being created

அ. தட்சிணாமூர்த்தி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 10: Line 10:


====== கல்விப் பணிகள் ======
====== கல்விப் பணிகள் ======
திருவாரூர் வடபாதி மங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்நிலைத் தமிழாசிரியராகத் தம் பணியைத் தொடங்கி, மன்னம்பந்தல் அன்பநாதபுரம் வகையறா அறத்துறைக்கல்லூரியில் பயிற்றுநராகப் பணியாற்றிப் பின்னர், பூண்டி அ. வீரையா வாண்டையார் நினைவு திரு. புட்பம் கல்லூரியில் இருபத்துநான்கு ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி, இறுதியாக மதுரைத்தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த செந்தமிழ்க் கலைக்கல்லூரியின் முதல்வராகப் பணி ஓய்வுபெற்றார்.




Line 18: Line 20:




இவர் எழுதிய 'தமிழர் நாகரிகமும் பண்பாடும்' (முதல் பதிப்பு, வெற்றிச்செல்வி பதிப்பகம், 1973, பன்னிரண்டாம் பதிப்பு, ஐந்திணைப்பதிப்பகம், 2017) என்னும் வரலாற்று நூல்  தமிழரின் நாகரிகம் மற்றும் பண்பாடு தொடர்பான பல்வேறு கூறுகள் சங்ககாலம் தொட்டு காலப்போக்கில் வளர்ந்த வரலாற்றைத் தொடர்ச்சியாக விளக்குகிறது..கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பாடநூலாகவும், பார்வை நூலாகவும் விளங்கி வருகிறது. 'சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள் 'சங்ககாலச் சமுதாயத்தில் நிலவிய பல்வேறு உறவு நிலைகளை நடைமுறை சார்ந்தும் குறிக்கோள் நிலையிலும் விரிவாக விளக்குகிறது.  'தமிழியற் சிந்தனைகள்', 'பெயரும் பின்னணியும்', 'திணைப்புலவரும் தெய்வப்புலவரும்' எனும் நூல்கள் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்புகள்.


==விருதுகள், பரிசுகள்==
== மொழியாக்கங்கள் ==
 
[[பெருமாள் திருமொழி]], [[நீதி வெண்பா]], [[அபிராமி அந்தாதி]] ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். [[பாரதிதாசன்]] எழுதிய 'சஞ்சீவி பர்வதத்தின் சாரல்', 'புரட்சிக்கவி'<nowiki/>'', '''கடல்மேல் குமிழிகள்', 'தமிழச்சியின் கத்தி', 'காதலா கடமையா', [[இருண்ட வீடு]], 'நல்ல தீர்ப்பு' ஆகிய ஏழு படைப்புகளையும், [[சி.சுப்ரமணிய பாரதியார்|பாரதி]]யாரின் பாரதி அறுபத்தாறையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.


சாகித்ய அகாதமி விருதுபெற்ற நூலாகிய அ.ச.ஞானசம்பந்தனின் ‘கம்பன் புதிய பார்வை எனும் நூலையும் ஆங்கிலத்தில்  Kamban – A New Perspective என்ற பெயரில் மொழியாக்கம் செய்தார். இந்நூல் 2013-ல் சாகித்ய அகாதெமியால் வெளியிடப்பட்டது.


==விருதுகள், பரிசுகள்==


* தமிழ்ப் பேராயத்தின் ‘ஜி. யு. போப் மொழிபெயர்ப்பு விருது(2017)
* இந்திய அரசின் செம்மொழித்தமிழுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதாகிய தொல்காப்பியர் விருது (2015),
* தமிழக அரசின் பாரதிதாசன் விருது (2003)
* பாரதிதாசன் நூலாசிரியர் சான்றிதழ் விருது(1991, “Poems of Bharathidasana – A Translation”),
* இராமநாதபுரம் தமிழ்ச் சங்கம்: வள்ளல் பாண்டித்துரைத் தேவர் விருது (2003),
* இந்தியப்பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்: சிறந்த தமிழறிஞர் விருது (2003),
* நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது (2012, “Kuruntokai – An Anthology of Tamil Poetry”),
* தமிழிசைச் சங்கம்: திரு. வி. க. விருது (2012),
* கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது (2013),
* கல்கத்தா தமிழ்ச்சங்கம்: சாதனைத் தமிழர் விருது (2014)
* தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்: இலக்கிய ஆளுமை விருது(2015)
* கரந்தைத் தமிழ்ச்சங்கம்: ந. மு. வேங்கடசாமி நாட்டார் விருது (2016), எஸ். ஆர். எம். தமிழ்ப்பேராயம்: ஜி. யு. போப். மொழிபெயர்ப்பு விருது (2017, “Pattuppattu In English – The Ten Tamil Idylls”)
* <br />


==இலக்கிய இடம், மதிப்பீடு==
==இலக்கிய இடம், மதிப்பீடு==

Revision as of 00:22, 15 December 2023

அ. தட்சிணாமூர்த்தி (பிறப்பு:1938) தமிழறிஞர், ஆய்வாளர்,பேராசிரியர்,மொழிபெயர்ப்பாளர். தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் எழுதியவர். சங்க இலக்கியங்கள், பாரதிதாசன் கவிதைகள் உட்பட முப்பத்திற்கும் மேற்பட்ட படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். செம்மொழித்தமிழாய்வு நிறுவனம் வெளியிட்ட பத்துப்பாட்டு மொழிபெயர்ப்புத்தொகுதியின் பதிப்பாசிரியர். 'தமிழர் நாகரிகமும் பண்பாடும்' குறிப்பிடத்தக்க படைப்பு. தமிழ்நாடு அரசின் பாரதிதாசன் விருது, இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

தட்சிணாமூர்த்தி திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடிக்கு அருகிலுள்ள நெடுவாக்கோட்டை என்னும் சிற்றூரில் அய்யாசாமி, இராசம்மாள் இணையருக்குப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் மூன்று மூத்த சகோதரிகள். தந்தை விவசாயம் செய்து வந்தார்.

தட்சிணாமூர்த்தி பள்ளிப்படிப்பை மன்னார்குடி பின்லே பள்ளியில் முடித்தார். 1961-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் சிறப்பு இளங்கலைப் பட்டம் பெற்றார் (B.A Honors). கல்வியியலில் இளங்கலைப் பட்டம்(பி. எட்) பெற்றார். 1979-ல் சென்னைப்பல்கலைக்கழகத்தில் "ஐங்குறுநூற்றில் முல்லைத்திணை" எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர்(எம்.பில்) பட்டமும், 1988-ல் "சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்" எனும தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தெ.பொ. மீனாட்சிசுந்தரம், தண்டபாணி தேசிகர் ஆகியோரிடம் பயின்றார்.

தனி வாழ்க்கை

கல்விப் பணிகள்

திருவாரூர் வடபாதி மங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்நிலைத் தமிழாசிரியராகத் தம் பணியைத் தொடங்கி, மன்னம்பந்தல் அன்பநாதபுரம் வகையறா அறத்துறைக்கல்லூரியில் பயிற்றுநராகப் பணியாற்றிப் பின்னர், பூண்டி அ. வீரையா வாண்டையார் நினைவு திரு. புட்பம் கல்லூரியில் இருபத்துநான்கு ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி, இறுதியாக மதுரைத்தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த செந்தமிழ்க் கலைக்கல்லூரியின் முதல்வராகப் பணி ஓய்வுபெற்றார்.



இலக்கிய வாழ்க்கை

இவர் எழுதிய 'தமிழர் நாகரிகமும் பண்பாடும்' (முதல் பதிப்பு, வெற்றிச்செல்வி பதிப்பகம், 1973, பன்னிரண்டாம் பதிப்பு, ஐந்திணைப்பதிப்பகம், 2017) என்னும் வரலாற்று நூல் தமிழரின் நாகரிகம் மற்றும் பண்பாடு தொடர்பான பல்வேறு கூறுகள் சங்ககாலம் தொட்டு காலப்போக்கில் வளர்ந்த வரலாற்றைத் தொடர்ச்சியாக விளக்குகிறது..கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பாடநூலாகவும், பார்வை நூலாகவும் விளங்கி வருகிறது. 'சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள் 'சங்ககாலச் சமுதாயத்தில் நிலவிய பல்வேறு உறவு நிலைகளை நடைமுறை சார்ந்தும் குறிக்கோள் நிலையிலும் விரிவாக விளக்குகிறது.  'தமிழியற் சிந்தனைகள்', 'பெயரும் பின்னணியும்', 'திணைப்புலவரும் தெய்வப்புலவரும்' எனும் நூல்கள் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்புகள்.

மொழியாக்கங்கள்

பெருமாள் திருமொழி, நீதி வெண்பா, அபிராமி அந்தாதி ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். பாரதிதாசன் எழுதிய 'சஞ்சீவி பர்வதத்தின் சாரல்', 'புரட்சிக்கவி', 'கடல்மேல் குமிழிகள்', 'தமிழச்சியின் கத்தி', 'காதலா கடமையா', இருண்ட வீடு, 'நல்ல தீர்ப்பு' ஆகிய ஏழு படைப்புகளையும், பாரதியாரின் பாரதி அறுபத்தாறையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

சாகித்ய அகாதமி விருதுபெற்ற நூலாகிய அ.ச.ஞானசம்பந்தனின் ‘கம்பன் புதிய பார்வை எனும் நூலையும் ஆங்கிலத்தில் Kamban – A New Perspective என்ற பெயரில் மொழியாக்கம் செய்தார். இந்நூல் 2013-ல் சாகித்ய அகாதெமியால் வெளியிடப்பட்டது.

விருதுகள், பரிசுகள்

  • தமிழ்ப் பேராயத்தின் ‘ஜி. யு. போப் மொழிபெயர்ப்பு விருது(2017)
  • இந்திய அரசின் செம்மொழித்தமிழுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதாகிய தொல்காப்பியர் விருது (2015),
  • தமிழக அரசின் பாரதிதாசன் விருது (2003)
  • பாரதிதாசன் நூலாசிரியர் சான்றிதழ் விருது(1991, “Poems of Bharathidasana – A Translation”),
  • இராமநாதபுரம் தமிழ்ச் சங்கம்: வள்ளல் பாண்டித்துரைத் தேவர் விருது (2003),
  • இந்தியப்பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்: சிறந்த தமிழறிஞர் விருது (2003),
  • நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது (2012, “Kuruntokai – An Anthology of Tamil Poetry”),
  • தமிழிசைச் சங்கம்: திரு. வி. க. விருது (2012),
  • கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது (2013),
  • கல்கத்தா தமிழ்ச்சங்கம்: சாதனைத் தமிழர் விருது (2014)
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்: இலக்கிய ஆளுமை விருது(2015)
  • கரந்தைத் தமிழ்ச்சங்கம்: ந. மு. வேங்கடசாமி நாட்டார் விருது (2016), எஸ். ஆர். எம். தமிழ்ப்பேராயம்: ஜி. யு. போப். மொழிபெயர்ப்பு விருது (2017, “Pattuppattu In English – The Ten Tamil Idylls”)

இலக்கிய இடம், மதிப்பீடு

நூல்கள்

உசாத்துணை

தட்சிணாமூர்த்தி வலைத்தளம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.