வருக்கமாலை
From Tamil Wiki
வருக்கமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தமிழ் மொழியில் முதலில் வரும் வருக்க எழுத்துக்களான க, ச, த, ந, ப, ம, வ என்ற எழுத்துக்களும், உயிரெழுத்துக்களும் கொண்டு அவற்றில் ஒவ்வொரு எழுத்தும் முதலாக வர எட்டு விருத்தங்கள் பாடுவது வருக்கமாலை[1]. இந்த முறையில் பாடப்படும் அகப்பொருள் பாடல்கள் வருக்கக் கோவை எனப்படும்.
எடுத்துக்காட்டு
வருக்கமாலைக்கு எடுத்துக்காட்டாக நன்கு அறிமுகமான மூன்று நூல்கள்:
- ஆத்தி சூடி - அறம்செய விரும்பு. ஆறுவது சினம். இயல்வது கரவேல். ஈவது விலக்கேல். ... (இருசீர் வருக்கம்)
- கொன்றை வேந்தன் - அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று. இல்லறம் அல்லது நல்லறம் அன்று. ஈயார் தேட்டை தீயா கொள்வர். ... (நாற்சீர் வருக்கம்)
- பாரதியார் புதிய ஆத்தி சூடி - அச்சம் தவிர், ஆண்மை தவறேல், இளைத்தல் இகழ்ச்சி. ஈகை திறன். உடலினை உறுதிசெய். ... (இருசீர் வருக்கம்)
அடிக்குறிப்புகள்
- ↑
வருக்கத் தினைச்சொலல் வருக்க மாலை
இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 826
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
வெளி இணைப்புகள்
- நமசிவாய மாலை - (அறுசீர்க்கண்ணி வருக்கம்)
- பாட்டியல்
- சிற்றிலக்கியங்கள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Jan-2023, 12:12:38 IST