அ. குமாரசுவாமிப் புலவர்: Difference between revisions
(changed external links to internal) |
(Corrected Category:ஆசிரியர்கள் to Category:ஆசிரியர்Corrected Category:உரையாசிரியர்கள் to Category:உரையாசிரியர்Corrected Category:சைவ அறிஞர்கள் to Category:சைவ அறிஞர்Corrected Category:தமிழறிஞர்கள் to Category:தமிழறிஞர்Corrected Category:பதிப்பாளர்கள் to Category:பதிப்பாளர்Corrected Category:புலவர்கள் to Category:புலவர்Corrected Category:மொழிபெயர்ப்பாளர்கள் to Category:மொழிபெயர்ப்பாளர்) |
||
(31 intermediate revisions by 5 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=குமாரசாமி|DisambPageTitle=[[குமாரசாமி (பெயர் பட்டியல்)]]}} | |||
{{Read English|Name of target article=A. Kumaraswamy Pulavar|Title of target article=A. Kumaraswamy Pulavar}} | |||
[[File:குமாரசாமிப் பிள்ளை.jpg|thumb|அ. குமாரசுவாமிப் புலவர்]] | [[File:குமாரசாமிப் பிள்ளை.jpg|thumb|அ. குமாரசுவாமிப் புலவர்]] | ||
[[File:குமாரசாமிப்புலவர் சிலை.jpg|thumb|குமாரசாமிப்புலவர் சிலை]] | [[File:குமாரசாமிப்புலவர் சிலை.jpg|thumb|குமாரசாமிப்புலவர் சிலை]] | ||
அ. குமாரசுவாமிப் புலவர் (ஜனவரி 18, 1854 - மார்ச் 23, 1922) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், பதிப்பாளர், உரையாசிரியர், ஆசிரியர். | |||
அ. குமாரசுவாமிப் புலவர் (ஜனவரி 18, 1854 - மார்ச் 23, 1922) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், பதிப்பாளர், உரையாசிரியர், ஆசிரியர். | |||
பார்க்க: [[குமாரசாமிப் பிள்ளை]] | |||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
குமாரசாமி யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் அம்பலவாணருக்கும் சிதம்பரம் அம்மைக்கும் | குமாரசாமி யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் அம்பலவாணருக்கும் சிதம்பரம் அம்மைக்கும் ஜனவரி 18, 1854-ல் பிறந்தார். ஐந்து வயதில் வேதாரண்யம் நமசிவாய தேசிகர் இவருக்கு ஏடு தொடங்கினார். மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் பயின்றார். சுன்னாகம் முருகேச பண்டிதரிடம் தமிழ் கல்வி பயின்றார். நாகநாத பண்டிதரை அணுகி வடமொழி கற்றார். நீதிசாரம், இராமோதந்தம், சாணக்கிய சதகம், முக்தபோதம், மாகம், இரகுவம்சம், சாகுந்தலம் முதலிய வடமொழி நூல்களைப் பயின்றார். நமசிவாய தேசிகரிடம் சைவசித்தாந்தம் மற்றும் சைவச் சான்றோர் வரலாறு முதலியவற்றை கற்றார். கனகசபைப்புலவரிடம் இலக்கணம் கற்றார். சைவசித்தாந்தத்தை இணுவில் நடராசையரிடம் பயின்றார். [[ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவல]]ரிடமும் பாடம் கேட்டிருக்கிறார். | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
1892-ல் உடுவில் மயில்வாகனம், நாகமுத்தம்மையார் தம்பதியினரின் மகளாகிய சின்னாச்சியம்மையாரை மணந்தார். விசாலாட்சியம்மையார் (1893-1925) என்னும் ஒரு மகளும், அம்பலவாணர் (1895-1974), முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (1900-1987) என இரு மகன்களும் பிறந்தனர். மகன்கள் இருவரும் தமிழ்க் கல்வியில் பெரிதும் சிறந்து விளங்கி, யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். புலவரின் இளைய மைந்தர் சென்னை லயோலா கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக 1930-1932-ல் பணியாற்றினார். மேலும் மைந்தர்கள் இருவரும் புலவரின் நூல்கள் மற்றும் முத்துகுமாரகவிராயர் நூல்கள் அனைத்தையும் பதிப்பித்தனர். | 1892-ல் உடுவில் மயில்வாகனம், நாகமுத்தம்மையார் தம்பதியினரின் மகளாகிய சின்னாச்சியம்மையாரை மணந்தார். விசாலாட்சியம்மையார் (1893-1925) என்னும் ஒரு மகளும், அம்பலவாணர் (1895-1974), முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (1900-1987) என இரு மகன்களும் பிறந்தனர். மகன்கள் இருவரும் தமிழ்க் கல்வியில் பெரிதும் சிறந்து விளங்கி, யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். புலவரின் இளைய மைந்தர் சென்னை லயோலா கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக 1930-1932-ல் பணியாற்றினார். மேலும் மைந்தர்கள் இருவரும் புலவரின் நூல்கள் மற்றும் முத்துகுமாரகவிராயர் நூல்கள் அனைத்தையும் பதிப்பித்தனர். | ||
== ஆசிரியப்பணி == | == ஆசிரியப்பணி == | ||
1878- | 1878-ம் ஆண்டு யாழ்ப்பாணம், ஏழாலை சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்பு 1884 முதல் தலைமை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். ஏழாலையில் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராக பணியாற்றினார். அக்டோபர் 1, 1902-ல் ஆறுமுக நாவலரால் நிறுவப்பட்ட வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இங்கு இவர் தமிழ் இலக்கண இலக்கியம், சைவ சித்தாந்தம், மற்றும் வடமொழி இலக்கண இலக்கியம் முதலியவற்றை கற்பித்தார். சைவப்பிரகாச சபையின் ஓர் அங்கமாக நிறுவப்பட்ட காவிய பாடசாலையும் இவரது முயற்சியால் ஒரு மரபுக் கல்வி நிறுவனமாக வளர்ச்சி பெற்றது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தபோது வாதநோயால் பாதிக்கப்பட்டு 1919-ம் ஆண்டு பணியிலிருந்து விலகினார். | ||
[[File:ஆத்திச்சூடி வெண்பா.png|thumb|ஆத்திசூடி வெண்பா]] | [[File:ஆத்திச்சூடி வெண்பா.png|thumb|ஆத்திசூடி வெண்பா]] | ||
===== மாணவர்கள் ===== | ===== மாணவர்கள் ===== | ||
* புன்னாலைக் கட்டுவன் [[சி.கணேசையர்]] | * புன்னாலைக் கட்டுவன் [[சி.கணேசையர்]] | ||
Line 53: | Line 52: | ||
* சுன்னாகம் மு. வைத்தியநாதபிள்ளை | * சுன்னாகம் மு. வைத்தியநாதபிள்ளை | ||
* நாகநாத பண்டிதர் | * நாகநாத பண்டிதர் | ||
[[File: | [[File:தமிழ்ப் புலவர் சரித்திரம்.jpg|thumb|தமிழ்ப் புலவர் சரித்திரம்]] | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
1886-ல் இதோபதேசம் நூலை மொழிபெயர்த்தார். சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். குமாரசாமிப் புலவர் தொடக்கக் காலத்தில் இயற்றிய செய்யுள்கள், பதிகம், ஊஞ்சல், சிந்து, | 1886-ல் இதோபதேசம் நூலை மொழிபெயர்த்தார். சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். குமாரசாமிப் புலவர் தொடக்கக் காலத்தில் இயற்றிய செய்யுள்கள், பதிகம், ஊஞ்சல், சிந்து, இரட்டைமணி மாலை, அட்டகம், கும்மி மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களாக விளங்கின. | ||
சென்னை மாகாணத்தில் சாண்டிலர் தலைமையில் 1913-ல் செயல்பட்ட குழு தமிழ் அகராதியின் மாதிரி நகலை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்கு அனுப்பியது. ஏப்ரல் 4, 1913-ல் குமாரசாமிப் பிள்ளை இதனை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தார். அவர் சுட்டிக்காட்டிய பிழைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தனது வாழ்நாள் முழுவதும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக விளங்கினார். அதன் சார்பாக பல கட்டுரைகள் எழுதினார். சொற்பொழிவுகள் பல ஆற்றினார். | |||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
சுன்னாகம் குமாரசாமிப்புலவரின் தமிழ்ப்பணிகள் ஐந்து தளங்களைச் சேர்ந்தவை. | சுன்னாகம் குமாரசாமிப்புலவரின் தமிழ்ப்பணிகள் ஐந்து தளங்களைச் சேர்ந்தவை. | ||
*தொன்மையான தமிழ் இலக்கண நூல்களுக்கு உரை எழுதினார். (திருக்கரைசை புராணம், சூடாமணி நிகண்டு) | *தொன்மையான தமிழ் இலக்கண நூல்களுக்கு உரை எழுதினார். (திருக்கரைசை புராணம், சூடாமணி நிகண்டு) | ||
*ஈழத்துச் சிற்றிலக்கியங்களை சுவடிகளில் இருந்து பதிப்பித்தார். (நகுலமலைக் குறவஞ்சி நாடகம் ,சிவசேத்திர விளக்கம்) | *ஈழத்துச் சிற்றிலக்கியங்களை சுவடிகளில் இருந்து பதிப்பித்தார். (நகுலமலைக் குறவஞ்சி நாடகம், சிவசேத்திர விளக்கம்) | ||
*சம்ஸ்கிருத நூல்களின் மொழியாக்கங்களை வெளியிட்டார். ( மேகதூதக்காரிகை, சாணக்கிய நீதி வெண்பா, இதோபதேசம்) | *சம்ஸ்கிருத நூல்களின் மொழியாக்கங்களை வெளியிட்டார். (மேகதூதக்காரிகை, சாணக்கிய நீதி வெண்பா, இதோபதேசம்) | ||
*சிற்றிலக்கியங்களை எழுதினார் (சிசுபாலசரிதம், கண்ணகி கதை ) | *சிற்றிலக்கியங்களை எழுதினார் (சிசுபாலசரிதம், கண்ணகி கதை ) | ||
*இலக்கியவரலாற்று நூல்களையும் அகராதிகளையும் உருவாக்கினார். (இலக்கியச் சொல்லகராதி, | *இலக்கியவரலாற்று நூல்களையும் அகராதிகளையும் உருவாக்கினார். (இலக்கியச் சொல்லகராதி, தமிழ்ப் புலவர் சரித்திரம்) | ||
குமாரசாமிப்புலவர் [[உதயதாரகை]], இலங்கைநேசன், உதய பானு, [[இந்துசாதனம்]] முதலிய ஈழத்து இதழ்களிலும், [[செந்தமிழ் (இதழ்)|செந்தமிழ்]], [[தமிழ்ப்பொழில்]] ஸ்ரீலோகரஞ்சனி, ஞானசாகரம், வைசிய மித்திரன், தமிழ் மகவு முதலிய தமிழ்நாட்டு இதழ்களிலும் இலக்கிய, இலக்கண, சமய, வரலாறு முதலியவை பற்றி ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். | |||
==அமைப்புப்பணிகள்== | ==அமைப்புப்பணிகள்== | ||
குமாரசாமிப் புலவர் யாழ்ப்பாணத்தில் 1898 | குமாரசாமிப் புலவர் யாழ்ப்பாணத்தில் 1898-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினராகவும், 1902-ம் ஆண்டு முதல் அதன் செயலாளராகவும் பணியாற்றினார். | ||
மதுரையில் [[நான்காம் தமிழ்ச்சங்கம்|நான்காம் தமிழ்ச்சங்க]]த்தைத் தோற்றுவித்த பொ. [[பாண்டித்துரைத் தேவர்]] அக்டோபர் 17, 1902-ல் குமாரசாமிப் பிள்ளையை சங்க உறுப்பினராக்கினார். சங்கத்தின் பத்திரிகையாகிய [[செந்தமிழ் (இதழ்)|செந்தமி]]ழுக்கு பல கட்டுரைகளை எழுதினார். 1923-ல் புலவரின் கடைசி நூலாகிய இராமோதந்தம் நூலை இச்சங்கம் பதிப்பித்தது. மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டித தேர்வுகளுக்கு தமிழ்மொழி, தமிழ் இலக்கணம் ஆகிய பாடங்களைத் தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்று பணியாற்றினார். | |||
==மறைவு== | ==மறைவு== | ||
மார்ச் 23, 1922-ல் | மார்ச் 23, 1922-ல் வயிற்றுளைவு மற்றும் காய்ச்சலால் குமாரசாமிப்பிள்ளை காலமானார். புலவர் நோயுற்ற காலத்தில் அவரது மாணவராகிய பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை கவனித்துக் கொண்டார். | ||
==நூல்கள் பட்டியல்== | ==நூல்கள் பட்டியல்== | ||
=====பதிகங்கள்===== | =====பதிகங்கள்===== | ||
*வதுளை கதிரேசன் பதிகம் (1884) | *வதுளை கதிரேசன் பதிகம் (1884) | ||
* வதுளை | * வதுளை மாணிக்க விநாயகர் பதிகம் (1884) | ||
*மாவைப் பதிகம் (1892) | *மாவைப் பதிகம் (1892) | ||
*துணைவை அரசடி விநாயகர் பதிகம் (1894) | *துணைவை அரசடி விநாயகர் பதிகம் (1894) | ||
*அமராவதி | *அமராவதி புதூர் பாலவிநாயகர் பதிகம் (1897) | ||
=====ஊஞ்சல்===== | =====ஊஞ்சல்===== | ||
*வதுளைக் கதிரேசன் ஊஞ்சல் (1884) | *வதுளைக் கதிரேசன் ஊஞ்சல் (1884) | ||
Line 92: | Line 87: | ||
*தெல்லிப்பழை தில்லையிட்டி அம்மன் ஊஞ்சல் (1915) | *தெல்லிப்பழை தில்லையிட்டி அம்மன் ஊஞ்சல் (1915) | ||
*பன்னாலை வள்ளிமலை கந்தசுவாமி ஊஞ்சல் (1916) | *பன்னாலை வள்ளிமலை கந்தசுவாமி ஊஞ்சல் (1916) | ||
*அராலி | *அராலி முத்துமாரியம்மன் ஊஞ்சல் (1921) | ||
=====வேறு சிற்றிலக்கிய நூல்கள்===== | =====வேறு சிற்றிலக்கிய நூல்கள்===== | ||
*வதுளைக் கதிரேசன் சிந்து (1884) | *வதுளைக் கதிரேசன் சிந்து (1884) | ||
Line 99: | Line 93: | ||
*நகுலேசர் சதகம் (தசகம்) (1896) | *நகுலேசர் சதகம் (தசகம்) (1896) | ||
*அத்தியடி விநாயகர் அட்டகம் (1897) | *அத்தியடி விநாயகர் அட்டகம் (1897) | ||
=====கும்மி===== | =====கும்மி===== | ||
*மிலேச்சமதவிகற்பகக் கும்மி (1888) | *மிலேச்சமதவிகற்பகக் கும்மி (1888) | ||
=====மொழி பெயர்ப்புச் செய்யுள்கள்===== | |||
===== | |||
*ஏகவிருத்தபாரதம் முதலியன (1896) | *ஏகவிருத்தபாரதம் முதலியன (1896) | ||
* | *மேகதூதக்காரிகை (1896) | ||
*சாணக்கிய நீதிவெண்பா (1914) | *சாணக்கிய நீதிவெண்பா (1914) | ||
*இராமோதந்தம் (1921) | *இராமோதந்தம் (1921) | ||
=====வசன அல்லது உரைநடை நூல்கள்===== | =====வசன அல்லது உரைநடை நூல்கள்===== | ||
*திருக்கரைசைப் புராண பொழிப்புரை (1890) | *திருக்கரைசைப் புராண பொழிப்புரை (1890) | ||
Line 136: | Line 127: | ||
*சிசுபாலசரிதம் (1921) | *சிசுபாலசரிதம் (1921) | ||
*இரகுவம்ச சரிதாமிர்தம் (1922) | *இரகுவம்ச சரிதாமிர்தம் (1922) | ||
=====பதிப்பித்த நூல்கள்===== | =====பதிப்பித்த நூல்கள்===== | ||
*இதோபதேசம் (1886) | *இதோபதேசம் (1886) | ||
Line 150: | Line 140: | ||
*சிவத்தோத்திரக்கவித்திரட்டு (1911) | *சிவத்தோத்திரக்கவித்திரட்டு (1911) | ||
*ஆத்திசூடி வெண்பா (1901) | *ஆத்திசூடி வெண்பா (1901) | ||
====== | ======கண்டன நூல்கள்====== | ||
* | *கிறிஸ்து தேவனா? (1878) (இலங்கைநேசன்) | ||
*பன்னகவரி (1881) (இலங்கைநேசன்) | *பன்னகவரி (1881) (இலங்கைநேசன்) | ||
*நற்புத்தி (1880) (உதயபானு) | *நற்புத்தி (1880) (உதயபானு) | ||
Line 160: | Line 150: | ||
*வடவிலங்கைக் கிறீஸ்த வித்தகருக்கு (1882) (உதயபானு) | *வடவிலங்கைக் கிறீஸ்த வித்தகருக்கு (1882) (உதயபானு) | ||
*நாகரீகசார விநாசம்(1882)(உதயபானு) | *நாகரீகசார விநாசம்(1882)(உதயபானு) | ||
==உசாத்துணை== | == உசாத்துணை == | ||
*Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam) | *Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam) | ||
*ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை | *ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை | ||
*சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந.வீ. ஜெயராமன் | *சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந.வீ. ஜெயராமன் | ||
*[http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா | *[http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா] | ||
*[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967] | *[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967] | ||
[[Category:உரையாசிரியர்]] | |||
{{Finalised}} | |||
{{Fndt|15-Nov-2022, 12:05:24 IST}} | |||
[[Category: | [[Category:ஆண்]] | ||
[[Category: | [[Category:1922ல் மறைந்தவர்கள்]] | ||
[[Category:1854ல் பிறந்தவர்கள்]] | [[Category:1854ல் பிறந்தவர்கள்]] | ||
[[Category: | [[Category:ஈழம்]] | ||
[[Category:ஆசிரியர்]] | |||
[[Category:மொழிபெயர்ப்பாளர்]] | |||
[[Category:உரையாசிரியர்]] | |||
[[Category:பதிப்பாளர்]] | |||
[[Category:புலவர்]] | |||
[[Category:சைவ அறிஞர்]] | |||
[[Category:தமிழறிஞர்]] | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] |
Latest revision as of 11:49, 17 November 2024
- குமாரசாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குமாரசாமி (பெயர் பட்டியல்)
To read the article in English: A. Kumaraswamy Pulavar.
அ. குமாரசுவாமிப் புலவர் (ஜனவரி 18, 1854 - மார்ச் 23, 1922) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், பதிப்பாளர், உரையாசிரியர், ஆசிரியர்.
பார்க்க: குமாரசாமிப் பிள்ளை
பிறப்பு, கல்வி
குமாரசாமி யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் அம்பலவாணருக்கும் சிதம்பரம் அம்மைக்கும் ஜனவரி 18, 1854-ல் பிறந்தார். ஐந்து வயதில் வேதாரண்யம் நமசிவாய தேசிகர் இவருக்கு ஏடு தொடங்கினார். மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் பயின்றார். சுன்னாகம் முருகேச பண்டிதரிடம் தமிழ் கல்வி பயின்றார். நாகநாத பண்டிதரை அணுகி வடமொழி கற்றார். நீதிசாரம், இராமோதந்தம், சாணக்கிய சதகம், முக்தபோதம், மாகம், இரகுவம்சம், சாகுந்தலம் முதலிய வடமொழி நூல்களைப் பயின்றார். நமசிவாய தேசிகரிடம் சைவசித்தாந்தம் மற்றும் சைவச் சான்றோர் வரலாறு முதலியவற்றை கற்றார். கனகசபைப்புலவரிடம் இலக்கணம் கற்றார். சைவசித்தாந்தத்தை இணுவில் நடராசையரிடம் பயின்றார். ஆறுமுக நாவலரிடமும் பாடம் கேட்டிருக்கிறார்.
தனிவாழ்க்கை
1892-ல் உடுவில் மயில்வாகனம், நாகமுத்தம்மையார் தம்பதியினரின் மகளாகிய சின்னாச்சியம்மையாரை மணந்தார். விசாலாட்சியம்மையார் (1893-1925) என்னும் ஒரு மகளும், அம்பலவாணர் (1895-1974), முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (1900-1987) என இரு மகன்களும் பிறந்தனர். மகன்கள் இருவரும் தமிழ்க் கல்வியில் பெரிதும் சிறந்து விளங்கி, யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். புலவரின் இளைய மைந்தர் சென்னை லயோலா கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக 1930-1932-ல் பணியாற்றினார். மேலும் மைந்தர்கள் இருவரும் புலவரின் நூல்கள் மற்றும் முத்துகுமாரகவிராயர் நூல்கள் அனைத்தையும் பதிப்பித்தனர்.
ஆசிரியப்பணி
1878-ம் ஆண்டு யாழ்ப்பாணம், ஏழாலை சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்பு 1884 முதல் தலைமை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். ஏழாலையில் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராக பணியாற்றினார். அக்டோபர் 1, 1902-ல் ஆறுமுக நாவலரால் நிறுவப்பட்ட வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இங்கு இவர் தமிழ் இலக்கண இலக்கியம், சைவ சித்தாந்தம், மற்றும் வடமொழி இலக்கண இலக்கியம் முதலியவற்றை கற்பித்தார். சைவப்பிரகாச சபையின் ஓர் அங்கமாக நிறுவப்பட்ட காவிய பாடசாலையும் இவரது முயற்சியால் ஒரு மரபுக் கல்வி நிறுவனமாக வளர்ச்சி பெற்றது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தபோது வாதநோயால் பாதிக்கப்பட்டு 1919-ம் ஆண்டு பணியிலிருந்து விலகினார்.
மாணவர்கள்
- புன்னாலைக் கட்டுவன் சி.கணேசையர்
- வித்துவான் சிவானந்தையர்
- தெல்லிப்பழை பாலசுப்ரமணிய ஐயர்
- தெல்லிப்பழை சுப்ரமணிய பிள்ளை
- இளவாலை க. சங்கரப்பிள்ளை
- தெல்லிப்பழை நா. மயில்வாகனம்பிள்ளை
- மாவிட்டபுரம் விசுவநாத முதலியார்
- கையிட்டி பொன்னையர்
- சுன்னாகம் மாணிக்கதியாகராச பண்டிதர்
- ஏழாலை வி. தம்பையாபிள்ளை
- கொக்குவில் இளையதம்பிப்பிள்ளை
- இளவாலை க. சங்கரப்பிள்ளை
- கொக்குவில் சீ. முருகேசையர்
- கந்தரோடை அ. கந்தையாப்பிள்ளை
- வட்டுக்கோட்டை க. சிதம்பரநாதன்
- வண்ணார்பண்ணை ஆ. சண்முகரத்தின ஐயர்
- புன்னாலைக்கட்டுவன் சி. கணேசையர்
- தென் கோவை ச. கந்தையாப் பண்டிதர்
- உடுவில் வ. மு. இரத்தினேசுவர ஐயர்
- உடுவில் மு. ஜகநாதையர்
- காரைநகர் ச. பஞ்சாட்சர ஐயர்
- இருபாலை சி. வேதாரணிய தேசிகர்
- இருபாலை சி. தியாகராசபிள்ளை
- தாவடி மு. பொன்னையாபிள்ளை
- நாயன்மார்கட்டு செ. சிவசிதம்பரப்பிள்ளை
- நீர்வேலி வி. மயில்வாகனப்பிள்ளை
- தெல்லிப்பழை மேற்கு சி. கதிரிப்பிள்ளை
- வேதாரணியம் தி. அருணாசல தேசிகர்
- சிறுப்பிட்டி த. கார்த்திகேயப்பிள்ளை
- நல்லூர் க. குருமூர்த்தி சிவாசாரியார்
- மட்டுவில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
- மட்டக்களப்புப் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
நண்பர்கள்
- ஊரெழு சு. சரவணமுத்துப்புலவர்
- மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை
- சுன்னாகம் மு. வைத்தியநாதபிள்ளை
- நாகநாத பண்டிதர்
இலக்கிய வாழ்க்கை
1886-ல் இதோபதேசம் நூலை மொழிபெயர்த்தார். சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். குமாரசாமிப் புலவர் தொடக்கக் காலத்தில் இயற்றிய செய்யுள்கள், பதிகம், ஊஞ்சல், சிந்து, இரட்டைமணி மாலை, அட்டகம், கும்மி மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களாக விளங்கின.
சென்னை மாகாணத்தில் சாண்டிலர் தலைமையில் 1913-ல் செயல்பட்ட குழு தமிழ் அகராதியின் மாதிரி நகலை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்கு அனுப்பியது. ஏப்ரல் 4, 1913-ல் குமாரசாமிப் பிள்ளை இதனை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தார். அவர் சுட்டிக்காட்டிய பிழைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தனது வாழ்நாள் முழுவதும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக விளங்கினார். அதன் சார்பாக பல கட்டுரைகள் எழுதினார். சொற்பொழிவுகள் பல ஆற்றினார்.
இலக்கிய இடம்
சுன்னாகம் குமாரசாமிப்புலவரின் தமிழ்ப்பணிகள் ஐந்து தளங்களைச் சேர்ந்தவை.
- தொன்மையான தமிழ் இலக்கண நூல்களுக்கு உரை எழுதினார். (திருக்கரைசை புராணம், சூடாமணி நிகண்டு)
- ஈழத்துச் சிற்றிலக்கியங்களை சுவடிகளில் இருந்து பதிப்பித்தார். (நகுலமலைக் குறவஞ்சி நாடகம், சிவசேத்திர விளக்கம்)
- சம்ஸ்கிருத நூல்களின் மொழியாக்கங்களை வெளியிட்டார். (மேகதூதக்காரிகை, சாணக்கிய நீதி வெண்பா, இதோபதேசம்)
- சிற்றிலக்கியங்களை எழுதினார் (சிசுபாலசரிதம், கண்ணகி கதை )
- இலக்கியவரலாற்று நூல்களையும் அகராதிகளையும் உருவாக்கினார். (இலக்கியச் சொல்லகராதி, தமிழ்ப் புலவர் சரித்திரம்)
குமாரசாமிப்புலவர் உதயதாரகை, இலங்கைநேசன், உதய பானு, இந்துசாதனம் முதலிய ஈழத்து இதழ்களிலும், செந்தமிழ், தமிழ்ப்பொழில் ஸ்ரீலோகரஞ்சனி, ஞானசாகரம், வைசிய மித்திரன், தமிழ் மகவு முதலிய தமிழ்நாட்டு இதழ்களிலும் இலக்கிய, இலக்கண, சமய, வரலாறு முதலியவை பற்றி ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார்.
அமைப்புப்பணிகள்
குமாரசாமிப் புலவர் யாழ்ப்பாணத்தில் 1898-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினராகவும், 1902-ம் ஆண்டு முதல் அதன் செயலாளராகவும் பணியாற்றினார்.
மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்த பொ. பாண்டித்துரைத் தேவர் அக்டோபர் 17, 1902-ல் குமாரசாமிப் பிள்ளையை சங்க உறுப்பினராக்கினார். சங்கத்தின் பத்திரிகையாகிய செந்தமிழுக்கு பல கட்டுரைகளை எழுதினார். 1923-ல் புலவரின் கடைசி நூலாகிய இராமோதந்தம் நூலை இச்சங்கம் பதிப்பித்தது. மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டித தேர்வுகளுக்கு தமிழ்மொழி, தமிழ் இலக்கணம் ஆகிய பாடங்களைத் தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்று பணியாற்றினார்.
மறைவு
மார்ச் 23, 1922-ல் வயிற்றுளைவு மற்றும் காய்ச்சலால் குமாரசாமிப்பிள்ளை காலமானார். புலவர் நோயுற்ற காலத்தில் அவரது மாணவராகிய பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை கவனித்துக் கொண்டார்.
நூல்கள் பட்டியல்
பதிகங்கள்
- வதுளை கதிரேசன் பதிகம் (1884)
- வதுளை மாணிக்க விநாயகர் பதிகம் (1884)
- மாவைப் பதிகம் (1892)
- துணைவை அரசடி விநாயகர் பதிகம் (1894)
- அமராவதி புதூர் பாலவிநாயகர் பதிகம் (1897)
ஊஞ்சல்
- வதுளைக் கதிரேசன் ஊஞ்சல் (1884)
- கீரிமலை நகுலேசர் ஊஞ்சல் (1896)
- ஏழாலை அத்தியடி விநாயகரூஞ்சல் (1897)
- கைலாய பிள்ளையார் ஊஞ்சல் (1904)
- கோப்பாய் வெள்ளெருவை விநாயகர் ஊஞ்சல் (1905)
- விளிசிட்டி பொற்கலந்தம்பை பைரவர் ஊஞ்சல் (1912)
- தெல்லிப்பழை தில்லையிட்டி அம்மன் ஊஞ்சல் (1915)
- பன்னாலை வள்ளிமலை கந்தசுவாமி ஊஞ்சல் (1916)
- அராலி முத்துமாரியம்மன் ஊஞ்சல் (1921)
வேறு சிற்றிலக்கிய நூல்கள்
- வதுளைக் கதிரேசன் சிந்து (1884)
- மாவையிரட்டை மணிமாலை (1896)
- நகுலேசர் சதகம் (தசகம்) (1896)
- அத்தியடி விநாயகர் அட்டகம் (1897)
கும்மி
- மிலேச்சமதவிகற்பகக் கும்மி (1888)
மொழி பெயர்ப்புச் செய்யுள்கள்
- ஏகவிருத்தபாரதம் முதலியன (1896)
- மேகதூதக்காரிகை (1896)
- சாணக்கிய நீதிவெண்பா (1914)
- இராமோதந்தம் (1921)
வசன அல்லது உரைநடை நூல்கள்
- திருக்கரைசைப் புராண பொழிப்புரை (1890)
- சூடாமணி நிகண்டு முதல் தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1896)
- சூடாமணி நிகண்டு இரண்டாம் தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1900)
- சூடாமணி நிகண்டு முதலைந்து தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1900)
- இலக்கணசந்திரிகை (1897)
- கண்ணகி கதை (1900)
- யாப்பருங்கலப் பொழிப்புரை (1900)
- இரகுவம்சக் கருப்பொருள் (1900)
- வெண்பா பாட்டியல் பொழிப்புரை (1900)
- கலைசைச் சிலேடை வெண்பா அரும்பதவுரை (1901)
- நீதிநெறி விளக்கப் புத்துரை (1901)
- மறைசையந்தாதி அரும்பதவுரை (1901)
- தண்டியலங்கார புத்துரை (1903)
- திருவாதவூரர் புராணப் புத்துரை (1904)
- யாப்பருங்கலகாரிகைப் புத்துரை (1908)
- முத்தகபஞ்சவிஞ்சதி குறிப்புரை (1909)
- அகப்பொருள் விளக்க புத்துரை (1912)
- வினைப்பகுபதவிளக்கம் (1913)
- இலக்கியச் சொல்லகராதி (1915)
- தமிழ்ப் புலவர் சரித்திரம் (1916)
- இராமாயணம் பாலகாண்டம் அரும்பதவுரை (1918)
- ஏரேழுபது பொழிப்புரை (1920)
- இதோபதேசம் (1920)
- கல்வளையந்தாதி பதவுரை (1921)
- சிசுபாலசரிதம் (1921)
- இரகுவம்ச சரிதாமிர்தம் (1922)
பதிப்பித்த நூல்கள்
- இதோபதேசம் (1886)
- நகுலமலைக் குறவஞ்சி நாடகம் (1895)
- யாப்பருங்கலக்காரிகை பழையவுரை (1900)
- ஆசாரக்கோவை (1900)
- நான்மணிக்கடிகை (1900)
- சிவசேத்திர விளக்கம் (1901)
- உரிச்சொனிகண்டு (1902)
- திருவாதவூரர் புராணமூலம் (1902)
- பழமொழி விளக்கம் (1903)
- சதாசாரக்கவித்திரட்டு (1901)
- சிவத்தோத்திரக்கவித்திரட்டு (1911)
- ஆத்திசூடி வெண்பா (1901)
கண்டன நூல்கள்
- கிறிஸ்து தேவனா? (1878) (இலங்கைநேசன்)
- பன்னகவரி (1881) (இலங்கைநேசன்)
- நற்புத்தி (1880) (உதயபானு)
- அஞ்ஞானி என்னுஞ் சொன்மறுப்பு (1881)(உதயபானு)
- கிறீஸ்து சிருட்டிகர் (1881)(உதயபானு)
- பாதுகாவலன் பத்திராதிபருக்கு (1881)(உதயபானு)
- காரைக்கால் சத்திய வேத ஆசாரப் பிரியருக்கு (1881) (உதயபானு)
- வடவிலங்கைக் கிறீஸ்த வித்தகருக்கு (1882) (உதயபானு)
- நாகரீகசார விநாசம்(1882)(உதயபானு)
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந.வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:05:24 IST