என்னும் மூன்று சிற்றிலக்கியங்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன. | |||
கபிலதேவ நாயனார்- இவர் பாடியனவாக மூத்த பிள்ளையார் இரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்னும் மூன்று சிற்றிலக்கியங்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன. | * கபிலர் பதினொருவர் - திருமால் தனக்குள் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளவற்றில் 'பதினொரு கபிலரும்' அடக்கம் என்று கடுவன் இள எயினனார் தம் பரிபாடலில் குறிப்பிட்டுள்ளார் (பரிபாடல் 3 ). | ||
* சமயாசிரியர் கபிலர் - சங்கம் மருவிய காலத்து ஆறு சமயங்களில் ஒன்றான சாங்கிய சமயத்தின் ஆசிரியர் கபிலர் என்று [[மணிமேகலை]] நூல் குறிப்பிடுகிறது. | |||
கபிலர் பதினொருவர் - திருமால் தனக்குள் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளவற்றில் 'பதினொரு கபிலரும்' அடக்கம் என்று கடுவன் இள எயினனார் தம் பரிபாடலில் குறிப்பிட்டுள்ளார் (பரிபாடல் 3 ). | |||
சமயாசிரியர் கபிலர் - சங்கம் மருவிய காலத்து ஆறு சமயங்களில் ஒன்றான சாங்கிய சமயத்தின் ஆசிரியர் கபிலர் என்று மணிமேகலை நூல் குறிப்பிடுகிறது. | |||
== கபிலை - சொல் விளக்கம் == | == கபிலை - சொல் விளக்கம் == | ||
தொல்காப்பியர் பாடாண் திணைப் பாடல்களின் துறைகளை விரித்துக் கூறும்போது 'கபிலை கண்ணிய வேள்வி நிலை' என்னும் துறை ஒன்றைக் குறிப்பிடுகிறார் (புறத்திணையியல் 35). இங்கு கபிலை என்பது பசுவைக் குறிக்கும். தொல்காப்பியரின் இந்தத் தொடர் கோதானத்தைக் குறிப்பிடுகிறது. | [[தொல்காப்பியர்]] பாடாண் திணைப் பாடல்களின் துறைகளை விரித்துக் கூறும்போது 'கபிலை கண்ணிய வேள்வி நிலை' என்னும் துறை ஒன்றைக் குறிப்பிடுகிறார் (புறத்திணையியல் 35). இங்கு கபிலை என்பது பசுவைக் குறிக்கும். தொல்காப்பியரின் இந்தத் தொடர் கோதானத்தைக் குறிப்பிடுகிறது. | ||
வெண்மையும் செம்மையும், வெண்மையும் கருமையும், கருமையும் செம்மையும் என்று நிறம் கலந்த தோற்றம் கொண்ட பசுக்களைக் கபிலைப்பசு என்பது நாட்டுப்புற வழக்கு. இந்தக் கபிலையைக் கபிலரோடு பொருத்திப் பார்க்கலாம். | வெண்மையும் செம்மையும், வெண்மையும் கருமையும், கருமையும் செம்மையும் என்று நிறம் கலந்த தோற்றம் கொண்ட பசுக்களைக் கபிலைப்பசு என்பது நாட்டுப்புற வழக்கு. இந்தக் கபிலையைக் கபிலரோடு பொருத்திப் பார்க்கலாம். |
Revision as of 15:21, 30 May 2022
This page is created by ka. Siva
கபிலர் சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். சங்க இலக்கியப் பாடல்களுள் மிக அதிக எண்ணிக்கையில் பாடல்களை இயற்றியவர்.
குறிஞ்சிக் கவிஞர்
இவர் அகத்திணைகள் பலவற்றைப் பாடும் திறமுடையவராயினும் குறிஞ்சித் திணையில் பாடுவதில் தேர்ந்தவர். கலித்தொகை நூலில் குறிஞ்சிக் கலி, பத்துப்பாட்டு நூலில் குறிஞ்சிப் பாட்டு, ஐங்குறு நூறு நூலில் குறிஞ்சித் திணை பாடல்கள் நூறு மேலும் அகநானூறு, குறுந்தொகை மற்றும் நற்றிணையிலும் இடம் பெற்றுள்ள மிகுதியான குறிஞ்சித் திணை பாடல்கள் கபிலர் இயற்றியதாகும். இதனால் குறிஞ்சி பாடிய கபிலர் என்றே இவரை அழைக்கிறார்கள்.
காலம்
சங்க காலப் புலவர் கபிலரின் காலம் கி.மு 3-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகும்.
வரலாறு
இவர் தன்னை அந்தணர் என்று கூறுகிறார் ( புறம் 201) "புலனழுக்கற்ற அந்தணாளன்" என இவரை மாறோக்கத்து நப்பசலையாரும் பாராட்டிக் கூறுவார் (புறம் 126)
இவர் இயற்றிய பாடல்களுள் மிகச்சிறந்து விளங்குவது பத்துப்பாட்டிலுள்ள குறிஞ்சிப் பாட்டு ஆகும். "ஆரிய அரசன் பிரகத்தன்" என்பவனுக்குத் தமிழ் அறிவித்தற்கு இப்பாட்டினைப் பாடினார். இதில் குறிஞ்சி நிலத்தில் பூத்துக் கிடந்த 99 மலர்களையும், பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலரையும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
கபிலர் பாடிய பாடல்கள்
சங்க இலக்கியப் பாடல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களில் கபிலரின் பாடல்கள் மொத்தம் 235 ஆகும்.
அகநானூறு | - | 18 | |
---|---|---|---|
ஐங்குறுநூறு | - | 100 | |
கலித்தொகை | - | 29 | |
குறுந்தொகை | - | 29 | |
நற்றிணை | - | 20 | |
பதிற்றுப்பத்து | - | 10 | |
குறிஞ்சிப்பாட்டு | - | 1 | |
புறநானூறு | - | 28 | |
மொத்தம் | - | 235 |
இவற்றுள் புறநானூறு (28) மற்றும் பதிற்றுப்பத்தில் (10) இடம் பெற்றுள்ள 38 பாடல்கள் புறத்திணைப் பாடல்களாகும். மற்ற 197 பாடல்களும் அகத்திணைப் பாடல்களாகும். இந்த அகத்திணை பாடல்களுள் பாலைத்திணை ஒன்று ( அகம் 203), நெய்தல் திணை மூன்று ( குறுந்தொகை 248, நற்றிணை 267, 291), முல்லைத்திணை ஒன்று ( நற்றிணை 59), மருதத்திணை ஒன்று ( நற்றிணை 320) என ஆறு பாடல்கள் தவிர 191 பாடல்கள் குறிஞ்சித்திணை பாடல்களாகும். கிடைத்துள்ள 2381 சங்கப்பாடல்களில் கபிலரது பாடல்களின் பங்கு 10-இல் ஒரு பங்குக்கு மேல் உள்ளது. பெயர் தெரிந்த 473 புலவர்களில் இவர் ஒருவரின் பாடல்கள் மட்டும் 10-இல் ஒரு பங்குக்கு மேல் என்று காணும்போது இவரது செல்வாக்கினை நன்கு உணரமுடிகிறது.
கபிலரால் பாடப்பட்டோர்
- அகுதை, இருங்கோவேள், செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் மாந்தரஞ்சேரல் இலும்பொறை, ஓரி, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, மலையன், விச்சிக்கோன், வையாவி கோபெரும் பேகன், வேள்பாரி ஆகியோரைப் பற்றி கபிலர் பாடியுள்ளார். இவர்களுள் பாரியின் பண்பைப் பற்றி இவர் பாடிய பாடல்களே அதிகம்.
- கபிலர், பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தினை சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பவனைப் பற்றி பாடியதற்கு நூறாயிரம் காணமும், அவனது "நன்றா" என்னும் மலையின் மீது ஏறித் தனது கண்பட்ட அளவும் கொடுத்த நாட்டையும் பரிசிலாகப் பெற்றார்.
- பேகன் தன் மனைவியைப் பிரிந்து இன்னொருத்தியுடன் கூடி வாழ்ந்த போது பாணர், அரசில் கிழார் போன்ற புலவர்களுடன் சென்று பேகனை நல்வழிப் படுத்த முயன்றார் (புறம் 145) எனவும் அறியலாம்.
- இவரது (புறம் 201) பாடலில், இருங்கோவேளின் முன்னோர்கள் நாற்பத்தி ஒன்பது தலைமுறையாகத் துவரை என்னும் நகரை ஆண்டு வந்தனர் எனக் குறிப்பிடுகிறார். சங்க கால புலவர்களில் கபிலரே முதன்முதலில் துவரை (துவாரகை) நகரம் பற்றிக் கூறுகிறார்.
- கபிலர் வேள்பாரியின் உற்ற நண்பராக விளங்கினார். அவன்பால் மட்டுமின்றி அவனது பறம்பு மலையினிடத்தும் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். வேள்பாரி பற்றிய இவரது பாடல்கள், இவரது அன்பையும் வேள்பாரியின் வள்ளல் தன்மையையும் தமிழகத்தில் நிலைக்கச் செய்துள்ளன. மூவேந்தரும் வஞ்சகமாகப் வேள்பாரியைக் கொன்றது கண்டு உள்ளம் வெதும்பி கபிலர் பாடிய செய்யுட்கள், கற்போரைத் துயரத்துள் ஆழ்த்துவன ஆகும். வேள்பாரிக்குப் பின் அவரின் மகள்களான அங்கவை, சங்கவை இருவருக்கும் நல்வாழ்வு அமைக்க இவர் அடைந்த துயரங்கள் பல. பாரியின் மகளிரைத் தம் மகளிராகவே கருதித் தக்க அரசர்களை நாடி இப்பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார் கபிலர். அவ்வகையில் விச்சிகோன், இருங்கோவேள் என்ற இரண்டு அரசர்களைச் சென்று கபிலர் வேண்டியதைப் புறநானூறு பாடல்கள் 200 மற்றும் 201 தெரிவிக்கிறன. இறுதியில், அங்கவை, சங்கவை இருவரையும் தக்க சான்றோரிடம் அடைக்கலம் தந்துவிட்டு, தாமும் வடக்கிருந்து உயிர் நீத்து தன் நண்பனான பாரியுடன் விண்ணகம் சேர்ந்தார் (புறம் 236).
கபிலர் குன்று
திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள "கபிலர் குன்று" (கபிலக்கல்) என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டரில் வீரட்டானேசுவரர் கோவிலின் அருகில் தென்பெண்ணையாற்றின் நடுவில் "கபிலர்குன்று" உள்ளது. கபிலர்குன்று என இன்று அழைக்கப்பட்டாலும் "கபிலக்கல்" என்றே இந்த இடத்தை கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
கபிலர்மலை தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். இங்கு புகழ்பெற்ற பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது.
கபிலரைப் பாராட்டியுள்ள சங்கப்பாடல்கள்
சங்ககாலப் புலவர்களே கபிலரை பாராட்டிப் பாடியுள்ளனர். இதனால் இவரது பெருமை விளங்கும்.
புலன் அழுக்கற்ற அந்தணாளன்
பரிசில் பெறவேண்டிப் புலவர்கள் பாட யாரும் இல்லாத அளவுக்கு எல்லாப் புரவலர்களையும் கபிலன் பாடிவிட்டான். குட்டுவன் குடகடலில் பொன்னைக் கொண்டுவரும் நாவாய் ஓட்டினான். அப்போது பிற கலங்கள்(நாவாய்க் கப்பல்கள்) செல்லவில்லை. அதுபோலக் கபிலர் பாடும்போது பிற புலவர்கள் பாடுவதில்லை என மாறோக்கத்து நப்பசலையார் குறிப்பிடுகிறார். (புறம் 136)
வாய்மொழிக் கபிலன்
பலரும் புகழும் நல்ல பாடல்களை இசையோடு பாடிக்கொண்டு ஊர்மக்கள் சூழ ஊர் ஊராகத் திரியும் கபிலன் என்கிறார் நக்கீரர் (புறம் 78).
விளங்கு புகழ்க் கபிலர்
கபிலர் பாடும் செய்யுள்கள் நன்செய் வயலில் நீர் தேங்குவது போலச் சமனிலை கொண்டவை. செறிந்த பொருளாழம் கொண்டவை. அவருடைய நாக்கு செவ்விய செந்தண்மை கொண்டவை. பிறர் சொல்வதைக் கேட்டுக்கொள்ளும் செவிச் செல்வம் பெற்றவர் என பொருந்தில் இளங்கீரனார் (புறம் 53) குறிப்பிடுகிறார்.
நல்லிசைக் கபிலர் பெற்ற ஊர்
"அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய,
மறம் புரி கொள்கை வயங்கு செந் நாவின்,
உவலை கூறாக் கவலை இல் நெஞ்சின்,
நனவில் பாடிய நல்லிசைக், கபிலர் பெற்ற ஊர்" என பெருங்குன்றூர் கிழார் (பதிற்றுப்பத்து 85) குறிப்பிடுகின்றார்.
கபிலர் பாரியைப் பாடியவை
- வேட்கை உடையோருக்கு நீர் போலப் பாரி இனிய சாயலை உடையவன். விறலியருக்குப் பொன்னணிகள் வழங்குவான் (புறம் 105)
- எருக்கம் பூவையும் கடவுள் ஏற்றுக்கொள்வது போலப் பாரி எளியோரையும் ஏற்றுக்கொள்வான்(புறம் 106)
- பாரியின் வள்ளல் தன்மைக்கு இணை மழை மட்டுமே (புறம் 107)
- பரிசிலாகக் கேட்டால் தன்னையே கொடுத்துவிடுவான் (புறம் 108)
- பெரும் யானைப் படையுடன் நாட்டைக் கைப்பற வந்திருக்கும் வேந்தர் விறலியர் போல ஆடிப் பாடிக்கொண்டு வந்தால் பெற்றுக்கொள்ளலாமே (புறம் 109)
- பறம்பு நாட்டு 300 ஊர்களையும் பரிசிலர் பெற்றுக்கொண்டனர். அப்படியிருக்க மூவேந்தர்கள் இதனை எதற்காக முற்றுகை இட்டுள்ளனர்? (புறம் 110)
- பறம்பு நாட்டை வேலால் வெல்ல இயலாது. கிணையுடன் பாடிவந்தால் பெற்றுக்கொள்ளலாம் (புறம் 111).
பாரி இறந்த பின் பாடியது
- இவன் மலையில் ஒருபக்கம் அருவி ஒழுகும். மற்றொரு பக்கம் பாணர்க்கு ஊற்றிய தேறல் வழியும். இது வேந்தர்க்கு இன்னா நிலை (புறம் 115 ).
- கோள்நிலை மாறினாலும் பாரியின் கோல்நிலை சாயாது (புறம் 117 ).
- நீர் நிரம்பிய குளம் உடைந்த்து போல ஆகிவிட்டதே, பாரியின் நாடு (புறம் 118 ).
- நிழலில்லாத வழியில் தழைத்திரும் தனிமரம் போல விளங்கிய பாரி தன்னிடம் பொருள் இல்லை என்றாலும் மூவேந்தரிடம் சென்று இரந்து வாங்கிவந்து வழங்கினான் (புறம் 118).
- பகைவரை ஓடச்செய்தவன (புறம் 119 ).
பாரி மகளிர் திருமணம்
- பாரி மகளிர் விளையாட்டுச் சிறுமியர். சுரைக்கொடி படர்ந்திருந்த தம் வீட்டுக் கூரைமீது ஏறி உப்பு விற்க வரும் உமணர்களின் வண்டியை ஒன்று, இரண்டு, என எண்ணிக்கொண்டு விளையாடுவார்கள். பாரியின் பறம்பு மலையை மூவேந்தர் முற்றுகை இட்டிருந்தபோது, அவர்கள் மழை போன்ற கண்களுடன் படைக் குதிரைகளை எண்ணி விளையாடிக் கொண்டிருந்தனர் (புறம் 116 ).
- வளையல் அணிந்த கைகளும், மணக்கும் கூந்தலும் உடையவர்கள் (புறம் 113 ).
- களிறு போலத் தோன்றிய மலையில் வாழ்ந்தனர். போருக்குப் பின்னர் அது களிறு மென்று தள்ளிய கவளம் போல ஆன பின் கபிலர் அவர்களுக்கு மணமகனைத் தேடி அழைத்துச் சென்றார் (புறம் 114 ).
- விச்சிக்கோன் அவர்களைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டான் (புறம் 200 ). இருங்கோவேளும் மறுத்துவிட்டான் (புறம் 201 ). எனவே திருமுடி காரி மலையமான் எனும் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டுக் கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்தார் (புறம் 236 ).
பேகனுக்கு அறிவுரை
பேகன் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வேறொருத்தியுடன் வாழ்ந்துவந்தான். அவனைத் தன் மனைவியிடம் செல்லுபடி கபிலர் நயமாக எடுத்துரைக்கிறார். “நேற்று உன் அரண்மனை வாயிலில் நின்று உன்னையும் உன் மலையையும் வாழ்த்திப் பாடினேன். அப்போது உள்ளே இருந்து வாயிலுக்கு வந்து தன் மார்பை நனைக்கும் கண்ணீரை நிறுத்த முடியாமல் அழுதுகொண்டு ஒருத்தி நின்றாளே, அவள் உனக்கு யார்? இரங்கத் தக்கவள் (புறம் 143 ).
செல்வக் கடுங்கோவை பாடியது
- சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதான் கபிலரின் கைகளைப் பற்றி அவை மென்மையாக உள்ளன என்றான். படைக்கருவிகளைத் தாங்கி அரசன் கைகள் காப்புக் காய்த்து வன்மையாக உள்ளன. அவன் அளித்த விருந்தை உண்டு தம் கைகள் மென்மையாக உள்ளன என அவனது வள்ளண்மையைப் புலவர் பாராட்டினார் (புறம் 14 ).
- மற்றொரு பாடலில் செல்வக் கடுங்காவுக்கு வானத்திலுள்ள ஈடாகாது எனச் சிலேடையாகப் பாடியுள்ளார் (புறம் 8 ).
- பதிற்றுப்பத்து தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஏழாம் பத்துப் பாடல்களிலும் கபிலர் சேரமான் செல்வக் கடுங்கோவை புகழ்ந்து பாடியுள்ளார்.
கபிலரின் குறிஞ்சிப்பாட்டு
வடநாட்டு அரசன் பிரகத்தன் திருமண முறையில் தமிழரின் களவு நெறி தீது என்றதாகவும் அவனுக்குத் தமிழ்நெறி மேன்மை உடையது என்பதை எடுத்துக்காட்ட இந்தக் குறிஞ்சிப்பாட்டு நூலைக் கபிலர் பாடியதாகவும் இப்பாடலின் அடிக்குறிப்பில் உள்ளது என டாக்டர் மு.வரதராசன் தனது "தமிழ் இலக்கிய வரலாறு" நூலில் தெரிவிக்கிறார். தமிழரின் களவுநெறி கற்புநெறியாக முடியும் என்பதை குறிஞ்சிப் பாட்டு விளக்குகிறது. தினைப்புனம் காக்கும் மகளிர் பூக்களைக் குவித்து விளையாடியதைக் கூறுமிடத்தில் 99 மலர்களின் பெயர்களை கபிலர் குறிப்பிட்டுள்ளது இந்நூலின் சிறப்பு.
குறிஞ்சிக்கலி (கலித்தொகை)
- கலிப்பாக்களால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு கலித்தொகையாகும். இதில் ஐந்து புலவர்கள் ஐந்து திணை பாடல்களை இயற்றியுள்ளனர். பாலைத் திணை பாடல்களை பெருங்கடுங்கோனும், குறிஞ்சித் திணை பாடல்களை கபிலரும், மருதத்திணை பாடல்களை மருதன் இளநாகனாரும், முல்லைத் திணை பாடல்களை சோழன் நல்லுருத்திரனும், நெய்தல் திணைப் பாடல்களை நல்லந்துவனாரும் பாடியுள்ளனர். இவற்றைத் தொகுத்தவர் நல்லந்துவனார் ஆவார்.
- குறிஞ்சித் திணை பாடல்கள் குறிஞ்சிக்கலி என அழைக்கப்படுகிறது. இதில் கபிலரின் 29 பாடல்கள் உள்ளன. இவற்றில் தோழியும் தலைவியும் மாறி மாறிப் பாடும் வள்ளைப்பாட்டு உரையாடல், முதுபார்ப்பான் காதல் முதலான செய்திகள் இடம்பெற்றுள்ளன.
- சங்க இலக்கியத்துள் அகப்பாடல்களில் கைக்கிளைத் திணைக்கு உரியனவாக இடம் பெற்றிருப்பவை நான்கு பாடல்களே. நான்குமே கலித்தொகையிலேயே உள்ளன. அவற்றில் மூன்று கபிலர் பாடிய குறிஞ்சிக்கலி பாடல்கள் 20, 21 மற்றும் 22 ஆகும். எஞ்சிய ஒன்று நல்லுருத்திரனார் இயற்றிய முல்லைக் கலி பாடல் எண் 10.
குறிஞ்சி நூறு (ஐங்குறு நூறு)
ஐங்குறு நூறு என்னும் தொகைநூலில் 500 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு திணைக்கும் நூறு என்று ஐந்து திணைக்கும் ஐந்நூறு பாடல்கள். ஒவ்வொரு திணையின் நூறு பாடல்களும் ஒவ்வொரு புலவரால் காடப்பட்டவை. இந்த வகையில் குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பாடியவர் கபிலர்.
கபில நெடுநகர்
புறநாறூற்றுப் பாடல் 337- இல் கபிலர், கபில நெடுநகர் என்னும் ஊரைக் குறிப்பிட்டுள்ளார். பெண் தர மறுக்கப்பட்ட மறவர் மகளைப் பற்றிக் குறிப்பிடும்போது அவள் பாரியின் பனிச்சுனை போலக் காண்பதற்கு இனியவள் என்றும், (அச் சுனையில் நீராடிய பின்) அவள் தன் கூந்தலைப் உலர்த்தும் அகில் நறும்புகை கபில நெடுநகர் வரையில் கமழும் என்றும் கபிலர் குறிப்பிடுகிறார். இதனால் இவ்வூர் பாரியின் பனிச்சுனைக்கு அருகில் இருந்தது என்பதை உணரமுடிகிறது. கபிலர் வாழ்ந்த இந்த ஊரை மக்கள் கபில நெடுநகர் என்றனர். இது கபிலருக்குப் பாரி வழங்கிய ஊர் எனலாம்.
பிற கபிலர்கள்
கபிலர் என்ற பெயரில் வேறு புலவர்களும் உள்ளனர். அவர்கள் விவரம்;
- கபிலதேவர் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான "இன்னா நாற்பது" நூலை இயற்றியவர்.
- கபிலதேவ நாயனார்- இவர் பாடியனவாக மூத்த பிள்ளையார் இரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்னும் மூன்று சிற்றிலக்கியங்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன.
- கபிலர் பதினொருவர் - திருமால் தனக்குள் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளவற்றில் 'பதினொரு கபிலரும்' அடக்கம் என்று கடுவன் இள எயினனார் தம் பரிபாடலில் குறிப்பிட்டுள்ளார் (பரிபாடல் 3 ).
- சமயாசிரியர் கபிலர் - சங்கம் மருவிய காலத்து ஆறு சமயங்களில் ஒன்றான சாங்கிய சமயத்தின் ஆசிரியர் கபிலர் என்று மணிமேகலை நூல் குறிப்பிடுகிறது.
கபிலை - சொல் விளக்கம்
தொல்காப்பியர் பாடாண் திணைப் பாடல்களின் துறைகளை விரித்துக் கூறும்போது 'கபிலை கண்ணிய வேள்வி நிலை' என்னும் துறை ஒன்றைக் குறிப்பிடுகிறார் (புறத்திணையியல் 35). இங்கு கபிலை என்பது பசுவைக் குறிக்கும். தொல்காப்பியரின் இந்தத் தொடர் கோதானத்தைக் குறிப்பிடுகிறது.
வெண்மையும் செம்மையும், வெண்மையும் கருமையும், கருமையும் செம்மையும் என்று நிறம் கலந்த தோற்றம் கொண்ட பசுக்களைக் கபிலைப்பசு என்பது நாட்டுப்புற வழக்கு. இந்தக் கபிலையைக் கபிலரோடு பொருத்திப் பார்க்கலாம்.
தொகுப்பு நூல்
கபிலரின் அனைத்துப் பாடல்களையும் தொகுத்து "கபிலம்" என்ற நூல் வெளிவந்துள்ளது. தொகுப்பு மற்றும் உரை முனைவர் ம.ரா.போ. குருசாமி. இந்நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2010 - ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
உசாத்துணை
முனைவர் ம.ரா.போ. குருசாமி தொகுத்த "கபிலம்" நூல்.
புறநானூறு முழுத்தொகுப்பு;
http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/purananooru/index.html
புகைப்படம் உதவி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.