under review

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1981

From Tamil Wiki
Revision as of 07:24, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1981

இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1981

மாதம் சிறுகதைத் தலைப்பு ஆசிரியர் இதழ்
ஜனவரி இரண்டாவது வசந்த காலம் இரா கணபதி ஆனந்த விகடன்
பிப்ரவரி ஊனமும் உள்ளமும் ஆர்.சூடாமணி கல்கி
மார்ச் இன்னும் எத்தனை பெண்களோ... ராஜலட்சுமி சுப்பிரமணியன் ஆனந்த விகடன்
ஏப்ரல் அவன் அழுகிறான் சுபா சாவி
மே அகங்காரி மைத்ரேயி திசைகள்
ஜூன் தையல் ரூபாவதி ஆனந்த விகடன்
ஜூலை அன்பால் அடி ஜெயசிம்மன் தாமரை
ஆகஸ்ட் அவள் ஜெயந்தன் ஆனந்த விகடன்
செப்டம்பர் மௌனமே காதலாக... பாலகுமாரன் குமுதம்
அக்டோபர் காதலின்... மாலன் தினமணி கதிர்
நவம்பர் அலையும் சிறகுகள் சுரேஷ்குமார இந்திரஜித் கணையாழி
டிசம்பர் பசி மணிதேவன் செம்மலர்

1981-ம் ஆண்டின் சிறந்த சிறுகதை

1981-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, ஜெயந்தன் எழுதிய ‘அவள்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. கி. ராஜநாராயணன் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை ரா. ஸ்வர்ணவேல் தேர்ந்தெடுத்தார்.

உசாத்துணை


✅Finalised Page