under review

அணிகலம் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
(Page Created: Para Added: Link Created: Proof Checked.)
 
No edit summary
 
(3 intermediate revisions by one other user not shown)
Line 5: Line 5:


== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
<poem>
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்
பரவும் வகை செய்தல் வேண்டும்
 
</poem>
- என்ற பாரதியின் பாடல் வரிகள் குறிக்கோள் வாசகமாக இவ்விதழில் இடம் பெற்றன. கதை, கவிதை, கட்டுரை, இலக்கியத் திறனாய்வு, அரசியல், திரைப்படம், சமயம் முதலிய பலதுறைக் களஞ்சியமாக அணிகலம் இதழ் வெளிவந்தது. ஆண்டுமலர், பொங்கல் மலர், [[திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்|திரு.வி.க]].மணிவிழாமலர், சுதந்திர தினவிழா மலர், மகாத்மா [[காந்தி]]யடிகள் மறைவு இதழ் எனப் பல சிறப்பிதழ்களை, நினைவிதழ்களை அணிகலம் வெளியிட்டது. தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள், திறனாய்வாளர்கள் எனப் பலர் இவ்விதழில் பங்களித்தனர்.
- என்ற பாரதியின் பாடல் வரிகள் குறிக்கோள் வாசகமாக இவ்விதழில் இடம் பெற்றன. கதை, கவிதை, கட்டுரை, இலக்கியத் திறனாய்வு, அரசியல், திரைப்படம், சமயம் முதலிய பலதுறைக் களஞ்சியமாக அணிகலம் இதழ் வெளிவந்தது. ஆண்டுமலர், பொங்கல் மலர், [[திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்|திரு.வி.க]].மணிவிழாமலர், சுதந்திர தினவிழா மலர், மகாத்மா [[காந்தி]]யடிகள் மறைவு இதழ் எனப் பல சிறப்பிதழ்களை, நினைவிதழ்களை அணிகலம் வெளியிட்டது. தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள், திறனாய்வாளர்கள் எனப் பலர் இவ்விதழில் பங்களித்தனர்.


Line 34: Line 34:


* நகரத்தார் கலைக்களஞ்சியம், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன்; இணை ஆசிரியர்கள்: கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். பதிப்பு: 2002.
* நகரத்தார் கலைக்களஞ்சியம், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன்; இணை ஆசிரியர்கள்: கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். பதிப்பு: 2002.
{{Ready for review}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 11:54, 8 May 2024

அணிகலம் (1941), பல்சுவை மாத இதழ். புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்தது. லெ. கதிரேசன் செட்டியார் இவ்விதழின் ஆசிரியராகச் செயல்பட்டார்.

பிரசுரம், வெளியீடு

புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த மாத இதழ் அணிகலம். ஜூன் 1941-லிருந்து இவ்விதழ் வெளியானது. லெ. கதிரேசன் செட்டியார், அணிகலம் இதழின் ஆசிரியர் மற்றும் வெளியிட்டாளர். அணிகலம் இதழ், க்ரௌன் அளவில், 40 பக்கங்களில் வெளிவந்தது. தொடக்கத்தில் இதன் விலை ஓரணா. பின்னர் கால மாற்றத்திற்கேற்ப இதழின் விலை அதிகரித்து 4 அணா (25 காசுகள்) விலையில் வெளிவந்தது.

உள்ளடக்கம்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்

- என்ற பாரதியின் பாடல் வரிகள் குறிக்கோள் வாசகமாக இவ்விதழில் இடம் பெற்றன. கதை, கவிதை, கட்டுரை, இலக்கியத் திறனாய்வு, அரசியல், திரைப்படம், சமயம் முதலிய பலதுறைக் களஞ்சியமாக அணிகலம் இதழ் வெளிவந்தது. ஆண்டுமலர், பொங்கல் மலர், திரு.வி.க.மணிவிழாமலர், சுதந்திர தினவிழா மலர், மகாத்மா காந்தியடிகள் மறைவு இதழ் எனப் பல சிறப்பிதழ்களை, நினைவிதழ்களை அணிகலம் வெளியிட்டது. தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள், திறனாய்வாளர்கள் எனப் பலர் இவ்விதழில் பங்களித்தனர்.

பங்களிப்பாளர்கள்

இதழ் நிறுத்தம்

1941-ல் வெளியான அணிகலம் இதழ் ஒன்பது ஆண்டுகள் வெளியாகி 1950-ல் நின்று போனது.

மதிப்பீடு

இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட காகிதப் பற்றாக்குறையிலும் அணிகலம் இதழ் தொடர்ந்து வெளிவந்தது. நகரத்தார் ஆசிரியர் மற்றும் வெளியிட்டாளர்களாக இருந்து நடத்திய இதழ்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அணிகலம் இதழ் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • நகரத்தார் கலைக்களஞ்சியம், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன்; இணை ஆசிரியர்கள்: கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். பதிப்பு: 2002.


✅Finalised Page