under review

108 சிவ தாண்டவ விளக்கம்-வலிதோருகம்

From Tamil Wiki
வலிதோருகம் (நொசிகுறங்கு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள், 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - வலிதோருகம்

சிவபெருமான், ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று வலிதோருகம். தமிழில் இது 'நொசிகுறங்கு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது மூன்றாவது கரணம்.

சிவனின் ஆடல்

கிளியின் மூக்கைப் போலக் கையை மடக்கி, அவற்றை உட்புறமாக இருபக்கமும் வளைத்து, தொடைகளையும் வளைத்து நிற்கும் நிலையே வலிதோருகம்.

உசாத்துணை


✅Finalised Page