first review completed

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1985

From Tamil Wiki
Revision as of 08:04, 26 January 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)
இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1985

இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுத்திய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1985

மாதம் சிறுகதைத் தலைப்பு ஆசிரியர் இதழ்
ஜனவரி குருத்து இந்துமதி குமுதம்
பிப்ரவரி ஜீவிதத்தின் உள்வட்டம் மேலாண்மை பொன்னுச்சாமி தாமரை
மார்ச் நெருப்பு பானுமதி போஸ்கோ ஆனந்த விகடன்
ஏப்ரல் உக்கிராணம் ம.வே. சிவகுமார் கல்கி
மே மறதி எஸ். சங்கரநாராயணன் கணையாழி
ஜூன் லங்காபுரி ராஜா பிரமிள் தினமணி கதிர்
ஜூலை மொட்டை ஜெயந்தன் கல்கி
ஆகஸ்ட் போர்வை எஸ். லட்சுமி சுப்பிரமணியம் கலைமகள்
செப்டம்பர் அப்பாவின் வேஷ்டி பிரபஞ்சன் இதயம் சிறுகதை களஞ்சியம்
அக்டோபர் மனச்சாய்வு ஜெயந்தன் ஆனந்த விகடன்
நவம்பர் பிணைப்பு பிரபஞ்சன் கல்கி
டிசம்பர் புற்களின் நடுவே பூக்கள் கார்த்திகா ராஜ்குமார் இதயம் சிறுகதை களஞ்சியம்

1985-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை

1985-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, இந்துமதி எழுதிய ‘குருத்து’ தேர்ந்தெடுக்கப்பட்டது. சரஸ்வதி ராம்நாத் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை பாரதி காவலர் கே. இராமமூர்த்தி தேர்வு செய்தார்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.