under review

108 சிவ தாண்டவ விளக்கம்-ஸம்ப்ராந்தம்

From Tamil Wiki
ஸம்ப்ராந்தம் (கலப்பகம்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - ஸம்ப்ராந்தம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று ஸம்ப்ராந்தம். தமிழில் இது 'கலப்பகம்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது நூற்றி ஒன்றாவது கரணம்.

சிவனின் ஆடல்

கைகளை மடக்கி இடுப்புக்கு நேராக வைத்துக் கொண்டு தொடைகளையும் அவ்வாறே வளையவைத்து நின்று ஆடுவது ஸம்ப்ராந்தம்.

உசாத்துணை


✅Finalised Page