under review

108 சிவ தாண்டவ விளக்கம்-வர்த்திதம்

From Tamil Wiki
வர்த்திதம் (நுடங்கு கை)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள், 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - வர்த்திதம்

சிவபெருமான், ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று வர்த்திதம். தமிழில் இது 'நுடங்கு கை' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இரண்டாவது கரணமாகும்.

சிவனின் ஆடல்

இரு மணிக் கட்டுகளை வளைத்து, தொடையின் பக்கத்தில் கைகளைத் தொங்க விட்டு ஆடுவது வர்த்திதம்.

உசாத்துணை


✅Finalised Page