under review

கணியன் பூங்குன்றனார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected text format issues)
 
(26 intermediate revisions by 8 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Kaniyan Pungundranar|Title of target article=Kaniyan Pungundranar}}
[[File:Slide.jpg|thumb|300pxx300px|சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவிலுள்ள மகிபாலன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள கணியன் பூங்குன்றனாரின் நினைவுத்தூண்]]
[[File:Slide.jpg|thumb|300pxx300px|சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவிலுள்ள மகிபாலன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள கணியன் பூங்குன்றனாரின் நினைவுத்தூண்]]
 
கணியன் பூங்குன்றனார்சங்ககாலப் புலவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் எட்டுத்தொகை நூல்களான நற்றிணையிலும், புறநானூற்றிலும் உள்ளன. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உலகளாவிய தமிழரின் சிந்தனைக்காக இப்பாடல் இன்றளவும் எடுத்தாளப்படுகிறது.
கணியன் பூங்குன்றனார்  "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனத் தொடங்கும் புகழ் பெற்ற புறநானூறு பாடலை இயற்றியவர். சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
 
கணியன் பூங்குன்றனார் என்ற பெயர் தொழிலாலும், ஊராலும் வந்தது. "கணியன்" என்பது ஜோதிடம் சொல்வதைக் குறிக்கிறது. ஜோதிடத்தொழிலை மேற்கொண்டதால் இப்பெயர் பெற்றார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மகிபாலன்பட்டியில் பிறந்தார். மகிபாலன்பட்டியிலுள்ள கோயில் கல்வெட்டுக்கள் இவ்வூரை ’பூங்குன்ற நாட்டுப் பூங்குன்றம்’ என்று குறிக்கிறது. எனவே இவர் 'கணியன் பூங்குன்றன்’ என்று அழைக்கப்பட்டார். சில நூல்களில் 'கனிபுன் குன்றன்’ என்று பிழைப்பட்டு வந்துள்ளதாக புலவர் கா.கோவிந்தன் குறிப்பிடுகிறார்.  
==ஊர் மற்றும் பெயர்==
== இலக்கிய வாழ்க்கை ==
கணியன் பூங்குன்றனார் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள மகிபாலன்பட்டியில் பிறந்தவர் என கருதப்படுகிறது. பூங்குன்றம் என்ற ஊரின் பெயர் தற்போது மகிபாலன்பட்டி என வழங்கப்படுகிறது.  
இவர் பாடிய இரண்டு பாடல்கள் [[நற்றிணை]]யிலும்(226), [[புறநானூறு|புறநானூற்றி]]லும்(192) உள்ளன. [[புறநானூறு|புறநானூற்றின்]] 192-ஆவது பாடல் புறத்துறை தழுவிய [[பொதுவியல் திணை]]யில், [[பொருண்மொழிக்காஞ்சி]]த்துறையில் பயின்று வருகிறது. முனிவர்கள் ஆராய்ந்து கண்ட உண்மைப்பொருளைப் பற்றிய பாடலாதலால் சிறப்பு பெற்றது.
 
== புறநானூறு: 192 ==
கணியன் என்னும் முன்னொட்டுச் சொல் நாள், கிழமை கணித்துப் பலன் கூறும் சோதிடம் அல்லது  கணியம் அறிந்தவர் என்பதை உணர்த்துகிறது.
பண்டைத்தமிழரின் உலகலாவிய சிந்தனை, நம்பிக்கை, வாழ்வியற் கொள்கை, அறிவியல் அறிவு, மூத்தோர் இளையோர் உறவு ஆகியவற்றை பாடல் கூறுகிறது.  
 
* எல்லாமும் ஊரே; அனைவரும் உறவினரே
==படைப்புகள் ==
* தீமையும் நன்மையும் பிறர் கொடுப்பன அல்ல
கிடைக்கப் பெற்றுள்ள சங்கப் பாடல்களில், இரண்டு பாடல்களை கணியன் பூங்குன்றனார் இயற்றியுள்ளார். எட்டுத்தொகை நூல்களான  புறநானூற்றின் 192- ஆம் பாடலும்  நற்றிணையின்  226- ஆம் பாடலும் இவர் இயற்றியவையாகும்.
* துன்பம் வருவதும், தணிவதும் பிறரால் அல்ல
 
* சாதல்/இறத்தல் ஒன்றும் புதிதில்லை
==பாடல்கள்==
* வாழ்தல் இனிது என்று மகிழ்வதும் இல்லை, வாழ்வு துன்பமானது என கவலை கொள்வதும் இல்லை
=====1.நற்றிணை- 226=====
* மின்னலோடு குளிர்ந்த மேகம் மழைபொழிந்து தரையிறங்கி கல்லில் மோதி ஒலித்து அடித்துச் செல்லப்படும் பேராற்றில் செல்லும் தெப்பத்தைப் போல ஆருயிரும் செல்லும் என்பதை நன்மை தீமை என ஆராய்ந்து கண்டோர் சொற்களால் அறிந்தோம் ஆதலால்,
மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
* காணும் மனிதனை ’பெரியோர்’ என எண்ணி வியக்கவும் மாட்டோம், 'சிறியோர்' என எண்ணி இகழவும் மாட்டோம்
உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப்
* ’சிறியோர்’ என எண்ணி இகழ்தல் பெரியோரை வியத்தலை விட சிறுமையாதலால் அதைச் செய்ய மாட்டோம்.
பொன்னும் கொள்ளார் மன்னர் நன்னுதல்
===== சிறப்புகள் =====
நாந்தம் உண்மையின் உளமே அதனால்
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடல், இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரத்தின் இசையில்அமெரிக்காவின் டர்ஹாம் சிம்பொனி உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களால் பாடப்பட்டு 2019-ல் வெளியிடப்பட்டது<ref>[https://www.youtube.com/watch?v=TwCs4CN-_3k Yaadhum Oore Yaavarum Kelir Symphony: Karthik & Durham Symphony, 4K-youtube.com uploaded by Rajan Somasundaram] </ref>. இப்பாடல், அதே ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் கீதமாக அறிவிக்கப்பட்டது<ref>[https://www.youtube.com/watch?v=NtHYz6FuiAc Yathum Oore Anthem- Theme Song of 10th World Tamil Conference]</ref>.
தாம் செய் பொருளன அறியார் தாம் கசிந்து
===== விவாதங்கள் =====
என்றூழ் நிறுப்ப நீளிடை ஒழியச்
கணியன் பூங்குன்றனாரின் இப்பாடலிலுள்ள கருத்துக்கள் ஆசீவக மதத்துக்கு அணுக்கமானவை. ஆகவே தமிழகத்தின் தொல்மதமாக ஆசீவகம் இருந்துள்ளது என்று முனைவர் [[க.நெடுஞ்செழியன்]] போன்றவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவ்வாறன்றி இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள உலகுதழுவிய ஒருமைப்பாடு, ஊழ்வினைக்கொள்கை ஆகியவை தொல்தமிழர் நம்பிக்கைகளே என்று அக்கருத்து மறுக்கப்படுகிறது.
சென்றோர் மன்ற நம் காதலர் என்றும்
== நற்றிணை: 226 ==
இன்ன நிலைமைத்து என்ப
நற்றிணையின் 226-ஆவது பாடல் பாலைத்திணையில் தலைவி கூற்றாக வந்துள்ளது. பொருள்வயின் பிரிந்த தலைவனை நினைத்து தலைவி வருந்திக்கூறுவதாக பாடல் அமைந்துள்ளது.
என்னோரும் அறிப இவ்வுலகத்தானே.  
===== பாடல் வழி அறியவரும் செய்திகள் =====
 
* மருந்தாகிப் பயன்படும் மரத்தை பட்டுப்போகுமாறு முழுவதும் வெட்டிக் கொல்வதில்லை. அவ்வாறு வெட்டினால் அது மீண்டும் பயன்படாது.
'''நவீன தமிழில்:'''
*  உடல் வருத்தி தவம் செய்வோர் தம் உடல் முழுதும் வருந்துமாறு தவம் செய்தால் தவத்தின் பலனை அனுபவிக்க முடியாமல் போகும் ஆதலால் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.
மருந்து தரும் மரம் அழியும்படி  அதனை பாவிக்கமாட்டார்கள்
* அரசர்கள் தம் நாட்டு மக்களின் வளம் குன்றுமளவு பெருவரி வாங்க எண்ணமாட்டார்கள்.
தன் வலிமை கெட ஞானியர் தவம் இயற்ற மாட்டார்கள்
* பொருள் ஈட்டுவது இன்ப நுகர்ச்சியின் பொருட்டு. இன்ப நுகர்ச்சிக்கு இன்றியமையாதது உயிர். உயிர் அழிந்தால் ஈட்டும் பொருளால் பயன் கிடைக்காது.
குடிமக்களின் வளம் குன்ற மன்னர் வரி பெறமாட்டார்
== நினைவிடம்==
ஆயினும், அவர் இருப்பதால் நலமாய் இருக்கும் நம்மைவிட்டு
தமிழ்நாடு அரசு சார்பாக கணியன் பூங்குன்றனாருக்கு அவர் பிறந்ததாக கருதப்படும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவிலுள்ள மகிபாலன்பட்டியில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.
தான் செய்வது என்னவென்றறியாது,  வருந்தியபடி நீண்ட பாலை வழியில் பிரிந்து சென்றுவிட்டார் நம் தலைவர்
== பாடல் நடை ==
ஆடவரின் இயல்பு இதுவென சான்றோரும் உலகோரும் அறிந்துள்ளனர்
* புறநானூறு 192
 
<poem>
=====2. புறநானூறு- 192=====
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே; மின்னொடு
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
வானம் தண்துளி தலைஇ யானாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
 
</poem>
'''நவீன தமிழில்:'''
* நற்றிணை 226
எதுவும் சொந்த ஊரே
<poem>
அனைவரும் உறவினரே
மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;
தீமையும் நன்மையும்
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்
பிறர் தர வருவன அல்ல
பொன்னும் கொள்ளார், மன்னர்- நன்னுதல்!
துயரமும் ஆறுதலும் அப்படியே
நாம் தம் உண்மையின் உளமே; அதனால்
சாவு புதியதல்ல,
தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து,
ஆகவே வாழ்வு இனிதென
என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய,
மகிழ்வதில்லை
சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும்
அது தீயதென்று மனம்
இன்ன நிலைமைத்து என்ப;
கசப்பதுமில்லை
என்னோரும் அறிப, இவ் உலகத்தானே.
மின்னல் வானம்
</poem>
குளிர் நீரெனப் பொழிந்து
== உசாத்துணை ==
கற்களில் மோதி ஒலித்திறங்கி
* புறநானூறு விளக்கவுரை, ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை, முதல் பதிப்பு - திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1947, மறு பதிப்பு - பூம்புகார் பதிப்பகம் 2009
பரந்தொழுகும்
* [https://sites.google.com/site/budhhasangham/Home?authuser=0 பௌத்தமும் தமிழும்! bautham.net]
பெருநதியின்மீது தெப்பம் போல
* இந்து தமிழ் திசை, பிப்ரவரி 4, 2020
உயிர் தன் நியதியையே கடைபிடிக்கும் என்று
* யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடிய கணியன் பூங்குன்றனாருக்கு வரலாற்று துாண்- தினமலர் இணைய இதழ் பதிவு செய்த நாள்: ஏப்ரல் 14, 2021
ஆய்ந்தோல் சொல்லி
* புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9
தெளிந்தோம் என்பதால்
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/3 சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: தமிழ் இணைய கல்விக் கழகம்]
மாட்சி மிக்க பெரியோரை
== அடிக்குறிப்புகள் ==
வியந்து வணங்க மாட்டோம்
<references />
அதைவிட முக்கியமாக
{{Finalised}}
சிறியோரை இகழவும் மாட்டோம்
 
==பாடப்பட்ட காலம்==
புறநானூற்று பாடல்களில் அப்போதைய தமிழ் நிலத்துக் காட்சிகள் காணக்கிடைக்கிறது. சிற்றரசர்கள் ஒருவருக்கொருவர் போரிடுவதையும், மற்றவர் நிலங்களை தீ வைத்து கொளுத்துவதையும், நீர் நிலைகளை யானையைக் கொண்டு அழிப்பதையும், பசுக் கூட்டங்களை கவர்வதையும் பெரும்பாலான பாடல்கள் காட்டுகின்றன. சில பாடல்களில் மனித ஊன்களை சமைத்து களப் பேய்களுக்கு ஊட்டுவதாகக் காட்டுவது கற்பனை எனக் கொண்டாலும்  ஒருவருக்கொருவர் வெறுப்பும் பிரிவினையும் வஞ்சமும் கொண்டிருந்தார்கள் என்பதை நுட்பமாக காட்டுகின்றன. இதைப் போன்ற பாடல்களுக்கு மத்தியில் தனித்து நிற்குமாறு "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனத் தொடங்கும் இப்பாடலை இயற்றியிருக்கிறார் கணியன் பூங்குன்றனார்.
 
==மதிப்பீடு==
சிறு சிறு குழுக்களாக பிரிந்து தமிழ்நிலச் சிற்றசர்கள் வன்மத்துடன் மோதிக் கொண்டிருந்த காலத்தில்,  கணியன் பூங்குன்றனார் உலகம் முழுவதையும் ஒன்றாகக் கண்ட தன் பெரும் தரிசனத்தை இப்பாடலாக இயற்றியுள்ளார். நன்மையோ- தீமையோ, மகிழ்ச்சியோ- துயரமோ, உயர்வோ- தாழ்வோ எதுவுமே இந்த வாழ்வில் முக்கியம் இல்லை, எதற்காகவும் தலைவணங்க வேண்டியதில்லை வாழ்க்கை அவற்றையெல்லாம் விட உயர்ந்த ஒன்று என்ற மெய் ஞானத்தை உரைக்கிறார்.
 
==சிறப்புகள்==
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடல், இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரத்தின் இசையில்  அமெரிக்காவின் டர்ஹாம் சிம்பொனி உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களால் பாடப்பட்டு 2019- இல் வெளியிடப்பட்டது. இப்பாடல், அதே ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் கீதமாக அறிவிக்கப்பட்டது.
 
==நினைவிடம்==
தமிழ்நாடு அரசு சார்பாக கணியன் பூங்குன்றனாருக்கு அவர் பிறந்த சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவிலுள்ள மகிபாலன்பட்டியில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது.
 
==உசாத்துணை==
* புறநானூறு விளக்கவுரை, ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை,   திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் First Edition 1947 - மறு பதிப்பு பூம்புகார் பதிப்பகம் (2009)https://sites.google.com/site/budhhasangham/Home?authuser=0
*இந்து தமிழ் திசை, 4-பிப்ரவரி-2020
* யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடிய கணியன் பூங்குன்றனாருக்கு வரலாற்று துாண்- தினமலர் இணைய இதழ் பதிவு செய்த நாள்: ஏப் 14, 2021  
 
 
{{being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சங்க காலப் புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 14:38, 3 July 2023

To read the article in English: Kaniyan Pungundranar. ‎

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவிலுள்ள மகிபாலன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள கணியன் பூங்குன்றனாரின் நினைவுத்தூண்

கணியன் பூங்குன்றனார்சங்ககாலப் புலவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் எட்டுத்தொகை நூல்களான நற்றிணையிலும், புறநானூற்றிலும் உள்ளன. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உலகளாவிய தமிழரின் சிந்தனைக்காக இப்பாடல் இன்றளவும் எடுத்தாளப்படுகிறது.

வாழ்க்கைக் குறிப்பு

கணியன் பூங்குன்றனார் என்ற பெயர் தொழிலாலும், ஊராலும் வந்தது. "கணியன்" என்பது ஜோதிடம் சொல்வதைக் குறிக்கிறது. ஜோதிடத்தொழிலை மேற்கொண்டதால் இப்பெயர் பெற்றார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மகிபாலன்பட்டியில் பிறந்தார். மகிபாலன்பட்டியிலுள்ள கோயில் கல்வெட்டுக்கள் இவ்வூரை ’பூங்குன்ற நாட்டுப் பூங்குன்றம்’ என்று குறிக்கிறது. எனவே இவர் 'கணியன் பூங்குன்றன்’ என்று அழைக்கப்பட்டார். சில நூல்களில் 'கனிபுன் குன்றன்’ என்று பிழைப்பட்டு வந்துள்ளதாக புலவர் கா.கோவிந்தன் குறிப்பிடுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

இவர் பாடிய இரண்டு பாடல்கள் நற்றிணையிலும்(226), புறநானூற்றிலும்(192) உள்ளன. புறநானூற்றின் 192-ஆவது பாடல் புறத்துறை தழுவிய பொதுவியல் திணையில், பொருண்மொழிக்காஞ்சித்துறையில் பயின்று வருகிறது. முனிவர்கள் ஆராய்ந்து கண்ட உண்மைப்பொருளைப் பற்றிய பாடலாதலால் சிறப்பு பெற்றது.

புறநானூறு: 192

பண்டைத்தமிழரின் உலகலாவிய சிந்தனை, நம்பிக்கை, வாழ்வியற் கொள்கை, அறிவியல் அறிவு, மூத்தோர் இளையோர் உறவு ஆகியவற்றை பாடல் கூறுகிறது.

  • எல்லாமும் ஊரே; அனைவரும் உறவினரே
  • தீமையும் நன்மையும் பிறர் கொடுப்பன அல்ல
  • துன்பம் வருவதும், தணிவதும் பிறரால் அல்ல
  • சாதல்/இறத்தல் ஒன்றும் புதிதில்லை
  • வாழ்தல் இனிது என்று மகிழ்வதும் இல்லை, வாழ்வு துன்பமானது என கவலை கொள்வதும் இல்லை
  • மின்னலோடு குளிர்ந்த மேகம் மழைபொழிந்து தரையிறங்கி கல்லில் மோதி ஒலித்து அடித்துச் செல்லப்படும் பேராற்றில் செல்லும் தெப்பத்தைப் போல ஆருயிரும் செல்லும் என்பதை நன்மை தீமை என ஆராய்ந்து கண்டோர் சொற்களால் அறிந்தோம் ஆதலால்,
  • காணும் மனிதனை ’பெரியோர்’ என எண்ணி வியக்கவும் மாட்டோம், 'சிறியோர்' என எண்ணி இகழவும் மாட்டோம்
  • ’சிறியோர்’ என எண்ணி இகழ்தல் பெரியோரை வியத்தலை விட சிறுமையாதலால் அதைச் செய்ய மாட்டோம்.
சிறப்புகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடல், இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரத்தின் இசையில்அமெரிக்காவின் டர்ஹாம் சிம்பொனி உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களால் பாடப்பட்டு 2019-ல் வெளியிடப்பட்டது[1]. இப்பாடல், அதே ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் கீதமாக அறிவிக்கப்பட்டது[2].

விவாதங்கள்

கணியன் பூங்குன்றனாரின் இப்பாடலிலுள்ள கருத்துக்கள் ஆசீவக மதத்துக்கு அணுக்கமானவை. ஆகவே தமிழகத்தின் தொல்மதமாக ஆசீவகம் இருந்துள்ளது என்று முனைவர் க.நெடுஞ்செழியன் போன்றவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவ்வாறன்றி இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள உலகுதழுவிய ஒருமைப்பாடு, ஊழ்வினைக்கொள்கை ஆகியவை தொல்தமிழர் நம்பிக்கைகளே என்று அக்கருத்து மறுக்கப்படுகிறது.

நற்றிணை: 226

நற்றிணையின் 226-ஆவது பாடல் பாலைத்திணையில் தலைவி கூற்றாக வந்துள்ளது. பொருள்வயின் பிரிந்த தலைவனை நினைத்து தலைவி வருந்திக்கூறுவதாக பாடல் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்
  • மருந்தாகிப் பயன்படும் மரத்தை பட்டுப்போகுமாறு முழுவதும் வெட்டிக் கொல்வதில்லை. அவ்வாறு வெட்டினால் அது மீண்டும் பயன்படாது.
  • உடல் வருத்தி தவம் செய்வோர் தம் உடல் முழுதும் வருந்துமாறு தவம் செய்தால் தவத்தின் பலனை அனுபவிக்க முடியாமல் போகும் ஆதலால் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.
  • அரசர்கள் தம் நாட்டு மக்களின் வளம் குன்றுமளவு பெருவரி வாங்க எண்ணமாட்டார்கள்.
  • பொருள் ஈட்டுவது இன்ப நுகர்ச்சியின் பொருட்டு. இன்ப நுகர்ச்சிக்கு இன்றியமையாதது உயிர். உயிர் அழிந்தால் ஈட்டும் பொருளால் பயன் கிடைக்காது.

நினைவிடம்

தமிழ்நாடு அரசு சார்பாக கணியன் பூங்குன்றனாருக்கு அவர் பிறந்ததாக கருதப்படும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவிலுள்ள மகிபாலன்பட்டியில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.

பாடல் நடை

  • புறநானூறு 192

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

  • நற்றிணை 226

மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார், மன்னர்- நன்னுதல்!
நாம் தம் உண்மையின் உளமே; அதனால்
தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து,
என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய,
சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும்
இன்ன நிலைமைத்து என்ப;
என்னோரும் அறிப, இவ் உலகத்தானே.

உசாத்துணை

  • புறநானூறு விளக்கவுரை, ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை, முதல் பதிப்பு - திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1947, மறு பதிப்பு - பூம்புகார் பதிப்பகம் 2009
  • பௌத்தமும் தமிழும்! bautham.net
  • இந்து தமிழ் திசை, பிப்ரவரி 4, 2020
  • யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடிய கணியன் பூங்குன்றனாருக்கு வரலாற்று துாண்- தினமலர் இணைய இதழ் பதிவு செய்த நாள்: ஏப்ரல் 14, 2021
  • புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9
  • சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: தமிழ் இணைய கல்விக் கழகம்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page