under review

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-2018: Difference between revisions

From Tamil Wiki
(Corrected category text)
(Corrected text format issues)
Line 62: Line 62:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
எவர் பொருட்டு?: இலக்கியச் சிந்தனை 2018 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள்: வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை 600017
எவர் பொருட்டு?: இலக்கியச் சிந்தனை 2018 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள்: வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை 600017
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Revision as of 14:21, 3 July 2023

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள் தொகுப்பு-2018

இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள் பட்டியல்-2018

சிறுகதைத் தலைப்பு ஆசிரியர் இதழ்
கானல் நீர் காட்சிகள் ந. சோலையப்பன் தினமணி கதிர்
அது ஒரு நோன்புக்காலம்... சித்திக் தினமணி கதிர்
தமிழோ… தமிழ் செய்யாறு தி.தா. நாராயணன் கணையாழி
பிசகு பா. கண்மணி கணையாழி
தூர தேசத்து மகாராஜா மலர்மன்னன் அன்பழகன் காலச்சுவடு
கடிதங்கள் தேனி சீருடையான் செம்மலர்
உங்களைப் பாத்துட்டே இருக்கேனே! வா.மு. கோமு ஆனந்த விகடன்
தொலைந்து போனவன் வாஸந்தி அமுதசுரபி
நிழல் இந்திரா பார்த்தசாரதி கல்கி தீபாவளி மலர்
எவர் பொருட்டு? சி. முருகேஷ் பாபு விகடன் தீபாவளி மலர்
ஐந்திலே ஒன்று ரவிபிரகாஷ் ஆனந்த விகடன்
வாத்தியார் கவிப்பித்தன் ஆனந்த விகடன்

2018-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை

2018 -ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, சி. முருகேஷ்பாபு எழுதிய ‘எவர் பொருட்டு?’ தேர்ந்தெடுக்கப்பட்டது. மு. இராமநாதன்இக்கதையைத் தேர்ந்தெடுத்தார்.

உசாத்துணை

எவர் பொருட்டு?: இலக்கியச் சிந்தனை 2018 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள்: வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை 600017 ‎


✅Finalised Page