ஆசிரியன் பெருங்கண்ணன்: Difference between revisions
No edit summary |
|||
Line 15: | Line 15: | ||
<poem> | <poem> | ||
தொடிநெகிழ்ந் தனவே தோள்சா யினவே | தொடிநெகிழ்ந் தனவே தோள்சா யினவே | ||
விடுநாண் உண்டோ தோழி விடர்முகைச் | விடுநாண் உண்டோ தோழி விடர்முகைச் | ||
சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தள் | சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தள் | ||
நறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி | நறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி | ||
பாம்புமிழ் மணியின் தோன்றும் | பாம்புமிழ் மணியின் தோன்றும் | ||
முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே | முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே | ||
</poem> | </poem> | ||
Line 33: | Line 28: | ||
[http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/kurunthokai/kurunthokai_239.html குறுந்தொகை 239, தமிழ் சுரங்கம் இணையதளம்] | [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/kurunthokai/kurunthokai_239.html குறுந்தொகை 239, தமிழ் சுரங்கம் இணையதளம்] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{Ready for review}} |
Revision as of 15:01, 30 November 2022
ஆசிரியன் பெருங்கண்ணன், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
ஆசிரியன் பெருங்கண்ணனின் இயற்பெயர் பெருங்கண்ணன். ஆசிரியன் என்ற அடைமொழி புலவரைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இதுவன்றி, ஆசிரியன் என்ற சொல் அந்தணரைக் குறிப்பது என்றும் சிலர் கருதுகிறார்கள்.
இலக்கிய வாழ்க்கை
ஆசிரியன் பெருங்கண்ணன் இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 239- வது பாடலாக இடம் பெற்றுள்ளது. தலைவன் அருகிலிருக்கும்போது அவனைத் தழுவாமல் இருப்பதேன் என தோழி தலைவிக்கு கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
பாடலால் அறியவரும் செய்திகள்
குறுந்தொகை 239
- குறிஞ்சித் திணை
- தலைவன் சிறைப்புறமாக இருக்கையில் தலைவி தோழிக்குக் கூறுவாளாய், ‘‘என் தோள்கள் நெகிழ்ந்தன; நாணமும் அகன்றது’’ என்று கூறி வரைவு கடாயது.
- தோழி, அவன் மலைநாடன். அங்குக் காந்தள் மலர் மலைப்பிளவுக் குகை முழுவதும் கமழும்.
- அதில் தேன் உண்ணும் தும்பி நாகப்பாம்பு மணி உமிழ்வது போல் தோன்றும். இப்படிப்பட்ட மலைநிலப் பகுதி அவன் வேலிநிலம்.
- அவனை எண்ணி அவனைத் தழுவிய தோள் வாடுகிறது. கையில் வளையல் கழல்கிறது. இந்த நிலையில் நாணம் எதற்கு?
பாடல் நடை
குறுந்தொகை 239
தொடிநெகிழ்ந் தனவே தோள்சா யினவே
விடுநாண் உண்டோ தோழி விடர்முகைச்
சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தள்
நறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி
பாம்புமிழ் மணியின் தோன்றும்
முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே
உசாத்துணை
குறுந்தொகை 239, தமிழ்த் துளி இணையதளம்
குறுந்தொகை 239, தமிழ் சுரங்கம் இணையதளம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.