தொகைநிலைச் செய்யுள்
தொகைநிலைச் செய்யுள் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஒருவராலோ அல்லது பலராலோ பல பாடல்களாக இயற்றப்பட்டு, பொருள், இடம், காலம், தொழில், பாட்டு, அளவு, போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒன்றாகத் தொகுக்கப்பட்டவை தொகை எனப்பெயர் பெற்ற செய்யுள்கள்.
ஒருவராலோ பலராலோ இயற்றப்படுவது தொகை என்பது பொதுவான இலக்கணம். பொருள் முதலியவற்றால் ஒத்திருந்து தொகை எனப் பெயர்பெறுவன என்பது சிறப்பிலக்கணம். இது தவிர பிறவற்றால்(எகா: சினை) தொகுக்கப்பட்டு தொகை எனப் பெயர் பெறும் நூல்களும் இருக்கின்றன.
எடுத்துக்காட்டு
- திருக்குறள் - ஒருவரால் இயற்றப்பட்டது
- நெடுந்தொகை - பலரால் இயற்றப்பட்டது
- புறநானூறு - (புறம் என்ற பொருள் பற்றி) பொருளால் தொகுக்கப்பட்டது.
- களவழி நாற்பது - இடத்தால் தொகுக்கப்பட்டது.
- கார் நாற்பது - காலத்தால் தொகுக்கப்பட்டது.
- ஐந்திணை ஐம்பது - தொழிலால் தொகுக்கப்பட்டது.
- கலித்தொகை - பாட்டால் தொகுக்கப்பட்டது.
- குறுந்தொகை - அளவால் தொகுக்கப்பட்டது.
- இனியவை நாற்பது - பண்பால் தொகுக்கப்பட்டது.
- திரு அங்க மாலை - சினையால் தொகுக்கப்பட்டது.
இவற்றில் இனியவை நாற்பதும், திருவங்கமலையும் பண்பு, சினை என்ற பிறவற்றால் தொகுக்கப்பட்டதற்கு சான்றாகும்.
உசாத்துணை
தா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.