வருக்கக் கோவை
வருக்கக் கோவை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தமிழ் எழுத்துக்களை (உயிர் மற்றும் உயிர்மெய்) அகரவரிசையில் பாடல்களின் முதல் எழுத்தாக அமைத்து அகத்துறையில் பாடப்படுவது வருக்கக்கோவை. உயிரெழுத்துக்கள், உயிர் மெய்யெழுத்துக்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாட்டின் முதலில் முறையே வரும்படி பாடுவது வருக்கக் கோவை
உயிரும் மொழிமுதல் உயிர்மெயும் வருக்கத்து
அடைவில் வருபொருள் துறையில் கலித்துறை
வழுத்தும் இயல்பது வருக்கக் கோவை.
என்று வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் கூறுகிறது.
இதே முறையில் நீதிகளைக் கூறும் நூல் வருக்கமாலை எனப்படும்.
வருக்கக் கோவை நூல்கள்
- மோரூர் பாம்பலங்காரர் வருக்கக்கோவை
- மாறன் வருக்கக் கோவை
- நெல்லை வருக்கக் கோவை
- மல்லைச் சோழீசர் வருக்கக் கோவை
- உயிர் வருக்கக் கோவை
- கபிலமலை வருக்கக் கோவை
எடுத்துக்காட்டு
அமுதம் பொழிந்த குவளைசெங் காந்த ளரம்பை கஞ்சங்
குழுதங் குமிழ்வள்ளை வேயங்கொண் டேபசுங் கோங்கு
தென்னை கமூகுஞ் செறிவயன் மோளுரிற் பாம்பலங் காரர்வெற்பிற்
மிதம் பொழிமலர்க் காவ டொருவல்லி தோன்றியதே.
.
வெள வவிட வெண்ணும் பொருள 9தல் லாங்கொண்டு at MDs தெவ்விட வையக மெல்லாம் புசர்துபுத் தேளிருய்ய at சுவ்விட முண்டவர் மோளூரிற் பாம்பலங் காரர்வெற்பில் வெவ்வட மன்னஃண் ணாளுடன் வாழிசெவ் வேலவனே.
வெளி இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.