இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1999
இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுத்திய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1999
மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
---|---|---|---|
ஜனவரி | பேசும் உண்மைகள் | சுப்ரியா சாந்திலால் | கல்கி |
பிப்ரவரி | கன்னத்தில் அறைந்தாலும்... | சூர்யன் | ஆனந்த விகடன் |
மார்ச் | பொத்தி வைத்த பூந்தோட்டம் | பா. ராகவன் | கல்கி |
ஏப்ரல் | கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி | அஜயன் பாலா | இந்தியா டுடே |
மே | அப்புசாமிகள் இன்னும் உயிரோடிருக்கிறார்கள் | தேவகாந்தன் | இந்தியா டுடே |
ஜூன் | மேல் தாள்ப்பாழ் | ஆர். வெங்கடேஷ் | கல்கி |
ஜூலை | அவசரக் கல்யாணம் | கே.வி. ராசன் | கலைமகள் |
ஆகஸ்ட் | தரிசனம் | ஆர். சூடாமணி | கல்கி |
செப்டம்பர் | காக்கைப் பொன் | எஸ். சங்கரநாராயணன் | கல்கி |
அக்டோபர் | ஐயன் | படுதலம் சுகுமாரன் | குமுதம் |
நவம்பர் | ஞாபகங்கள் தீயாகும் | யோகி | கல்கி |
டிசம்பர் | முடிவு | இந்திரா | தினமணி கதிர் |
1999 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை
1999 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, இந்திரா எழுதிய ‘முடிவு’ தேர்ந்தெடுக்கப்பட்டது. சார்வாகன் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை சி. கண்ணன் தேர்வு செய்தார்.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.