being created

பொதுவாசிப்பு எழுத்துக்கள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 483: Line 483:
*
*
*
*
{{being created}}

Revision as of 20:42, 19 February 2022

தமிழில் பொதுவாசிப்புக்கான எழுத்துக்கள் 1900 முதல் தொடங்கி ஐம்பதாண்டுகளில் பெரிய வணிக இயக்கமாக மாறின. இவை விமர்சகர்களால் வணிக எழுத்து, கேளிக்கை எழுத்து என்று வகைப்படுத்தப்பட்டன. இவை வாசகனை மகிழ்வூட்டும் நோக்கம் கொண்டவை. வாசகனுக்கு பிடிக்கும்படி மொழி, உருவம், பேசுபொருள் ஆகிய மூன்றையும் அமைத்துக்கொண்டவை. ஆகவே பரபரப்பு, மிகையுணர்வு,நாடகத்தன்மை மிக்க காட்சிகள், வாசகன் எளிதில் அடையாளம் காணத்தக்க மாதிரிக் கதாபாத்திரங்கள், மர்மம், திகில், திருப்பங்கள் ஆகியவை கொண்டவை. வாசகன் ஊகித்துக்கொள்ளவோ, சிந்திக்கவோ எதையும் விடுவதில்லை. வாசகனின் படைப்பு வளர்ச்சியடையவும் விடுவதில்லை.இவை வாசகனை ஆசிரியனை நோக்கி கொண்டுவருவதற்குப் பதிலாக ஆசிரியன் வாசகனை நோக்கிச் சென்று எழுதுபவை.

இந்தப் பிரிவினை அறுதியாகச் செய்யத்தக்கது அல்ல. பொதுவாசிப்புக்கான தளத்தில் வெற்றிபெற்ற இலக்கியப் படைப்புகளும் உண்டு. ஆயினும் தமிழில் இலக்கிய வரலாற்றை தொகுத்துக்கொள்ள இந்தப் பகுப்பு மிக உதவியானது.

பார்க்க நவீனத் தமிழிலக்கியம்

நாவல்கள்

  • இராஜாம்பாள் - ஜே.ஆர்.ரங்கராஜு - 1906
  • இரஜேந்திரன்- ஜே.ஆர்.ரங்கராஜு - 1906
  • சந்திரகாந்தா -ஜே.ஆர்.ரங்கராஜு -
  • மோகனசுந்தரம்-ஜே.ஆர்.ரங்கராஜு
  • ஆனந்தகிருஷ்ணன்-ஜே.ஆர்.ரங்கராஜு
  • வரதராஜம்-ஜே.ஆர்.ரங்கராஜு
  • விஜயராகவன்-ஜே.ஆர்.ரங்கராஜு
  • ஜெயரங்கன் -ஜே.ஆர்.ரங்கராஜு
  • மதனகந்தி -ஆரணி குப்புசாமி முதலியார்- 1911
  • அன்பானந்தந் சி.ஏ.பெருமாள் நாகர்கோயில் 1926
  • ரஞ்சிதம்- அ.இராமசாமி முதலியார்- 1926
  • காந்திமதி - மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்- 1926
  • மணிவாசகன்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
  • ஷண்முகநாதன்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
  • அமிர்தம்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
  • சந்திரசேகரன்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
  • நீல அறை மர்மம்- ராஜா முத்துக்குமார் 1927
  • செண்பக விஜயம்- வை.மு.கோதைநாயகி அம்மாள்- 1927
  • ஏமாங்கதநாட்டு இளவரசன் -டி.என்.சேஷாசலம் 1927
  • காந்திமதி அல்லது காந்தாரநாட்டுக் கட்டழகி- டி.என்.சேஷாசலம் 1927
  • அங்கயற்கண்ணி அல்லது அன்புள்ள மங்கை- அ.மாதவராய முதலியார்-1927
  • மதுசூதனா- அ.மாதவராய முதலியார்-
  • ஜெகஜ்ஜால ஜெகஜ்ஜோதி- அ.மாதவராய முதலியார்-
  • இராஜமாணிக்கம்- அ.மாதவராய முதலியார்-
  • கனகரத்னம்- அ.மாதவராய முதலியார்-
  • யான் ஏன் பெண்ணாய் பிறந்தேன்?- நாரண துரைக்கண்ணன் -1935
  • காதலனா காதலனா-நாரண துரைக்கண்ணன்
  • உயிரோவியம்-நாரண துரைக்கண்ணன்
  • வேலைக்காரி-நாரண துரைக்கண்ணன்
  • வேடதாரி-நாரண துரைக்கண்ணன்
  • புதுமைப்பெண்-நாரண துரைக்கண்ணன்
  • நடுத்தெரு-நாரண துரைக்கண்ணன்
  • சீமான் சுயநலம்கோகிலா-நாரண துரைக்கண்ணன்
  • தியாகத்தழும்பு-நாரண துரைக்கண்ணன்
  • தரங்கிணி’தும்பைப்பூ-நாரண துரைக்கண்ணன்
  • இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்-நாரண துரைக்கண்ணன்
  • சுந்தரி பரிணயம்- தே. உலகநாத நாயக்கர்- 1930
  • சரஸ்வதியின் சாக்சம்-தே. உலகநாத நாயக்கர்
  • விவேகானந்தம் அல்லது வைதீகவேதியர்- குப்புசாமி முதலியார் 1920
  • சுகுணசுந்தரி அல்லது காதலின் அழகும் கற்பின் மாட்சியும்- ம.க.ஜெயராம் நாயுடு
  • இராஜசுந்தரம் - எஸ்.வேலாயுதம் பிள்ளை
  • கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்
  • விமலா- டி.பி.ராஜலட்சுமி 1933
  • மல்லிகா- டி.பி.ராஜலட்சுமி 1933
  • சுந்தரி- டி.பி.ராஜலட்சுமி
  • வாஸந்திகா- டி.பி.ராஜலட்சுமி
  • உறையின் வாள்- டி.பி.ராஜலட்சுமி
  • மறைந்த முகம் - டி.பி.ராஜலட்சுமி
  • மோகனரஞ்சனி அல்லது சமூகத்தோற்றம்- சகோதரி கிரிஜாதேவி 1933
  • தனபாக்கியம் அல்லது ஓர் அதிர்ஷ்டவதியின் சரித்திரம் - ச.தா.மூர்த்தி 1922
  • பிரேமாகரன்- - விசாலாக்ஷி அம்மாள் 1933
  • ராஜலக்ஷ்மி- விசாலாக்ஷி அம்மாள்
  • கற்பின் வெற்றி அல்லது விக்ரமன் கோட்டை மர்மம்- பி.எஸ்.சுப்ரமணியம் 1933
  • ஷண்முகசுந்தரம் அல்லது காதல் திறம்- பி.எஸ்.சுப்ரமணியம் 1933
  • சிவகுமாரன் அல்லது கொலைஞன் யார்? பி.எஸ்.நீலகண்டன் 1933
  • பரிமளா ராகவன் - ம.மு.ரா. முத்துசாமி ரெட்டியார் 1934
  • கரட்டூர் ராமு- எஸ்.சீதாரமையா
  • சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி- எச்.நெல்லையா
  • சந்திரிகா- குகப்பிரியை
  • பத்தாயிரம் தலைவாங்கிய பழிகார ராஜம்- கே.ராஜமாணிக்கம்
  • காஞ்சனமாலை -ராஜரிஷி பாலசன்யாசி 1936
  • மந்தாகினி அல்லது கிராமத்தொண்டு- எம்.ஸி.சீனிவாசன் 1938
  • இராஜலக்ஷ்மி -வி.சரஸ்வதி அம்மாள்
  • கள்வனின் காதலி- கல்கி
  • தியாகபூமி-கல்கி
  • மகுடபதி-கல்கி
  • பார்த்திபன் கனவு-கல்கி
  • சிவகாமியின் சபதம்-கல்கி
  • அலையோசை-கல்கி
  • பொன்னியின் செல்வன்-கல்கி
  • சோலைமலை இளவரசி-கல்கி
  • தேவகியின் கணவன்-கல்கி
  • அலை ஓசை-கல்கி
  • பொய்மான் கரடு-கல்கி
  • அமரதாரா-கல்கி
  • சுகந்தா- எஸ்.ஆர்.சாரங்கபாணி
  • விஜயபாலபவானி- ஓரையூர் நாராயண மாதவன்
  • கிருஷ்ணபக்தி அல்லது குணமணி - கே.வி.நாகமணி
  • பவழமாலை- பி.எம்.கண்ணன்
  • பெண்தெய்வம்- பி.எம்.கண்ணன்
  • தேவநாயகி- பி.எம்.கண்ணன்
  • வாழ்வின் ஒளி -பி.எம்.கண்ணன்
  • நாகவல்லி- பி.எம்.கண்ணன்
  • சோறும் சொர்க்கமும்
  • கன்னிகாதானம்- பி.எம்.கண்ணன்
  • ஒற்றை நட்சத்திரம்- பி.எம்.கண்ணன்
  • அன்னைபூமி- பி.எம்.கண்ணன்
  • ஜோதிமின்னல்- பி.எம்.கண்ணன்
  • முள்வேலி- பி.எம்.கண்ணன்
  • நிலத்தாமரை - பி.எம்.கண்ணன்
  • தேன்கூடு- பி.எம்.கண்ணன்
  • காந்தமலர்- பி.எம்.கண்ணன்
  • தேவானை- பி.எம்.கண்ணன்
  • அம்பே லட்சியம்- பி.எம்.கண்ணன்
  • மலர்விளக்கு- பி.எம்.கண்ணன்
  • இன்பக்கனவு- பி.எம்.கண்ணன்
  • மண்ணும் மங்கையும்- பி.எம்.கண்ணன்
  • பெண்ணுக்கு ஒரு நீதி- பி.எம்.கண்ணன்
  • இன்பப்புதையல்- பி.எம்.கண்ணன்
  • நிலவே நீ சொல்- பி.எம்.கண்ணன்
  • மலைக்கள்ளன் -நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
  • வாசந்திகா- பாகிரா சுப்ரமணியம் 1944
  • பெண் - அகிலன்
  • துணைவி- அகிலன்
  • இன்பநினைவு- அகிலன்
  • சினேகிதி- அகிலன்
  • சந்திப்பு- அகிலன்
  • அவளுக்கு- அகிலன்
  • நெஞ்சின் அலைகள்- அகிலன்
  • பாவை விளக்கு- அகிலன்
  • வேங்கையின் மைந்தன்- அகிலன்
  • வாழ்வு எங்கே?- அகிலன்
  • புதுவெள்ளம்- அகிலன்
  • பொன்மலர்- அகிலன்
  • கயல்விழி- அகிலன்
  • வெற்றித்திருநகர்- அகிலன்
  • சித்திரப்பாவை- அகிலன்
  • கொள்ளைக்காரன்- அகிலன்
  • எங்கே போகிறோம்- அகிலன்
  • பால்மரக்காட்டினிலே- அகிலன்
  • யுவதி- ஆர்வி
  • அணையாவிளக்கு- ஆர்வி
  • திரைக்குப்பின்- ஆர்வி
  • மனித நிழல்கள்- ஆர்வி
  • ஸவிதா- ஆர்வி
  • ஆதித்தன் காதல்- ஆர்வி
  • சொப்பன வாழ்க்கை- ஆர்வி
  • நிராசை- ஆர்வி
  • ஏழ்மையின் பரிசு- ஜெகசிற்பியன்
  • சாவின் முத்தம் -ஜெகசிற்பியன்
  • கொம்புத்தேன்-ஜெகசிற்பியன்
  • மதுராந்தகி- ஜெகசிற்பியன்
  • திருச்சிற்றம்பலம்- ஜெகசிற்பியன்
  • நாயகி நற்சோணை ஜெகசிற்பியன்
  • ஆலவாயழகன் ஜெகசிற்பியன்
  • மண்ணின் குரல் ஜெகசிற்பியன்
  • மகரயாழ் மங்கை ஜெகசிற்பியன்
  • சொர்க்கத்தின் நிழல் ஜெகசிற்பியன்
  • பத்தினிக்கோட்டம் ஜெகசிற்பியன்
  • மாறம்பாவை ஜெகசிற்பியன்
  • ஜீவகீதம் ஜெகசிற்பியன்
  • காவல்தெய்வம் ஜெகசிற்பியன்
  • இனிய நெஞ்சம் ஜெகசிற்பியன்
  • கிளிஞ்சல்கோபுரம் ஜெகசிற்பியன்
  • காணக்கிடைக்காத தங்கம் ஜெகசிற்பியன்
  • மோகமந்திரம் ஜெகசிற்பியன்
  • மாப்பிள்ளை தோழன் -ய மகாலிங்க சாஸ்திரி
  • சர்க்கா- பி.எம் ராஜகோபால்
  • விதவையின் காதல் -சுப.நாராயணன்
  • கடிவாளம் கௌரி அம்மாள்
  • 1942 - கு.ராஜவேலு






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.